Sunday 26 October 2014

எனது நேயர் கடிதம்....




பதிவர் திரு வை.கோபாலகிருஷ்ணன்  அவர்களின் தளத்தில் வெளியான எனது நேயர் கடிதமும்  அவரது பதிலும்...

அவற்றைப் படிக்க தள முகவரி...

http://gopu1949.blogspot.in/2014/10/7.html



 



மனம் திறந்து பேசுகிறார் ! 

போட்டியின் பொதுவான சிறப்பு அம்சங்கள் :


என்ன சொல்ல? எப்படிச் சொல்ல? எதைச் சொல்ல? சுவையான, புதுமையான, சுவாரசியமான போட்டி இது. 

இதுவரை கதைகளை மட்டுமே படித்ததுண்டு: படித்த மறுகணம் அதைப் பற்றி மறந்ததும் உண்டு. என்னைப் போன்றே கதை படிக்கும் ஆர்வமுள்ளவர்களுடன் பேசும்போது அந்தக் கதையைப் பற்றி 'கதாநாயகி இப்படி செய்திருந்தால் நன்றாக  இருந்திருக்கும், முடிவு இப்படி இருந்திருக்கலாம்' என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆனால் ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை ஆதியோடு அந்தமாக அலசி ஆராய்ந்து அதிலுள்ள கதாபாத்திரங்களைப் பற்றியும், அவர்களின் நடைமுறை பற்றியும் விஸ்தாரமாக யோசித்து எழுதி, அதற்கு பரிசும் பெற்ற அனுபவம் இருக்கே...அது ரொம்ப புதுசு. 

என்னைப் போன்ற கத்துக் குட்டிகளான  புதிய பதிவர்களுக்கும் ஆர்வத்தை உண்டாக்கி தன்  தளத்தின் பக்கம் இழுக்கும் திறமை பதிவரின் மிகச் சிறப்பான அம்சம்தானே! அவரது கதைகள் அனைவராலும் படிக்கப் படுவதோடு, அதற்கு விமரிசனம் எழுதுபவருக்கும் ஒரு வித்யாசமான எழுத்து அனுபவம் ஏற்படுகிறது.


இதில் நம் கோபு சாரின்  ஆர்வம் மற்றும் ஈடுபாடுகள் 

இதில் நீங்கள் காட்டும் ஆர்வம் என்னை பிரமிக்க வைக்கிறது. பணிஓய்வு பெற்ற பின்பு வாய்க்கு ருசியாக சாப்பிட்டோமா, நன்றாக தூங்கி ரெஸ்ட் எடுத்தோமா, தொலைக்காட்சி மெகாசீரியல்களைப் பார்த்துக்கொண்டு ஜாலியாக என்ஜாய் பண்ணினோமா என்றில்லாமல் இப்படி ஒரு பெரிய பத்து மாத ப்ராஜெக்ட்டை எடுத்துக் கொண்டு அதில் எந்தத் தொய்வும், தவறும் இல்லாமல் நடத்தும் உங்கள் திறமையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை...இல்லவே இல்லை! 

உங்கள் உடல்நிலையையும் பொருட்படுத்தாது, கண் துஞ்சாது, பசி நோக்காது கடமையே கண்ணாக உழைக்கும் உங்களுக்கு ஒரு சல்யூட்! உங்கள் கதைகள் பலராலும் படிக்கப்படும், உங்கள் தளத்திற்கு வருகை புரிவோரின் எண்ணிக்கை உயரும் என்பதெல்லாம் விட இதற்காக திட்டமிட்டு, சிறப்பான ஒரு நடுவரைத் தேர்ந்தெடுத்து, அதையும் இரகசியமாக வைத்து, விமரிசனம் எழுதுவோருக்கு பரிசு கொடுப்பதுடன், நடுவரைக் கண்டு பிடிப்பவருக்கும் பரிசு...நீதிபதி தேர்ந்தெடுத்த கதைகளை  சரியாக எழுதியவர்களுக்கு பரிசு....இது போதாதென்று ஒரு பெரிய விழா ....ஏன் கோபு சார்,  இதற்கென்று ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து விட்டீர்களோ? 

ஆமாம்...நீங்கள் தூங்குவது உண்டா? இல்லையா? இத்தனை வேலைகளையும் எந்தத் தவறும் நேராமல் தனி ஒருவராக செய்து முடிக்கும் திறன் கொண்ட நீங்கள் ஒரு மாமனிதர் என்பதில் சந்தேகமே இல்லை.


போட்டியின் பின்னணியில் உள்ள அடிப்படை நோக்கங்கள்..

தங்கள் கதைகள் பெரும்பாலானவர்களால் படிக்கப் பட வேண்டும் என்பது தங்கள் நோக்கமாக இருக்கலாம். ஒரு கதையைப் புத்தகத்தில் படித்தால் அடுத்த நிமிடம் மறந்து விடுவோம். இந்த விமரிசனப் போட்டியால் அந்தக் கதை பலராலும், பலமுறை படிக்கப்பட்டு ஒவ்வொருவரின் எண்ணத்திற்கும், அணுகுமுறைக்கும் தக்கவாறு விமரிசிக்கப் படுகிறது. (முதிர்ந்த பார்வையில் ஒரு விமரிசகருக்கு அந்த முதியோர் செய்தது சரி என்று தோன்ற, அடுத்தவருக்கு அது சரியில்லை எனத் தோன்றுகிறதே.)

உங்கள் கதைகள் பிறரால் படிக்கப்பட்டு, வித்யாசமாக விமரிசிக்கப் படுவதை தாங்கள் படித்து, அனுபவித்து ரசிக்க ஒரு நல்ல வாய்ப்பு.

பதிவுலகத்தையே உங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த புதுமையான, மிகச் சிறப்பான போட்டி இது. பல விமரிசனதாரர்களை உருவாக்கிய தங்களை பதிவுலக பிரம்மா எனலாம்!

அனைவரையும் உற்சாகப் படுத்தி எழுதத் தூண்டும் தங்களின் ஊக்குவிப்பை பாராட்ட வார்த்தைகளைத் தேடுகிறேன். 


இதில் என்னைக் கவர்ந்த அம்சங்கள் 

உங்களின் கதைகள் பெரும்பாலும் மனித மனத்தின் பிரதிபலிப்புகளாக, மூட நம்பிக்கைகளை களைந்து எப்படி மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற சிறந்த கருத்துக்களை எடுத்துச் சொல்வதாக இருப்பதை அறியமுடிகிறது. ஒரு வாலிப வயது இளைஞன், திருமணத்திற்கு காத்திருக்கும் இளம்பெண், முதியவர், அலுவலக பணியாளர், சகுனம் பார்க்கும் பாட்டி....இப்படி ஒவ்வொருவரின் உள்ளத்திற்குள்ளும் சென்று வாழ்ந்து பார்த்து எழுதுவீர்களோ என்று நான் பிரமிப்பதுண்டு. 

ஒரு சின்னப் புள்ளியான கருத்து....அதை வட்ட வடிவமாக கோணலில்லாத, பிசிறில்லாத அழகிய கோலமாக்கி படிப்பவரை மயங்க வைக்கும் செப்பிடு வித்தை கடவுள் தங்களுக்கு கொடுத்த வரம் போலும்! 

பல கதைகள் இன்னும்  மனதில் தங்கியிருக்கிறது. அத்துடன் அவற்றிற்கான ஆடும், பாடும், சிரிக்கும் படங்கள்! பல சமயங்களில் நான் கதை படிப்பதை நிறுத்திவிட்டு, தங்களின் படக் காட்சிகளை ரசிப்பதுண்டு! 

புத்தகங்களில் கதைகளைப் படிக்கும்போது அதில் வரும் ஏதோ ஒரு சம்பவத்திற்கான படம் மட்டுமே இடம் பெற்றிருக்கும். ஆனால் தங்கள் கதைகளைப் 'படம் பார்த்தும் கதை சொல்'லலாம்! உயிரோட்டமான படங்களைப் போட்டு, கதைக்கே ஒரு உணர்வும், உயிரும் கொடுத்து விடுகிறீர்கள்! அவை பேசத்தான் இல்லை!

ஜனவரி மாதம் எதேச்சையாக தங்கள் தளத்தைப் பார்த்தபோதுதான் இந்தப் போட்டி பற்றிப் பார்த்தேன். 

நீங்கள் யார் என்று பார்த்த போது, 'அட...நம்ம ஊரு' என்று தெரிந்தது.

'சரி..விமரிசனம் எழுதிதான் பார்ப்போமே' என்ற ஆசை. (பரிசு வேற உண்டே!) இரண்டு, மூன்று கதைகளுக்கு பிறகு பரிசு அறிவிக்கப்பட 'ஓ' என்று குதூகலித்தது மனசு! 

அதன்பின் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை காலை கதையைப் படித்த பிறகுதான் வேலையே ஓடும்,  மனசுக்குள் கதைக்கு எப்படி விமரிசனம் எழுதலாம் என்ற எண்ணத்துடன்! 

என் ஐ-பேடில் கதையை ஒப்பன் செய்து கொண்டு, என் லேப்--டாப்பில் விமரிசனம் எழுதுவேன்! என்  மகனும், மருமகளும் கூட என்னை கேலி செய்வார்கள் 'டெக் மம்மி' என்று!
என்ன செய்வது...இந்த வருடம் முழுதும் எனக்கு தொடர் பயணங்கள் இருந்ததால் எல்லா கதைகளுக்கும் விமரிசனம் எழுத முடியவில்லை. நீங்கள் கொடுத்த ஊக்கமும், உற்சாகமும்தான் என்னை எல்லாவற்றையும் தூரத் தள்ளிவிட்டு எழுத வைத்தது.


நடுவர் அவர்களின் செயல்பாடுகள் 

நடுவர் அவர்களின் தீர்ப்பு மிக சரியாக இருந்தது என்பதே என் கணிப்பு. பரிசு பெற்ற விமரிசனங்களைப் படித்தபோது அது நன்றாகவே தெரிந்தது. மேலும் அவ்வப்போது அவர் வழங்கிய அறிவுரைகளும், சிறப்பான  விமரிசனம் எழுத உதவியது என்பதையும் மறுக்க முடியாது. நடுவர் விமரிசனம் எழுதுபவர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்த்திருக்கிறார் என்பது அவர்  'உண்மை சற்றே வெண்மை' கதைக்கு எழுதிய பின்னூட்டத்திலிருந்து புரிகிறது. இதோ அவற்றில் சில கீழே காட்டியுள்ளேன்:

-=-=-=-=-

//வழக்கம் போல 'எங்கோ படித்தது' விமரிசனக் குறிப்புகள் அற்புதம். இந்தப் பகுதிக்கு அந்த குறிப்புகள் ஓர் இலக்கிய அந்தஸ்த்தை கொடுப்பதும் தெரிகிறது. இன்னொன்றும் தெரிகிறது. பரிசு பெறும் விமரிசனக் கட்டுரையாளர்கள் இந்த குறிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மாதிரியும் தெரிகிறது.// 

வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல எப்படி விமரிசனம் எழுத வேண்டும் என்பதைக் குறிப்பாகக் கூறிய இவர்தான் நடுவர் என்று அப்பவே தெரியாமல் போச்சே!


//நடுவரின் கண்ணோட்டம் ஒரு சிக்கலான விஷயம். இந்த போட்டிக்கு 'ஒன் மேன் ஜட்ஜ்' மாதிரி ஒரே ஒருத்தர் நடுவராக இருப்பதால் எளிதில் அவர் கண்ணோட்டத்தையும் கொஞ்சம் சிரமப்பட்டால் கண்டு கொள்ளலாம் போலிருக்கு. அதனாலேயே அவரும் தன் அளவுகோல்களை அடிக்கடி மாற்றிக் கொள்வதாகவும் தெரிகிறது; இது வரை அவர் தேர்ந்தெடுத்த விமரிசனக் கட்டுரைகளைப் படித்துப் பார்த்ததில் தெரிந்தது.//
ஆஹா!நடுவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் எவ்வளவு அழகாக விமரிசனங்களையே விமரிசித்து விட்டார்!


//இனி வர வர பரிசு பெற்றவர்களே மீண்டும் மீண்டும் பரிசு பெற்றாலும் அவர்களின் எழுத்துக்களிலேயே மெருகு கூடியிருப்பதும் தெரிகிறது. அவர்களும் ஒரே மாதிரி எழுதாமல் மாற்றி மாற்றி எழுதினால் விதவிதமான சோதனைகளை மேற்கொண்டால் இன்னும் சிறப்பாகி விடும்.//

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற சந்தோஷம்! அத்துடன் இன்னும் வித்யாசமாக எழுத வேண்டும் என்ற பொறுப்புணர்வு.

அவரது துலாக்கோல் பாரபட்சமாக செயல்படாது என்பது உறுதியாகத் தெரிகிறது.
பரிசுத் தொகையில் கிடைக்கும் திருப்தி  பற்றி !
கரும்பு தின்னக் கூலி கொடுத்தால் கசக்குமா என்ன? அருமையான கதைகளையும் படிக்க வைத்து, என் மூளைக்கு கொஞ்சம் வேலையைக் கொடுத்து நான் எழுதிய விமரிசனங்களுக்கு பரிசுப் பணமும் கொடுத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்? நான் புத்தகங்களில் எழுதும் கட்டுரைகளுக்கு கிடைக்கும் பரிசுகளைவிட இந்தப் பரிசு எனக்கு மிக  அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
அது மட்டுமா? போனஸ் பரிசு... தொடர் வெற்றிக்கு ஹேட்-ட்ரிக் பரிசு... சிறப்பு விழாவில் பரிசு... கொடுத்துக் கொண்டே இருப்பதில் உங்களுக்கு ஆசை அதிகமோ! இனி உங்களைப் 'பதிவுலகக் கர்ணன்' என்றும் சொல்லலாம்! 
பரிசுத்  தொகையைக் கணக்கிட்டு அவ்வப்போது அனுப்பி வைக்கும் முறைபற்றி:


நூறு சதவிகிதம் திருப்தி சார். ஒவ்வொருவருக்கும் தவறில்லாமல் கணக்கு பார்த்து, அவரவருக்கான தொகையை உடனுக்குடன் அனுப்பும் தங்கள் பொறுப்புணர்வு என்னை வியக்க வைக்கிறது. மொத்தத்தில் உங்களைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இந்தக் கதைகள், விமரிசனங்கள், கணக்குகள் பற்றி பிட்டுப் பிட்டு வைப்பீர்கள் என்று தோன்றுகிறது. தாங்கள் தரும் பரிசுப் பணத்தை பெறும்போது அக்கால மன்னர்கள் புலவர்களுக்குப் பொற்கிழி தந்தது போன்ற மனமகிழ்ச்சியை அனுபவிக்கிறது என் மனம்!



எனக்கு இதில் இதுவரை ஏற்பட்டுள்ள ஆர்வம் + அனுபவங்கள் :
ஜனவரி மாதம் நான் ஜெர்மனிக்கு என் மகன் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் பல தமிழ் இதழ்களில் பிரசுரமான என் கதை, கட்டுரைகளை என் ப்ளாகில் தொகுத்துக் கொண்டிருந்த போது மற்ற தளங்களை படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் தங்களின் தளம் பற்றி அறிந்தேன். 


அதுவரை தங்களின் எந்தக் கதையையும் நீங்கள் போட்டிக்கு போடும் முன்பு நான் படித்ததில்லை. அதன் பிறகே என் எழுத்தார்வம் தங்கள் கதைகளுக்கு விமரிசனம் எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. 



முதலில் எழுதிய கதைகள் பரிசுக்கு தேர்வாகாமல் போக, நான் எழுதிய முறையைச் சற்று  மாற்றி எழுத ஆரம்பித்தேன். இம்முறையும் பரிசு கிடைக்காவிட்டால் இனி இதில் பங்கு பெற வேண்டாம் என முடிவு எடுத்தபோதுதான், ஏழாவது கதையான  'ஆப்பிள் கன்னங்களும்.... அபூர்வ எண்ணங்களும்' என்ற கதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்ததை அறிந்து  நான் வானத்தில் பறந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். 





அதன்பின் தொடர்ந்து சில வெற்றிகள்...அடிக்கடி சென்ற பயணங்களால் என்னால் தொடர்ச்சியாக எழுத முடியாத நிலை. பல நேரங்களில் என் விமரிசனம் வியாழன் இரவு 7.30 மணிக்குதான் தங்களை வந்தடையும் என்பது தாங்கள் அறிந்ததே! இருந்தும் அவ்வப்போது கிடைத்த நேரத்தில் நான் எழுதியவற்றிற்கு எனக்குக் கிடைத்த சில வெற்றிகள் எனக்கு ஜாக்பாட் என்றுதான் சொல்வேன். விமரிசனம் தேர்வாகாதபோது இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட அடுத்த கதையைப் பற்றி மேலும் எப்படி வித்யாசமாக எழுதலாம் என்று சிந்திப்பேன். 



வெற்றி பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளில்லை. இதில் அதிருப்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. எப்படியோ இந்த பதிவுலகில் எதுவும் தெரியாத புதுமுகமான எனக்கும் இந்த போட்டியில் சில பரிசுகள் கிடைத்ததை மிகப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் எண்ணுகிறேன். 


ஒரு புகழ் பெற்ற, எழுத்தாளராகிய, பதிவுலகப் பிதாமகராகிய தாங்கள் நடத்திய போட்டியில் கலந்து  கொண்டதே நான் செய்த பாக்கியம். 



அடிக்கடி என்னை எழுதும்படி ஊக்கம் கொடுத்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.





 பிரபல பதிவர் ஒருவரிடம் பேட்டி எடுத்து
தாங்கள் முதன்முதலாக வெளியிட்ட பதிவினில்

 நடுவர் திரு. ஜீவி அவர்கள், 
பிறரிடம் பேட்டிகாணும்போது 
மாற்றி மாற்றிக் கேள்வி கேட்கச்சொல்லி
சில கேள்விகளை உதாரணமாகவும் கொடுத்திருந்தார்கள். 
http://gopu1949.blogspot.in/2014/10/blog-post.html
அந்தக் கேள்விகளுக்கும் நான் இங்கு பதில் தர ஆசைப்படுகிறேன்.

//1.ஒவ்வொரு பரிசுகளையும் வகைப்படுத்திய நியாயம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?.. உதாரணமாக உங்களுக்கு மூன்றாம் பரிசு என்றால் முதல், இரண்டு பரிசு பெற்ற கட்டுரைகள் உங்களதை விட சிறப்பாக இருப்பதாக நீங்களே உணர்ந்தீர்களா? இதே மாதிரி உங்களுக்கு முதல் பரிசு கிடைத்தது என்றால் இரண்டாவது மூன்றாவது பரிசு பெற்றவர்களின் கட்டுரைகள் உங்களதை விட சிறப்பாக இருந்திருப்பதாக எப்போதாவது உணர்திருக்கிறீர்களா?//

பரிசுகளை மிகச் சரியாக வகைப் படுத்தி கொடுத்ததை மற்ற கட்டுரைகளைப் படிக்கும்போதே உணர முடிந்தது. பல முறை நான் இரண்டாம், மூன்றாம் பரிசு பெற்றபோது, 'நமக்கு இப்படியெல்லாம் எழுதத் தெரியவில்லையே' என்று என்னை நானே நொந்து கொண்டதுண்டு. அதே போன்று எனக்கு முதல் பரிசு கிடைத்தபோது, மற்ற கட்டுரைகள் இதை விட நன்றாக இருக்கும்போது 'இது எப்படி எனக்கு முதல் பரிசு ' என்று வியந்ததும் உண்டு.



மற்றதில் இல்லாத ஒரு  தனித்தன்மை இதில் இருக்கலாம்...அதனால்தான் இதற்கு முதல் பரிசு கொடுத்துள்ளார் நடுவர் என்று சந்தோஷப் பட்டுக் கொள்வேன். அவருக்கு மனதுக்குள் ஒரு நன்றியும் சொல்லிவிடுவேன்!


//2. பொதுவாக கோபுவின்  கதைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏதாவது குறைகள் தெரிகிறதா? எனக்காகச் சொல்ல வேண்டாம். கறாராகச் சொல்லுங்கள்.



கோபு சாரின் கதைகள் அனைத்தும் அருமை. அதில் குறைகள்....ம்ஹூம்...எனக்கு எதுவும் தெரியவில்லை. சில கதைகளின் நகைச்சுவையும், ஆண், பெண் கதாபாத்திரங்களின் யதார்த்த உணர்வுகளும், அன்றாடம் நாம் அனைவரும் பார்க்கும் ஒரு சாதாரண விஷயத்தை தாங்கள் ஒரு வித்யாசமான கண்ணோட்டத்தில் எழுதுவதும் எனக்கு ஆச்சரியம் தரும் விஷயங்கள்.
அதற்கான இணைப்புப் படங்களோ காணக் கண் கொள்ளாக் காட்சி!


கறாராகச்  சொல்கிறேன்...உங்கள் கதைகள் பல நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்கின்றன. படிப்பவரின் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன. பலரின் மன எண்ணங்களை புரிய வைக்கின்றன. குறையொன்றுமில்லாத சுவையான கதைகள் உங்களுடையவை.


//3. உங்கள் விமர்சனக்கட்டுரை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது உங்களுக்கே ஆச்சரியமாக இருந்ததா?.. இல்லை, நிச்சயம் தேர்வாகும் என்று நம்பிக்கை இருந்ததா?//


இரண்டுமே சில நேரங்களில் ஏற்பட்டதுண்டு. முதல் முறை பரிசுக்குத் தேர்வானபோது ஏற்பட்ட ஆச்சரியம், அடுத்த முறை எதிர்பார்ப்பாகி, பரிசு கிடைக்கும் என்று உறுதியாக நம்பியபோது இல்லை என்று தெரிந்து ஏமாற்றம் அடைந்ததும் உண்டு. சிலமுறை நேரப் பற்றாக்குறை, சிந்திக்கும் திறன் குறைவால் ஏனோ தானோவென்றும்  எழுதி அனுப்பியதுண்டு, பரிசு நமக்கில்லை என்ற எண்ணத்தோடு!

//4. குறிப்பிட்ட சிலரின் விமர்சனங்களே தொடர்ந்து பரிசுக்குத் தேர்வானதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவர்கள் அறிவு கூர்மையுள்ளவர்கள், புத்திசாலிகள், எதையும் புதிதாக சிந்திப்பவர்கள், வித்யாசமாக எழுதுபவர்கள்....நாம் இன்னும் தேற வேண்டும் என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொள்வேன். முயற்சியும் செய்வேன்!
//5. பதிவர்களின் கதைகள் நிறைய அவர்கள் பதிவுகளில் படித்திருப்பீர்கள். வித்தியாசமான நல்ல கதைகளை எழுதும் பதிவர்கள் பலர் பதிவுலகில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. பத்திரிகைகளில் வெளியாகும் கதைகளுக்கும், பதிவுகளில் மட்டும் வெளியாகும் கதைகளுக்கும் சிறப்பு அடிப்படையில் ஏதாவது வித்தியாசம் உங்களுக்குத் தெரிகிறதா?//
பத்திரிகைக் கதைகளுக்கும், பதிவுலகக்
கதைகளுக்கும் நிச்சயமாக வித்யாசம் உண்டு. 


இதைப் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், கதைகளை எழுதிக் கொண்டிருக்கும் நான் அறிவேன். பத்திரிகைகளில் நாம் எழுதும் கதைகள் எடிட்  செய்யப்பட்டு சுருக்கப்படும். சமயத்தில் நாம் எதை முக்கியமான பாயிண்ட் என்று எண்ணி எழுதினோமோ அது அந்தக் கதையில் இருக்கவே இருக்காது. ஏனெனில்  சுருக்கவும், மாற்றம் செய்யவும் அவர்களுக்கு உரிமை உண்டு.




ஆனால் பதிவுலகிலோ நம் எண்ணங்களை கதையாகவோ, கவிதையாகவோ, அனுபவமாகவோ விலாவாரியாக எழுதலாம். இது நம்ம ராஜ்யமாச்சே! 



யாராலும் சுருக்கவோ, குறைக்கவோ முடியாதே? படிப்பவர்களும் அந்தக் கதையின் முழுப் பரிமாணத்தையும் ரசித்துப் படித்து, அத்துடன் படித்தவுடனேயே நம்மைப் பாராட்டவோ, தவறைச் சுட்டிக் காட்டவோ பின்னூட்டம் தர முடியுமே? எவரும் நம்மை பாராட்டும்போது மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியுமா? 




எழுதியவுடன் நம் எழுத்துக்களுக்குக் கிடைக்கும் மதிப்பை நாம் பதிவுலகில் மட்டுமே அடைய முடியும். பத்திரிகைகளில் இதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் என்னைப் போன்ற பின்னூட்டமே கிடைக்காத பதிவர்களும் இருக்கிறார்களே...என்ன செய்ய?!

ராதாபாலு


என் பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய 
திருமதி. ராதாபாலு அவர்களே !
தங்களுக்கு முதலில் அடியேனின் வணக்கங்கள்



தாங்கள் இங்கு மனம் திறந்து 

ஏராளமான விஷயங்களைத் தாராளமாகப் 

பேசியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், 

உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. 





இந்த ஆண்டு 09.02.2014 அன்று தாங்கள் என் சிறுகதையான VGK-04 
  ‘காதல் வங்கி’க்கு முதன்முதலாக விமர்சனம் எழுதியனுப்பி, எனக்குத்
 
தாங்களும் ஒரு பதிவர் என முதன் முதலாக அறிமுகம் 
 
செய்துகொண்டீர்கள். அதன்பிறகு VGK-06 ’உடம்பெல்லாம் 


உப்புச்சீடை’ கதைக்கான விமர்சனப்போட்டியிலும் கலந்து கொண்டீர்கள். 






இருப்பினும் VGK-07 ’ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்’ என்ற



கதைக்கான தங்கள் விமர்சனம்தான் முதன் முதலாக நம் நடுவர் அவர்களால் 



பரிசுக்குத் தேர்வாகியுள்ளது .... அன்று, எனக்கும் இந்தச்செய்தி மட்டில்லா 



மகிழ்ச்சியினை அளித்தது.





அதன்பின் நான்கு கதைகளுக்கு முதல் பரிசினையும், மூன்று கதைகளுக்கு இரண்டாம்
 பரிசினையும், மேலும் மூன்று கதைகளுக்கு மூன்றாம் பரிசினையும் தாங்களே 
 


வென்றபோது தங்களைவிட அதிக மகிழ்ச்சியினை நானும் அடைந்தேன். தாங்களும்




திருச்சிக்காரரே என்பதால் இருக்குமோ என்னவோ ! :)




என்னவோ சிலரை அவர்களின் எழுத்திலோ அல்லது படத்திலோ பார்த்தாலே 
 
ஒருவித மகிழ்ச்சி தொற்றிக்கொண்டு விடுகிறது. வேறுசிலரை நேரில் 
 
பார்த்தால் கூட ஏனோ மனதுக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது :)








பத்திரிக்கை எழுத்தாளரான தாங்கள் இந்தப்போட்டியில் அடிக்கடி வெற்றிபெற்றதில்



என்னைப்பொறுத்தவரை வியப்பேதும் இல்லை. தங்களின் விமர்சனங்கள் என்னை 



வந்தடைந்ததுமே நான் முதல் வேலையாகப் படித்துவிடுவேன். உங்களைப்போன்ற



ஒருசிலரின் எழுத்துக்களை மிகவும் ஆவலுடன் ஒருமுறைக்குப் பலமுறையாகப் 



படித்து மகிழ்வது உண்டு. அவ்வாறான சிலவற்றில் நான் என் ரிகார்டுகளில் ஒரு



புள்ளி வைத்துக்கொள்வேன். அந்தப்புள்ளிக்கு அர்த்தம்: ’இந்த விமர்சனம் உயர்திரு 



நடுவர் அவர்களால் நிச்சயமாகப் பரிசுக்குத்தேர்வாகும்’ என்பதே. பலமுறை நான் 



வைத்த புள்ளிகள் என்னை ஏமாற்றாமல், கோலங்களாக மாறி, பரிசுக்குத் 



தேர்வாகியுள்ளன. என் கணிப்பு சரியாக அமையும்போது, அதில் எனக்கொரு தனி 



மகிழ்ச்சி ஏற்படுவதும் உண்டு.








குறிப்பாக தங்களின் பல விமர்சனங்களில் எனக்கு ஒரு தனி ருசி ஏற்பட்டு நான் 

மகிழ்ந்ததும் உண்டு. உதாரணமாக VGK-08 அமுதைப்பொழியும் நிலவே, VGK-12
 உண்மை 

சற்றே வெண்மை, VGK-10 மறக்க மனம் கூடுதில்லையே, VGK-07 ஆப்பிள்
 
 கன்னங்களும் 

அபூர்வ எண்ணங்களும், VGK-28 வாய்விட்டுச் சிரித்தால் போன்றவைகளைச்
 சொல்லுவேன். இதிலெல்லாம், தங்களின் எழுத்துக்கள் மூலம், என்னைப்போலவே 

தாங்களும் நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர் என்பதை என்னால் சிலவரிகளில்

அறிந்துகொண்டு எனக்குள் மகிழ முடிந்தது. :)








30.09.2014 செவ்வாய்க்கிழமையன்று மாலை தங்களையும் தங்கள் கணவரையும்,



நானும் என் மனைவியும் தங்கள் இல்லத்திலேயே நேரில் சந்தித்து மனம் விட்டு 



பேசிக்கொண்டிருந்தது மிக மிக மிக மிக மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது.



தங்களின் வரவேற்பும் விருந்தளிப்பும் மனதுக்கு நெகிழ்ச்சியாக இருந்தன.







சுடச்சுடக் கொடுத்த போளி வடைகளில் சுவையுடன் அன்பும் கலந்திருந்தன.







COFFEE ..... A1 ..... ’பேஷ் பேஷ் .... ரொம்ப நன்னாயிருக்கே’ன்னு அங்கேயே 



அப்போதே சொல்லிவிட்டேன்.



இவை எல்லாவற்றையும் விட நான் விளையாட்டுக்காகச் சொன்னதை சீரியஸ் ஆக 


எடுத்துக்கொண்டு ’காரசாரமாக ..... குழசலாக ..... நன்கு வேக வைத்த நிலகடலை 
 


சுண்டலை ..... தேங்காய் பச்சமிளகாயெல்லாம் அரைச்சு விட்டுக் கலந்ததை ....




எனக்காகவே ஸ்பெஷலாக ஒரு டப்பாவில் போட்டு பார்ஸலாகத் தந்தீர்களே ..... 
 
என்னே ஒரு ஆத்மார்த்தமான பிரியம் ! ..... 





மகிழ்ந்தேன் ... நெகிழ்ந்தேன் ... தின்றேன் ... தீர்த்தேன். 


{ இப்போ அந்த டப்பா காலி :) }





ஆனந்தம் .... ஆனந்தம் ..... ஆனந்தமே !  



சந்தோஷம். நன்றிகள். 



நீடூழி வாழ்க !!




திருச்சி பதிவரான தங்களின் 
நட்பு கிடைத்ததில்
எனக்கு மட்டில்லா மகிழ்ச்சிகள்.

  



நான் தங்களிடம் சொல்லியிருந்தபடி மிகச்சரியாக சாயங்காலம் 6 மணிக்கு தங்கள் இல்லத்தின் வாசலை அடைந்ததும், தம்பதியினராகிய எங்களை தம்பதியினராகிய

 நீங்கள் இருவரும் வரவேற்று அமரச்செய்தீர்கள். உடனே சற்று நேரத்தில் தங்கள் கணவர் சாயங்கால சந்தியாவந்தனம் செய்துவிட்டு, உங்களுடன் பேச வருகிறேன்

 என்று சொல்லி பெரிய கெண்டி சஹிதம் பூஜை அறை வாசலில் அமர்ந்ததும் என்னை மிகவும் ஆச்சர்யப்பட வைத்தது. 
 [ஆஹா, நம்மைப்போலவே மற்றொருவர் ..
 கலியுகத்தில் ... இதோ இங்கே என நினைத்து நான் எனக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டேன்] 



ஜாதகம் மற்றும் ஜோஸ்யம் விஷயங்கள் தெரிந்தவரான தங்கள் கணவர், என் ஜன்ம நக்ஷத்திரத்தினைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, எனக்கு இப்போது கஜகேஸரி

 யோகம் நடக்கிறது எனச் சொன்னதும், சுடச்சுட கேஸரி பஜ்ஜி சாப்பிட்டதுபோல எனக்கு மேலும் மகிழ்ச்சியளித்தது.

அதேநேரம், ’நாம் நம் ஜாதகங்களுடன் இங்கு வந்திருக்கலாமோ’ என்று மனதில் நினைத்து ஏதோ சொல்லவந்த என்னவளிடம் ....  நீங்கள் உரிமையுடன் ஜாலியாக

 அடித்த ஜோக் ....  எங்கள் இருவரையுமே ஸ்தம்பிக்க வைத்தது. I like your Presence of mind, Memory power and Timely joke .... very much.



என் பதிவுகள் பலவற்றைப் படித்து விட்டு என்னைப்பற்றி எவ்வளவு துல்லியமாக எடை போட்டு வைத்துள்ளீர்கள் என நான் மட்டுமல்ல .... என் மனைவியும் மிகவும்

 ஆச்சர்யப்பட்டுப்போனோம். 


http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html  இந்த என் பதிவினைத் தாங்கள் படித்ததினாலேயே அதுபோல சொல்லியிருப்பீர்கள் என எனக்கு

 உடனடியாகப் புரிந்து விட்டது. :) என்னவள் அதைப்படிக்காததால் அவளுக்கு அது உடனடியாகப் புரிந்திருக்க வாய்ப்பு இல்லை. நீங்களாகவே என்னைப்பற்றி

 அகஸ்மாத்தாகவும், மிகச்சரியாகவும் சொல்வதாகத் தன் மனதுக்குள் நினைத்துக்கொண்டிருப்பாள்.
 
தங்களின் மிகச்சிறந்த நினைவாற்றலும், அதை மிகச்சரியான இடத்தில், மிகச்சரியாக எடுத்துச்சொல்லிடும் புத்திசாலித்தனமும், ஒருவித பாசமும் பிரியமும் கலந்து மிக

 ஸ்வாதீனமாக ... உரிமை எடுத்துக்கொண்டு ... என்னிடம் கலகலப்பாகப் பேசுவதும், தங்களிடம் உள்ள மிகச்சிறந்த ப்ளஸ் பாயிண்ட்ஸ்களாக நானும் நினைத்து

 மகிழ்கிறேன். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



காசியாத்திரைக்குச் செல்ல முடியாவிட்டாலும், காசியாத்திரைக்குக் கிளம்புபவர்களைப் பார்த்தாலே கங்காஸ்நானம் பண்ணிய பலன் கிடைக்கும்.  அந்தப்பலன் எங்கள்

 இருவருக்கும் கிடைக்கப்பெற்றோம். தங்களின் புனிதப்பயணம் இனிமையாக அமைய எங்கள் வாழ்த்துகள்.









நவராத்திரிக்காக, தாங்கள் என் மனைவிக்கு,
 

அன்புடன் அளித்த மங்கலப்பொருட்களில்

 இரண்டினை நான் எனக்காக

எடுத்துக்கொண்டு விட்டேன்.

1) என் இஷ்ட தெய்வமான விநாயகர் திருவுருவம்

அதுவும் ஓர் கலை நுணுக்கத்துடன் கூடிய தங்கக்கலர் முறத்தில் பின்னப்பட்டிருந்தது என்னை மிகவும் கவர்ந்தது.
 

பொக்கிஷமாக நினைத்து பாதுகாத்துக்கொண்டேன்.

மிக்க மகிழ்ச்சி!  மிக்க நன்றி!!  

(2) மங்கலப்பொருட்கள் அனைத்தையும்

வைத்துத் தந்தீர்களே ஓர் தங்கத்தாம்பாளத்தில் !



‘தங்கத்தட்டு .... அது .... எனக்கு மட்டும்’
எனச் சொல்லி நான் அதையும் ஒதுக்கிக்கொண்டேன்.


’வறுமை நிறம் சிவப்பு’

என்ற படத்தில் வரும் ஓர் பாடலில், 
 
நான் மிகவும் ரஸிக்கும் வரியான

‘தங்கத்தட்டு .... அது .... எனக்கு மட்டும்’ 

என நன்கு தெரிந்த என் மனைவி 

தனக்குள் புன்னகை புரிந்தாள். :)




பிரியமுள்ள கோபு