Friday 28 June 2019

போவோமா2047

...நாராயண..நாராயண...

...என்ன நாரதா. நலம்தானே?...

...வணங்குகிறேன் மகாதேவா!தாங்கள் வரச் சொன்னதாக நந்திதேவர் கூறினார்.என்ன விஷயம் என்று...

...ஆம். புவனத்தை சுற்றிப் பார்த்து வர ஆசை. உடன் நீயும் இருந்தால் சுவாரசியமாக இருக்குமே என்றுதான்...

...வருகிறேன் ஈசா...

பரமேசுவரனும் நாரதரும் கிளம்புகிறார்கள்.

...முதலில் பாரதத்தை பார்த்து வருவோம் நாரதா...

...நல்லது பரமனே...

இருவரும் தமிழகத்திற்கு முதல் விஜயம்! ஊரெங்கும் ஜெகஜோதியாக விளக்கு வெளிச்சம். நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. மக்களின் மகிழ்ச்சி அவர்கள் பேச்சில் தெரிகிறது.

...ஊரெங்கும் ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டு அமர்க்களமாக பூஜைகள் நடக்கின்றன ஐயனே...

...ஆம் நாரதா. முப்பது வருடம் முன்பு ஆலயங்கள் அழிந்து விடுமோ என்று பயந்தவர்களின் உண்மையான பக்திக்கு கட்டுப்பட்ட நான் செய்த மாற்றமே இது...

...நல்லது ஈசுவரா...

இன்னும் சற்று தூரம் நகர்ந்து சென்றபோது ஒரு பெரிய ஹாலில் திருவிழா போல் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

இருவரும் யாரும் அறியாத நிலையில் ஒரு ஓரமாக நின்றனர்.

...ஏதோ அரசியல் கூட்டம் போலிருக்கு தேவா...

...இது மத்யமர் என்ற ஒரு முகநூல் குழுவினரின் மீட்டிங்...

...உங்களுக்கு இதுபற்றி தெரியுமா?...

...யாவும் நாம் அறிவோம். இக்குழுவின் அட்மின் என் பெயர் கொண்டவர், சங்கர் #ShankarRajarathnam. இன்னொரு அட்மின் 'புகழை விரும்புபவன்'என்ற பொருளில் விளங்கும் என் இன்னொரு பெயரைக் கொண்ட கீர்த்திவாசன் #KeerthivasanRajamani...

...தாங்களும் இந்தக் குழுவில் உறுப்பினரோ?...

...ஆம் நாரதா! என் பெயர் கொண்ட குழுவில் நான் இல்லாமலா! இதில் வரும் பதிவுகள் ஒவ்வொன்றும் சிறப்பானவை. அருமையாகஇருக்கும்!  கைலாயத்தில் பொழுது போகாதபோது நான் இதைப் படிப்பதுண்டு!

...நீயும் இதில் இணைந்து கொள். உலகம் சுற்றும் உனக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும்...

...நாராயண! நாராயண!...

...சற்று பொறு. அட்மின் பேசுவதைக் கேட்போம்...

...அனைவருக்கும் வணக்கம். நம் குழுவில் தற்போது கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கு மேல் உறுப்பினர்கள். உள்ளோம். நம் மத்யமர் சேரிட்டி பலருக்கும் பலவித நன்மைகளையும்
செய்து வருகிறது.

...முப்பது வருடங்களுக்கு மேல் ஒரு முகநூல் குழு பல சிறந்த செயல்களைச் செய்வதற்கு உங்களைப் போன்ற உறுப்பினர்களே காரணம். உங்கள் அனை
வருக்கும் நன்றிகள்.

..மேலும் நம் குழு ஆரம்பித்த நாள்முதல் இன்றுவரை பல நல்ல பதிவுகளை எழுதி நம் குழுவின் சிறப்புக்கு காரணமான தொண்ணூறு வயதுக்கு மேற்பட்ட
வர்களுக்கு நம் மத்யமர் சின்னம் பதித்த வெள்ளி பதக்கம் அணிவித்து சிறப்பிக்கிறேன்...

...பரமேஸ்வரா! எனக்கு ஒரு சந்தேகம். இதில் இளைஞர்களைவிட அதிகமாக 90 வயதுக்கு
மேற்பட்ட முதியோர்..எப்படி இவ்வளவு இளமையாக..
ஆரோக்யமாக?...

...நாரதா! இக்குழுவின் பெயரைக் கூறு..

...(மனதுக்குள்..இவருக்கு தெரியாதா?நாம் சொல்லணுமா?)..மத்யமர்...

...நீ ருத்ரம் அறிவாயா?...

...என்ன சுவாமி கேள்வி இது?நன்கு அறிவேன்...

...ஆறாவது அனுவாகம் சொல்...

...நமோ ஜேஷ்டாய ச கனிஷ்டாய ச
நம: பூர்வஜாய சாபரஜாயச
நமோ #மத்யமாய சாபகல்பாயச...

...நிறுத்து.இதில் கடைசி வரி...

...நமோ #மத்யமாய...

...அதன் பொருள் சொல்...

...சிறுவனும் இல்லாத, முதியவருமில்லாத இடைப்பட்ட இளவயது நிலையிலுள்ள ஈசனை வணங்குகிறேன்...

...அதானே இந்தக் குழுவின் பெயர். இக்குழுவினர் சதா நேரமும் '#மத்யமர்..#மத்யமர்' என்ற நினைவால் என்னை ஜபித்துக் கொண்டே இருப்பதால் இளமையாகவும் ஆரோக்யமாயும் உள்ளனர். இவர்களின் நீண்ட ஆயுளுக்கு நான் கேரண்டி! புரிந்ததா?...

...நன்கு புரிந்து கொண்டேன் இறைவா! நமசிவாய! நமசிவாய!...

...நாராயணன் பெயரை சொல்வாயே!...

...நானும் ஆரோக்யத்தோடும், இளமையோடும் இருக்கத்தான் இந்த மாற்றம் ஈசனே!...

...அட! நேரமாகி விட்டது. பார்வதி ஏதோ ஷாப்பிங் போகவேண்டும் என்றாள். போகலாம்...