Monday 8 July 2019

#நம்_பிரதி_பிம்பங்கள்



#நம்_பிரதி_பிம்பங்கள்
நம்முடைய பிரதிபிம்பங்களாய் காணப்படும் நம் பேரக் குழந்தைகள் நமக்கு நாம் பெற்ற பிள்ளைகளை விட அதிக சந்தோஷத்தைக் கொடுப்பதை நாம் பல நேரங்களில் உணர்கிறோம்.
நம் குழந்தை நம்மைப் போல் இருப்பதை இயல்பாக ஏற்றுக் கொள்வோம். நம் பேரன் பேத்திகள் நம்மைப் போலவே இருக்கிறார்கள் என்று சொல்லும்போது நாம் பூரித்துப் போகிறோம்!
நம் பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்டும் நாம் பேரக்குழந்தைகளிடம் குழைந்து போகிறோம்! அவர்களுக்கும் நம்மிடம் உரிமை அதிகம். தம் பெற்றோரிடம் இருக்கும் பயம் நம்மிடம் இருப்பதில்லை!
நாமும் அவர்களுடன் குழந்தைகளாக மாறி விடுகிறோம்!ஓடிப்பிடித்தும்,கண்ணாமூச்சியும் விளையாடுவது மட்டுமா..என் சின்னப் பேத்தி தாத்தாவை யானையாக்கி ஏறி உட்கார்ந்து போகச் சொல்வாள்! இதை அனைத்து தாத்தா பாட்டிகளும் அனுபவித்திருப்பீர்கள்!
சென்னையில் இருக்கும் இரண்டு பேத்திகளும் பரீட்சை ஆரம்
பித்தவுடன் ஆர்டர் போட்டு விடுவார்கள், அழைத்துச் செல்ல வரும்படி!பரீட்சை முடிந்த மறுநாளே திருச்சி வந்தாச்சு!
உள்ளே நுழைந்ததுமே...ஐய்யா ஜாலி...என்று ஒரே குதியல்! ...உங்க வீட்டை விட இங்க என்ன சந்தோஷம்...என்றால்...அம்மா அப்பா கண்ட்ரோல் இல்ல.காலம்பற மெதுவா எழுந்துக்கலாம். ஜாலியா விளையாடலாம். முக்கியமா படிக்க வேண்டாம்! டெய்லி ஐஸ்க்ரீம் சாப்பிடலாம். எல்லாத்துக்கும் மேல ஹாய்யா ஊஞ்சல் ஆடலாம்!...என்று வரிசையாக அடுக்குவார்கள்!
சின்னவளுக்கு பார்பி விளையாட்டுதான். ஏகப்பட்ட பார்பிகள் அவளிடம். அவற்றுக்கு தலைவாருவது,டிரஸ் போடுவது, தூங்கப்பண்ணுவது என்று அவற்றுடன் பேசிக் கொண்டே விளையாடுவாள்! அவள் விளையாடும் அழகில் மயங்கி அப்படியே கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து விடுவேன்...பாட்டி டிஸ்டர்ப் பண்ணாத .பேபியல்லாம் அழும்...என்பாள்! அந்தக்கால சொப்பு விளையாட்டு பார்பிகளுடன்!
பெரியவள் ப்ரீத்திக்கோ பொம்மை விளையாட்டு, சமையல் எதுவும் பிடிக்காது! Tabல் புத்தகங்கள் படிப்பதும் விளையாடுவதும்தான் பொழுது போக்கு!
சதா நேரமும் ஊஞ்சலில்தான் வாசம். வேளா வேளைக்கு சாதம்,டிஃபன் எல்லாம் ஊட்ட வேண்டும். சின்ன பேத்தி முதல் வகுப்பு. அவளுக்கு ஊட்டுவது சரி..பெரிய பேத்தி ப்ரீத்தியோ ஏழாம் வகுப்பு.
..பிரியங்கா குழந்தை.உனக்கு  வயசாகலியா.
ஊட்டச் சொல்றியே..
...நான் வருஷம் முழுக்க தானே சாப்பிட்டு போர் அடிக்கற்து பாட்டி!
ஊட்டு.ப்ளீஸ்..என்று கட்டிக் கொண்டு கெ(கொ)ஞ்சுவாள்!
அவள் பள்ளி பற்றியும், படிப்பு , டீச்சர்கள் பற்றியெல்லாம் பேசுவாள்.
...நீ படித்துவிட்டு என்னவாகப் போற?...என்றேன்.
...நான் veterinary doctor ஆகப் போகிறேன்....
...நாய், பூனைக்கல்லாம் மருந்து கொடுத்து ஊசியல்லாம் போடணுமே...
...நான் forest animalsக்கல்லாம் கூட  மருந்து கொடுப்பேன்...
...அதல்லாம் வேண்டாம்.Wild animalsலாம் பயம்...
...ஐயோ..உனக்கு ஒண்ணுமே தெரியலயே.பயப்படாத பாட்டி. மயக்கம் கொடுத்துதான் பண்ணுவேன்...
அனிமல் பிளானட், ஒயில்டு லைப் டாகுமெண்டரி, நேஷனல் ஜாக்ராபிக் அனிமல் லைஃப் போன்ற அலைவரிசைகளை விரும்பிப் பார்ப்பாள். பல விலங்குகளை பற்றிய விஷயங்களையும் மிக அழகாக எடுத்துச் சொல்லுவாள்.
சிங்கம் இப்படி சாப்பிடும், கரடி இப்படி சண்டை போடும் என்றெல்லாம் அவள் விழிமலர சொல்லும்போது, இப்பொழுதே அவள் veterinary டாக்டர் ஆகிவிட்ட மாதிரி தோன்றும்!
அவள் பள்ளி பற்றியும், ஆசிரியைகள், நண்பர்கள் பற்றி கேட்டேன்.
...பாட்டி உனக்கு தெரியுமா.எங்க science டீச்சரோட அப்பா godகிட்ட போயிட்டாராம். டீச்சர் க்ளாஸ்ல வந்து அழுதா...
...உங்ககிட்ட அதல்லாம் சொன்னாளா?...
...எங்க கிளாஸை அவாளுக்கு ரொம்பப் பிடிக்கும். நான் அந்த டீச்சரை console பண்ணினேன்..
...நீயா..என்ன சொன்ன?..
...ஏன் அழறீங்கன்னேன்.அப்பா எங்களை விட்டு போய்ட்டார். எனக்கு தாங்க முடியல.அழறேன்னா.
...உங்களால தாங்க முடியாதுதான் மிஸ்..But இதல்லாம் nature.
நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது மிஸ். நீங்க இன்னும் கொஞ்சநாள் வீட்ல இருந்துட்டு வந்திருக்கலாம்..னேன்.
வீட்ல அம்மாவைப் பார்த்தா ரொம்ப அழுகை வரது.அதான் உங்க
ளோடல்லாம் இருந்தாமனசை லேசாக்கிக்கலாம்னு வந்தேன்னா.
..நீ போய் பெரிய மனுஷி மாதிரி டீச்சருக்கு ஆறுதல் சொன்னியா?!...
...நான் சொன்னது சரிதான பாட்டி. என்னைக் கட்டிண்டு..இவ்வளவு அழகா பேசறியே..னு praise பண்ணினா...
எனக்கு மிக ஆச்சரியம்! இந்தக் குழந்தை எப்படி இதல்லாம் பேசியிருக்கிறாள். எதிர்காலத்தில் எந்தப் பிரச்னையையும் இயல்பாக, லகுவாக அணுகும் குணம் அவளுக்கு இருக்கும் என்று மனதில் சந்தோஷம் ஏற்பட்டது.
அவள் கூடப் படிக்கும் பையன் ஒருவனுக்கு கால் முட்டியில் knee cap இல்லையாம். அதைச் சொல்லி வருத்தப் பட்டாள்.
...அவன் ஒரு காலை வளைக்காமல் நடப்பான் பாட்டி. பாக்கவே பாவமா இருக்கும். God ஏன் இப்படி
யெல்லாம் பண்றாரோ? எங்க கிளாஸ் மாடில.அவன் டெய்லி வரும்போது நான் கீழ போய் அவன் பையை மேலே எடுத்துண்டு வந்து கொடுப்பேன்...
..சமத்து. இன்னும் யாருக்கல்லாம் ஹெல்ப் பண்ணுவ?..
...எங்க கிளாஸ் மிஸ் எங்க நோட்புக்ஸ்லாம் எடுத்துண்டு staff room   போகும்போது நான் அவாகிட்ட வாங்கிண்டு போய் கொடுத்துட்டு வருவேன்..
இப்படி உதவும் மனோபாவம் இருக்கும் குழந்தைநாளை நல்ல குழந்தையாக வளர்ந்து நன்கு முன்னேறுவாள் என்ற நம்பிக்கை வந்தது. பெற்றோர்களின் வளர்ப்பே நல்ல குழந்தைகளை உருவாக்கு
கிறது. என் பிள்ளை,மாட்டுப் பெண்ணை நினைத்து பெருமை
யாக இருந்தது.
தினமும் இரவு கதை சொல்ல வேண்டும் அவளுக்கு. நாய் வளர்க்க ஆசை அவளுக்கு. அவள் அம்மா allow பண்ணவில்லையாம். தினமும் ஸ்கூல் போகும்போது ப்ரெட் எடுத்துக் கொண்டு போய் வாசலில் இருக்கும் நாய்க்குப் போடுவாள்.
...ஏன் பாட்டி உனக்கு நாய் வளர்க்க பிடிக்குமா?..
...பிடிக்குமே! நாங்க சின்ன வயசில வளர்த்திருக்கோம்...
...நீ லக்கி. நான் வேலைக்கு போறச்சே நீயும் தாத்தாவும் என்னோட வந்துடுங்கோ.நாம நாய் வளர்க்கலாம்..
...அதுக்கென்ன.ஜோரா வளர்க்கலாம்...
இதைக் கேட்டு அவளுக்கு ஒரே சந்தோஷம்.எப்ப படிப்பு முடிஞ்சு veterinary டாக்டர் ஆகலாம்னு நாளை எண்ணஆரம்பித்து விட்டாள். பெரிய மனுஷி மாதிரி பேசுபவள் சட்டென்று சின்னக் குழந்தையாகி விடுவாள்!
அவள் summer vacationக்கு கொடுத்த விளக்கம்..
S..Something special
U..Unlimited Play
M..Meet near and dear
M. Enjoying with grandparents
E..Eat Ice-creams
R..Relax and no rules
V..Visit new places
A..Achieve my goals
C..creative ideas
A..Always activities
T..Time with family
I..Idol
O.. Opportunities to learn new
N..Nice break from study
என் பேத்திகளுக்கு உங்கள் ஆசிகளையும் வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment