Monday 10 February 2020

என் இனிய தோழி!

கடந்த பத்து வருடங்களாக ஒரு சமையல் தளத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு தனாவுடனானது. அதைத் தொடர்ந்து முகநூலிலும் எங்கள் நட்பு தொடர்ந்தது.

அவளுக்கு என் மகள் வயது என்பதால் என்னை அம்மா என்றுதான் அழைப்பாள். அவ்வப்போது வாட்ஸப்பிலும், ஃபோனிலும் பேசிக் கொள்வோம். ஒருமுறை நாமக்கல்லுக்கு வந்தபோது திருச்சிக்கு வருவதாகவும் நாம் சந்திக்கலாமா என்றும் அவள் கேட்டபோது நான் வெளியூர் சென்றிருந்தேன்.

அவள் இருப்பது  ஹைதரா
பாதில். என் மகள்  ஹைதரா
பாதில் இருப்பதால் இங்கு வந்துவிட்டு அவளிடம் நான் பேசினேன். உடனேயே சந்தோஷத்தில்..நான் உங்களைப் பார்க்க வருகிறேன் அம்மா...என்று சொல்லிவிட்டு பை நிறைய பழங்களுடன் வெள்ளி
யன்று வீட்டுக்கு வந்தாள்.

அவளை பார்த்தது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
கிளம்பியபோது..
உங்களுக்கும் அப்பாவுக்கும் நமஸ்காரம் பண்றேன். ஆசிர்வாதம் பண்ணுங்க..என்று எங்கள் ஆசிர்வாதத்துடன், தை வெள்ளி என்பதால் நான் கொடுத்த தாம்பூலமும் பெற்றுச் சென்றாள்.

ஒருவருக்கொருவர் முகம் பாராமல் ஏற்பட்ட நட்பு, நேரில் பார்க்கும்போது மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது!


No comments:

Post a Comment