Friday 25 May 2018

*அன்புத் தம்பியே!*


*அன்புத் தம்பியே!*
💛💛💛💛💛💛💛💛💛
நற்றமிழின் சாறெடுத்து
நனி கரும்பைப் பிழிந்தெடுத்து
நன்நயமும் மென்நடையும்
நவில்நடையும் சொல்லழகும்
நற்சுவையாய் கலந்தெடுத்து
நீ நவின்ற நன்றிமடல்
அருமை!அழகு!அற்புதம்!
💙💙💙💙💙💙💙💙💙
வாழ்த்திய அனைவருக்கும்
வகைவகையாய் நீ சொன்ன
வார்த்தைகள் மிகச் சிறப்பு!
💜💜💜💜💜💜💜💜💜
இன்று போல் என்றும் நீ
இளமையுடன் இன்பமுடன்
வளமையுடன் மகிழ்ச்சியுடன்
பாங்குடனே வாழ்வில் 
சீரும் சிறப்பும்
பேறும் புகழும்
பெருமையும் திறமையும் இறையருளால் பெறுவாய்!
💚💚💚💚💚💚💚💚💚
உன் கனவுகளும் ஆசைகளும்
கச்சிதமாய் நிறைவேறி *வாகைசூடி சரித்திரம்படைத்திடவும்*
*வானம் தொடும் 
புகழ் அடைந்திடவும்*
*வசந்தமான வாழ்வு 
நிலைபெறவும்*
வாழ்த்துகிறேன்
இவ்வைம்பதாம் பிறந்தநாளில்
தாங்கொணா மகிழ்ச்சியுடன்
*தமக்கை நான்!*
💐💐💐🌸🌸🌸💐💐💐


No comments:

Post a Comment