tag:blogger.com,1999:blog-1050429141463512405.post594515847837059166..comments2023-04-15T04:31:20.356-07:00Comments on என் மன ஊஞ்சலில்..!: ஸ்திரீ தர்மம் பற்றி மகா பெரியவர் வாக்கில்....Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-64492588886230204182015-03-12T02:14:06.981-07:002015-03-12T02:14:06.981-07:00ஒளபாசனம் என்றால் என்ன? காலை மாலைகளில் இல்லறத்தோர் ...ஒளபாசனம் என்றால் என்ன? காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல். ஒருகாலத்தில் இல்லறத்தில் ஈடுபட்டுள்ள எல்லாப் பெருமானரும் தங்கள் வீட்டில் வேள்வித் தீ வளர்த்தே ஆகவேண்டும்; அவர்கள் வீட்டு அடுப்பாங்கரையில் கங்கு கனன்று கொண்டே இருக்கும். இப்பொழுது, இதையெல்லாம் பின்பற்றுபவர்கள் அரிதிலும் அரிது.<br /><br />வேள்வித் தீயைக் காப்பாற்றுதலை தீ ஓம்புதல் என்று தமிழில் சொல்லுவார்கள். ஓம்பாயனம் என்பது தமிழ்வினையைச் சங்கத ஈறு கொண்டு முடிக்கும் ஒரு பெயர்ச்சொல். <br />காப்பற்றுதல் என்ற தொழிற்பெயரை உணர்த்தும். ஓம்பாயனம்>ஓம்பாசனம் ஆகி பெரும்பாலான தமிழர்கள் மெல்லின ஓசையை அவ்வப்போது பேச்சுவழக்கில் ஒலிக்காமற் போவது போல, ஓம்பாசனம்>ஓபாசனம் ஆகிப் பின் மேலும் திரிந்து ஔபாசனம் ஆகும். <br /><br />(மேலே கூறியவற்றுள் எத்தனை தமிழ் வார்த்தைகள் தமிழர்களுக்குப் புரியும், தெரியும்?)<br /><br />ஔபசனா என்றால் சமஸ்கிருதம். ஔபாசனம் என்பது தமிழில் உபயோகத்தில் உள்ள ஒரு சொல். எப்படி நாம் பல பிற மொழிச் சொற்களை தமிழ் மொழியாகக் கருதி பேசி வருகிறோமோ அப்படித்தான் இதுவும் - குடும்பம், தைர்யம், சந்திரன், ரேடியோ என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.<br /><br />பாரிசில் வசிப்பவர் எல்லோருக்கும் ஆங்கிலமோ அல்லது ஜெர்மானிய மொழியோ தெரியாது போலும்! <br />தமிழில் எல்லோருக்கும் சமஸ்கிருதம் புரியாது அல்லது தெரியாது என்று ஏதாவது கணக்கெடுப்பு வந்திருந்தால் தெரிந்து கொள்வது நல்லது!<br /><br />நான் வங்கியில் பணிபுரிந்தவன். என்னை தமிழ் நாட்டிலிருந்து, வடக்கே ஒரு ஊருக்கு உயர் பதவி கொடுத்து மாற்றி விட்டார்கள். எனக்கு இந்தி சுத்தமாகத் தெரியாது. எப்படியோ தட்டுத் தடுமாறி ஊர் போய்ச் சேர்ந்து, முதல் நாள் அலுவலகம் சென்று மேலதிகாரியிடம் என்னுடைய பணி மாற்றம் கடிதத்தைக் கொடுத்தேன். அவர் ஆங்கிலத்தில் என்னுடன் உரையாடினார். திடீரென்று இந்தியில் "கின் கின் டெபார்ட்மென்ட் மெம் ஆப்னே காம் கியா ஹை" (இதை நான் இப்பொழுது இந்தி நன்றாகத் தெரிந்து கொண்டுள்ளபடியால் எழுதுகிறேன்). நான் அவர் பக்கத்தில் யாரோ ஒருவர் நின்று கொண்டிருந்தபடியால் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று எண்ணி, உட்கார்ந்திருந்தேன். அதன் பின்னர், தொடர்ந்து வேலை செய்து வரும்பொழுதும் சக ஊழியர்கள் என்னிடம் அடிக்கடி இந்தியில்தான் ஏதாவது கூறுவார்கள். எனக்கு இந்தி தெரியாது என்பது அவர்களுக்குத் தெரிந்தும் அவர்கள் தொடர்ந்து இந்தியிலேயே பேசி வந்தார்கள். எனவே அவர்கள் சொன்னது எனக்குத் தேவையில்லை என்று நான் எடுத்துக் கொள்ள முடியுமா? <br /><br />தாங்கள் எழுதியிருக்கும் பின்னூட்டத்திற்கு பதில் எனக்கு பக்கம் பக்கமாக எழுத வேண்டும் போல் உள்ளது. ஆனால் பிறருடைய வலைத்தளமாதலால் இத்துடன் நிறைவு செய்து கொள்கிறேன்.<br /><br />நேரம் இருந்தால் மகாபெரியவர்களுடைய புத்தகங்களை படித்தால் மேலே கூறிய வினாக்களுக்கு தகுந்த விளக்கவுரை நிச்சயமாகக் கிடைக்கும். இந்த ஔபாசனத்தைப் பற்றிய முழு விளக்கமும்கூட கிடைக்கும்.<br />yenbeeyesnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1050429141463512405.post-78817823827790603132015-03-11T23:44:45.644-07:002015-03-11T23:44:45.644-07:00Thanks Mr.Dhanabalan...Thanks Mr.Dhanabalan...Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1050429141463512405.post-60812662847338143442015-03-11T19:25:42.064-07:002015-03-11T19:25:42.064-07:00அருமை... நன்றி...அருமை... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1050429141463512405.post-90562648829036094652015-03-11T16:36:33.677-07:002015-03-11T16:36:33.677-07:00ஔபாஸனம்- என்றால் என்ன?
இச் சொல் சமஸ்கிருதம் எனக் ...ஔபாஸனம்- என்றால் என்ன? <br />இச் சொல் சமஸ்கிருதம் எனக் கருதுகிறேன்.<br />தமிழர்கள் எல்லோருக்கும் சமஸ்கிருதம் புரியாது, தெரியாதென்பது பெரியவருக்குத் தெரியாதா?<br />அவர் சொல்வது சமஸ்கிருதம் தெரியாதவருக்குத் தேவையில்லை எனக் கருதுகிறாரா?யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com