Sunday 7 April 2019

தமிழ் அமுது..தமிழ் அழகு. தமிழ் இனிது..

அன்னையவள் ஆசையுடன் அள்ளி அணைப்பாள்!
தந்தையோ பாசத்துடன் தாங்கிப் பிடிப்பார்!
தமக்கையோ கண்ணீரைத் துடைப்பாள்!
தமையனோ தயையுடன் அள்ளிக் கொள்வான்!
ஆசிரியர் அறியாமை நீக்கி ஞானத்தைத் தருவார்!
நண்பரோ துவண்டபோது தோள் தருவார்!
மனைவி துன்பத்திலும் துணை வருவாள்!
மழலையின் சிரிப்பு சுவை தரும் இனிப்பு!
கொஞ்சும் தமிழே எதையும் விஞ்சும் நம்மொழி!
தமிழே நீ என்றும் இளமையாக வாழ்க!வளர்க!!


No comments:

Post a Comment