tag:blogger.com,1999:blog-10504291414635124052024-03-24T23:50:39.045-07:00என் மன ஊஞ்சலில்..!என் மன எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நான் ஆரம்பித்த வலை ஊஞ்சல் இது! Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comBlogger233125tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-67352639412665506942023-03-09T07:37:00.000-08:002023-03-09T07:37:11.955-08:00வாழ்த்து<p> மனம் மகிழ் தீபாவளி🎊🎇🔖💣🌟</p><p><br /></p><p>மனசெல்லாம் மிளிரும் மத்தாப்பூ</p><p>மகிழ்மனம் பட்டாசு சிரிப்பொலி</p><p>நாவில் தேனாக இனிப்பு!</p><p>இதயம் நிறைந்த களிப்பு!</p><p>புத்தாடையுடன் புன்னகை!</p><p>சிறுபிள்ளை போல சந்தோஷம்!</p><p> </p><p>நட்புக்களுடன் நல்வாழ்த்து!</p><p>உறவுகளுடன் உற்சாகப் பேச்சு!</p><p>குழந்தை பெரியவர் இன்றில்லை!</p><p>கொண்டாட்டத்திற்கு அளவில்லை!</p><p><br /></p><p>இல்லம் தோறும் தீப ஒளி!</p><p>இன்பமாக தீபாவளி!</p><p>ஆலயம் சென்று வழிபாடு!</p><p>ஆனந்தமான வாழ்த்துமழை!</p><p><br /></p><p>இல்லத்தில் விளக்கொளிர..</p><p>இன்பத்தில் மனம் ஒளிர..</p><p>உள்ளத்தில் இருள் மறைய...</p><p>எண்ணத்தில் அருள் நிறைய...</p><p>வண்ணமாய் வாழ்வு செழிக்க..</p><p>கண்ணனைக் கொண்டாடுவோம்!</p><p>#ராதாபாலு</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>தீபாவளி நல்வாழ்த்துக்கள்!</p><p><br /></p><p>அன்பும் ஆற்றலும் பெருக..</p><p>இன்பமும் ஈதலும் நிறைய...</p><p><br /></p><p>உற்சாகமும் ஊக்கமும் வளர..</p><p>எல்லையில்லா ஏற்றங்கள் சிறக்க...</p><p><br /></p><p>ஐயங்கள் நீங்கி அறிவாற்றல் மலர....</p><p>ஒற்றுமையுடன் ஓங்கி உயர்வு பெற... </p><p><br /></p><p>ஔவியம் விலக்கி உயர்வுடன் வாழ</p><p>தீமைகள் தீவினைகள் விலக..</p><p><br /></p><p>நோக்கங்கள் நிறைந்து </p><p>ஆக்கங்கள் பெருக...</p><p>தேசங்கள் நேசமாய்இணைய</p><p>மாசுகள் நீங்கி வாசங்கள் மலர....</p><p><br /></p><p>ஒளிரும் தீப ஒளியால் இருள் நீங்கி</p><p>அல்லவை தேய்ந்து நல்லவை நாடி</p><p><br /></p><p>சொந்தங்கள் சேர்ந்து</p><p>எண்ணங்கள் பகிர்ந்து</p><p><br /></p><p>நட்புகள் இணைந்து</p><p>மகிழ்ச்சியில் திளைக்க</p><p><br /></p><p>நிம்மதி பெருகி மங்கலம் தங்கிட</p><p>தீபாவளியே வருக! வாழ்க!</p><p><br /></p><p>இனிப்போடும் களிப்போடும்</p><p>நினைவில் தேனாய் இனிக்கும்</p><p>இனிய மத்யம நட்புக்களே!</p><p><br /></p><p>நீவிர் என்றென்றும்</p><p>வானாய் உயர்ந்து </p><p>வாழ்வாங்கு வாழ </p><p>இனிய தீபாவளி </p><p>நல்வாழ்த்துக்கள்!!</p><p>அன்புடன்</p><p>ராதாபாலு</p>Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-20291962634252021902023-03-09T07:34:00.001-08:002023-03-09T07:34:33.802-08:00Nagaraja Temple..Manjakombai<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtRuWq5JlPHw-j2r47-8JomtkQ5t6xkfeqGZUtECzCkhfjx3JPzLg7fUhzY9li-9l77A0AOatT2p4Tuak6_nKrgMhZqMcmkjir444QwNnYYGE_Nml7MhKpoVcOrgC2yKVp1k02_bmblBwkjcySAVoVL2m-PaN10zd7_oyaj1zpU38r_1i2kUbKqkam/s350/Pid-349906Nagarajar-Temple_2%20(1).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="260" data-original-width="350" height="238" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtRuWq5JlPHw-j2r47-8JomtkQ5t6xkfeqGZUtECzCkhfjx3JPzLg7fUhzY9li-9l77A0AOatT2p4Tuak6_nKrgMhZqMcmkjir444QwNnYYGE_Nml7MhKpoVcOrgC2yKVp1k02_bmblBwkjcySAVoVL2m-PaN10zd7_oyaj1zpU38r_1i2kUbKqkam/s320/Pid-349906Nagarajar-Temple_2%20(1).jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlCASA0XOKBruMDr0LJwTiP_Gbi1keCpxCsxkigxMwvxzmSQGbRlW-_lsMgET-vAbUe5RbdCOR0V1HYDFAUt1hpVJevWuPlXETY6_AS9cdqsf_SGmMODb3nHNSZ0NJLXf8k595X0HdQ05biZsfLvQyZE4cpLLdY4u9Cn-d7hiYBJr9AuoAQHpqTcy1/s350/Pid-349906Nagarajar-Temple_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="260" data-original-width="350" height="238" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlCASA0XOKBruMDr0LJwTiP_Gbi1keCpxCsxkigxMwvxzmSQGbRlW-_lsMgET-vAbUe5RbdCOR0V1HYDFAUt1hpVJevWuPlXETY6_AS9cdqsf_SGmMODb3nHNSZ0NJLXf8k595X0HdQ05biZsfLvQyZE4cpLLdY4u9Cn-d7hiYBJr9AuoAQHpqTcy1/s320/Pid-349906Nagarajar-Temple_1.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0zCFKqJNVzbI1GzNgW2qxxWb3Nqgf5Mg4LqKLXl0198WATzbRoE2pv6ALexViGOTTZECGraflB3ZKX37_733viLRl2k_e3btL4Wo-_cjOjYQxt08nffTnAhr_TNlcXFX5oZPVfiZtf0qXzt5PdpsnTS6cWyGGdlfqu3OlcE5qNaiCEcfIh-jdT0K7/s299/IMG_20200309_121801.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="299" data-original-width="179" height="299" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0zCFKqJNVzbI1GzNgW2qxxWb3Nqgf5Mg4LqKLXl0198WATzbRoE2pv6ALexViGOTTZECGraflB3ZKX37_733viLRl2k_e3btL4Wo-_cjOjYQxt08nffTnAhr_TNlcXFX5oZPVfiZtf0qXzt5PdpsnTS6cWyGGdlfqu3OlcE5qNaiCEcfIh-jdT0K7/s1600/IMG_20200309_121801.jpg" width="179" /></a></div><br /><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM6Udv6jS4wpzJX3oV9J9ifSrgC2gYFWveqU2RNOy-5eKu9_ln9kYHuQKds50q5rnaUN1I-FdCJVOft3CqIt40fireDk2hoR189C6A8eKUljpj6m7MQVS5lv9xzEH46gPkS1ZR2bEUSNXCp6AQgYY1VF8iObA4SRNg1VttwGgPrSuIcvxkL1N-p3wA/s280/2novotrpk.1-Her+GF8Q81FV.3.jpg.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="192" data-original-width="280" height="192" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM6Udv6jS4wpzJX3oV9J9ifSrgC2gYFWveqU2RNOy-5eKu9_ln9kYHuQKds50q5rnaUN1I-FdCJVOft3CqIt40fireDk2hoR189C6A8eKUljpj6m7MQVS5lv9xzEH46gPkS1ZR2bEUSNXCp6AQgYY1VF8iObA4SRNg1VttwGgPrSuIcvxkL1N-p3wA/s1600/2novotrpk.1-Her+GF8Q81FV.3.jpg.jpg" width="280" /></a></div><br /><p><br /></p><p><br /></p><p dir="ltr">Nagaraja Temple is a Hindu Temple located in Manjakombai (Manihada) Village in Kundah Taluk near Ooty Hill Station in picturesque Nilgiris Hills in Nilgiris District of Tamil Nadu. The deity in this temple is considered a powerful. The temple lies in a calm and serene location surrounded by fresh air which creates a perfect environment for worship and meditation.<br />
<b>Legends</b></p>
<p dir="ltr"><u><b>Construction of this Temple:</b></u></p>
<p dir="ltr">The people of Manjakombai began digging the ground for collecting sand in order to build a temple in the place. On digging for a few meters, they heard a sound and is said to have found a Nagaraja idol and a couple of caves beneath the ground. A rock is believed to have obstructed the construction work on further digging, which upon removal had revealed the presence of a live snake. A temple for the Goddess and Nagaraja were later raised in the same place. It is that snake which is still believed to be alive.</p>
<p dir="ltr"><u><b>Underground Tunnel between Nagaraja & Heddhai Amman Shrine:</b></u></p>
<p dir="ltr">There is yet another specialty attached to this temple. A live snake is believed to reside within the sanctum sanctorum of Sri Nagaraja. It is also believed that this snake had created an underground pathway or tunnel between the Nagaraja temple to the Heddhai Amman Temple in order commute between the two shrines.</p>
<p dir="ltr"><u><b>Sri Rama foot Print:</b></u></p>
<p dir="ltr">According to hearsay, while Lord Rama was passing through this temple, he has left his print of his feet on a rock here during his 14 years Vanavasa – forest life. There is also a feet symbol on a rock confirming this faith. A large number of Rama devotees visit this temple. The high monkey population in the locality support the Ramayana theory.<br />
<b>The Temple</b><br />
Presiding Deities of this temple are Lord Nagaraja and Goddess Heddhai Amman. A separate shrine dedicated to Goddess Santhanalakshmi is also found in this temple. The feet symbol of Lord Rama is revered highly by the devotees. Banyan tree is the holy tree of this temple while Santhana Kulam is its holy spring.<br />
<b>Hero Stones</b><br />
Rare hero stones, mostly dating to a period between the 2<sup>nd</sup> and 14<sup>th</sup> century can be found near Manjakombai Nagaraja Temple in Melur. The hero stones and dolmens are the only ancient monolithic structures found in the upper plateau of the Nilgiris, and a few stones, carved more recently, even tell of the British’s arrival in the Nilgiris. Most other hero stones are found at lower altitudes, in areas bordering present-day Karnataka. Most of the stones date back to the 11<sup>th</sup> and 14<sup>th</sup> century during the time of the Hoysala and Vijayanagara dynasties, whose militia, along with their families, settled here.<br />
The carvings show the valour of those who died protecting their people and cattle from carnivores such as tigers and leopards. The Kurumbar tribes, who are renowned for their stone-carving abilities, are believed to have a historical link to the site as well and could have been the first settlers in this particular region to have carved the earliest hero stones. Unfortunately, the picturesque location of the hero stones, surrounded by beautiful Shola forests, have also led to them being ignored and not being protected for their historical and cultural value.<br />
<b>Temple Opening Time</b><br />
The temple remains open from 6.00 a.m. to 11.00 p.m. and 5.00 p.m. to 8.00 p.m.<br />
<b>Festivals</b><br />
The annual fire pit (generally called flower pit) festival is celebrated in the temple on May 1st and 2nd. On the days of fasting, every devotee must wear only yellow or red coloured clothes with a sacred garland around their necks. Women devotees should at the least have a red or yellow coloured towel adorning their necks. It is believed that a devotee, who walks on the fire pit when fasting, would receive the immense blessings of the deity. Their wishes and desires are said to get fulfilled. The crowd turn up for this festival easily exceeds fifty thousand. A large number of devotees throng the temple on new moon days too.<br />
<b>Prayers</b><br />
Pilgrims are attracted to this the temple due to its serene location and greenery, which makes this an ideal place for getting mental peace and happiness. On performing the necessary pujas in the Nagaraja shrine, devotees usually take a piece of white cloth and a lime to the shrine of the Goddess Santhanalakshmi. Going around this shrine, they tie a tiny toy cradle with this white cloth in the temple’s tree for child boon. There is also a belief that people addicted to liquor and tobacco are cured of these bad habits on offering their prayers to the deities here.<br />
Those childless couples, who were blessed with a child on worshiping this deity, usually undertake to walk on this fire pit as a mark of devotion and gratitude to the deity. Tonsuring is also done by the devotees as a mark of respect to this god. People affected by various Naga Doshas (adversities in their horoscope due to snakes) offer milk to the anthill, which is considered scared. Following this ritual continuously on all the new moon days (Amavasya) is said to relieve the person of Naga Doshas.<br />
<b>Contact</b><br />
Nagaraja Temple,<br />
Manihada - Manjakombai,<br />
Kundah Taluk,<br />
Nilgiris District – 643221<br />
<b>Phone:</b> +91 423 228 6258<br />
<b>Mobile:</b> +91 94869 04422<br />
</p>Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-80390949174310799522023-03-09T07:34:00.000-08:002023-03-09T07:34:02.866-08:00பீஷ்ம ஏகாதசி<p> பீஷ்ம ஏகாதசி</p><p dir="ltr">
<b>ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஏகாதசிக்கு ஒவ்வொரு பெயர் உண்டு. இது போல் தை மாதத்தில் வரும் ஏகாதசிக்கு பீஷ்ம ஏகாதசி என்று பெயர். இந்த நாளில் விரதம் இருந்து, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் எதற்காக விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும், பீஷ்ம ஏகாதசியன்று எப்படி விரதம் கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.</b></p>
<p dir="ltr">ரத சப்தமியை அடுத்து வரும் ஏகாதசிக்கு, பீஷ்ம ஏகாதசி என்று பெயர். பீஷ்மர் அம்புப்படுக்கையில் இருந்து, விஷ்ணு சகஸ்ரநாமத்தை இந்த உலகுக்கு வழங்கினார். எனவே, இந்த ஏகாதசி மிகவும் உயர்வானதாகக் கருதப்படுகிறது.</p>
<p dir="ltr">விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பாடுவதும் கேட்பதும் புண்ணிய பலன்கள் அளிக்கும். நம்மைச் சுற்றியிருக்கும் பாவங்களும் பாவிகளும் விலகி ஓடுவர். இதற்கு நல்ல உதாரணம் மகாபாரதத்தில் உண்டு. </p>
<p dir="ltr">முதன்முறை விஷ்ணு சகஸ்ரநாமத்தை உபதேசித்தவர் பீஷ்மர். அம்புப்படுக்கையில் பீஷ்மர் இருந்தபோது, கௌரவர்களும் பாண்டவர்களும் அவரைச் சூழ்ந்திருந்தனர். பகவான் கிருஷ்ணன், அவர்களுக்கு நடுவே நின்றார். பீஷ்மர் தன் உதிரம் அத்தனையும் வழிந்தோடிய பின்பு வைராக்கியத்தில் பிறவிப் பிணி அணுகாமல் இருக்கத் தன் முன்னே நின்ற கிருஷ்ணனை வணங்கி, அவனை விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைச் சொல்லி துதிக்க ஆரம்பித்தார்.</p>
<p dir="ltr">மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணன் முன்பாக விஷ்ணு சகஸ்ரநாமத்தை கூறி முடித்த பிறகே பீஷ்மரின் உயிர் பிரிந்ததாகவும், இதன் காரணமாகவே அவர் மோட்சம் அடைந்தார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. இதனால் அந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மோட்சத்தை அளிக்கும் என சொல்லப் படுகிறது. </p>
<p dir="ltr">பீஷ்மர் இதனை சொல்லி முடித்த பின்பே 'இத்தனை பெருமை உடைய சகஸ்ரநாமத்தை உலகுக்கு எப்படி சொல்வது? திரும்ப யாரால் சொல்ல முடியும்' என்று பாண்டவர்கள் யோசித்தனர். அச்சமயம் கண்ணபிரான் 'சகாதேவன் ஏகசந்தகிரஹி. அவனால் மட்டுமே திரும்ப சொல்ல முடியும்' என்று கூற சகாதேவன் மூலமே இது உலகுக்கு தெரிய வந்தது.</p>
<p dir="ltr">நல்லவற்றைக் கேட்பதுதான் கௌரவர்களுக்குப் பிடிக்காதே... அவர்கள் அங்கிருந்து விலகிப்போயினர். சகஸ்ரநாமத்தில் ஒரு நாமத்தைக்கூட அவர்கள் மனத்தால் கேட்கப் பிடிக்காமல் விலகிப்போனார்கள். அன்றுமுதல் இன்றுவரை விஷ்ணு சகஸ்ரநாமம் ஒலிக்கும் இடங்களிலிருந்து இப்படித்தான் பாவங்களும், பாவிகளும் விலகி ஓடுகிறார்கள். </p>
<p dir="ltr">தினமும் வீட்டில் சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது அவசியம். இயலாதவர்கள், குறைந்தபட்சம் ஏகாதசி தினத்தன்று மட்டுமாவது விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் படிக்கவோ கேட்கவோ வேண்டும்.</p>
<p dir="ltr">இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது வைகுண்ட பதவியை பெற்றுத் தரும் இந்த நாளில் விரதம் இருப்பது வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருக்கும் பலனை கொடுக்கும் என புராணங்கள் சொல்கின்றன. வட மாநிலங்களில் இது ஜெய ஏகாதசி என்ற பெயரால் கொண்டாடப்படுகிறது.</p>
<p dir="ltr">இந்த நாளில் முழுவதுமாகவோ அல்லது பால், பழம், காய்கறிகள், உலர் பழங்கள் சாப்பிட்டோ விரதம் இருக்கலாம்.</p>
<p dir="ltr">அரிசி, தானியங்களை உணவாக எடுத்துக் கொள்வதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.<br />
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது அதிவிசேஷமானது.<br />
மஞ்சள் நிற இனிப்பு வகை அல்லது பழம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.<br />
பசுக்களுக்கு இந்த நாளில் மஞ்சள் நிற வாழைப்பழம் உணவாக அளிப்பது நல்லது.<br />
<i>ராதாபாலு</i></p>Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-53690318383051417342023-01-20T07:34:00.002-08:002023-03-09T07:35:05.573-08:00திருக்கூடலூர்<p><span face=""Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif" style="background-color: white; color: #5d5d5d; font-size: 15px;">திருக்கூடலூர் என்ற திவ்ய தேசம் திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள வைணவத் திருத்தலம். இது ஆடுதுறைப் பெருமாள் கோயில் மற்றும் சங்கம ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.</span></p><p style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; color: #5d5d5d; font-family: "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 15px; line-height: 33.75px; margin: 0px 0px 1.5em; padding: 0px; text-rendering: optimizelegibility;">கோயிலில், வரதராஜப் பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. கோயிலுக்கு முன்னே உள்ள அழகான ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. கோயிலுக்கு உள்ளே இருக்கும் ஒரு மண்டபத்து தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நாலு கால பூஜை மரபு. வருடாந்திர பிரம்மோத்சவம் வைகாசித் திங்களில் விமரிசையாக நடைபெறுகிறது.</p><p style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; color: #5d5d5d; font-family: "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 15px; line-height: 33.75px; margin: 0px 0px 1.5em; padding: 0px; text-rendering: optimizelegibility;">108 திவ்யதேசங்களில் 8-ம் இடத்தில் இருக்கும் பெருமை பெற்றது. மதுரை நகருக்கும் கூடலூர் என்ற பெயர் வழங்கப்படுவதால், இத்தலம் ‘வட திருக்கூடலூர்’ என்றும் ‘சங்கம க்ஷேத்ரம்’ என்றும் வழங்கப்படுகிறது.</p><p style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; color: #5d5d5d; font-family: "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 15px; line-height: 33.75px; margin: 0px 0px 1.5em; padding: 0px; text-rendering: optimizelegibility;">பெருமாளின் வராக அவதாரத்துக்கு முன்னால் தோன்றிய கோயில் இது. ஒரு முறை இரண்யாட் சகன் என்ற அசுரன், பூமாதேவியை ஏழு சமுத்திரங் களுக்கும் கீழே அதல பாதாளத்தில் கொண்டு போய் வைத்துவிட, சிவபெருமான் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து பெருமாளி டம் முறையிட்டார்களாம். பூலோகத்தைக் காப்பதற்காக, வராக அவதாரம் எடுத்த பெருமாள், இங்கே ஆடுதுறையில் மண்ணுக்குள்ளே தோண்டிப் புகுந்து, ஸ்ரீமுஷ்ணத்தில் பூமாதேவி யுடன் வெளிப்பட்டதாக புராணங்கள் சொல் கின்றன. வையகத்தை மீட்டுக் கொண்டு வந்தவர் என்பதால், இத்தலத்தில் ‘வையம் காத்த பெருமாள்’ என்று அவர் அழைக்கப்படுகிறார். இரண்யாட் சகனை அழிப்பதற்கு பிரம்ம பிரயத்தனம் மேற்கொண்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கே ஆலோசித்ததால், இத்திருத்தலம் ‘திருக்கூடல்’ என்றும் வழங்கப்படுகிறது.</p><p style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; color: #5d5d5d; font-family: "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 15px; line-height: 33.75px; margin: 0px 0px 1.5em; padding: 0px; text-rendering: optimizelegibility;">இப்புராணச் சம்பவத்தை, ‘கூற்றே ருருவின் குறளாய் நிலநீர் ஏற்றா னெந்தை பெருமானூர்போல்’ என்ற திருமங்கையாழ்வாரின் பாசுர வரிகள் விவரிக்கின்றன. மகாவிஷ்ணு ஸ்ரீமுஷ்ணத்தில் பூமிதேவியுடன் வெளிப்பட்டார் என்றாலும், திருமங்கையாழ்வார் அந்த முயற்சியின் முதல் கட்டம் செயல்படுத்தப்பட்ட இந்தத் தலத்தையே பாடியிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.</p><h3 style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; clear: both; display: inline-block; float: left; font-family: Merriweather, "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 20px; line-height: 28px; margin: 20px 0px 10px; padding: 0px; text-rendering: optimizelegibility; width: 373.091px;">தல வரலாறு</h3><p style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; color: #5d5d5d; font-family: "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 15px; line-height: 33.75px; margin: 0px 0px 1.5em; padding: 0px; text-rendering: optimizelegibility;">முற்காலத்தில் இங்கே ஆட்சி புரிந்த அம்பரீச மகாராஜா, பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர். மாதந் தோறும் ஏகாதசி விரதம் இருப்பார். அவருடைய பக்தியிலும் விரதத்திலும் அகமகிழ்ந்த பகவான், அவருக்கு நேரே பிரத்யட்சமாகி ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்க, இதேபோல எப்போதும் விரதம் இருக்கும் ஆன்மபலத்தையும் மனோசக்தியையும் கேட்டாராம் அம்பரீச ராஜா.</p><p style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; color: #5d5d5d; font-family: "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 15px; line-height: 33.75px; margin: 0px 0px 1.5em; padding: 0px; text-rendering: optimizelegibility;">இதைக் கண்டு பொறாமையடைந்த துர்வாச முனிவர், அவருடைய விரதத்தைக் கலைக்கும் முடிவோடு, துவாதசி தினத்தில் மன்னர் விரதம் முடிக்கும் தறுவாயில் வந்து, விரதத்தை முடிக்கவிடாமல் இடையூறு ஏற்படுத்தியிருக்கிறார்.</p><p style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; color: #5d5d5d; font-family: "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 15px; line-height: 33.75px; margin: 0px 0px 1.5em; padding: 0px; text-rendering: optimizelegibility;">தன் பக்தனுக்குத் துன்பம் விளைவிக்கும் துர்வாசரைக் கண்டு வெகுண்ட பெருமாள், தன் கையிலிருந்த சக்கரத்தை அவர் மீது ஏவ, மிரண்டுபோன துர்வாசர், தன் ஆணவம், கோபம் அடங்கி, பெருமாள் பாதங்களில் பணிந்தார் என்கிறது புராணம். ஏகாதசி விரதத்தின் மகிமைக்கும் இச் சம்பவம் ஓர் உதாரணம். பெருமாள் ஏவிய சக்கரம்தான் இங்கிருக்கிறது என்று ஒரு நம்பிக்கை. அதுதான் ‘பிரயோக சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது.</p><p style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; color: #5d5d5d; font-family: "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 15px; line-height: 33.75px; margin: 0px 0px 1.5em; padding: 0px; text-rendering: optimizelegibility;">இக்கோயிலின் இக்கோயிலின் தல விருட்சம் பலா மரம். கோயிலின் தீர்த்தமாக சக்கர தீர்த்தம் என்ற புஷ்கரணியும் காவிரி நதியும் உள்ளன.</p><h3 style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; clear: both; display: inline-block; float: left; font-family: Merriweather, "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 20px; line-height: 28px; margin: 20px 0px 10px; padding: 0px; text-rendering: optimizelegibility; width: 373.091px;">பூவராகப் பெருமாள்</h3><p style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; color: #5d5d5d; font-family: "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 15px; line-height: 33.75px; margin: 0px 0px 1.5em; padding: 0px; text-rendering: optimizelegibility;">பெரிய மதில் சுவருடன் கூடிய பிராகாரத்துடன் அமைந் திருக்கும் கோயிலின் முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. கோயில் கோபுரத்தில் தசாவதாரச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், எதிரே மண்டபத்தில் இடது பக்கத்தில் சக்கரத்தாழ்வார் வடக்கு நோக்கி தரிசனம் தருகிறார். சக்கரத்தாழ்வாருக்குப் பின்னால் யோக நரசிம்மர் அருளாசி வழங்குகிறார். மண்டபத்தில் வலது பக்கத்தில் பூவராகப் பெருமாள் காட்சி தருகிறார். பூமித் தாயாரை மீட்கும் முயற்சியில், இந்தத் தலத்தில்தான் முதல் அடி எடுத்து வைத்த கம்பீரம் அந்தச் சுதைச் சிற்பத்தில் வண்ணமயமாக விளங்குகிறது. அவர் மடியில் பூமித் தாயார்.</p><p style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; color: #5d5d5d; font-family: "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 15px; line-height: 33.75px; margin: 0px 0px 1.5em; padding: 0px; text-rendering: optimizelegibility;">கருவறை மண்டபத்தில் வலது பக்கம் விஷ்வக்சேனர், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வரதராஜப் பெருமாள் ஆகியோரும், பிராகாரச் சுற்றில் பிள்ளை லோகாச்சார்யார், ஆளவந்தார், மணவாள மாமுனிகள், ராமாநுஜர், திருமங்கையாழ்வார் ஆகியோரும் தனித்தனி சந்நிதிகளை அலங்கரிக்கிறார்கள். தாயார் சந்நிதி யில் மூலவராக பத்மாசினி தாயார், உற்சவராக புஷ்பவல்லித் தாயார் ஆகியோர் தனித்தனியே அருள்பாலிப்பது சிறப்பு.</p><p style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; color: #5d5d5d; font-family: "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 15px; line-height: 33.75px; margin: 0px 0px 1.5em; padding: 0px; text-rendering: optimizelegibility;">பிராகாரத்தில் தனிச் சந்நிதியில் ஆண்டாள் அருள்பாலிக்கிறார். மூலவர் வையங்காத்த பெருமாள் (ஜகத்ரட்சகன்), நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இவருக்கு முன்னால் வராஹர். உற்சவரும் வையங்காத்த பெருமாளே. இவர் பிரயோக சக்கரத்தைக் கையிலேந்தியிருக் கிறார்.</p><h2 style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; clear: both; display: inline-block; float: left; font-family: Merriweather, "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 24px; line-height: 33.6px; margin: 20px 0px 10px; padding: 0px; text-rendering: optimizelegibility; width: 373.091px;">தம்பதி ஒற்றுமைக்குப் பிரார்த்தனை</h2><p style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; color: #5d5d5d; font-family: "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 15px; line-height: 33.75px; margin: 0px 0px 1.5em; padding: 0px; text-rendering: optimizelegibility;">நந்தக முனிவரின் மகளான உஷை மீது, அவள் கணவனும் சந்திரகுல மன்னனுமான விஸ்வஜித் சந்தேகம் கொண்டு, அவளை வீட்டை விட்டு விரட்டிவிட்டான். அந்தப் பெண்பாவத்தால் செல்வம் அழிந்து, தொழுநோயும் பீடிக்க, மனைவிக்குச் செய்த துரோகத்துக்குப் பிராயச் சித்தம் செய்ய அவளைத் தேடிப் போனான். அவன் துயரைக் கண்ட துறவி ஒருவர், ‘நீ திருக்கூடலூர் எம்பெருமானை வணங்கு, உன் மனைவி உன்னைச் சேருவாள்’ என்று ஆறுதல் அளித்தார். அதன்படியே அவன் பெருமாளின் பாதம் பற்ற, விரைவில் தன் நோய் நீங்கியதோடு, மனைவியையும் அடைந்து மகிழ்ந்தான். அதற்கு நன்றிக்கடனாக, பெருமாளுக்குத் தேர் ஒன்றைச் செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.</p><p style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; color: #5d5d5d; font-family: "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 15px; line-height: 33.75px; margin: 0px 0px 1.5em; padding: 0px; text-rendering: optimizelegibility;">கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் கணவன் மனைவி சேர்வதற்கான பிரார்த்தனைத் தலம் இது. தொடர்ந்து 16 நாள்கள், ஸ்ரீஜகத்ரட்சகப் பெருமாளுக்கு வெண்ணெய், கல்கண்டு நைவேத் தியம் செய்து, வெள்ளை மலர்களால் (மல்லிகை, முல்லை) அர்ச்சனை செய்து, நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். இருவருக்குமிடையில் அந்நியோன்யம் தழைக்கும்.</p><p style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; color: #5d5d5d; font-family: "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 15px; line-height: 33.75px; margin: 0px 0px 1.5em; padding: 0px; text-rendering: optimizelegibility;">நிவேதனம் செய்த வெண்ணெயையும், கல்கண்டையும் கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கு விநியோகிக்கலாம். தம்பதியருக்குள் மன ஒற்றுமை ஏற்பட்டு அவர்கள் மீண்டும் இணைவது, இப்போதும் நடந்துவருகிறது. இந்தப் பரிகாரத்தை இவர்கள் வாரம் ஒருநாள் வீதம் பதினாறு வாரங்களுக்கு மேற்கொள்கிறார்கள்.</p><p style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; color: #5d5d5d; font-family: "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 15px; line-height: 33.75px; margin: 0px 0px 1.5em; padding: 0px; text-rendering: optimizelegibility;">அதேபோல, இக்கோயிலின் வடக்கு நோக்கிய சக்கரத்தாழ்வாரை செவ்வாய்க்கிழமைகளில் 16 நெய் தீபங்கள் ஏற்றி, வெள்ளை நிற வஸ்திரம் சாத்தி, வெள்ளை நிற மலர்களால் அர்ச்சித்து, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் கடன் தொல்லைகளிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்; நஷ்டத்தில் இயங்கும் தொழில் விருத்தியடைந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.</p><p style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; color: #5d5d5d; font-family: "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 15px; line-height: 33.75px; margin: 0px 0px 1.5em; padding: 0px; text-rendering: optimizelegibility;"><br /></p><p style="-webkit-font-smoothing: antialiased; background-color: white; box-sizing: inherit; color: #5d5d5d; font-family: "Open Sans", helvetica, "helvetica neue", arial, sans-serif; font-size: 15px; line-height: 33.75px; margin: 0px 0px 1.5em; padding: 0px; text-rendering: optimizelegibility;">அது மட்டுமல்ல; இங்கே 16 தினங்கள் பிரார்த் தனை, அர்ச்சனை செய்தால் நினைத்தகாரியங்கள் தடையில்லாமல் நிறைவேறும். தொழிலில் மேம்பாடு, வேலைவாய்ப்பு, தடைப்படும் திருமணம் என பிரார்த்தனை எதுவாக இருந் தாலும் அதை நடத்தி வைக்கிறார், வையகத்தைக் காத்து வாழவைக்கும் இந்த ஆடுதுறை பெருமாள்</p>Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-51133388268209449502022-11-24T07:50:00.000-08:002023-03-09T07:35:44.471-08:00வடுவூர்.. கோதண்டராமர் கோயில்<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEio24kO3DbieHTzi8w-cfEccQLE9Qx9EGWOsUvxyzRouAJLf7Je0X-_5ZnUw549_kg7cQKq6C7hq6biDGjSezHSUUxJQ3qY9cPzcisM-ALJ1CYeqbTirPdKvIxDxli5aysZi6fMVtWxaYo9BHWxnJGLkNJ0tSTfA3BVNpwJ8jlxZFA4eAkiA7V-vVaS/s1600/IMG-20221123-WA0006.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="750" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEio24kO3DbieHTzi8w-cfEccQLE9Qx9EGWOsUvxyzRouAJLf7Je0X-_5ZnUw549_kg7cQKq6C7hq6biDGjSezHSUUxJQ3qY9cPzcisM-ALJ1CYeqbTirPdKvIxDxli5aysZi6fMVtWxaYo9BHWxnJGLkNJ0tSTfA3BVNpwJ8jlxZFA4eAkiA7V-vVaS/s320/IMG-20221123-WA0006.jpg" width="150" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhQwQAFk4YwFTZ-zbpL_RoI7xyovum5awq3r2lsZWGz5ivTJpeOEqf8RMxPRpRBD57VZkkIgOabwmfAGo2dDFNiaJvV4f4TZf_XbSiHvETb8pwu0B1GnXPV1UeTfhfiE6WdOj9XqA_Q6G3qPw9O7-F4jx-eUD0yfHvAbFJzRnUqQGJwOTkyzHFsGmA/s1600/IMG-20221123-WA0010.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="750" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhQwQAFk4YwFTZ-zbpL_RoI7xyovum5awq3r2lsZWGz5ivTJpeOEqf8RMxPRpRBD57VZkkIgOabwmfAGo2dDFNiaJvV4f4TZf_XbSiHvETb8pwu0B1GnXPV1UeTfhfiE6WdOj9XqA_Q6G3qPw9O7-F4jx-eUD0yfHvAbFJzRnUqQGJwOTkyzHFsGmA/s320/IMG-20221123-WA0010.jpg" width="150" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcu0VfN2mJ0abuw0sutqXS9lFUIZU5P5G00utdLNWpJ9JCyG9ERbpHRxaNREvYTqfHUbxw8nMfXs5pgqLu_MkgSoDgacKHWN5sIHuZpObhLgB4Bb0qErQHAOIK48nXo5zY6c7WvLGP_nis1aR2jltL0Y_unFgqIgDLznoVFf7OfJZCtfYEZJJOSn1Z/s1600/IMG-20221123-WA0011.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="750" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcu0VfN2mJ0abuw0sutqXS9lFUIZU5P5G00utdLNWpJ9JCyG9ERbpHRxaNREvYTqfHUbxw8nMfXs5pgqLu_MkgSoDgacKHWN5sIHuZpObhLgB4Bb0qErQHAOIK48nXo5zY6c7WvLGP_nis1aR2jltL0Y_unFgqIgDLznoVFf7OfJZCtfYEZJJOSn1Z/s320/IMG-20221123-WA0011.jpg" width="150" /></a></div><br /><p><br /></p><p><br /></p><p dir="ltr">வடுவூர்.. கோதண்டராமர் கோயில் <br />
<u><b><b>ஸ்தல வரலாறு :-</b></b></u><br />
இந்த ஊருக்கு வடுவூர் என்ற பெயர்க்காரணமே சுவாரஸ்யமானது. சேரர் மற்றும் தொண்டை மண்டலத்தார் என பெரும் படையை எதிர்த்து கரிகால சோழன் வெற்றி கண்ட <i><b>வெண்ணிப்பறந்தலைப்</b></i> (தற்போது கோவில்வெண்ணி) தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது.<br />
இந்த போரில் வெற்றி கண்ட கரிகால சோழனது வீரர்கள் இந்த ஊரில் தங்கி இளைப்பாறி, விழுப்புண் ஆற்றிச் சென்றனர்.<br />
வடுக்களைப் பெற்ற போர்வீரர்கள் தங்கி சென்ற ஊர் என்ற பொருளில் <b>வடு + ஊர் = வடுவூர்</b>, அழகுமிக்க, இளமையான ஊர் எனும் பொருளில் வடிவு +ஊர் என அழைக்கப்படுகிறது.<br />
அந்த காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் <b>மகிழங்காடு</b>, வெகுளாரண்யம் என்றும், பாஸ்கர ஷேத்திரம், தக்ஷிண அயோத்தி, <b>ஏகாதசி கிராமம்</b> என பல்வேறு பெயர்களும் உண்டு என்கிறார்கள்.<br />
இந்த ஊர் பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள். ஒரு காலத்தில் தஞ்சை அரசர்களால் ஓர் ஏகாதசி தினத்தன்று வித்வான்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வடுவூரை <b><i>‘ஏகாதசி கிராமம்’</i></b><i> </i>எனவும் அழைப்பர்.<br />
<i><b>முனிவர்களின் வேண்டுகோள்</b></i><br />
இதிகாச நாயகனான ராமன், தந்தை தசரதனின் ஆணையின்படி <i><b>14 ஆண்டுகள்</b></i> வனவாசம் மேற்கொண்டார். அடர்ந்த கானகத்தில் அவர் நடமாடி வந்தபோது, அங்குள்ள முனிவர்கள் அவரை அங்கேயே தங்கி இருக்கவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொண்டனர்.<br />
அவதார நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு ராமன் முனிவர்களை சமாதானப்படுத்தி மேற்கொண்டு செல்ல தடைவிதிக்கக்கூடாது என்று கூறினார். அதற்கு முனிவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் ராமன் என்ன செய்வதென்று சிந்தித்தார். முடிவில் தன் கையாலேயே தன்வடிவத்தைத்தானே விக்ரகமாக செய்து தனது ஆசிரமத்து வாசலில் வைத்துவிட்டு உள்ளே சீதையுடன் இருந்தார்.<br />
முனிவர்கள் மறுமுறை ராமனை தரிசிக்க வந்தபோது, ஆசிரமத்து வாசலில் அழகெல்லாம் ஓர் உருவாய் திரண்ட வடிவழகுடன் கூடிய ராமன் செய்த விக்ரகத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றார்கள். அப்போது அவர்கள் ராமனிடம் இந்த தண்ட காரண்யத்தை விட்டு செல்லக்கூடாது என்று மீண்டும் வேண்டிக்கொண்டனர்.<br />
அப்போது ராமன் நான் வேண்டுமா?<br />
அல்லது ஆசிரமத்து வாசலில் உள்ள எனது அர்ச்சை உருவம் வேண்டுமா?<br />
என்று கேட்டார். ராமனின் விக்ரகத்தின் அழகில் மெய் மறந்து இருந்த முனிவர்கள் அந்த திவ்ய விக்ரகத்தையே விரும்பினார்கள். உடனே விக்ரகத்தை முனிவர்களிடம் கொடுத்த ராமன் அங்கே எழுந்தருளிவிட்டார்.<br />
<i><b>திருக்கண்ணப்புரத்தில்</b></i><br />
அந்த விக்ரகத்தை திருக்கண்ணப்புரத்தில் ராமர் சன்னிதியில் பிரதிஷ்டை செய்து நீண்டகாலம் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அதனால்தான் திருக்கண்ணப்புரம் பெருமாளை பாடிய குலசேகர ஆழ்வார், இந்த ராமனை மனதில் கொண்டு, தனது பெருமாள் திருமொழியில் ‘மன்னுபுகழ் என்ற எட்டாம் திருமொழியில், சிலை வளைத்தாய், சிலைவலவர், ஏமருவுஞ்சிலை வலவா, வளையவொரு சிலை அதனால், ஏவரி வெஞ்சலை வலவா’ என பாடியுள்ளார்.<br />
ஸ்ரீ சவுரி ராஜனாகிய கண்ணபிரான் எழுந்தருளியிருக்கும் திருக்கோவிலில் கிளைச்சன்னிதியில் ராமன் இருந்ததால் இப்பதிகத்தை அவர்பாடினார். இந்த ராமர் விக்ரகம் ஒரு காலத்தில் அங்கிருந்து அகற்றப்பட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள தலைஞாயிறு என்ற ஊரில் மரத்தடியில், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன் விக்ரகங்களுடன் மண்ணுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டது.<br />
பல ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையை ஆண்டு வந்த <i><b>மராட்டிய மன்னரின்</b></i><b> </b>கனவில், பெருமாள் சென்று தான் தலைஞாயிறு அருகே மண்ணுக்கடியில் புதையுண்டு கிடப்பதாகவும், அதை வெளியில் எடுத்து கோவில்கட்டி, ஆராதனை செய்யும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே மன்னரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று விக்ரகங்களை மண்ணில் இருந்து வெளியே எடுத்தார்.<br />
அப்போது அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து, சிலைகளை அங்கிருந்து எடுத்துச்செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே லட்சுமணன், பரதன், சிலைகளை மன்னர் அவர்களிடம் கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தி, ஸ்ரீ கோதண்டராமர், சீதை, அனுமன் சிலைகளை பல்லக்கில் எடுத்துக்கொண்டு வந்தார். அந்த சிலைகளை தஞ்சையில் பிரதிஷ்டை செய்ய எண்ணி கொண்டு வரும் வழியில் <i><b>வடுவூர்</b></i> வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது.<br />
<i><b>வடுவூரில் விக்ரகங்கள் </b></i><br />
அங்கு தங்கி இளைப்பாறி, விக்ரகங்களை வடுவூர் கோவிலில் வைத்து இருந்தார். இந்த எழிலார்ந்த விக்ரகங்களை கண்ட அவ்வூர் மக்கள் அவற்றை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று மன்னரிடம் கேட்டுக்கொண்டனர். விக்ரகங்களை மன்னர் மீறி எடுத்து சென்றால்,<br />
தாங்கள் அனைவரும் உயிரை மாய்த்து கொள்வதாக கூறினர். உடனே மன்னனும் மனமுவந்து அந்த விக்ரகங்களை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். பின்னர் லட்சுமணன் விக்ரகத்தையும் புதிதாக செய்தனர்.</p>Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-80590530918713432552022-07-03T09:27:00.000-07:002022-07-06T18:09:46.208-07:00காசி யாத்திரை<காசி யாத்திரை...இந்த வார்த்தையை எல்லா திருமணங்களிலும் நாம் கேட்டிருக்கிறோம்...அதை பார்த்து, அதில் பங்கு கொண்டு ரசித்திருக்கிறோம்! மாப்பிள்ளை திருமணத்தன்று காலை கையில் தடி, விசிறி, பக்தி புத்தகம், காலில் செருப்பு சகிதம் காசிக்கு யாத்திரை கிளம்பிப் போவதாகவும், பெண்ணின் தந்தை அவரிடம் தன் பெண்ணை மணந்து கொண்டு இல்லறத்தைக் கடைப்பிடித்து பின்பு மனைவியுடன் இணைந்து காசி யாத்திரை செய்யலாம் என்று சொல்வதாக ஐதீகம்.<br /><div><br /></div><div><div>என் திருமணத்திலும் இந்த சடங்கு நடை பெற்றது.ஆனால் நாங்களோ அடுத்த வருடமே எங்கள் திருமண நாள் அன்று காசியில் யாத்திரை செய்தது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.அச்சமயம் என் வயது 19. திருச்சியில் வங்கியில் பணிபுரிந்த என் கணவருக்கு பதவி உயர்வுடன் மாற்றல் கிடைத்தது.எங்கு தெரியுமா! சப்த மோக்ஷ புரியில் ஒன்றான ஸ்ரீக்ருஷ்ணன் பிறந்த மதுராவுக்கு! எங்களுடன் இருந்த என் கணவரின் 80 வயது தாத்தாவுக்கு காசிக்கு சென்று காரியங்கள் செய்ய ஆசை. அவருடன் சென்ற நாங்களும் (எனக்கு மாமனார் இல்லாததால்) பித்ரு காரியங்களை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்பு என் மாமியார் காலமானபின் நாங்கள் மீண்டும் காசி யாத்திரை செய்து வர முடிவெடுத்து கடந்த 2014ம் ஆண்டு சென்று வந்தோம். எங்களுடன் என் மைத்துனர், ஓர்ப்பிடியும், நாத்தனார், அவள் கணவரும் சேர்ந்து கொள்ள எல்லோருமாக காசி யாத்திரை கிளம்பினோம்.<br /></div><br /></div><div>குல தெய்வங்களான மதுரைவீரன் மற்றும் ஸ்வாமிநாதஸ்வாமியிடம் வேண்டிக் கொண்டு, ஷேத்திர தெய்வமான திருச்சி மலைக்கோட்டை பிள்ளையாரிடமும் பிரார்த்தித்துக் கொண்டு முதலில் ராமேஸ்வரம் சென்றோம்.<br /><br />அங்குள்ள ஸ்ரீசங்கர மடம் மிக அருமையாக உள்ளது. ஆலயத்திற்கு அருகில் உள்ளது.அக்னி தீர்த்தக் கரையில் உள்ளது.தங்குவதற்கு அறைகள் உள்ளன. மடத்தில் ஆதி சங்கரர் மற்றும் ஏனைய தெய்வங்களுக்கு சிறுசிறு சன்னதிகள் உள்ளன. அங்கு தங்குமிடத்திற்கு 15 நாட்கள் முன்னமே பதிவு செய்து கொள்ள வேண்டும். ஐம்பது அடி உயரத்தில் மேல் தளத்தில் ஆதிசங்கரர் தன் நான்கு சீடர்களுடன் கடலை நோக்கியபடி அமர்ந்தருளும் சலவைக்கல் திருவுருவங்கள் மிக அற்புதமாக வடிவமைக்கப் பட்டுள்ளன. அங்கு அமைக்கப்பட்டுள்ள பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள், கணபதி, முருகன், சரஸ்வதி மிக அற்புதமாக உள்ளன.ஆதி சங்கரரின் பாதுகா மண்டபம் மூன்றாம் தளத்தில் அமைந்துள்ளது.அவரது வாழ்க்கை வரலாறு அழகிய வண்ணச்சித்திரங்களாக வடிக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சிமணி மண்டபத்தின் உச்சியில் மணி அடிக்கும் பசுவின் சிற்பம் அமைந்துள்ளது.கோசாலையும் அமைந்துள்ளது.<br /><br /></div><div>முதலில் ஸ்நான சங்கல்பம் செய்து கொண்டு அக்னி தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின் ராமேஸ்வரம் ஆலயத்திற்குள் அமைந்துள்ள 22 தீர்த்தங்களில் நீராட வேண்டும். அதன்பின் நாம் பித்ரு காரியங்கள் செய்ய நியமித்துள்ள இருப்பிடம் சென்று தீர்த்த ஸ்ரார்த்தம், 17 பிண்டங்கள் பிடித்து பிண்டப்பிரதான தர்ப்பணம் செய்ய வேண்டும். ஐந்து பிராம்மணர்களுக்கு அன்னமிடல் நல்லது.<br /><br /></div><div>அங்கு திரு வெங்கட்ராமன் சாஸ்திரிகள் என்பவரை எங்கள் காரியங்கள் செய்ய அணுகியிருந்தோம்.அவரும் மிக அருமையாக எல்லாம் விளக்கமாக சொல்லி செய்து வைத்தார். அவர் ஏற்பாடு செய்த இல்லத்திலேயே மடி சாப்பாடும் சாப்பிட்டோம்.நாங்கள் சென்ற அன்று முதலில் ஸ்நான சங்கல்பம் செய்து அக்னி தீர்த்த ஸ்நானம் செய்தபின், அவரே ஆலயத்தின் 22 தீர்த்தங்களிலும் நீராட ஒருவரை உடன் அனுப்பினார்.<br /><br />அக்கினி தீர்த்தம்....இங்குள்ள தீர்த்தங்களில் முதன்மையானதும், சிறப்பானதுமான கடல் 'அக்னி தீர்த்தம்'.அன்னை சீதையின் கற்பை நிரூபிக்க இராமபிரான் அவளை அக்கினிப் பிரவேசம் செய்யும்படி சொன்ன இடம் இது. ராமன் கட்டளைப்படி அனுமன் மூட்டிய தீ குளிர்ந்து பிராட்டியின் கற்புக் கனலைத் தாங்க முடியாத அக்னி தேவன் அன்னையை பயபக்தியுடன் வணங்கிய இடமே அக்னி தீர்த்தம். இதில்தான் நாம் முதல் ஸ்நானம் செய்ய வேண்டும்.<br /><br />இந்த இடம்தான் சீதாதேவியை மீட்டு வந்தபின் ராமர் அவளை அக்னி பிரவேசம் செய்யச் சொல்ல சீதை தீக்குளித்த இடம். அதைக் கேட்டு அக்கினிபகவான் பயந்தபோது சீதை,'பயப்படாதே. நான் குளிப்பதால் நீ பவித்திரமடைவாய்'என்று அருள் செய்த இடம். அக்கினியும் அவளை சுடாமல் குளிர்ந்து அங்கு நீராடியதாகப் புராணக் கூற்று.அக்கினியும் குளிர்ந்து அவ்விடத்தில் நீராடி புனிதம் பெற்ற இடம். நினைக்கவே மெய் சிலிர்த்தது.நாங்கள் போன சமயம் மகாளய பட்ச நாட்களானதால் கூட்டம் தாங்கவில்லை. அங்கு குளித்தவர்கள் தம் ஆடைகளை அங்கேயே விட்டுவிட்டு போக வேண்டும் என்பது வழக்கமாம். கடலில் இறங்கி குளிக்க முடியாத அளவுக்கு ஒரே ஆடைமயம்!<br /><br /></div><div>அங்கிருந்து ஆலயம் சென்று சுற்றுப் பிரகாரத்தில் இருக்கும் 22 தீர்த்தங்களில் நீராட வேண்டும். அடேயப்பா...வரிசையில் சென்று கொண்டிருந்தார்கள் அனைவரும்.நம்முடன் வந்தவர் அங்கு பரிச்சயமானவர் என்பதால் யாரும் தடுக்கவில்லை. அவர் கையோடு கொண்டு வந்திருந்த கயிற்று வாளியால் இழுத்து நம் தலைகளில் தாராளமாக தண்ணீர் ஊற்றினார்! இந்தத் தீர்த்தங்கள் வற்றாத நீரோட்டத்துடனும், பல ஜீவ அணுக்களையும், சத்துப் பொருள்களையும் தன்னுள் கொண்டு குளிப்பவர்களுக்கு உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை பயப்பனவாம்.அவற்றின் பெயர்கள்....1.மகாலட்சுமி தீர்த்தம் 2.காயத்ரி, 3.சாவித்திரி,4.சரஸ்வதி, 5.சேதுமாதவ,, 6.கந்தமாதன, 7. கவாட்ச ,8.கவய.9.,நள 10.நீல,11.சங்க,12.சக்ர, 13.பிரம்மஹத்தி விமோசன,14. சூரிய,15.சந்திர,16.கங்கை,17.<wbr></wbr>யமுனை,,18.கயா ,19.சிவ,20.சத்யாம்ருத,21.சர்வ,<wbr></wbr>22.கோடி தீர்த்தங்கள். இவற்றின் சிறப்புகளைப் பார்ப்போம்.<br /><div><br /></div><div>1.மகாலக்ஷ்மி தீர்த்தம்.....தர்மராஜன் ஐஸ்வர்யம் பெற்ற தீர்த்தம், செல்வ வளம்<br /></div><div>2.காயத்ரி...உலக நன்மை<br />3.சாவித்திரி....,பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)<br />4.சரஸ்வதி..... காஷ்யப மன்னரின் பாவம் தீர்ந்தது, கல்வி அபிவிருத்தி</div><div>5,சேதுமாதவ தீர்த்தம்....இது ஆலயத்தின் அழகிய அல்லிப் பூக்கள் நிறைந்த திருக்குளம். லக்ஷ்மி கடாக்ஷம் மற்றும் சித்த சுத்தி, தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல். இதன் அருகில் அமைந்துள்ளது சேது மாதவர் சந்நிதி. காசி யாத்திரை செல்பவர்கள் தரிசிக்க வேண்டிய இறைவன் இவர்.<br /></div><div>6.கந்தமாதன...ஏழ்மை நீங்கி செல்வம் பெற, சர்வ பாபங்களும் தீர,எத்துறையிலும் வல்லுனராக </div><div>7. கவாட்ச.....நரகம் செல்லாமல் இருக்க.<br /></div><div>8.கவய....கற்பக விருட்சத்தினருகில் வாழ்வு.<br /></div><div>9.நள ....சூரியனைப் போன்ற தேஜஸ் பெற்று சுவர்க்கம் அடைய.<br /></div><div>10.நீல....சகல யாகபலன்களையும் பெற.<br /></div><div>11.சங்கு....வத்ஸநாப ரிஷி விமோசனம் பெற்றார்.வாழ்க்கை வசதி அதிகரிப்பு</div><div>12. சக்ர....சூரியனின் கரம் தங்கமாகியது.மனஉறுதி பெறுதல்</div><div>13. பிரம்மஹத்தி விமோசன....பிரம்மஹத்தி தோஷம் நீங்க.<br /></div><div>14.சூர்யா....முதன்மை ஸ்தானம் அடைதல், நிறைந்த அறிவு பெற்று, விரும்பியவற்றை பெற.<br /></div><div>15.சந்திர...அறிவும், ஆசையும் நிறைவேற.<br /></div><div>16.கங்கை,17.யமுனை,18.கயா......<wbr></wbr>ஞானஸ்ருதி அரசன் வெற்றி பெற்றான்.<br /></div><div>19. சிவா...பைரவரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. சகல பீடைகளும் ஒழிதல்</div><div>20. சத்யாம்ருத....புருனு சக்கரவர்த்தி சாப விமோசனம் பெற்றார்.ஆயுள் விருத்தி</div><div>21. சர்வ...சுதர்சனர் கண் பெற்று, செல்வம் பெற்றார்.எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்</div><div>22, கோடி....கிருஷ்ணர் தன் மாமா கம்சனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார்.<br /><br />இந்தக் கோடி தீர்த்தம் சகல பாபங்களையும் நீக்கி மோட்சம் தர வல்லது.இக்கிணற்று நீரே இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.இது கோடி புண்ய தீர்த்தங்கள் இதில் இருப்பதால் இது கங்கா ஜலம் போல் மிகவும் புனிதமானது.எத்தனை நாளானாலும் கெடுவதில்லை.ஸ்ரீராமர் தான் வில்லினால் சிவனை அபிஷேகிப்பதற்காக உருவாக்கியதே கோடி தீர்த்தம்.ஸ்வாமி அபிஷேகத்திற்கு இந்த நீரே பயன்படுத்தப் படுகிறது.உள்ளிருந்து கொட்டும் நீர் கோமுகம் வழியாக நம்மை நனைக்கும்.காசி யாத்திரை முடிந்து நாம் கங்காபிஷேகம் செய்ய வரும்போது ஒரு பாட்டிலில் கோடி தீர்த்தம் எடுத்து சென்று அதையும் கங்கை நீருடன் வைத்து சமாராதனை, பூஜை செய்ய வேண்டும்.</div><div><br /></div><div>குளித்து முடித்து மடி வஸ்திரம் அணிந்து கொண்டு பித்ரு காரியம் செய்ய வாத்தியார் நியமித்த இடம் சென்று தீர்த்த ஸ்ரார்த்தமும், 17 பிண்டங்கள் ( பித்ரு வர்க்கம்..3, மாத்ரு வர்க்கம்..3, மாதாமஹாதி..3, மாதாமஹீ..3, காருண்ய பித்ருக்கள்..1, தர்ம பிண்டம்..4) பிடித்து பிண்டப்பிரதான தர்ப்பணமும் செய்தோம்.என் கணவர் தினமும் மாளய பட்ச தர்ப்பணம் செய்பவர். அதனால் அதுவும் செய்து அன்று பிராம்மணர்களுக்கு போஜனம் செய்வித்தோம்.<br /></div><br />மாலை ராமேஸ்வரம் ஆலயங்களை தரிசித்து வந்தோம்.ராமர் பாதம் பதித்த கந்தமாதான பர்வதம் ஒரு சிறு குன்று. ஸ்ரீராமர் இம்மலையிலிருந்துதான் இலங்கைக்குப் பாலம் காட்டும் இடத்தைத் தேடினாராம். அங்கிருந்து தூரத்தில் கடலுக்கு அப்பால் இலங்கை தெரிகிறது.<br /><br />அடுத்து பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம். அங்கு உயரமான பஞ்சமுக ஆஞ்சநேயர் வெளியில் காட்சி தருகிறார்.ஸ்ரீராமர் பாலம் அமைக்க உபயோகப்படுத்திய மிதக்கும் கற்கள் உள்ளன. அவற்றை வெளியில் எடுத்ததும் கனம் கூடி விடுகிறது.<br /><br />அடுத்ததாக நாங்கள் சென்றது லக்ஷ்மண தீர்த்தம் சேது மஹாத்மியத்தில் இத்தீர்த்தத்தில் வபனம் செய்து, இக்குளத்தில் நீராடி தீர்த்த ஸ்ரார்த்தம் செய்வது மிக விசேஷமானதாகக் கூறப்படுகிறது.அருகிலேயே ராமர், சீதை தீர்த்தங்களும், ஆலயங்களும் உள்ளன.<br /><br />வடக்கில் பத்ரகாளி, கிழக்கில் உஜ்ஜயினி காளி, மேற்கில் துர்க்கை அம்மன், தெற்கில் நம்புநாயகி அம்மன் ஆகிய தேவியர் ராமேஸ்வரத்தில் நான்கு திசைக்கு காவல் தெய்வங்களாக உள்ளனர்.இன்னும் சில ஆலயங்களும் தரிசித்தோம்.<br /><br /></div><div>மறுநாள் காலை ஆறு மணிக்கு கிளம்பினால்தான் தனுஷ்கோடி சென்று அங்கு சங்கல்பம், 36 ஸ்நானம், மணலை எடுத்து அதற்கு பூஜை செய்து நம்முடன் எடுத்து வர வேண்டும். ஜீப் மிக மெதுவாகப் போகும் என்பதுடன், திரும்ப வரும்போது சில ஆலயங்களும் தரிசிக்க வேண்டும், வந்து மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றதால் விடிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்து தயாரானோம்.ஜீப்பில் எங்களுடன் இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டார்கள். மொத்தம் 12 பேர். போகும் வழியெல்லாம் ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. இரு பக்கமும் கருவேல, பனை மரங்கள். வெகுசில கிராமங்கள்.மிகச் சில மனிதர்கள். முகுந்தராயன் சத்திரம் என்ற இடம் வரை சாதாரண ஜீப்கள் செல்ல முடியும். அதன்பின் கடல் மணலில் செல்வதற்கு ஏறறாற்போல் சக்கர அமைப்பை மாற்றினார் ஜீப் ஓட்டுநர்.<br /><br /></div><div>தனுஷ்கோடி...இந்தப் பெயர் வரக் காரணம் என்ன?சீதையைத் தேடி வந்த ராமர் முதலில் வேதாரண்யம் வந்தடைந்தார்,அங்கு கடலின் குறுக்கே அணையோ, பாலமோ கட்ட முடியாது என அறிந்து கோடிக்கரைக்கு வந்தார்.தனுஷ்கோடி வந்த ராமர் தன்முன் விரிந்து, பிரிந்து இருந்த இரு மாபெரும் கடல்களைக் கண்டார். இதுவே பாலம் கட்ட சரியான இடம் என முடிவு செய்தார்.வலப்பக்கம் ரத்னாகரம்.இந்தியப் பெருங்கடல் ராவணன். ஆர்ப்பாட்டம் இருக்கும், ஆபத்தில்லை. வலப் பக்கம் மகோததி.வங்காள விரிகுடா. மண்டோதரி, அமைதி ஆனாலும் ஆபத்தானது.இரண்டும் இணையும் வில்முனை போன்ற இடமே தனுஷ்கோடி.ராவண ஜெயமானபின் ராமர் அந்தப் பாலத்தை தனது வில்லினால் உடைத்து விட்டார்.<br /><br /></div><div>'சேதும் த்ருஷ்ட்வா சமுத்ரஸ்ய பிரும்மஹத்யாவ்ய போஹதி'...<br /></div><div>இந்த ராமசேதுவை தரிசித்தாலே பிரும்மஹத்தி பாவம் அகலும் என்று சாஸ்த்திரம் கூறுகிறது.ராவண, கும்பகர்ணாதியரைக் கொன்ற பாவம் நீங்க ஸ்ரீராமர் இந்த கோடிக்கரையில் ஸ்நானம் செய்து சிவபெருமானை பூஜித்தார். அவர் பூஜித்த கோயில் கடலால் அழிந்து விட்டதாம்.<br /></div><div><br /></div><div>போகும் வழியெங்கும் 1964ம் ஆண்டு அடித்த பெரும் புயலின் கோரமான முகம். அன்றைய நாளை நினைத்து மனம் கலங்குகிறது. ஒரு புகை வண்டி முழுவதுமாக அந்த கோரப் புயலில் சிக்குண்டு கடலால் விழுங்கப்பட்டு கடலோடு போன சம்பவம் மனதை என்னவோ செய்கிறது. ஜீப்பும் ஆடி, ஆடி மிக மெதுவாகத்தான் செல்லுகிறது. கிட்டத்தட்ட எட்டு கிலோ மீட்டர். கடல்நீர், சகதியில் ஏறியும், இறங்கியும், வளைந்தும், நெளிந்தும் ஒரு வழியாக கடற்கரையை அடைந்தோம்.<br /><br />தம்பதியராக இணைந்து 36 முறை ஸ்நானம் செய்தோம்.அவ்விடத்தில் குளிக்கும் முன்பு நமஸ்கரித்து சமுத்திரத்திடம் அனுமதி பெற வேண்டும்.சங்கல்பம் செய்தபின் ஒரு கல் அல்லது கொஞ்சம் மணலை எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லியபடி அதனை கடலில் போடவேண்டும்.<br /></div><div style="text-align: center;">''பிப்பலாத ஸமுத்பன்னே க்ருத்யே லோக பயங்கரி<br /></div><div style="text-align: center;">ஸைகதம் தே பிரதாஸ்யாமி ஆஹாரார்த்தம் பிரகல்பிதம்''<br /></div><div>எந்த இடத்தில் சமுத்திர ஸ்நானம் செய்தாலும் இந்த மந்திரம் கூறி ஒரு கல் அல்லது மணலைக் கடலில் போடவேண்டும்.கடல் மண்ணை எடுத்து கடலிலேயே எதற்கு போடுவது? இதற்கும் ஒரு காரணம் உண்டு என்கிறார் எங்களை அழைத்துச் சென்ற புரோகிதர்! கடலில் க்ருத்யை என்ற அரக்கி வாழ்வதால் அவளுக்கு உணவாக நாம் இவ்வாறு கல்லையோ,மணலையோ போட்டால் அவள் மனம் மகிழ்ந்து நம் காரியங்கள் தடையின்றி நடக்க அருள் செய்வதாக ஐதீகமாம்.<br /><br /></div><div>பின் எங்கள் பிரோஹிதர் கூறியபடி மணலில் மூன்று சிவலிங்கங்களைப் பிடிக்க வேண்டும். நடுவில் உள்ள லிங்கம் வேணி மாதவர் மற்றும் இரு பக்கங்களில் உள்ளவர்கள் சேது மாதவரும், பிந்து மாதவரும். முறைப்படி அர்ச்சனை, அலங்காரம், தூப, தீப, நைவேத்தியங்களுடன் பூஜை செய்து பிரயாகை சென்று அங்குள்ள வேணி மாதவரைப் பூஜிக்கவும், காசி சென்று அங்குள்ள பிந்து மாதவரைப் பூஜித்து வரவும் உத்தரவு பெற்றுக் கொள்ள வேண்டும்.பின் சேது மாதவரைக் கடலில் கரைத்துவிட்டோம். பிந்து மாதவரை புரோஹிதருக்கு தானம் செய்துவிட வேண்டும். அவர் தட்சணையைப் பெற்றுக் கொண்டு அவ்விடத்திலேயே பிந்து மாதவரைக் கலைத்து விடுவார். வேணி மாதவரை அடுத்து செல்லப் போகும் பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் கரைக்க எடுத்து பத்திரமாக ஒரு துணியில் கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை நாம் காசிக்கு செல்லும்வரை பூஜையறையில் வைக்க வேண்டும்.இத்துடன் ராமேஸ்வரத்தில் செய்ய வேண்டிய யாத்திரை காரியங்கள் முடிந்தன.<br /><br /></div><div>திரும்ப வரும்போது சிதிலமடைந்த ரயில் நிலையம், துருப்பிடித்த படகுகள், அழிந்த நிலையில் வீடுகள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து வந்தோம். அங்கிருந்து நாங்கள் சென்றது கோதண்டராமர் ஆலயம். இங்குதான் ராமர் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்த இடம்.இக்கோயிலும் புயலால் சீரழிந்துள்ளது.வாசலில் இரு தூண்கள் மட்டுமே உள்ளன.அங்கிருந்து ஜடாமகுட தீர்த்தம்.ராவண சம்ஹாரம் முடிந்து ராமர் தன் ஜடையை நீக்கி நீராடிய இடம்.<br /><br /></div><div>இன்னும் ராமநாத ஸ்வாமியை தரிசிக்க வில்லையே? பித்ரு காரியம் முடிந்தபின்பே இறை வழிபாடு செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.ஆலயம் செல்வோம்.<br /></div><div><br />நமோ தேவாதி தேவாய ராமனாதாய சாக்ஷினே<br />நமோ வேதாந்த வேத்யாய யோகிநாம் பததாயினே<br /></div><div><br /></div><div></div><div>ராமபிரான் ராவணாதியரைக் கொன்ற பாபம் அகல ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்த லிங்கமே ஸ்ரீராமனாத சுவாமி.ராமாயண காலத்தில் தோன்றியது ராமேஸ்வரம்.மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்புகளைக் கொண்டது.சீதாதேவியின் கையால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கமே ஸ்ரீராமநாதஸ்வாமி. இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் முதன்மையானது ராமேஸ்வரம்.காசியிலிருந்து ஹனுமான் கொண்டு வந்த லிங்கம் ஹனும லிங்கம் என்று வணங்கப் படுகிறது. அந்த லிங்கத்திற்கு முதல் பூஜை நடந்த பின்பே ராமநாத ஸ்வாமிக்கு பூஜை நடை பெறுகிறது.ராமநாதசுவாமி மிக அழகாக்க காட்சி தருகிறார். சதா நேரமும் காசியிலிருந்து பக்தர்கள் கொண்டுவரும் கங்கை நீரினால் அபிஷேகம் நடைபெறுகிறது.<br /><br /></div><div>அன்னை பர்வதவர்த்தினி அழகின் உருவமாய், நான்கு கரங்களுடன், கருணை பொங்கும் விழிகளும், புன்னகை பொருந்திய அதரத்துடனும் அற்புதக் காட்சி தருகிறாள். கந்தமாதான பர்வதம் அவளின் பிறந்த வீடாகக் கொண்டு ஆடி மாதம் அங்கு சென்று விடுகிறாள். திருக்கல்யாண உற்சவத்தின் சமயம் ஸ்ரீராமநாதரும் அங்கு சென்று தங்கி விடுவாராம். அப்போது ராமேஸ்வர ஆலயம் அடைக்கப்பட்டு விடுமாம்.ஆடி மாதம் ராமேஸ்வரம் செல்வோர் அந்த நாட்களைத் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும்.<br /><br /></div><div>ராமநாதஸ்வாமி சந்நிதியின் உட்புறத்தில் ஸ்படிக லிங்கம் உள்ளது. தினசரி காலை 5 மணி முதல் இந்த லிங்கத்திற்கு நடைபெறும் பூஜை மிக விசே ஷமானது. இதற்கான கட்டணம் 50 ரூபாய். விடிகாலை 4 மணி முதலே இந்த தரிசனத்திற்கு நீண்ட வரிசை இருக்கிறது.ராமநாத ஸ்வாமி சந்நிதியின் முதல் பிரகாரத்தில் சகஸ்ர லிங்கம் இருக்கிறது. ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கங்களைக் கொண்ட லிங்கம் இது. இவ்வாலயத்திலுள்ள 3 நடராஜர் மிகப் பெரியவை. தட்சிணா மூர்த்தி மிக சிறப்பானது.<br /></div><div><br /></div><div>இவ்வாலயத்தில் அனுமனால் ஸ்தாபிக்கப்பட்ட காசிவிஸ்வநாதரை தரிசித்த பின்பே ராமநாதஸ்வாமியை தரிசிக்க வேண்டும்.ராமரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவ பூஜை செய்ய வேண்டி ஹனுமனை காசியிலிருந்து சிவலிங்கம் கொண்டுவரப் பணித்தார் ராமர். காசியில் சிவபெருமான் அனைவர் காதிலும் ராம மந்திரம் ஓதுவத்தைக் கேட்டு அதில் லயித்த ஹனுமான் வந்த காரியத்தை மறந்தார். ஹனுமான் வர நேரமானதால் சீதை பிடித்து வைத்த லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்தார்.<br /><br />இதற்கு இன்னொரு கதையும் உண்டு.காசியின் காவல் தெய்வமான காலபைரவரின் அனுமதி பெறாததால் அவர் ஹனுமனை கீழே வைத்து விடும்படி செய்து விட்டார். அவ்விடமே நாகலாபுரம் என்கின்றனர்.ஆகவே ஆஞ்சநேயர் மீண்டும் காலபைரவர் அனுமதியுடன் காசி சென்று இரு லிங்கங்களைக் கொண்டு வந்தார். இங்கு ஏற்கெனவே பூஜைக்கு தயாராக இருந்த லிங்கத்தை அகற்ற தான் வாலினால் கட்டி இழுத்தார்.அது சற்றும் அசையாததால் தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்ட, ராமரும் அதை அருகிலேயே ஸ்தாபித்து முதல் பூஜை அனுமனின் லிங்கத்துக்கே என்று சொல்லிவிட்டார். ஆஞ்சநேயர் கொணர்ந்த இன்னொரு லிங்கம் வாசலில் வலப்புறம் காட்சி தரும் வித்யாசமான செந்தூர ஹனுமானின் சந்நிதிக்கு பின்புறம் உள்ளது.<br /><br /></div><div>ராமநாத ஸ்வாமியின் பின்புறம் இரண்டு மூன்றாவது பிரகாரங்களை இடையே வெள்ளை சலவைக்கல்லால் ஆன சேது மாதவர் சந்நிதி உள்ளது.இவர் வெண்மை நிறமானவர் என்பதால் ஸ்வேதமாதவர் என்றும் அழைக்கப் படுகிறார். அவர் அவரை சங்கிலி போட்டு கட்டியிருப்பதாக ஒரு கதை!பாண்டிய மன்னன் தான் மனைவியுடன் கடல் நீராடி திரும்பும்போது ஒரு சிறுமி வர, அவளைத் தன்னோடு அழைத்து வந்தார் மன்னர்.அப்பெண் ஒரு நிபந்தனை விதித்தால். 'என் விருப்பமின்றி என்னை யாராவது தொட்டால் அவரை தண்டிக்க வேண்டும்' என்றால்.ஒருநாள் எவனோ ஒருவன் அவள் கையைப் பிடிக்க அவள் கூச்சலிட, மன்னனும் அவனை சங்கிலியால் கட்டிப் போட்டான். அன்றிரவு கனவில் வந்த ஸ்ரீமன் நாராயணன் தானே அவன் பெண்ணின் கையைப் பிடித்ததாயும், அவளே மகாலக்ஷ்மி' என்றும் சொன்னார்.அந்த மாதவனின் விளையாட்டைப் புரிந்து கொண்ட அரசன் 'சேது மாதவ லக்ஷ்மி ஸ்துதி' பாடுகிறான்.இது சேது மஹாத்மியத்தில் உள்ளது.<br /><br />இத்திருக் கோயிலின் மூன்றாம் பிரகாரம் 'சொக்கட்டான் மண்டபம்' எனப்படும்.உலகிலேயே மிக நீண்ட பிரகாரநடை இது. இதன் மொத்த நீளம் 3850 அடி.இந்துமதக் கட்டிடக் கலையின் ஈடு இணையற்ற சிறப்புக்கு சிறந்த எடுத்துக் காட்டு இது.இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி என்பவரால் கட்டப்பட்டது. 1747ல் தொடங்கிய இந்தப் பிரகார வேலைகள் முடிய 30 ஆண்டுகள் ஆயிற்றாம்.1212 தூண்கள் வரிசை மாறாமல் மிக அழகாக நிறுத்தப் பட்டுள்ளது பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. சமீபத்தில் கும்பாபிஷேகம் கண்ட இவ்வாலயம் கம்பீரமாகக் காட்சி தருகிறது.<br /></div><div>ஆலய நேரம்...காலை 5-1...மாலை 3-9<br /><br /></div><div>ஷாப்பிங்....அது இல்லாமலா! அங்கு நம் மறைந்த விஞ்ஞானி திரு அப்துல்கலாம் அவர்களின் சகோதரரின் மிகப் பெரிய கடை உள்ளது. அதில் மிக அழகான, வித்யாசமான கைவினைப் பொருட்களும், அலங்கார விளக்குகள், கிளிஞ்சல் பொம்மைகள் என்று ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் மிக நியாயமான விலையில் விற்கப் படுகிறது. ராமேஸ்வரம் செல்பவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய கடை அது!<br /></div><div><br /></div><div>அட...இன்னும் சுற்றியுள்ள திருப்புல்லாணி, உத்திரகோச மங்கை, நவபாஷாணம், வில்லூண்டி தீர்த்தம்,உப்பூர்...இவற்றுக்கெ<wbr></wbr>ல்லாம் சென்று தரிசிக்க நேரம் இல்லை. அவற்றை திரும்ப கங்கா தீர்த்த அபிஷேகம் செய்ய சென்ற போது தரிசித்தோம்.<br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><br /><div class="mail-message-footer spacer collapsible" style="height: 0px;"></div>Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-8795702767469043882022-06-22T06:45:00.001-07:002023-03-09T07:35:52.635-08:00வா..மகளே..வா!<p> வாழ்த்துக்கள் பெண்ணே!</p><p><br /></p><p>ஐயெட்டு ஆண்டுகளுக்கு முன்</p><p>அழுகையோடு அழகாக அகிலம் வந்து உதித்த ஆசை மகளே!</p><p><br /></p><p>பெண் வேண்டும் என்று ஆசைப்பட்ட உன் அப்பாவின் செல்லமாகப் பிறந்த</p><p>எங்கள் செல்வ மகளே! </p><p><br /></p><p>நீ தத்தி நடக்கும்போதும் மழலை மொழி மிழற்றும் போதும் கண்கள் விரிய பேசும்போதும் கோபித்தால் விசிக்கும் போதும் எங்கள் வீட்டு தேவதையானாய்! </p><p><br /></p><p>அப்பாவின் செல்ல மகள்! அண்ணன் தம்பிகளின் அருமை சகோதரி! அவ்வப்போது அழகாய் அறிவுரைக்கும் என் அருமைத் தோழி மட்டுமல்ல.. என் அன்புத் தாயாகவும்</p><p>தோற்றமளிக்கிறாய்!</p><p><br /></p><p>நீ மருத்துவரானபோது</p><p>மனமகிழ்ச்சியில் வானத்தில் </p><p>பறந்தேன் நான்!</p><p><br /></p><p>காதலித்தவனைக் கைப்பிடித்து</p><p>காலம் முழுதும் அவனுடன் வாழ காவியமாய் நீ </p><p>புறப்பட்டபோது</p><p>கண்கலங்கியது நீ மட்டுமல்ல..</p><p>நாங்களும்! </p><p><br /></p><p>குழந்தைகள் உனக்குப் பிறந்தாலும் குறையாத பாசமும் நிறைவான நேசமும் என்றைக்கும் காட்டும் அன்புமகள் நீ! </p><p><br /></p><p>இன்று பிறந்தநாள் காணும் என் ஆசை மகளே! உனக்கு எங்கள் மனமார்ந்த நல்லாசிகள்!</p><p><br /></p><p>இன்று போல் என்றும் சீரோடும் சிறப்போடும் வாழ இறையருளை வேண்டுகிறேன்!</p><p><br /></p><p>நீ வருகிறாய் எனும்போதே நான் ஆனந்தத்தில் ஆவலாய்க் காத்திருக்கிறேன்...</p><p>உன்னைக் காணவும் உரையாடி மகிழவும்! வாழ்த்துக்கள் பல!</p><p>வா..மகளே..வா!</p>Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-14301105561577666292022-06-21T19:02:00.003-07:002023-03-09T07:36:50.927-08:00என் வீடு<p> </p><p>என் 🏡</p><p><br /></p><p>என் வீடு எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு உண்டு... </p><p>அழகான திண்ணை அணிவகுத்து நிற்கும் தூண்கள்..</p><p>கால் வீசி நடக்க விசாலமான </p><p>அறைகள்..</p><p>விதவிதமாய் சமைக்க விருப்பமான</p><p>சமையலறை..</p><p>தெய்விகம் நிறைந்த மனதை ஒருமுகப் படுத்தும் சுவாமி அறை..</p><p>வீட்டைச் சுற்றிலும் அழகிய பசுமைத்</p><p>தோட்டம்..</p><p>அக்கம் பக்கம் இரண்டிரண்டு தென்னை மரங்கள்..</p><p>அங்கங்கே அழகிய பூக்களைத் தரும்</p><p>மலர் மரங்கள்..</p><p>இரவில் நிலவை ரசித்து மகிழ மேன் மாடமுள்ள மாடி.. </p><p>கண்ணுக்கெட்டும் தூரத்தில் காவேரித்</p><p>தாயின் சலசல சத்தம்..</p><p>ஆடும் மயிலும் கூவும் குயிலும் அருகருகே நடந்துவர..</p><p>காணி நிலம் வேண்டுமென்று பாரதி போல் கேட்டேன்..</p><p>இயற்கையை நேசித்து இனிய தென்றலை சுவாசித்து.. </p><p>இனிவரும் நாட்களை இனிதே கழிக்க</p><p>இறைவனின் பரிசோ இவ்வழகிய வீடு!</p>Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-66458225190566376192022-06-14T09:16:00.001-07:002022-06-20T22:43:03.566-07:00நினைவுகள்<p> நினைவுகள் மறக்க முடியாதவை.. ஆம்.. ஐந்து வயதிலிருந்தே நாம் செய்து வரும் செயல்கள் விளையாட்டு கோபத்தை உண்டாக்கும் சண்டைகள் நம் மனதில் இருந்து என்றும் மறையாது. சிறு வயதில் என் அம்மா மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார். காலையில் எழுந்ததும், வீட்டு வாசலில் போடுவது, மிகவும் நேர்த்தியாக உடை அணிவது, வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, வீட்டு வேலைகளைச் செய்வது என்று சரியாகச் செய்ய வேண்டும்.இல்லையென்றால் மீண்டும் செய்யச் சொல்வாள். அந்த பயத்தில் நான் அதை சரியாக செய்வேன். மடிப்பு துணிகளையும் நேர்த்தியாக செய்ய வேண்டும். அதனால்தான் இன்றும் நான் வேலை செய்யும் போது என் அம்மாவை நினைத்துப் பார்க்கிறேன்.</p><p dir="ltr">
Memories are unforgettable..yes..as actions we have been doing since we were five years old sports angers fights which will never fade from our minds.<br />
At a young age my mom would behave very strictly. Getting up in the morning, putting on the doorstep, dressing very neatly, cleaning the house, washing the dishes and doing household chores should be done properly.If not she will tell me to do it again. In that fear I would do exactly that. Folding clothes should also be done neatly. That’s why I still remember my mom when I work today.<br /></p>
<p dir="ltr">என் அம்மா மிக அழகாக இருப்பார். நன்றாக பாடுவார்..கோலம் போடுவார். சமையல் செய்வார். ஓவியம் வரைவார். எப்பவும் பளிச்சென்று திருத்தமான அலங்காரத்துடன் இருப்பார்.அம்மாவைப் பார்த்து வளர்ந்ததால் நானும் அதே போல் இருக்க முயற்சித்தாலும் பல நேரங்கள் அம்மா போன்று சரியாக கடைப்பிடிக்க முடிவதில்லை. </p>
<p dir="ltr">My mom would be so cute. She sings well. cooks well. Draw rangolis and drawings very beautifu. She will always be bright and with the right outfit. Growing up looking at my mother I tried to be the same but many times I could not adhere exactly like my mother. Because I'm little bit lazy.</p>
<p dir="ltr">என் அம்மா தன் கொள்ளு பேரன் பேத்திகளைப் பார்க்க மிக ஆசையுடன் இருந்தார். துரதிர்ஷ்டவசமாக நீங்களெல்லாம் பிறக்குமுன்பே இறந்து விட்டார். என் அம்மா பற்றி உன் அம்மாவுக்கு தெரியும். என்னுடைய நினைவுகள் இன்னும் நிறைய...அவற்றை பல சமயங்களில் கட்டுரைகளாக நிறைய எழுதியிருக்கிறேன். நீயும் என்னைப் போல எழுத்தாளராக வாழ்த்துக்கள் ஸாய்லி😍</p>
<p dir="ltr">My mother was very eager to see her great-grandchildren. Unfortunately she died before you could all be born. Your mom knows about my mom. My memories are many more ... I have written them a lot of times as articles. Congratulations Sailee for being a writer like <u>me😍</u><br />
</p>Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-92089255396967333962020-07-29T09:26:00.000-07:002020-07-29T09:27:15.384-07:00நவகுஞ்சரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
மகாபாரதத்தில் வரும் வித்தியாசமான உடலமைப்பைக் கொண்ட பறவை நவகுஞ்சரம்.<br />
ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது.<br />
சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால்,<br />
யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கையுடன் கூடிய விலங்கு எப்படி இருக்கும்?<br />
அதுதான் நவகுஞ்சரம்.<br />
‘நவ’ என்றால் ஒன்பதைக் குறிக்கிறது. ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர்.<br />
ஒரிய மொழிக் கவிஞரான சரளதாசர் எழுதிய மகாபாரதக் கதையில் நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.<br />
அர்ஜுனன் மலை மீது தவம் செய்துகொண்டிருந் தார்.<br />
அப்போது நவகுஞ்சர உருவெடுத்து கிருஷ்ணர், அர்ஜுனன் முன் தோன்றியதாக வருகிறது.<br />
தவத்திலிருந்து கண் விழித்த அர்ஜூனன், முதலில் நவகுஞ்சரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து திகைத்தார்.<br />
பின்னர் அதன் கையில் தாமரைப் பூவைப் பார்த்தார்.<br />
வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகள் சேர்ந்த அதன் உடலமைப்பைப் பார்த்து, ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டார்.<br />
அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன.<br />
'மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை. உலகமோ எல்லையற்றது' என்பதை உணர்ந்தார் அர்ஜுனன்.<br />
இதுவரை பார்த்திராத ஓர் உயிர் இந்த உலகில் இருக்கலாம் என்றும் நினைத்தார்.<br />
தன்னைச் சோதிப்பதற்காக இந்த உருவத்தில் வந்திருப்பது கிருஷ்ணன்தான் என்று தெரிந்துகொண்டு, எடுத்த வில்லை கீழே போட்டுவிட்டு வணங்கினார்.<br />
ஒடிஷாவில் விளையாடப்படும் கஞ்சிபா சீட்டுக்கட்டு விளையாட்டில் நவகுஞ்சரம் ராஜாவாகவும், அர்ஜுனன் மந்திரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.<br />
ஒடிஷாவில் வரையப்படும் ஓவியங்களில் நவகுஞ்சரம் பல வகைகளில் வரையப்படுகிறது.<br />
நவகுஞ்சரத்தின் உருவம் பூரி கோவிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது.<br />
அதன் கையில் இருக்கும் நீலச் சக்கிரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaKTE4S9xkLIDhscDPcRA1CxxxTe3bax4TyWOmlGFVt4KFHRJIpZ8t8EvIrMehvQF20KN2ki7dFVjURzFQLYxEak2JdVGCT43FtlHSrQjXoZ3sQ8oknGE5Al2y-DD_poUzKdXDBgPyyRY/s1600/IMG-20200729-WA0006.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="471" data-original-width="312" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaKTE4S9xkLIDhscDPcRA1CxxxTe3bax4TyWOmlGFVt4KFHRJIpZ8t8EvIrMehvQF20KN2ki7dFVjURzFQLYxEak2JdVGCT43FtlHSrQjXoZ3sQ8oknGE5Al2y-DD_poUzKdXDBgPyyRY/s320/IMG-20200729-WA0006.jpg" width="211" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvPY3E1Ojyo6qIp0O4rvkDs7uMiMFzhpdReEHeQn1SgZ3F9jv3nm-e82sfkJUGFX6VZeKxDHha578F_UdWb3cLNfUVYOg2yWM482_frjJLxs9MfBRnm3TFaq1e3LZ_XKhp2G3x1DIX8bE/s1600/IMG-20200729-WA0007.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="711" data-original-width="1080" height="210" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvPY3E1Ojyo6qIp0O4rvkDs7uMiMFzhpdReEHeQn1SgZ3F9jv3nm-e82sfkJUGFX6VZeKxDHha578F_UdWb3cLNfUVYOg2yWM482_frjJLxs9MfBRnm3TFaq1e3LZ_XKhp2G3x1DIX8bE/s320/IMG-20200729-WA0007.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNj9QkU1WWCWoUJHP4Yh0yMlghM2hlXeXlBJLW9SFWcfTaY1SRCJmgV9U3ZjbjWm0NnDDjADqOzPZLMhxF-FUz7au42uz9aRIXYCSPQDcnCmFERhgL1qGIe0tFcOOS8YQcRSpfFZtIzJY/s1600/IMG-20200729-WA0008.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="615" data-original-width="602" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNj9QkU1WWCWoUJHP4Yh0yMlghM2hlXeXlBJLW9SFWcfTaY1SRCJmgV9U3ZjbjWm0NnDDjADqOzPZLMhxF-FUz7au42uz9aRIXYCSPQDcnCmFERhgL1qGIe0tFcOOS8YQcRSpfFZtIzJY/s320/IMG-20200729-WA0008.jpg" width="313" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4y1inQJDnxSZfzlOJOgwI2ioLtUjPBmdI8Y9voM1YtZTglIK0hY8HFFxUKin-jxJNqPQl8FOyXajcsZ4wTAEpzaemMSa4svcK8bvyjNN_MQFCHIvFHHsSFFyqby6sCeVlE_kowEv0VXo/s1600/IMG-20200729-WA0009.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="188" data-original-width="280" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4y1inQJDnxSZfzlOJOgwI2ioLtUjPBmdI8Y9voM1YtZTglIK0hY8HFFxUKin-jxJNqPQl8FOyXajcsZ4wTAEpzaemMSa4svcK8bvyjNN_MQFCHIvFHHsSFFyqby6sCeVlE_kowEv0VXo/s1600/IMG-20200729-WA0009.jpg" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUvDd1JvUFqY2_8OAWji7k3qLUyWW7ZMXF6ptbI4z-JvZusk8_wt6R03KtxKAol7O4T4ZmLvA0b-ogNzDEaxiL_4qanHO8Njx-tMZWbhS9t5KEGb0hmTvdLwS2K6GVcDflEmp9FnJSXP8/s1600/IMG-20200729-WA0010.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="525" data-original-width="350" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUvDd1JvUFqY2_8OAWji7k3qLUyWW7ZMXF6ptbI4z-JvZusk8_wt6R03KtxKAol7O4T4ZmLvA0b-ogNzDEaxiL_4qanHO8Njx-tMZWbhS9t5KEGb0hmTvdLwS2K6GVcDflEmp9FnJSXP8/s320/IMG-20200729-WA0010.jpg" width="213" /></a></div>
<br /></div>
Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-76468971241284204932020-06-30T19:15:00.001-07:002020-06-30T19:15:13.285-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">. மனித வாழ்காலத்தை பிரம்மசர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்று நான்கு நிலைகளாகப் பகுப்பது இந்த மரபு. இந்த நான்கு நிலையோரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">2. சாதி வித்தியாசமின்றி அனைத்து குலத்தவரும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.</span><br />
<div class="rwAdbanner" style="background-color: white; box-sizing: border-box; color: #333333; float: left; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; margin: 10px 0px; text-align: center; width: 359.091px;">
<ins data-ad-slot="4879831716" id="aswift_1_expand" style="background-color: transparent; border: none; box-sizing: border-box; display: inline-table; height: 280px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 336px;"><ins id="aswift_1_anchor" style="background-color: transparent; border: none; box-sizing: border-box; display: block; height: 280px; margin: 0px; padding: 0px; position: relative; visibility: visible; width: 336px;"><iframe allowfullscreen="true" allowtransparency="true" data-google-container-id="a!2" data-google-query-id="CJD-gLP9quoCFbebSwUdgWgF_w" data-load-complete="true" frameborder="0" height="280" hspace="0" id="aswift_1" marginheight="0" marginwidth="0" name="aswift_1" sandbox="allow-forms allow-pointer-lock allow-popups allow-popups-to-escape-sandbox allow-same-origin allow-scripts allow-top-navigation-by-user-activation" scrolling="no" src="https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6070398767421094&output=html&h=280&slotname=4879831716&adk=1541647915&adf=1268901961&w=336&lmt=1593569605&guci=2.2.0.0.2.2.0.0&url=https%3A%2F%2Fwww.maalaimalar.com%2Fdevotional%2Fdevotionaltopnews%2F2019%2F01%2F07104209%2F1221612%2Fekadasi-Vratham-30-tips.vpf&flash=0&wgl=1&adsid=ChEI8MXr9wUQgdmOybCO04PpARJBAD4MqoVeNcYd9Bk5n3k9VUGPGq9r8wMid1vbzrRGNsJBRs4171xvi3Rh8psB8Xx-rXIadyUK4hEvD9Bex6JyvNY&dt=1593569603485&bpp=47&bdt=5011&idt=48&shv=r20200624&cbv=r20190131&ptt=5&saldr=sa&abxe=1&cookie=ID%3Dea96996cc2dd01f0%3AT%3D1566369252%3AS%3DALNI_MYbaa1c5e071vw3_pYJ-aWdLw53Pw&prev_fmts=0x0&nras=1&correlator=7879541638708&frm=20&pv=2&ga_vid=1302261488.1593569602&ga_sid=1593569602&ga_hid=1951359528&ga_fc=0&ga_cid=amp-IEFC3n7i8V5rWw0pOZ-0vg&iag=0&icsg=2286984383430656&dssz=77&mdo=0&mso=0&u_tz=330&u_his=4&u_java=0&u_h=830&u_w=393&u_ah=830&u_aw=393&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=29&ady=1441&biw=393&bih=694&scr_x=0&scr_y=169&eid=21066485&oid=3&pvsid=4472575037339513&pem=872&ref=https%3A%2F%2Fwww.google.com%2F&rx=0&eae=0&fc=896&brdim=0%2C0%2C0%2C0%2C393%2C0%2C393%2C750%2C393%2C750&vis=1&rsz=%7C%7CleEbr%7C&abl=CS&pfx=0&fu=8208&bc=31&jar=2020-6-14-5&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=ChcvgwhVlk&p=https%3A//www.maalaimalar.com&dtd=1576" style="border-style: initial; border-width: 0px; box-sizing: border-box; height: 280px; left: 0px; position: absolute; top: 0px; width: 336px;" vspace="0" width="336"></iframe></ins></ins></div>
<br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">3. ஆதியில், உற்பத்தி ஏகாதசி (மார்கழி மாதத்தில்) முதலில் வந்ததால், எல்லா வருடமும், எல்லா மாதமும் தேய்பிறை ஏகாதசியே முதலில் வருவதில்லை. வளர்பிறை ஏகாதசியும் முன்பாக வரலாம்.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">4. வளர்பிறை/தேய்பிறை ஏகாதசி விரதத்திற்கு இடையே ஏற்றத் தாழ்வு இருப்பதாக கருதக்கூடாது.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">5. நெருங்கிய உறவினரின் பிறப்பு - இறப்பின் போதும், பெண்களின் மாதவிடாய்க் காலத்தும் பல்லோருடன், பழகிடாமல் ஒதுங்கி இருக்கும் காலங்களிலும் கூட ஏகாதசி விரதம் போன்ற நித்ய விரதங்களை மேற்கொள்ள வேண்டும்.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">6. திங்கள்/ சனிப் பிரதோஷங்கள் சிறப்பு கொண்டிருப்பது போல, பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்களில் வரும் ஏகாதசிகள் அதி சிறப்பு கொண்டது.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">7. வெவ்வேறு மாதங்களில், தினங்களில் வரும் ஏகாதசிகளுக்கும் தனித்தன்மைகள் உள்ளன.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">8. ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன் கொண்டது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்கள் அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">9. ஏகாதசி போன்ற விரதங்களின் போது, விரத உண்ணாமையின் முழுப் பயனை அடையவும், விரத நாளில் முழுவதும் உண்ணாதிருப்பது சிரமமாகத் தோன்றாமல் இருக்கவும், முதல் நாளான தசமியன்று ஒரு வேளை மட்டுமே உண்கிறோம். மேலும், வெகு நேரம் உணவின்றியிருந்ததற்குப் பின்பு, படிப்படியாகவே உணவு அளவைக் கூட்ட வேண்டும் என்பதற்காக துவாதசியிலும் ஒரு வேளை உணவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">10. ஏகாதசி தினத்தன்று உணவு அளவு குறைவாயிருந்தாலும் அது எளிதாக ஜீரணிக்கப்பட்டு, அதிக ஊட்டச்சத்தும் அளிக்க வேண்டும் என்பதற்காக, நெல்லிக்காய், அகத்திக்கீரை போன்றவற்றை உபயோகிக்கிறோம்.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">11. ஒவ்வொரு ஏகாதசி விரதமும் குறிப்பிட்ட, தவறான செயல்பாடுகளால் விளைந்த அல்லல்களைத் தீர்ப்பதாகக் கூறப்படுகிறது.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">12. ஒவ்வொரு ஏகாதசியின் பெருமையையும், வழிபாட்டு முறையையும், வெவ்வேறு தெய்வங்களோ, முனிவர்களோ வெவ்வேறு அன்பர்க்கு தெரிவித்ததாக கூறியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, கூறியவர் அல்லது கேட்டவரின் காலத்திலிருந்து தான் குறிப்பிட்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாக கருதக்கூடாது.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">13. ஏகாதசி விரதத்தன்று, விரிவாக பூஜை செய்வது நல்லது என்றாலும், பலருக்கும் பசி சோர்வினால் பூஜை செய்வது இயல்வதில்லை.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">14. வீட்டுச் சூழ்நிலைகளால் இறைச் சிந்தனை தடைப்படுமாயின் அன்று முழுவதும் ஆலயத்திலேயே தங்கி வழிபாடுகளை தரிசித்தல் மேலும் சிறப்பு. அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி அரங்கனையே நினைக்கச் செய்திட விஷ்ணு புராணம், பாகவதம், ராமாயணம் போன்ற இறைத் திருவிளையாடல் நூல்களையோ விஷ்ணு சகஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற துதிகளையோ தொடர்ந்து பாராயணம் செய்யலாம்.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">15. ஏகாதசி உண்ணாமை விரதத்திற்குப் பிறகு துவாதசியில் உணவு ஏற்பதை பாரணை என்று கூறுவர். பல சமயங்களில், துவாதசி திதி நாள் முழுவதும் இருப்பதில்லை. இதனால், துவாதசியில் ஏற்கப்பட வேண்டிய ஒரே வேளை உணவையும் வெவ்வேறு துவாதசி தினங்களிலும், அத்திதி இருக்கும் போதே முன்பின்னாக ஏற்க நேரிடும்.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">16. துவாதசி திதி காலையில் மிகக் குறுகிய நேரமே இருப்பின் மதியம் வரை செய்ய வேண்டிய சந்தியாவந்தனம், முக்கிய பூஜை போன்றவற்றை சீக்கிரமாகவே முடிப்பதில் தவறில்லை.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">17. துவாதசி திதி மிக, மிக குறைவான நேரமே இருப்பின், முதலில், பெருமாளை நினைத்து துளசி கலந்த நீரைப்பருகி பாரணை முடித்துவிட்டு, பின்னர் உணவை ஏற்கலாம்.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">18. ஏகாதசி விரதம் இருந்த அம்பரீச சக்கரவர்த்தி துருவாச முனிவரின் கோபத்தில் இருந்து கூட பாதுகாக்கப்பட்டதை பல புராணங்கள் தெரிவிக்கின்றன.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">19. வளர்பிறை தேய்பிறை துவாதசியன்று திருவோண நட்சத்திரம் வந்தால் அன்றும் உண்ணா நோன்பு இருந்து திரயோதசி திதியிலேயே பாரணை செய்ய வேண்டும்.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">20. ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களிலும் முழுவதுமாக உண்ணாமை இயலாவிட்டால், ஏகாதசியன்று முன் இரவில் சிறிதளவு பலகாரம் ஏற்கலாம். சிரவண துவாதசி அன்று கண்டிப்பாக உண்ணாதிருக்க வேண்டும்.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">21. ஆடி மாத வளர்பிறை சயனி ஏகாதசி முதல், கார்த்திகை மாதம் வளர்பிறை ப்ரபோதினி ஏகாதசி முடிய, 9 ஏகாதசிகளிலும் அனைவரும் விரதம் இருக்க வேண்டியது கட்டாயமாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">22. பிற மாதங்களில் வரும் தேய்பிறை ஏகாதசிகளில் மட்டும் பகலில் உண்ணாதிருந்து, இரவில் குறைந்த பட்சமாக, அதுவும், திட உணவையும், பக்குவப்படுத்திய உணவையும் ஒதுக்கி, பால், பழம் போன்றவற்றை ஏற்பதில் தவறில்லை.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">23. நீர், கிழங்கு, பால், நெய், மருந்து போன்ற சிலவற்றை ஏற்பது விரதநியதிகளை மீறுவது ஆகாது என்பதற்காக, விரத நாட்களில் நினைத்த போதெல்லாம், பசித்த போதெல்லாம் இவற்றை உண்ணுவதை வழக்கமாகக் கொள்ளக்கூடாது.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">24. ஆடிமாதம் வளர்பிறை ஏகாதசியில் அனுஷ்டிக்கப்படுவது கோபத்மவிரதம். பல்வகையிலும் நமக்கு நன்மை பயக்கும் பசுக்களைக் கட்டும் இடத்தில், தாமரை வடிவ கோலம் இட்டு, அதனுள், திருமாலை வழிபட்டு கோதானம் அளிப்பது மிகச் சிறப்பு.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">25. கார்த்திகை வளர்பிறை ஏகாதசியன்று பீஷ்மர் அம்புப்படுக்கையிலிருந்தே மகாபாரதப் போர் நிகழ்ச்சிகளைக் கண்ட நாள் என்பதால் அன்று பீஷ்ம பஞ்சக விரதம் அனுஷ்டிப்பது வழக்கம்.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">26. முக்கோடி தேவர்களின் துன்பத்தை பகவான் போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">27. ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்னுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">28. ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு நீடித்த புகழ்,நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுமையில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">29. சீதையை பிரிந்த ராமர், பக்தாப்யர் என்ற முனிவரின் ஆலோசனைப்படி பங்குனி மாதத்தில் வரும் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தார். அதன் பலனாக வானர சேனைகளின் துணைக்கொண்டு கடலை கடந்து இலங்கேஸ்வரனை அழித்து இலங்கையை வென்றார். விஜயா என்னும் இந்த ஏகாதசி விரதம் நாம் கேட்ட பலன்களை கொடுக்கக்கூடியது.</span><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><br style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular;" /><span style="background-color: white; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">30. வைகுண்ட ஏகாதசி அன்று தான், குருக்ஷேத்ரப் போரில் அர்ஜுனனுக்குக் கீதையை கிருஷ்ண பரமாத்மா உபதேசம் செய்ததால், இந்தநாள் ‘கீதா ஜயந்தி’ எனவும் கொண்டாடப்படுகிறது.</span></div>
Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-7419394421842877962020-05-08T08:43:00.003-07:002020-05-08T08:43:53.574-07:00 கனவு நனவானது!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
என்னுடைய டீன்ஏஜில் பிரபல எழுத்தாளர் திரு மணியனின் பயணக் கட்டுரைகளை படித்து பாரிஸ், சுவிட்சர்லாந்து,ரோம் போன்ற இடங்களுக்கு போக ஆசைப்பட்டு கனவு கண்டவள் நான்! நடுத்தர குடும்பவாசியான எனக்கு அவ்வாய்ப்பு கிடைக்கும் என்று கொஞ்சமும் நினைத்துக் பார்த்ததில்லை !பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என் மகன் ஜெர்மனிக்கு வேலைக்கு சென்றபோது அங்கு சென்ற நான் அவனிடம் 'எனக்கு சுவிட்சர்லாந்தை பார்க்க வேண்டும்.ஆல்ப்ஸ் மலையில் நடக்க வேண்டும்' என்று கேட்டேன். என் மகனும் காரிலேயே எங்களை அழைத்துச் சென்றான். அங்கு ஜூரிச்சில் அவன் நண்பன் இருந்ததால் அங்கு தங்கினோம். மறுநாள் ஐரோப்பாவின் மிக உயரமான ஜுங்க்ப்ராஜோக் (Jungfrajoch) சிகரத்திற்கு சென்றோம்.ஆஹா...என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!<br />
<br />
ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்<br />
அழகிய ரைன் நதி ஓரத்தில்<br />
மாலைப் பொழுதின் சாரத்தில்<br />
<br />
மயங்கித் திரிவோம் பறவைகள் போல்<br />
<br />
என்று பாடியபடியே என் கணவரைப் பார்த்தேன். அவரோ இயற்கை அழகில் சொக்கிப் போயிருந்தார்.அங்கிருந்து வரும் வழியில் மிகப் பெரிய அழகிய ட்ரம்மல்பேக் ( Trummelbech ) நீர்வீழ்ச்சியைப் பார்த்து ரசித்தோம். அந்த நீர்வீழ்ச்சியை பல இடங்களில் அதன் ஒவ்வொரு அழகையும் ரசிக்கும்படி அமைத்துள்ளார்கள்.அங்கிருந்து ஜூரிச்சிற்கு ஸஸ்டேன் பாஸ் (Susten Pass) வழியாக வந்தோம்.மலைப்பாதை ஒற்றையடிப் பாதை போல இருந்தது. பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. சுற்றிலும் பளபளவென்று ஒரு வெள்ளிமலையில் செல்வது போல இருந்தது. அதன் அழகை ரசித்துக் கொண்டே வந்த நாங்கள் வழியில் இறங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கீழே இறங்கி புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குள் குளிர் நடுக்கி விட்டது. பாதிவழி வந்தபின் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பாதை மூடப்பட்டு விட்டது. மாலை ஐந்து மணிக்கு மேல் அந்தப் பாதையில் வரக் கூடாதாம். திரும்பிப் போகும்படி சொன்னார்கள்.சுற்றிலும் காடு மாதிரி மரங்கள். அத்தனையிலும் பனி உறைந்து இருந்தது.தெருவில் ஈ காக்கையைக் காணோம்! சற்று தொலைவில் ஒரு ஹோட்டல் தென்பட, அங்கு நின்றிருந்த கார்கள் பாதிக்குமேல் பனி மூடியிருந்தது. ஹோட்டலில் தங்க இடம் இல்லை என்று சொல்லிவிட எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.நேரம் ஆக ஆக இருள் கவிந்து ,ஸ்னோவினால் எங்கள் காரின் சக்கரம் மறைய ஆரம்பித்து விட்டது. என் கணவரும், நானும் 'இனி என்ன செய்வது? திரும்ப வந்த வழியிலேயே சென்று விடுவோம்' என்றோம். மலைப்பாதை. வேறு போக்குவரத்து இல்லாததால் வழி பூராவும் ஒரே பனி படர்ந்து வழியே தெரியவில்லை.என் மகனோ அந்த நேரத்திலும் கூலாக 'கவலைப் படாதம்மா.வழி மறைந்து விட்டால் காரில் ஹீட்டரை போட்டு விட்டு தூங்கலாம்.காலை கிளம்பி செல்லலாம்'என்றான்! ஆள் அரவமில்லாத அந்தகாரத்தில் அதுவரை ரசித்த பனி அச்சுறுத்தும் அரக்கன் போல தெரிந்தது. நானோ எனக்கு தெரிந்த ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டே வந்தேன். ஒருவழியாக கீழே வந்து வேறு வழியில் ஜூரிச் சென்றோம். கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதம். ஆனாலும் நல்லபடியாக வந்து சேர்ந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொன்னேன். அதன்பின் பலமுறை நான் ஜெர்மனி சென்றாலும் இந்த புகைப்படத்தைக் காணும்போது அந்த மகிழ்ச்சியும்,திகிலும் கலந்த அனுபவம் இன்றும் இனிக்கும் நினைவுதான்!<br />
<br /></div>
Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-20056747828879583652020-05-04T01:02:00.001-07:002020-05-04T01:02:44.076-07:00இன்று காமதா ஏகாதசி🙏🏼3.4.2020<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
M...சித்திரை மாத வளர்பிறை ஏகாதசிக்கு காமதா ஏகாதசி என்று பெயர். தம்பதிகளின் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் ஏகாதசி இது. நினைத்ததை நிறைவேற்றித் தருவதுடன் ஏழு ஜன்ம பாவங்களும் நீக்கிவிடும்.<br />
<br />
நாகராஜனின் சாபத்தால் அரக்கனாக மாறிய ஒரு கந்தர்வன் சாப விமோசனம் பெற அவன் மனைவி இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து அதன் பயனால் கந்தர்வன் நலமடைந்தான்.முன்னொரு காலத்தில் போகீபூர் என்னும் நகரத்தை ஆண்ட புண்டரீகன் அவையில் தேவர்களும் முனிவர்களும் கூடியிருந்தபோது அவைப் பாடகனான லலித் என்பவன் அரசவையில் பாடும்போது சிற்றின்ப சிந்தனையோடு பாடினான். இதைக் கேட்ட மன்னன் வெகுண்டு அவனை அரக்கனாகப் போகும்படி சபித்தான். லலித் அரக்கனாகிக் காடுகளில் திரிந்தான். அவன் மனைவியான லலிதா அரக்கனான தன் கணவனைப் பின் தொடர்ந்தாள். அச்சமயம் அவர்களுக்கு சிருங்கி முனிவரின் தரிசனம் கிடைத்தது. அவர், இவர்களின் துயரை அறிந்து, காமதா ஏகாதசி விரதத்தை எடுத்துரைத்தார்.<br />
<br />
இதைக் கேட்ட இருவரும் மகிழ்ந்து அடுத்துவரும் காமதா ஏகாதசி விரதத்தைப் விரதமிருந்து பகவான் விஷ்ணுவை வழி<br />
பட்டனர். இதன் பலனாக அவன் தன் அரக்க ரூபம் நீங்கி, மீண்டும் தன் சுய உருவைப் பெற்றான். இருவரும் நீண்ட காலம் மகிழ்வோடு வாழ்ந்தனர்<br />
<br />
உடலின் இயக்கத்தை உறுதி செய்யும் உணவில்லாதபோது நம் வயிறு ஓய்வுகொண்டு தம்மைத் தாமே புதுப்பித்துக்கொள்ளும். இதற்காகவே ஏகாதசி அன்று உபவாசம் இருக்க நம் முன்னோர்<br />
கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். உடல் பேசாமல் இருந்து மனம் கண்டபடி நினைவுகளால் அலைக்கழிக்கப் படக்கூடாது என்பதற்காக அன்றைய நாளை இறைவழிபாட்டில் ஈடுபடுத்த அறிவுறுத்தினார்கள். எனவேதான் ஏகாதசி அன்று நாம் புண்ணிய நாளாகக் கடைப்பிடிக்கிறோம்.<br />
<br />
ஓர் ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும். சில ஆண்டுகளில் 25- ம் வருவதுண்டு. ஒவ்வோர் ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயரும் தனிச் சிறப்பும் பலன்களும் வாய்ந்தவை.<br />
<br />
ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றையும் பகவானிடம் ஈடுபடுத்தி அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.<br />
<br />
ஸ்ரீ கிருஷ்ணர் தன் வாயாலேயே ..<br />
'சுத்தம் பாகீரதி ஜலம்<br />
சுத்தம் விஷ்ணு பதத்தியானம்<br />
சுத்தம் ஏகாதசி விரதம்'<br />
என்று கூறியுள்ளார். பகவானின் திருவடியில் பட்ட ஒரு துளி தீர்த்தம்,கங்கைக்குச் சமமான புனிதம் வாய்ந்தது. பெருமாளின் திருவடியைத் தரிசிப்பது, வைகுண்ட தரிசனத்தைவிட பவித்திரமானது. இத்தனை நற்செயல்களுக்கும் ஈடானது ஏகாதசி விரதம்...என்கிறார் பகவான் கிருஷ்ணர்.<br />
<br />
மனித முயற்சிகள் எல்லாம் தோற்றுப்போகும்போது நாம் தேடி செல்வது இறைவனின் சந்நிதானமே. துன்பம் நீங்க அவனருள் தேவை.<br />
<br />
இப்போது உலகமே கொரோனா சுழலில் சிக்கித் தவிக்கிறது. நாம், வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் மோசமான நிலை. வீட்டில் மகிழ்வாக இருக்கிறோம் என்பதை விட நமக்கு கொரோனா வந்து விடுமோ என்ற பயமும் உள்ளூர இருப்பதை மறுக்க முடியாது.<br />
<br />
இதுபோன்ற அச்சங்களை விடுத்து நேர்மறையான அதிர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டியது அவசியம். அதுவே, எதிர்காலம் குறித்த நம்பிக்கையை நமக்குள் உருவாக்கும். அப்படி நாம் பயனுனடையவே நம் முன்னோர்கள் இது போன்ற விரத நாட்களை வகுத்திருக்கிறார்கள்.<br />
<br />
அத்தினங்களில் இறைவழிபாடு செய்யும்போது நம் மனம் புத்துணர்ச்சி அடைந்து அனைத்தையும் வெல்லும் ஆற்றலைப் பெறுகிறது. அப்படி சகல பாவங்களையும் நீக்கி நம்பிக்கை ஒளியை ஏற்ற வல்ல அற்புத தினமே ஏகாதசி விரதம்.<br />
<br />
இத்தகைய சிறப்புகளை உடைய காமதா ஏகாதசியைக் கடைப்பிடிக்க கிடைக்கும் நன்மைகளைப் புராணம் பட்டியலிடுகிறது.<br />
<br />
ஏழு ஜன்மப் பாவம் தீரும்..<br />
ஆன்மா சுத்தமாகும்..<br />
சாபங்கள் தீரும்..<br />
மூவுலகிலும் இதைப் போன்ற சுப முகூர்த்த நாள் இல்லை..<br />
எதிர்மறை உணர்வுகளை நீக்கி நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும்..<br />
தீமைகள் இல்லாத வாழ்வை அருளும்..<br />
தீர்க்க ஆயுளையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும்..<br />
<br />
ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நாராயணனை வணங்க வேண்டும். தற்போது ஆலயங்கள் எல்லாம் மூடியிருக்கிற காரணத்தால் வீட்டிலேயே இருக்கும் சுவாமிக்கு நமஸ்காரம் செய்து வழிபடலாம்.<br />
<br />
சுவாமிக்கு துளசி சாத்தி பழங்கள் முதலியன நிவேதனம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். சாஸ்திரப்படி அன்று பகல் இரவு இருவேளையும் தூங்கக் கூடாது. கண்டிப்பாகப் பகலில் தூங்கவே கூடாது. அப்படி விரதமிருந்து மறுநாள் துவாதசி திதி அன்று பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.<br />
<br />
இன்றைய நிவேதனம்..<br />
பயத்தம் கஞ்சி<br />
கேரட் அல்வா<br />
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpeSFHn-dsgylDPFkU9u0mN-BJFnORi07awQSLR9eBxLAw4-XtNg1hGo0RQrYeBfU2HXaPqRRQHQCXnRKt06gve_pYHfxXLDhLtGlplxXOOu1bJR2CbVIIq-b40EmofC5rQTUiHrMnqWQ/s1600/IMG_20200503_143339.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="828" data-original-width="1154" height="229" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpeSFHn-dsgylDPFkU9u0mN-BJFnORi07awQSLR9eBxLAw4-XtNg1hGo0RQrYeBfU2HXaPqRRQHQCXnRKt06gve_pYHfxXLDhLtGlplxXOOu1bJR2CbVIIq-b40EmofC5rQTUiHrMnqWQ/s320/IMG_20200503_143339.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTFbtu8ztvSl1a-4G3_9BCH7vTSfimgSYYoVmcJhx2XDQGOXsoyLuHQRlBWWZcIa8ERb89W8c7qQ6szkQas-c3MAWvKBMGFq3cr3FztvIDTe83izrHCyxUZRoG1AxWqXWyGyVYFek8mdc/s1600/IMG_20200503_222318.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1102" data-original-width="1600" height="220" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTFbtu8ztvSl1a-4G3_9BCH7vTSfimgSYYoVmcJhx2XDQGOXsoyLuHQRlBWWZcIa8ERb89W8c7qQ6szkQas-c3MAWvKBMGFq3cr3FztvIDTe83izrHCyxUZRoG1AxWqXWyGyVYFek8mdc/s320/IMG_20200503_222318.jpg" width="320" /></a></div>
<div>
<br /></div>
</div>
Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-48706102838783395862020-05-04T00:55:00.000-07:002020-05-04T00:55:59.670-07:00ஸ்வீட்_கொரோனா_காபி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div dir="ltr">
சமையல் செய்ய மையல் இருந்தாலே சிறப்பாக ருசியாக அமையும். ஏதோ சமைத்தோம் சாப்பிட்டோம் என்றில்லாமல் மனமொன்றி சமைக்க வேண்டும். கொரோனா வந்தாலும் வந்தது.. இந்த இளைய தலைமுறையை மாற்றி விட்டது.</div>
<div dir="ltr">
எல்லா ஆண்களும் பெண்களும் சாப்பிட ஹோட்டல்கள் இல்லாமல் போக, சமையல் வேலைக்கு வருபவர்களும் நின்றுவிட வேறு வழியின்றி கரண்டியைக் கையில் பிடிகத்து சுயம்பாகம் செய்ய ஆரம்பித்து விட்டார்களே! Swiggy Zomato என்று என்ஜாய் செய்து கொண்டு சமையலறைக்கு பூட்டு போட்டிருந்த பலரையும் சமையல்<br />
காரர்களாக மாற்றிவிட்டது இந்த lock down!!</div>
<div dir="ltr">
என் உறவுப் பெண்மணி ஒருவர் தான் காஃபி போட்ட கதையை சிரித்துக் கொண்டே கூறுவார். மிக நன்றாக சமையல் செய்யும் அவர் திருமணமானவுடன் அவர் மாமியார் 'ஃபில்டர்ல காபிப்பொடி போட்டு மேல தண்ணீர் விட்டா டிகாக்ஷன் கீழ இறங்கும்' என்றாராம். இவரும் மாமியார் சொன்னதை சிரமேற்கொண்டு காஃபி போட்டாராம். எப்படி? ஃபில்டரில் வெந்நீர் விடணும் என்று மாமியார் சொல்லாததால் பச்சைத் தண்ணீரை விட்டு விட்டாராம்! அதன்பின் மாமியாரிடம் டோஸ் வாங்கினதை கதையாகச் சொல்வார்!</div>
<div dir="ltr">
இன்னொரு பெண் அவர் பாயசம் செய்த கதையை பரவசமாக சொல்வார். அவருக்கு நெடுநாள் குழந்தையில்லாததால் பெரியவர் ஒருவர் ரவை பாயசம் வைத்து பத்து சின்னக் குழந்தைகளுக்கு கொடுக்கச் சொன்னாராம். அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு ரவா வேண்டும் என்று தெரியாமல் 1 கிலோ ரவை வாங்கிப் பாயசம் வைத்தால் அதற்கு பால் விட விடப் போதவில்லையாம்! வீட்டிலிருந்த சர்க்கரை முழுவதும் காலியாம்! 50 பேர் சாப்பிடும் அளவு பாயசம் இருந்ததாம்! </div>
<div dir="ltr">
நான் திருமணமான புதிதில் ஒருமுறை பிட்டு செய்தபோது அது உதிர்ந்த பிட்டாக இல்லாமல் மொத்தையாகி விட்டது. மறுபடி அரிசி வறுத்து வேகவிட்டு கலந்தபோது திதிப்பு குறைந்து விட்டது. என்ன செய்வது? அதில் காராமணி வறுத்து வேகவிட்டு சேர்த்து காரடை தட்டி வேகவிட்டு மாலை டிஃபனாக்கி விட்டேன். ..என்ன இன்னிக்கு நோன்படை பண்ணிருக்க..என்ற என்னவரிடம்..ஆசையா இருந்தது. பண்ணினேன்..என்று சொல்லிவிட்டேன்!</div>
<div dir="ltr">
திருமணமான புதிதில் சாம்பார் கெட்டியாக இல்லாவிட்டால் ..இன்னிக்கு குழம்பில் அலைமகள் கடாட்சம் நிறைய..என்றும் அரிசியில் ஒரு கல் வாயில் கிடைத்தால் (அந்நாட்களில் அரிசி வாங்கி அதிலுள்ள கற்களை பொறுக்கிதான் சமைப்போம்) ..மலைமகள்<u> நம்மாத்திலயே </u>குடியிருக்கா..என்பார்! பிறகுதான் எனக்கு இதன் அர்த்தம் புரிந்தது! சாப்பாட்டில் உப்பு இல்லை என்றால் சொல்ல மாட்டார். அவர் இலையில் உப்பு போட்டுக் கொள்ளும் பழக்கம் உடையவர் என்பதால் அதை சேர்த்து சாப்பிட்டு விட்டு ஆஃபீஸ் போய்விடுவார். மாலை வந்ததும் கேட்டால்..நான் பெற்ற இன்பம் நீயும் பெற வேண்டாமா?..என்று சிரிப்பார்! என்ன ஒரு வில்லத்தனம்!</div>
<div dir="ltr">
என் அம்மா மிக அருமையாக ஸ்வீட் எல்லாம் செய்வார். பாதுஷா ஸ்வீட் கடைகளில் இருப்பது போல் டேஸ்ட் சூப்பராக இருக்கும். நான் பலமுறை செய்து பார்த்தும் சரியாக வராத இனிப்பு பாதுஷா மட்டுமே. இது என் வீட்டில் அதிகம் விரும்பாததால் செய்யும் வாய்ப்பு குறைவு. என் அப்பாவுக்கு மோர்க்கூழ் மிக விருப்பம். அப்பா என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் செய்து கொடுப்பேன்.ருசித்து சாப்பிடுவார்.<br />
<br />
வீட்டில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சமையல் பிடிக்கும். என் கணவருக்கு தினமும் ஸ்வீட் சாப்பிடும் பழக்கம்! பெரியவனுக்கு அசோகா, சின்னவனுக்கு அடை அவியல், கடைக்குட்டிக்கு சாட் வகைகள், பெண்ணுக்கு பர்ஃபி, பேரன் பேத்திகளுக்கு மைசூர்பாகு, காஜுகத்லி என்று பண்ணி நிறைய அயிட்டங்கள் கற்றுக் கொண்டு சமைக்க முடிகிறது. </div>
<div dir="ltr">
கொரோனா வந்தபின் மூன்று மாதங்களுக்கு மளிகை சாமான் வாங்கிவிட்டதால் விதவிதமான சமையல், டிஃபன், ஸ்நாக்ஸ்! என் பிள்ளைகள் விதவிதமாய் ப்ரெட் கேக் எல்லாம் செய்து ஃபோட்டோ போட்டால் நான் இவற்றை செய்து வாட்ஸப்பில் அனுப்புவேன்! கடந்த ஒரு மாதமாக நான் செய்த சமையல் வகைகளின் தொகுப்பை இணைத்துள்ளேன். </div>
<br /></div>
Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-50930058008212773972020-05-02T01:23:00.001-07:002020-05-02T01:23:12.892-07:00கண்ணனுக்கு அல்வா..!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "பாபமோசனிகா'' என்று அழைக்கப்படுகிறது.<br />
<br />
'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை’ என்பது பெரியோர் வாக்கு. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் ஏகாதசி விரதமிருந்து, விஷ்ணுவின் அருள் பெறும் பேறு பெற்றார்கள்.<br />
<br />
நாம் தெரிந்தும் தெரியாமலும்; அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமையுடையது இந்த பாபமோசனிகா ஏகாதசி விரதம். எண்ணிய காரியங்களை நிறைவேற்றும் சக்தியும் உண்டு. அசுவமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெற முடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று கூறுகின்றன புராணங்கள்.<br />
இன்று ஏகாதசி ஸ்பெஷல் நிவேதனம் கோதுமை அல்வா.<br />
<br />
என் கணவருக்கு பிடித்த ஸ்வீட் செய்து தருவதாக சொன்னபடி இன்று அல்வா செய்து குட்டி கண்ணனுக்கு கொடுத்தாச்சு!<br />
<br />
'எனக்குதான் அல்வா கொடுத்துண்டிருந்த..இப்போ கண்ணனுக்கும் அல்வா கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ளப் போறியா' என்றார் என் கணவர்!!<br />
<div>
<br /></div>
</div>
Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-49349152988336669052020-05-02T01:19:00.002-07:002020-05-02T01:22:30.513-07:00ஸ்வீட்_கொரோனா_காஃபி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
ஆய கலைகள் அறுபத்து நாலில் சமையலும் ஒன்று. பீம பாகம்,<br />
நளபாகம் என்று ஆண்களே அக்காலத்தில் சமையல் வல்லுனர்களாக இருந்திருக்<br />
கிறார்கள். திரௌபதி ரொம்பவே சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்டிருப்பாளோ! ஐந்து கணவரும் வகை வகையாக சமைத்து...திரௌபதி சாப்பிட வாம்மா...என்று அன்பொழுகக் கூப்பிட்டு ஆசையுடன் பரிமாறி இருப்பார்களோ!! தமயந்தியும் கொடுத்து வைத்தவள். நளன் ராஜ்ய பரிபாலனத்துடன் சமையலும் செய்திருப்பானோ!!<br />
<br />
இன்றும் திருமணம் போன்ற பெரிய விழாக்களில் ஆண்கள்தானே சமைக்கி<br />
றார்கள்.அன்று ஆண்கள் வசம் இருந்த சமையல் பெண்கள் மேல் திணிக்கப்பட்டதோ..அல்லது பெண்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்களோ..யாருக்கு தெரியும்!!<br />
<br />
என் கணவர் ஓரளவு அடிப்படை சமையல்கள் செய்வார். என் பிள்ளைகளும் நன்றாகவே சமைப்பார்கள். பெரிய பிள்ளை பொங்கல் செய்தால் அதில் ஏகப்பட்ட ட்ரைஃப்ரூட்ஸ் போட்டு நெய்யைக் கொட்டி பண்ணுவான்! டீயை பாலிலேயே கொதிக்க விட்டுப் போடுவான்! ப்ரெட், கேக் எல்லாம் சூப்பராக செய்வான்.<br />
<br />
என் மாட்டுப் பெண்ணும் பிஸ்ஸா, கேக் எல்லாம் நிறைய வெரைட்டி செய்வாள். நாங்கள் ஜெர்மனி சென்றால் எங்களுக்காக Eggless cake செய்வாள்.<br />
<br />
சென்னையில் இருக்கும் அடுத்த பிள்ளை Bread making classக்கு சென்று கற்றுக் கொண்டும், YouTube பார்த்தும் விதவிதமாய் செய்கிறான். ஆர்கானிக் ப்ரெட் தயாரித்து கடைகளுக்கு supply செய்து கொண்டிருந்தான்.<br />
<br />
இப்பொழுது கொரோனா lock downல் மாலை நேர snacks ப்ரெட்தான்!! இட்லி, தோசை போரடித்துப் போன பேரன் பேத்திகள் இந்த வித்யாசமான snackஸை நன்கு enjoy செய்கிறார்கள்!<br />
<br />
என் மகளுக்கும் ஆர்வம் அதிகரிக்க அவள் வடா பாவ், பானிபூரி, கப் கேக் என்று ஜமாய்க்கிறாள்! தினமும் எனக்கு வாட்ஸப்பில் அனுப்பும் அவர்கள் செய்த Lock down special ரெசிபிகளை நீங்களும் பார்த்து ரசியுங்கள்!!<br />
<br />
இன்று நான் செய்தது simple & easy நட்ஸ் பக்கோடா.<br />
ஜில்ஜில் பலாப்பழ பாயசம்<br />
<br />
மசாலா தட்டை<br />
<br />
தேவை<br />
புழுங்கல் அரிசி -- 1 கப்<br />
பொட்டுக்கடலை பொடி -- 1/2 கப்<br />
சீரகம் -- 1/2 டீஸ்பூன்<br />
கடலைப் பருப்பு -- 2 டீஸ்பூன்<br />
மிளகுப்பொடி --1/2 டீஸ்பூன்<br />
காரப்பொடி -- 1/2 டீஸ்பூன்<br />
பெருங்காயப்பொடி -- சிறிது<br />
உப்புபொடி -- தேவையான அளவு<br />
விழுது நெய் --2 டேபிள்ஸ்பூன்<br />
கருவேப்பிலை -- 1 கொத்து<br />
எண்ணை -- பொறிக்க<br />
<br />
மசாலாவிற்கு<br />
பச்சை மிளகாய் -- 3<br />
இஞ்சி -- சிறு துண்டு<br />
இரண்டையும் நைசாக அரைக்கவும்.<br />
<br />
செய்முறை<br />
அரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.<br />
<br />
அத்துடன் பொட்டுக்கடலை மாவு, அரைத்த மசாலா, ஊறவைத்த கடலைப் பருப்பு, கருவேப்பிலை, மிளகுப்பொடி, காரப்பொடி, சீரகம், பெருங்காயம், நெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.<br />
<br />
சிறு உருண்டை எடுத்து வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் சிறு தட்டைகளாகத் தட்டி முள் கரண்டியால் சிறு ஓட்டைகள் போடவும். எண்ணையைக் காயவைத்து பொன்னிறமாகப் பொறித்து, எண்ணை<br />
வடிந்ததும் எடுத்து வைக்கவும்.<br />
சூப்பரான கரகர தட்டை வாயில் போட்டால் கரையும்!<br />
<br />
பலாப்பழ பாயசம்..<br />
ஒரு பலாசுளையை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.<br />
10-12 பலாசுளைகளை கொட்டை நீக்கி நறுக்கி 10 நிமிடம் நீரில் வேகவிட்டு ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்.<br />
அரைத்த விழுதுடன் சிறிது நீர் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் அத்துடன் வெல்லம் தேவையான அளவை நீரில் சுடவைத்து வடிகட்டி சேர்க்கவும்.<br />
அரை கப் தேங்காய்ப் பால் சேர்த்து<br />
5 -10 நிமிடம் கொதித்ததும் அரை கப் பால் சேர்க்கவும்.<br />
ஏலப்பொடி, மிந்திரி திராட்சை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.<br />
பலாப்பழ பாயசம் ஃப்ரிட்ஜில் வைத்து கப்பில் விட்டு கூலாக சாப்பிட தேவாமிர்தம்தான்!!<br />
<div>
<br /></div>
</div>
Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-64774964765661354972020-05-02T01:15:00.003-07:002020-05-02T01:16:35.954-07:00ஸ்வீட்_கொரோனா_காபி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சமையல் செய்ய மையல் இருந்தாலே சிறப்பாக ருசியாக அமையும். ஏதோ சமைத்தோம் சாப்பிட்டோம் என்றில்லாமல் மனமொன்றி சமைக்க வேண்டும். கொரோனா வந்தாலும் வந்தது.. இந்த இளைய தலைமுறையை மாற்றி விட்டது.<br />
<br />
எல்லா ஆண்களும் பெண்களும் சாப்பிட ஹோட்டல்கள் இல்லாமல் போக, சமையல் வேலைக்கு வருபவர்களும் நின்றுவிட வேறு வழியின்றி கரண்டியைக் கையில் பிடிகத்து சுயம்பாகம் செய்ய ஆரம்பித்து விட்டார்களே! Swiggy Zomato என்று என்ஜாய் செய்து கொண்டு சமையலறைக்கு பூட்டு போட்டிருந்த பலரையும் சமையல்<br />
காரர்களாக மாற்றிவிட்டது இந்த lock down!!<br />
<br />
என் உறவுப் பெண்மணி ஒருவர் தான் காஃபி போட்ட கதையை சிரித்துக் கொண்டே கூறுவார். மிக நன்றாக சமையல் செய்யும் அவர் திருமணமானவுடன் அவர் மாமியார் 'ஃபில்டர்ல காபிப்பொடி போட்டு மேல தண்ணீர் விட்டா டிகாக்ஷன் கீழ இறங்கும்' என்றாராம். இவரும் மாமியார் சொன்னதை சிரமேற்கொண்டு காஃபி போட்டாராம். எப்படி? ஃபில்டரில் வெந்நீர் விடணும் என்று மாமியார் சொல்லாததால் பச்சைத் தண்ணீரை விட்டு விட்டாராம்! அதன்பின் மாமியாரிடம் டோஸ் வாங்கினதை கதையாகச் சொல்வார்!<br />
<br />
இன்னொரு பெண் அவர் பாயசம் செய்த கதையை பரவசமாக சொல்வார். அவருக்கு நெடுநாள் குழந்தையில்லாததால் பெரியவர் ஒருவர் ரவை பாயசம் வைத்து பத்து சின்னக் குழந்தைகளுக்கு கொடுக்கச் சொன்னாராம். அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு ரவா வேண்டும் என்று தெரியாமல் 1 கிலோ ரவை வாங்கிப் பாயசம் வைத்தால் அதற்கு பால் விட விடப் போதவில்லையாம்! வீட்டிலிருந்த சர்க்கரை முழுவதும் காலியாம்! 50 பேர் சாப்பிடும் அளவு பாயசம் இருந்ததாம்!<br />
<br />
நான் திருமணமான புதிதில் ஒருமுறை பிட்டு செய்தபோது அது உதிர்ந்த பிட்டாக இல்லாமல் மொத்தையாகி விட்டது. மறுபடி அரிசி வறுத்து வேகவிட்டு கலந்தபோது திதிப்பு குறைந்து விட்டது. என்ன செய்வது? அதில் காராமணி வறுத்து வேகவிட்டு சேர்த்து காரடை தட்டி வேகவிட்டு மாலை டிஃபனாக்கி விட்டேன். ..என்ன இன்னிக்கு நோன்படை பண்ணிருக்க..என்ற என்னவரிடம்..ஆசையா இருந்தது. பண்ணினேன்..என்று சொல்லிவிட்டேன்!<br />
<br />
திருமணமான புதிதில் சாம்பார் கெட்டியாக இல்லாவிட்டால் ..இன்னிக்கு குழம்பில் அலைமகள் கடாட்சம் நிறைய..என்றும் அரிசியில் ஒரு கல் வாயில் கிடைத்தால் (அந்நாட்களில் அரிசி வாங்கி அதிலுள்ள கற்களை பொறுக்கிதான் சமைப்போம்) ..மலைமகள் நம்மாத்திலயே குடியிருக்கா..என்பார்! பிறகுதான் எனக்கு இதன் அர்த்தம் புரிந்தது! சாப்பாட்டில் உப்பு இல்லை என்றால் சொல்ல மாட்டார். அவர் இலையில் உப்பு போட்டுக் கொள்ளும் பழக்கம் உடையவர் என்பதால் அதை சேர்த்து சாப்பிட்டு விட்டு ஆஃபீஸ் போய்விடுவார். மாலை வந்ததும் கேட்டால்..நான் பெற்ற இன்பம் நீயும் பெற வேண்டாமா?..என்று சிரிப்பார்! என்ன ஒரு வில்லத்தனம்!<br />
<br />
என் அம்மா மிக அருமையாக ஸ்வீட் எல்லாம் செய்வார். பாதுஷா ஸ்வீட் கடைகளில் இருப்பது போல் டேஸ்ட் சூப்பராக இருக்கும். நான் பலமுறை செய்து பார்த்தும் சரியாக வராத இனிப்பு பாதுஷா மட்டுமே. இது என் வீட்டில் அதிகம் விரும்பாததால் செய்யும் வாய்ப்பு குறைவு. என் அப்பாவுக்கு மோர்க்கூழ் மிக விருப்பம். அப்பா என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் செய்து கொடுப்பேன்.ருசித்து சாப்பிடுவார்.<br />
<br />
வீட்டில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சமையல் பிடிக்கும். என் கணவருக்கு தினமும் ஸ்வீட் சாப்பிடும் பழக்கம்! பெரியவனுக்கு அசோகா, சின்னவனுக்கு அடை அவியல், கடைக்குட்டிக்கு சாட் வகைகள், பெண்ணுக்கு பர்ஃபி, பேரன் பேத்திகளுக்கு மைசூர்பாகு, காஜுகத்லி என்று பண்ணி நிறைய அயிட்டங்கள் கற்றுக் கொண்டு சமைக்க முடிகிறது.<br />
<br />
கொரோனா வந்தபின் மூன்று மாதங்களுக்கு மளிகை சாமான் வாங்கிவிட்டதால் விதவிதமான சமையல், டிஃபன், ஸ்நாக்ஸ்! என் பிள்ளைகள் விதவிதமாய் ப்ரெட் கேக் எல்லாம் செய்து ஃபோட்டோ போட்டால் நான் இவற்றை செய்து வாட்ஸப்பில் அனுப்புவேன்! கடந்த ஒரு மாதமாக நான் செய்த சமையல் வகைகளின் தொகுப்பை இணைத்துள்ளேன்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<div>
<br /></div>
</div>
Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-84315826150872621092020-05-02T01:12:00.002-07:002020-05-02T01:13:17.968-07:00இன்று அட்சய திருதியை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
அட்சயதிருதியை என்றால் என்ன? அந்த தினத்தில் என்ன செய்ய வேண்டும்? ஏன் அட்சயதிருதியை கொண்டாடப்படுகின்றது என்பது பற்றி நிறைய செய்திகள் உள்ளன.<br />
<br />
முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சயதிருதியை என்றும், பரசுராமரின் பிறந்த நாளாக அட்சயதிருதியை கொண்டாடப்<br />
படுவதாகவும் கூறப்படுகின்றது.<br />
<br />
இதிகாசங்களின்படி, அட்சய<br />
திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது. மேலும் பகீரதன் தவம் செய்து புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்த நாளாகவும் கூறப்படுகிறது. மகாலட்சுமியின் அருளால் குபேரன் செல்வந்தனானதும் அட்சய திருதியை அன்று தான்.<br />
<br />
கண்ணனின் அருளால் குசேலன் குபேரன் ஆனது, தனது தாயை மீட்க, தேவலோகத்திலிருந்து அமுதத்தைக் கருடன் எடுத்து வந்தது, அன்னபூரணி தேவி தோன்றியது, மகாபாரதத்தை வியாசர் கூற, விநாயகர்<br />
எழுதத் தொடங்கியது, தர்மபுத்திரர் அட்சய பாத்திரத்தைப் பெற்றது. திரௌபதிக்குக் கண்ணன் புடவை சுரந்து காத்த நாளும் இந்த அட்சய திருதியை அன்று தான். இத்தகைய பற்பல சிறப்புகள் நிறைந்த நாள் அட்சயதிருதியை ஆகும்.<br />
<br />
அட்சயம் என்றால் குறையாத என்று பொருள். அட்சய திருதியை அன்று கற்கும் கல்வியும், செய்யப்படும் தானமும், நற்செயல்களும் குறைவின்றித் தொடரவேண்டும் என்பதை உரைக்கவும் அட்சயதிருதியை என்ற பெயர் ஏற்பட்டது. அட்சயதிருதியை அன்று சூரியன், சந்திரன் இருவருமே உச்சத்தில், சம அளவு ஒளியுடன் திகழ்வதாக ஜோதிட நூல்கள் கூறுகின்றன.<br />
<br />
தானியங்களைச் சமர்ப்பித்துத் திருமாலை வழிபட வேண்டிய நாளாக அட்சயதிருதியை கருதப்படுகிறது. யஜுர் வேதத்தில் அட்சய திருதியை நாளில் வெள்ளை நிறப் பொருட்கள்,<br />
மஞ்சள் நிறப் பொருட்கள் வாங்குவது நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.<br />
தானியங்களில் தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள். அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்கி அதைப் பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது.<br />
<br />
மஞ்சளில் எல்லா மகிமையும் உள்ளது. மஞ்சள்தான் எல்லா வகையிலும் நலன் தரக்கூடியது. மஞ்சள் பொடியாகவும் கிழங்காகவும் வாங்குவதால் வாழ்க்கை நலமாக வளமாக சிறப்பாக இருக்கும் எனப்படுகிறது.<br />
<br />
இந்நாளில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது மிக நன்மை தரும். அவர்களுடைய தேவைக்கேற்ப பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.<br />
தங்கம், வெள்ளி இவை லட்சுமியின் அம்சமாகக் கூறப்<br />
படுவதால் தற்காலத்தில் தங்க நகைகள் வாங்குவது சிறப்பாகக் கூறப்படுகிறது.<br />
<br />
சித்தர்கள் ஜீவசமாதி உள்ள திருவண்ணாமலை போன்ற ஆலயங்களுக்குச் செல்வது புண்ணியத்தை தரும்,<br />
<br />
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு அருகிலுள்ள சிம்மாசலம் நரசிம்மர் கோயிலில், எப்போதும் சந்தனக்காப்பால் மூடப்பட்டிருக்கும் நரசிம்மரை அட்சயதிருதியை அன்று மட்டும் சந்தனக் காப்பு இல்லாமல் முழுமையாகத் தரிசிக்கலாம்.<br />
<br />
தம்உலகப் புகழ்ப்பெற்ற பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரைக்கான ரதங்களை ஒவ்வொரு வருடமும் அட்சயதிருதியை அன்று தான் வடிவமைக்கத் தொடங்குவார்கள்.<br />
<br />
பத்ரிநாத், கேதார்நாத்தில் குளிர்காலம் முடிந்து கோயில் நடைதிறக்கப்படும் நாள் அட்சயதிருதியை ஆகும்.<br />
<br />
தமிழ்நாட்டில் அட்சய திருதியை தினத்தில், கும்பகோணம் பெரிய கடைவீதியில் நடைபெறும் பன்னிரண்டு கருட சேவை, வடுவூர் ராமர் கோயிலில் காலை ஒரு முறை, மாலை ஒரு முறை என இரண்டு முறை நடைபெறும் கருட சேவை, மன்னார்குடி ராஜகோபாலனின் கருட சேவை போன்ற கருட சேவை உற்சவங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை.<br />
<br />
ஏன் பன்னிரு கருட சேவை? திருமாலைத் தியானிக்கும் முறையைக் கூறும் ஆகம சாஸ்திரங்கள், நம் உடலில் பன்னிரு இடங்களில் பன்னிரு திருப்பெயர்களுடன் திருமால் வீற்றிருப்பதாகத் தியானிக்கச் சொல்கின்றன. கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகியவையே அந்தப் பன்னிரண்டு திருப்பெயர்கள்.<br />
<br />
அந்தப் பன்னிரு வடிவங்களையும் தியானிக்க இயலாதவர்களுக்காக சாரங்கபாணிப் பெருமாள், தானே பன்னிரு வடிவங்கள் எடுத்துக் கொண்டு அட்சயதிருதியை அன்று குடந்தை கடைவீதியில் காட்சி தருகிறார். இந்தப் பன்னிரண்டு பெருமாள்களையும் தரிசிப்பவ<br />
ர்கள், ஆகமங்கள் கூறும் பன்னிரண்டு மூர்த்திகளைத் தியானித்த பலனைப் பெறுவார்கள்.<br />
<br />
"அந்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி<br />
புண்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் வாராணஸ்யாம் விநச்யதி<br />
வாராணஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி<br />
கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி’’<br />
என்பது கும்பகோணத்தின் சிறப்பைக் கூறுகிறது.<br />
<br />
நாமும் அவனருள் நாடி, அவன் திருப்பாதம் பற்றி இன்றைய நிலை மாற வேண்டுவோம்🙏🏼</div>
Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-87139286802351219942020-05-02T01:08:00.003-07:002020-05-02T01:11:59.608-07:00நன்றி..!நன்றி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
நன்றி..!நன்றி<br />
சமையல் ஸ்பெஷலுக்கு என் பெயரையும் குறிப்பிட்ட மத்யமர்களுக்கு நன்றி🙏🏼.<br />
நேற்று என் நட்சத்திர பிறந்த நாளுக்கு நான் செய்த ஸெவன் கப் கேக்!<br />
<br />
ஸெவன் கப் கேக்<br />
<br />
கடலை மாவு..1கப்<br />
தேங்காய் துருவல்..1கப்<br />
நெய்..1கப்<br />
பால்..1கப்<br />
சர்க்கரை..3கப்<br />
ஏலப்பொடி..1டீஸ்பூன்<br />
<br />
செய்முறை<br />
கடலைமாவை 4 ஸ்பூன் நெய்யில் வாணலியில் லேசாக வறுக்கவும்.சிவக்கக் கூடாது.<br />
<br />
அத்துடன் பால், நெய், தேங்காய், சர்க்கரை இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.<br />
<br />
கேஸை சிம்மில் வைத்து நன்கு கலந்து கைவிடாமல் கிளறவும்.<br />
<br />
நன்கு பூத்து வந்து ஒட்டாமல் சுருண்டு வரும்போது ஏலப்பொடி சேர்க்கவும்.<br />
<br />
மிந்திரி பருப்பை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.<br />
சுலபமான சுவையான கேக் நாவில் கரையும்!<br />
<div>
<br /></div>
</div>
Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-7905967004258503722020-05-02T01:07:00.001-07:002020-05-02T01:07:15.910-07:00மாத்தி_யோசி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
ஆயி_மாஜி_ஆயி😀<br />
<br />
நான் தஞ்சாவூரைச் சேர்ந்தவள். என் கணவரும் தஞ்சை. என் அப்பாவின் வேலை நிமித்தம் நாங்கள் இருந்ததும், நான் படித்ததும் சிங்காரச் சென்னை!🚋🏘️ எனக்கு தஞ்சைத் தமிழும் சென்னைத் தமிழும் மட்டுமே தெரியும்.<br />
<br />
மணமான ஆறு மாதத்திலேயே என் கணவருக்கு வடக்கே உத்திரப் பிரதேசத்தில் மதுரா (மாயக் கண்ணனின் பிறப்பிடமான வடமதுரை)வுக்கு மாற்றல்! ‘இந்தி’ என்று தமிழில் மட்டுமே எழுதத் தெரிந்த நான், சற்று பயத்தோடும்😞, ஏகப்பட்ட பிரமிப்போடும்🤨, சில இந்திப் புத்தகங்களோடும்📚 பயணமானேன். நான் படித்தபோது இந்தி தேவையில்லை என்று போராட்டம் நடந்ததால் இந்தியில் 'ஆனா..ஆவன்னா' கூடத் தெரியாது😙<br />
<br />
என் கணவர் அத்தனை இந்திக் கலவரத்திலும், ஒளிந்து ஒளிந்து🤫 ‘ராஷ்ட்ரபாஷா’ வரை படித்தவர்! எனவே அவருக்குக் கவலையில்லை!🕺<br />
<br />
ஒரு நாள் ஒரு நண்பர் வீட்டு ‘பார்ட்டி’க்கு🍱 என் கணவர் அழைத்துப் போக, அங்கு வந்த அத்தனை பெண்களும்👭 ஒரு மதராஸிப் பெண்ணான என்னை அதிசயமாகப் பார்த்து ஆயிரம் கேள்விகள் கேட்க ‘அச்சா’😁, 'மாலும் நஹி’🥺 என்ற இரண்டு வார்த்தைகளோடு அசடு வழிந்தேன்🥴!<br />
<br />
என் கண்கள்👀 என்னவரைத் தேட அவரோ அனைவருடனும் அமர்க்களமாகப் பேசிக்🗣️ கொண்டிருந்தார்.சே.. என்ன மொழி அது? ‘க’வில் நான்கு வகை, ‘ச’வில் இரண்டு, ‘ட’ வில் நாலு என்று ‘போதுமடா சாமி’ என்றாகி விட்டது!😞<br />
<br />
நம் தமிழ் தவிர மற்ற மொழிகளில் இந்த உச்சரிப்பு பிரச்னை #‘படா_பேஜார்’தான்! இந்தியில் மனிதர்களுக்கு மட்டுமன்றி, விலங்குகள்,பறவைகள் 🐀🐆🐎🦜🐦🐓 மற்றும் பொருட்களுக்கும்🥛🍯 கூட ‘பால்’ உண்டு. பானி (தண்ணீர்), மிட்டி (மண்), தஹி (தயிர்) இவை பெண்பால்! தூத்🍼 (பால்), பத்தர் (கல்) இவை ஆண்பால். குத்தா என்றால் ஆண் நாய்!🐕 குத்தி என்றால் பெண் நாய்🐩. இப்படித் திண்டாடி, தட்டுத் தடுமாறிப் பேசி இந்தி கற்றுக் கொள்வதற்குள் என் கணவருக்கு மீண்டும் தமிழ்நாட்டுக்கு மாற்றல்!🚚 முதல் வேலையாக குழந்தைகளுக்கு இந்தியைக் கற்றுக் கொடுத்து எல்லாரும் பிரவீண் முடித்தார்கள்.<br />
<br />
மீண்டும் கோலாப்பூருக்கு மாற்றல். நமக்குதான் இந்தி தெரியுமே என்று #'கெத்'தாக இருந்தேன்!💃 அங்கு சென்றதும்தான் புரிந்தது #மகாராஷ்டிர_மொழி #மகாகஷ்டமான மொழி என்று! அங்கு அருகில் இருந்தவர் வீட்டுக்கு கூப்பிட என் பெண்ணையும் உடன் அழைத்து சென்றேன். அவர்கள் வீட்டில் மாமியாரும் மருமகள்👵🙎🙍🤷🙆<br />
களுமாக நாலைந்து பேர். எங்களை அதிசயமாகப் பார்த்தார்கள்!<br />
<br />
இந்தியில் பேசுவார்கள் என நினைத்தால் அவர்களோ மராத்தியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். எங்களை 'பஸா'🙋 என்று சொல்ல...(பஸ்ஸில் வந்தீர்களா? ) என்று கேட்கிறாளோ? இருவரும் இந்தியில் டீக் ஹை என்று சொல்ல சோபாவைக்🛋️ காட்டி மீண்டும் பஸா என்றதும்தான் புரிந்தது உட்காரச் சொல்கிறாள் என்று! அசட்டு சிரிப்புடன்🥴 அமர்ந்தோம்🙂! அவர்கள் எங்களுக்கு புரியுமா என்று கூட யோசிக்காமல்😖 சரவெடி போல் விடாது பேச 'அச்சா..அச்சா' என்று சொல்லி சமாளித்தோம்! அவர்க<br />
ளுக்கு இந்தி புரியவில்லை. அவர்கள் பேசியதில் 'சாய்' ☕என்பது மட்டும் புரிய அதைக் குடித்துவிட்டு விட்டால் சரி என்று ஓடி வந்து விட்டோம்.😮<br />
<br />
என் பிள்ளை ஒருநாள் என்னிடம் 'ஆயி மாஜி ஆயி..மல ஜேவன் பாய்ஜே ஆயி' என்றான். அவன் மராட்டி கற்றுக் கொண்டு விட்டானாம்! நான் எதுவும் புரியாமல்🤔 'என்னடா..ஆயி மலம்னு! என்ன பேசற நீ' என்றதும் 'மராட்டி பேசறேன்.ஆயின்னா அம்மா' என்றான்.👩 'அடப்பாவி..என்னை மாஜி அம்மா ஆக்கிட்டயா? எப்பவும் நான்தாண்டா உன் அம்மா' என்று நான் டென்ஷனாக..😟<br />
<br />
'ஐயோ அம்மா.மாஜி ஆயினா என் அம்மானு அர்த்தம்'.<br />
'அப்பறம் ஏதோ மலம் ஜீவனம்னியே.🙎 'மல ஜேவன் பாய்ஜேன்னா எனக்கு சாப்பாடு🍛 வேணுனு அர்த்தம்' என்றான்.<br />
இக்கட, அக்கட, புடே ,காலி என்று எப்படியோ மராட்டியும் கற்றுக் கொண்டேன்!😅<br />
<br />
அப்புறம் ஒரு வருடம் பெங்களூர் வாசம்!🌃 ‘அப்பாடி! பெங்களூரில் நிறைய தமிழர்கள் உண்டு. கல்கண்டு தமிழில் கலகலக்கலாம்' என்ற என் ஆசையில் மண்! எங்கள் வீட்டுக்காரம்மாவோ ‘பச்சைக் கன்னடத்தி!’🤦 அவள் வீடு சென்ற என்னை ‘பன்ரி, குத்துக் கொட்றி’ (‘என்ன மரியாதையில்லாமல் குட்றி என்கிறாளே, என்ன கேட்கிறாள்’) என்று நான் ‘திருதிரு’க்க,🙄 நாற்காலியைக் காட்டியதும்தான், சட்டென்று நம் 'சென்னைத் தமிழ்’ ‘குந்திக்க’ ஞாபகம் வர அமர்ந்தேன்!😊<br />
<br />
‘நிம்ம எஜமானரு ஏனு மாடுதாரு?’ (மாடுக்கு எஜமானரா?!) 🐐‘நிம்ம ஹேஸரு ஏனு?’ (ஏசுவைப் பற்றிக் கேட்கிறாளா!) 'நீரு சாக்கா பேக்கா?' (கடைசியா என்னை பேக்குன்னுட்டாளே!) 😰என்று ‘சரவெடி’ 💥மாதிரி கேள்விகளைத் தொடுக்க, ஒரு அட்சரம் கூட புரியாமல் ‘புஸ்வாணமாகி’ ⛲நான் வீடு திரும்பினேன்!<br />
<br />
வெளி மாநிலம் சரி, நம் மாவட்டத்துக்குள்ளும் பேச்சு வழக்கு வித்தியாசமாகத்தானே இருக்கிறது? நாகர்கோவிலில் என் பிறந்த வீட்டுக்குப் போனபோது, என் அம்மாவுக்குத் தெரிந்த மாமி வந்து, ‘ஏண்டி, வீச்சாரிக்காயோ?🙁 உடம்பு வண்ணமே வைக்கவில்லையே?’😟 என்று கேட்க,😇 நான் அர்த்தம் தெரியாமல் முழிக்க, அம்மாதான் பிறகு விளக்கினார். ‘வீச்சாரிக்காயோ’ என்றால் ‘நன்னா இருக்கியா’ என்று அர்த்தமாம்.🙂 ‘உடம்பு வண்ணமே வைக்கவில்லையே’ என்றால் ‘உடம்பு பெருக்கவே இல்லையே’ என்று பொருளாம்😆! அங்கு கணவரை மாப்பிள்ளை என்பார்களாம்🤩! என் அப்பா கடையில் சர்க்கரை கேட்க வெல்லம் கொடுத்தாராம் கடைக்கார்!. பஞ்சாரை என்றால் சர்க்கரையாம்!😆😅<br />
<br />
ஈரோடில் பெண்களை 👸பிள்ளை என்பார்கள். நான் அங்கு சென்ற புதிதில் என் முதல் பிள்ளை, இரண்டாம் பிள்ளை என்றபோது 'உங்க வீட்டில ஒரு பிள்ளைதான இருக்கா' என்றதும் தான் இந்த பிள்ளைக்கு அர்த்தமே புரிந்தது!😅😉<br />
<br />
விளக்கமாற்றுக்குக்கூட,🧹 ‘வார்கோல், சீமாறு, பெருக்குமாறு, துடப்பம்’ என்று ஊருக்கு ஒரு பெயர் இருக்கும்போது மற்ற பேச்சுகளிலும் வித்தியாசம் இருப்பதில் வியப்பில்லயே?😆<br />
<br />
இப்படி மாநிலம்தோறும் சென்றதன் பலன் பல மொழிகளைத் தெரிந்து கொள்ளும் சந்தோஷம் கிடைத்தது உண்மை!😃<br />
#ராதாபாலு<br />
<br />
மாத்தி யோசிக்கு என்ன எழுதலாம் என்று மாத்தி மாத்தி யோசித்தும் ஒன்றும் சரிவரவில்லை. எப்பொழுதும் ஒரே மாதிரி எழுதாமல் இந்த முறை ஸ்மைலிகளை சேர்த்து எழுதிப் பார்த்தேன்! வித்யாசமாக இருந்தது! நீங்களும் படித்துப் பார்த்து கமெண்டுங்கள்!<br />
<div>
<br /></div>
</div>
Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-59461573171840269942020-04-24T00:13:00.002-07:002020-04-24T00:13:45.489-07:00வாழ்க புத்தாண்டு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழுக்கும் அமுதென்று பேர் என்றுரைத்த பாரதி வழிநின்று வாழ்த்துகிறேன் சார்வரி எனும்<br />
இப்புத்தாண்டில் நாம்<br />
நிறைந்த நல்வாழ்வும்<br />
சீரிய சிந்தனையும்<br />
ஓங்கிய ஒற்றுமையும் பெற்று நோய் நொடியின்றி வாழ யாதுமாகி நின்ற காளி அருள் புரிய வேண்டி🙏🏼</div>
Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-58760899909353481312020-04-17T09:22:00.004-07:002020-04-17T09:22:49.999-07:00ஹேஸல்நட்(Hazel nut) கேக்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
ஆஷாட ஏகாதசிக்கு பண்டரிக்கு பாயசத்துடன் ஏதாவது ஸ்வீட் பண்ணலாமேனு யோசிச்சேன்! என் பிள்ளை போனமுறை வந்தபோது வாங்கி வந்த ஹேஸல்நட் பவுடர் இருந்தது. இதை வைத்து ஒரு கேக் பண்ணலாமென்று முடிவு செய்தேன்.<br />
<br />
ஹேஸல்நட் என்பது கொண்டைக்கடலை மாதிரி பெரியதாக இருக்கும். மிக சத்தானது என்பான் என் பிள்ளை. வெளிநாடுகளில் மட்டுமே இதை நான் பார்த்ததுண்டு. பாதாம், மிந்திரி, பிஸ்தா, வால்நட் போல் இதில் சாக்லேட், பிஸ்கட் எல்லாம் செய்வார்கள்.<br />
<br />
ஆனால் இதில் நம்ம மெதட்ல கேக் பண்ணினா எப்படி இருக்குமோ என்று உள்ளூர பயம்! கசக்குமோ..துவர்க்குமோ? கண்ணனை வேண்டிக் கொண்டு கேக் பண்ணி நைவேத்யமும் பண்ணிவிட்டு சாப்பிட்டோம். அருமையாக இருந்தது!<br />
<br />
Hazelnutற்கு தமிழ்ப் பெயர் தெரியவில்லை. Googleலும் சரியான பெயர் கண்டுபிடிக்க முடியவில்லை! எப்படியோ பாண்டுரங்கனுக்கு ஒரு புதிய இனிப்பு பண்ணி கொடுத்தாச்சு!</div>
Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-53902245226426871562020-04-10T00:16:00.003-07:002020-04-17T09:20:05.597-07:00பாவம் போக்கும் சிம்மாசலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
சென்ற வாரம் விசாகப்பட்டினம் சென்றபோது சிறப்பான சிம்மாசலம் கோயிலை தரிசித்து வந்தோம். அருமையான ஆலயம்.<br />
<br />
நரசிம்மர் பெரும்பாலும் மலைக்கோயில்களிலேயே வீற்றிருக்கிறார். வேலூர் அருகிலுள்ள சோளிங்கர், ஆந்திராவிலுள்ள அஹோபிலம், சிம்மாசலம், கர்நாடக மாநிலம் மேல்கோட்டை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள சிங்கப்பெருமாள் கோயில், நாமக்கல், மதுரை ஒத்தக் கடைநரசிம்மர் கோயில்கள் சிறப்பானவை.<br />
<br />
திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் பரபரப்பான நொடியில் தன் பக்தன் பிரஹலாதனைக் காக்க மனிதனும். மிருகமும் கலந்த உருவமெடுத்து தூணிலிருந்து வெளிப்பட்ட தனிப்பெரும் அவதாரம் அது.<br />
<br />
பிரஹலாதன் கருவிலேயே நாரத முனியால் நாராயண மந்த்ரோபதேசம் பெற்றவன். அவனுடைய நாராயண பக்தியினால் தானே கடவுள் என்ற இரண்யனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத பிள்ளை அவன்.<br />
<br />
அவன் தந்தை ஹிரண்யனுக்கு தன் நாட்டிலுள்ள பிற எல்லோரையும் போல் அவனும் தன் னுடைய பக்தனாக வேண்டும் என்று வெறி. ஹிரண்யன் பிரஹலாதனை பல விதங்களில் துன்புறுத்தியும், நாராயண நாமத்தால் அவற்றையெல்லாம் தன் மீதான பக்தி சிலிர்ப்பாகவே அனுபவித்தான் ப்ரஹலாதன்.<br />
<br />
அவற்றில் ஒரு தண்டனையாக கடலில் தள்ளிவிட்டான். அதுவே விசாகப் பட்டினம் அருகிலுள்ள கடல். அவன் பிழைத்துவிடக் கூடாது என்பதற்காக மேலே ஒரு மலையையும் தள்ளிவிட்டான்.<br />
'ஹரியே சரி' என்ற ப்ரஹலாதன் நாராயணா என பகவானை சரண் அடையக் கூப்பிட்டான்.<br />
<br />
கடலில் அமிழ்ந்து கொண்டிருக்கும் ப்ரஹலாதனை காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில், ஒரு கையில் பீதாம்பரத்தைப் பிடித்துக்<br />
கொண்டு குதித்த வேகத்தில் பகவானின் பாதங்கள் பாதாளம் வரை சென்று விட்டனவாம்.எனவே இங்கு பாததரிசனம் கிடையாது.<br />
<br />
ஹிரண்யகசிபுடன் 32 ரூபங்கள் எடுத்துப் போர் புரிந்தாராம் ஹரி. அதில் ஒன்று வராகநரசிம்மர் அவதாரம் ஆகும். பாதாளம் சென்று பிரகலாதனைக் காப்பாற்றியபோது அவன் மேல் கிடந்த மலையுடன் மேலே வந்தார் பெருமாள். அந்த மலையே சிம்மாசலம்.<br />
<br />
இங்கு கோயில் கொண்டிருக்கும் நரசிம்மர், வராக முகத்துடன் மனித உடலோடு, சிங்கத்தின் வால்கொண்டு, வராக நரசிம்மனாக காட்சி அளிக்கிறார்.<br />
பிரஹலாதனின் விருப்பத்திற்<br />
கிணங்க, ஹிரண்யாக்ஷனை வதம் செய்த வராஹ ரூபம் மற்றும் ஹிரண்யகசிபுவினை அழிக்கப்<br />
போகும் நரசிம்ஹ ரூபம் கலந்து வராக நரசிம்மராக காட்சி தருகிறார். இக்கோயில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு பிறை மாடத்தில் மூலவர் வராக நரசிம்மரின் முழு உருவமும் சிற்ப வடிவில் காணப்படுகிறது.<br />
<br />
பகவானுக்கு ஆராதனம் இல்லாமல் போகவே, புற்று மூடி அந்த இடம் காடாக மாறிவிட்டது. பின்னொரு காலத்தில் புரூரவஸ் என்ற சக்கரவர்த்தி இந்த இடத்தைக் கடந்து செல்லும் போது, அவரது விமானம் தடைபட்டது. நரசிம்மமூர்த்தி அவரதுகனவில் தோன்றி, தான் இங்குள்ள கங்கதாரா என்ற தீரத்தத்தின் அருகில் உள்ள புற்றில் இருப்பதாகச் சொல்ல, அவரை அக்ஷயதிருதியை அன்று எழுந்தருளச் செய்து, கங்கதாரா தீர்த்தத்தில் திருமஞ்சனம் செய்து பிரதிஷ்டை செய்தார் புரூவரஸ்.<br />
<br />
எனவே அக்ஷயதிருதியை அன்று மட்டுமே பெருமான் நிஜரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.மற்ற<br />
நாட்களில் சந்தனக் காப்பிட்ட<br />
தரிசனம் தான்.<br />
<br />
சந்தனக்காப்பில் எப்படி ஒரு வருடம் எனத் தோன்றுகிறதா?வைகாச சுக்ல திருதியை, வைகாச பவுர்ணமி, ஜ்யேஷ்ட பவுர்ணமி, ஆஷாட பவுர்ணமி என்று வருஷத்தின் நான்கு தடவைகள், சுமார் 500 கிலோ சந்தனம் சாத்துகிறார்கள். அதனால் எல்லா நாட்களும் சந்தனகாப்பு பளபளக்க காட்சியளிக்கிறார் இந்த வராஹ நரசிம்மர்! அக்ஷயதிருதியை அன்று லட்சக்கணக்கான மக்கள் நிஜரூப தரிசனம் செய்ய வரிசையில் காத்திருப்பராம்!<br />
<br />
சந்தனக் காப்பு ஏன்? இத்தலத்<br />
திலும் சைவ வைணவ<br />
சண்டை வந்ததாக கதை உண்டு. முதலில் இந்த மூர்த்தி இங்கு லிங்க ரூபத்தில் வழிபடப்பட்ட<br />
தாகவும், ராமானுஜர் ஸ்ரீகூர்மத்தி<br />
லிருந்து இந்த மலைக்கு வந்து நாராயணனின் தலம் இது என்றும் இங்கு வராகநரசிம்மனின் அர்ச்சா ரூபம் நிறுவப்படவேண்டும் என்றும் வாதம் செய்தாராம். முடிவில், உள்ளே இருப்பவர் நாராயணனா இல்லை நமசிவாயமா என்பதைக் கண்டுகொள்ள லிங்கத்தின் கீழே துளசியும் விபூதியும் இரவில் வைக்கப்பட்டு, காலையில் எது ஏற்றுக் கொள்ளப்பட்டதோ, அவரே அங்கே இறைவன் என்று முடிவு செய்யப்பட, அனைவரும் அப்படியே செய்கின்றனர்.<br />
<br />
மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது துளசி மட்டுமே அங்கே கிடந்ததைக் கண்டு உடையவரின் கருத்தில் உடன்பாடு கொண்டு அனைவரும் லிங்கத்தை அகற்றிவிட்டு அங்கே ராமானுஜரின் கட்டளைப்படி வராகநரசிம்மனின் அர்ச்சா<br />
ரூபத்தை செதுக்கினர். அப்படி வழிபடும்போது, அவர் உடலில் ரத்தம் வழிந்ததாகவும், ரத்தத்தை மறைக்க சந்தனத்தை உருவம் முழுவதும் சார்த்தி மூடிவிட்ட<br />
தாகவும் சொல்லப்படுகிறது.<br />
<br />
ஹரியும், சிவனும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் வராக லட்சுமி நரசிம்மமூர்த்தியை தரிசித்தால் சிவலிங்க உருவத்தில் நாராயணனின் நாமம் சாத்தப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. தூணிலிருந்து தோன்றிய மூலவர் தூண் போன்றே தரிசனமளிக்கிறார். வராகரும் இவருடன் அரூபமாக உள்ளார்.<br />
<br />
நிஜரூபத்தில் பார்க்கும்போது சுவாமியின் கால்களுக்குக் கீழே பாதம் இல்லை. கைகள் நீண்டு இருந்தாலும் உள்ளங்கைகளும் விரல்களும் தெரியாது. முகத்தில் வராக ரூபமும் பின்னால் வால் ரூபமும் கூட இப்போதெல்லாம் சரியாகத் தெரிவதில்லையாம்.<br />
<br />
சிறிய மலையின் மீது கோயில் உள்ளது. எக்காலத்திலும் பக்தர்களின் கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காது போலுள்ளது. தங்குவதற்கு தேவஸ்தானம் நிறைய அறைகள் கட்டி உள்ளார்கள்.<br />
<br />
பெருமாளை அருகிலேயே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள். வெளியே வந்து கங்கதாரா அருவி நீர் ஐந்து இடங்களில் சிறிய முகத்துவாரம் வழியாக வருவதை தலையில் தெளித்துக் கொள்ள<br />
லாம்.<br />
<br />
11ம் நூற்றாண்டில் கலிங்க நாட்டை வென்ற குலோத்துங்க சோழனால் மலையை முழுக்க குடைந்தெடுத்து பாறையால் செய்யப்பட்ட ஒரு தேர், சக்கரங்களுடன் குதிரைகள் இழுத்துச் செல்லும் முறையில் உள்ளது. இங்கு 525 அதியற்புதமான சிற்பங்கள் காட்சியளிக்கின்றன.<br />
<br />
வாழ்வில் உண்டாகும் துன்பங்களைப் போக்கி பக்தர்களைக் காப்பதில் சிம்மாசலம் நரசிம்மருக்கு இணை வேறு யாருமில்லை.சனக, சனந்தன, சனாத, சனத்குமாரர்<br />
களுக்கும், தேவர்கள், நாரதர், ரிஷிகளுக்கும், இவர் தரிசனம<br />
ளித்ததாக தலபுராணம் கூறுகிறது.<br />
<br />
இவ்வாலயத்தில் கப்பஸ்தம்ப வேண்டுதல் மிகப் பிரசித்தம்.<br />
அந்நாட்களில் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறினால் கோவிலுக்கு வந்து கப்பம் செலுத்துவதாக வேண்டிக் கொள்வதும், நோய் நொடியி<br />
லிருந்து பாதுகாக்கவும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பிறக்க வேண்டிக் கொண்டு இங்குள்ள கப்பஸ்தம்பத்தில் கப்பம்<br />
செலுத்துவதும் வாடிக்<br />
கையாக இருந்ததாம்.<br />
<br />
இன்றும் அந்த ஸ்தம்பம் இங்கே இருக்கும் மண்டபத்தில் வெள்ளிக் கவசத்துடன் உள்ளது. அந்தத் தூணின் கீழ் சந்தான கோபாலரின் திருவுருவம் உள்ளது. அந்த கம்பத்தை இரு கைகளாலும் அணைத்தவாறு நம் வேண்டுதல்<br />
களைக் கூற வேண்டும்.<br />
<br />
பின் அங்குள்ள ஊழியர் ஒரு பட்டுத் துணியினால் நம்மைத் தூணுடன் கட்டி இறைவனிடம் நம்மை வேண்டிக் கொள்ள சொல்கிறார். திருமணம் பிள்ளைப்பேறு வியாபார விருத்தி போன்ற வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதாகக் கூறப்படுகிறது. தம்பதியர் இந்த வேண்டுதலை இணைந்து செய்ய வேண்டும்.இதற்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.<br />
<br />
இங்குள்ள நரசிம்ம தீர்த்தம், கங்காதாரா தீர்த்தம் எனும் இரு அருவிகளிலும் நீராடி வராஹ<br />
நரசிம்மரை வணங்கி, மலைப் பாதையில் கிரிவலம் வந்து வணங்குவதால் தீரா நோய்கள் தீர்ந்து பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். உடல் வளமும் உள்ள வளமும் பெற இந்த வராஹ லட்சுமிநரசிம்மர் பேரருள் புரிகிறார்.<br />
<br />
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி<br />
னத்திலிருந்து 5 கி.மீ தொலைவி<br />
லுள்ளது இத்திருத்தலம்.</div>
Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-66895216611605828502020-04-08T08:59:00.003-07:002020-04-19T09:48:17.485-07:00#நாளாம்_நாளாம்_திருநாளாம்...!_💏👩❤️👨<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
... நம்ம கல்யாணம் ஆன புதிசில உங்களுக்கு என்கிட்ட ரொம்ப பிடிச்சது என்ன?...😍<br />
<br />
... நான் சொன்னா நீ கோச்சுக்க கூடாது. சரியா?...🌝<br />
<br />
...நிச்சயம் இன்னிக்கு கோச்சுக்க மாட்டேன்...😉<br />
<br />
...கல்யாணம் முடிஞ்ச ஒரு வாரம் கழித்து முதன் முதலா நீ ஒரு ரவா உப்மா...🤭<br />
<br />
...நிறுத்துங்கோ! நான் பண்ணின உப்மா சரியில்லனு சொல்லப் போறேளா😡 நான் கேட்டது வேற😠...<br />
<br />
...நான் சொல்லி முடிக்கவே இல்ல. கோச்சுக்காத. அந்த கொழகொழ உப்மாவை பண்ணிட்டு உன் மாமியார்கிட்ட கமெண்ட் வாங்கிண்டு பாவமா நின்னியே..அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சதுனு சொல்ல வந்தேன்...😄<br />
<br />
...உடனே நீங்க என் ஜாதகத்தை ஒரு ஜோஸ்யர்ட்ட காமிச்சு 'இந்தப் பொண்ணுக்கு சமையல் வருமா'னு கேட்டவர்தான...🤨<br />
<br />
...அது அப்போ. இப்போ நான் உன் அடிமை. நீ எது சொன்னாலும் தட்டாம பண்ற புருஷன்...🤗<br />
<br />
...ஆமாம். இதுக்கொண்ணும் குறைச்சலில்ல...😏<br />
<br />
...நல்ல நாள்ள கோபப்படாத!இன்னிக்கு எல்லா வேலையும் நான்தான் பண்ணப் போறேன். சமையலும் பண்ணுவேன்..ஆனா பூஜை பண்ணணும். அதனால<br />
அதை மட்டும் நீ பண்ணிடு...😊<br />
<br />
அட..எலி 🐀தானா வந்து வலையில் மாட்டிடுத்தே! பருத்தி புடவையா காச்ச மாதிரிதான். Enjoy என என் மனசு குதூகலிக்க..💃<br />
<br />
...ஒரு கண்டிஷன். நீங்க பண்ற வேலையெல்லாம் நான் ஃபோட்டோ, வீடியோ எடுப்பேன். எதுவும் சொல்லக் கூடாது.ஓகேயா?...☺️<br />
<br />
...ஓ..வீடியோ எடுத்து குழந்தைகளுக்கு அனுப்பப் போறயா? தாராளமா அனுப்பு...🤩<br />
<br />
என் மனசுக்குள் மத்தாப்பு💥 இன்றைய மத்யமர் பதிவுக்கு வீடியோ ரெடி பண்ணியாச்சு😀<br />
<br />
நம் வாழ்வின் மறக்க முடியாத நாட்கள் நம் பிறந்தநாளும் மணநாளும். இன்று எங்கள் 45வது திருமணநாள். Sapphire anniversary. இன்று காலை எங்களுக்குள் நடந்த உரையாடல்தான் மேலே இருப்பது!<br />
<br />
திருமணத்தின் போது என் வயது 18. ஏதோ ஓரளவு சமையல் தெரியும். பள்ளிப் படிப்பு முடித்து வீட்டில் இருந்த இரண்டு வருடங்களில் என் அம்மாவின் மூன்று நாட்கள் மட்டுமே..அதுவும் என் அப்பா துணையுடன் சமைத்த அனுபவங்கள் மட்டுமே!🍲🍛<br />
<br />
திருமணமாகி வந்தவுடன் 'நீதான் இனிமேல் சமையல்' என்று என்னை சமைக்க சொல்லிவிட்டு தான் ஹாயாக ஹாலில் போய் உட்கார்ந்து விட்டார் என் மாமியார்! 'அம்மா..இந்த உப்பு போறுமா' என்றால் 'எனக்கு அப்படிலாம் சொல்லத் தெரியாது. நிதானமா போடு' என்பார். நிதான<br />
மான்னா...மெதுவாவா?!🤔<br />
<br />
திருமணமானால் ஜாலியா இருக்கலாம்😍 என்று கனவு கண்ட என் நினைப்பு அன்றே புஸ்வாணமாயிற்று🙁 ஏதோ தட்டுத் தடுமாறி சமைக்க ஆரம்பித்தேன். அந்த உப்மா..என்னாலயே சாப்பிட முடியவில்லை! என் கணவருக்கு உப்மாவே பிடிக்காதாம். 'உன் உப்மா சாப்பிட்ட பிறகு உப்மாவை சுத்தமா மறந்தே விட்டேன்' என்றார்.<br />
<br />
(உப்மா சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என்று சமீபத்தில் படித்தேன். உப்மா வயிற்றில் ஊறி உப்பிக் கொண்டு மூச்சுவிட முடியாமல் போய் விடுமாம். அதனால் மனைவியர்களை உப்மா செய்து கணவருக்கு சாப்பிட கொடுக்காதீர்கள் என்ற எச்சரிக்கை வேறு!! இந்த விஷயம் நம் மத்யமர் சகோதரர்களுக்கு சர்க்கரையாக இனிக்குமே!😆)<br />
<br />
என் மாமியாரோ 'உன்னை பெண்பார்க்க வந்தப்போ உங்கம்மா மைசூர்பாகு நன்னா பண்ணிருந்தாளே. உனக்கு தெரியுமா?' என்ற கேள்வி வேறு.🥺<br />
<br />
என் வீட்டுக்கு போகும்போது அம்மாவிடம் ஸ்வீட்லாம் செய்ய கத்துண்டு வருவேன்.எந்த<br />
சமையல் புத்தகம் பார்த்தாலும் வாங்கி விடுவேன். என்னைப் பொறுத்தவரை மீனாட்சி அம்மாளின் சமைத்துப்பார் is the best! அளவுகள் அப்பழுக்கின்றி இருக்கும்.🥣<br />
<br />
அதன் பின்பு எல்லா சமையலும் செய்து பார்த்து கற்றுக் கொண்டேன். ரவா உப்மாவை என் கணவரே 'இன்னிக்கு ரவா உப்மா பண்றயா?சாப்ட்டு நாளாச்சு' என்கிற நிலை! பல ரெசிபிகள் நன்றாக வரும்..சில காலை வாரும்..(சரியா வராத ரெசிபிகளை மத்தவா கண்லயே காமிக்க மாட்டேன்!!) இன்று நானே புதிதாக செய்யும் அளவு தேறியாச்சு. அப்பப்ப தமிழ் magazinesல போட்டிக்கல்லாம் போட்டு ப்ரைஸ்லாம் வாங்கியாச்சு. இப்போ 25 பேருக்கு ஈஸியாக சமைக்க முடியும்.🍨🥤<br />
<br />
என் கணவர் வீட்டு வேலை செய்வதில் கில்லாடி! எல்லா வேலைகளிலும் அவர் உதவி உண்டு! என் மாமியாரும் அவருமாக இருந்தபோதே அம்மாவுக்கு கிச்சனில் ஹெல்ப் பண்ணியிருப்பதால் பல வேலைகள் தெரியும்.<br />
<br />
குழந்தைகள் ஸ்கூல் போகும் நாட்களில் நான் சமையலில் பிஸி. அப்பல்லாம் குழந்தைகளை குளிப்பாட்டி யூனிஃபார்ம் போட்டு தலைவாரி நெற்றியில் விபூதி இட்டு, (என் பெண்ணுக்கு மட்டும்தான் நான் பண்ணுவேன்)புத்தகங்கள் எடுத்து வைத்து... இப்பவும் 'அப்பா மாதிரி நீ perfect இல்லமா' என்பார்கள் குழந்தைகள்!🤷<br />
<br />
சமையலும் நன்றாக செய்வார். கால்கிலோ உருளை, சேம்பு கறி பண்ண...என்ன ஒரு கால் கிலோ நெய் போறும்!!! மொறுமொறுனு ரோஸ்ட் ஆகிருக்கும். இப்பவும் என்னிடம் 'கறிக்கு இன்னும் நெய் விட்டு ரோஸ்ட் பண்ணணும்'பார்😀<br />
<br />
எனக்கு காலில் ஆபரேஷன் ஆனபோது ஒன்றரை மாதம் அவர்தான் அத்தனை வேலை<br />
களும் செய்தார். இப்பொழுது நாங்கள் மட்டும் தனியாக இருப்பதால் அதிக வேலை கிடையாது. ஆனாலும் 'நானும் ஹெல்ப் பண்ணுவேன்' என்று காய்கறி நறுக்குவது, துணி உலர்த்துவது, பாத்திரம் தேய்ப்பது எல்லா வேலையும் செய்வார். கேட்டால் 'பெட்டர் ஹாஃப் னா இப்படிதான் இருக்கணும்' என்று விளக்கம் வேற தருவார்!👩❤️👨<br />
<br />
எப்படியோ மத்யமர்க்குனு சொல்லாம இன்னிக்கு அவர் வேலையை வீடியோ எடுத்தாச்சு! இன்னிக்கு wedding day க்கு வெளில போகவும் வழியில்ல. ஆனா கிஃப்ட் வாங்காம விடுவேனா! போன மாசமே பவுன்ல ஜிமிக்கியும், second channel க்கு குட்டி வைரத் தோடும் வாங்கியாச்சு.<br />
<br />
இந்த வருஷ wedding day கொரோனாவோட கப்சிப்னு ஆயிடுத்து...இதுவரை இல்லாத விதமா மறக்க முடியாததாவும் ஆயிடுத்தே!<br />
<div>
<br /></div>
</div>
Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1050429141463512405.post-17778699035434582182020-04-04T09:41:00.000-07:002020-04-04T09:41:51.466-07:00இந்த நாள் என்று மாறும்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
நாமெல்லாம் Curfew எப்பொழுது முடியுமென்று காத்திருக்கிறோம். விரைவில் சரியாக கடவுளை வேண்டுவோம்.<br />
<br />
ஒருவேளை இந்த நிலை மீண்டும் வந்தால்...வீட்டில் எப்படி பொழுதைக் கழிப்பது என நினைக்கிறீர்களா? கீழே நான்<br />
எழுதியுள்ள சில விஷயங்களை செய்து நம் நாட்களை சிறப்பானதாக்குவோமே!<br />
<br />
⏱️அலாரத்தை அணைத்து விடுவது..!<br />
🛌 காலையில்அவசரமில்லாமல் எழுவது<br />
🙏🏼🛐 பிரார்த்தனை<br />
🧘 தியானம், யோகா<br />
📿 நாமஜபம்<br />
🛁 நிம்மதியான குளியல்<br />
🍽️ புதுவகை சமையல் செய்வது<br />
🍛🍲🥣 சுவையாக சாப்பிடுவது<br />
🍵 டீ காஃபி நேரத்துக்கு..<br />
🏋️ உடற்பயிற்சி<br />
👨👩👧👧குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது<br />
♟️🎲🧩 Indoor games விளையாடுவது<br />
📈 🖥️ Work from home<br />
📺 தொலைக் காட்சி<br />
🎼 பாட்டு<br />
💻 கம்ப்யூட்டர்<br />
🖋️எழுதுவது<br />
📖 பிடித்ததை படிப்பது<br />
🎮 CD games<br />
🧵தையல் வேலைகள்<br />
🧶ஸ்வெட்டர் பின்னுவது<br />
🎨🖌️பெயிண்டிங், ஓவியம்<br />
📲 உறவினர் நண்பர்களுடன் ஃபோன் செய்து பேசுவது<br />
🧹🚮 வீட்டை சுத்தம் செய்வது<br />
👗👕துணிகளை அடுக்கி வைப்பது<br />
👖துணி தோய்த்து இஸ்திரி செய்வது<br />
🧳✈️ (கொரோனா முடிந்தபின்!) வெளியூர் செல்ல plan செய்வது<br />
📚 பிடித்த புத்தகங்களை படிப்பது<br />
👨👩👧👦குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது<br />
🤳 Selfie எடுத்துக் கொள்வது..<br />
💃 மறந்த கலைகளை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வது<br />
📸 புகைப்படம் எடுப்பது<br />
🛋️ ஆற அமர உட்கார்ந்து Rest எடுப்பது<br />
🎻 🎺🎷வாத்யங்கள் வாசிப்பது<br />
😌 Relax..Relax..Relax<br />
🔐வீட்டை பூட்டுவதை கண்டிப்பாக மறந்து விடுங்கள்😀😆<br />
<br />
இவை தவிர இன்னும் உங்களுக்கு பிடித்த பல விஷயங்கள் இருக்குமே? அவற்றையும் கிடைத்த இந்த நேரத்தில் புதுப்பிக்கலாம்.<br />
<br />
மறக்கக் கூடாத விஷயங்கள்...<br />
🧴🚰 அடிக்கடி கை அலம்ப மறக்காதீர்கள்..<br />
💊 மருந்துகளை எடுத்துக் கொள்ள மறக்காதீர்கள்..<br />
😷 கண்டிப்பாக முகமூடியுடன் வெளியே செல்ல மறக்காதீர்கள்..<br />
<br />
🏘️ Stay Healthy<br />
🤗 Stay safe<br />
🏡Happy home<br />
💃🕺Enjoy your days<br />
<div>
<br /></div>
</div>
Radha Baluhttp://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.com0