Saturday 13 May 2017

அன்புள்ள அம்மாவுக்கு ஆயிரம் வணக்கங்கள்!


14.5.2017 அன்று அன்னையர் தினத்திற்கும் , 15.5.2017 என் தாயின் நினைவு தினத்திற்குமான நினைவு அஞ்சலி!


அன்புள்ள அம்மாவுக்கு ஆயிரம் வணக்கங்கள்!

தொப்புள் கொடியோடு நம்
உறவுக் கொடியையும்
உருவாக்கிய என் தாயே!

உன் கருவறையில்
கனமாய் நான் இருந்தும்
சுமையாய் எண்ணாமல்
சுகமாய் அனுபவித்தவளே!

நான் வெளியுலகை
தரிசித்த போது
நீ ஆனந்தத்தின்
உச்சம் அடைந்தாய்!!

என் அழுகை சத்தம் உன்
காதுகளில் கேட்கும்முன்னே
அயராது எழுந்தோடி வந்து
அணைத்து என்னை உச்சி முகர்ந்து
அமுதான பாலூட்டிய உன்
அன்பை இனி எப்போது உணர்வேன்!

அன்பு எனும் உயிர் தந்து
உதிரம் எனும் பாலில்
தேன் எனும் பாசம் சேர்த்து
பிள்ளை என்ற உறவைக்
கொடுத்த அம்மா!

சின்ன நோய் வந்தாலும்
சில நொடி கூட கண் மூடாது
என்னைக் கைகளில் ஏந்தித்
தாலாட்டி சீராட்டி பாராட்டிய
உனக்கு நிகர் வேறு யார்?

உன் நகலாய் என்னை மாற்றி
என் நிழலாய் என்னுள் இருப்பவள்!
தோல்விகளில் தளராமல் தைரியம் தந்து
வெற்றிகளைப் பெற வழிகாட்டியவள்!
 எனக்கு ஊக்கமூட்டி வாழ்வில்
உயர வைத்த உத்தம தெய்வம்!

என் நல்ல தோழி நீ; உயர்ந்த உறவு நீ!
ஊக்கம் ஊட்டி யாவும் கற்பித்த ஆசிரியை நீ!
பலருடனும் பழகும் விதத்தை
பாங்காக எடுத்துக் கூறியவள் நீ!
எளிமையாய் வாழவும்
எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளவும்
இதமாகச் சொல்லிக் கொடுத்தவள் நீ!

அன்பு, அக்கறை,அரவணைப்பு,
பாசம், நேசம், தியாகம்
அனைத்தும் கொண்ட
என் தெய்வமே!
அன்புத் தாயே!
என்றும் என்னுடன் இருந்து
என்னைக் காப்பாயாக!!


Friday 12 May 2017

இந்த நாள் இனிய நாள்...3.5.2017

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே.👍

😀ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.👩💻 

😃ம‌ற்றவ‌ர்களை விட அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள்.💪

😀ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்.✌

😃என்ன செய்கிறீர்கள் என்பதை அறிந்து செய்யுங்கள்.🖖

😃செய்வதை விரும்பிச் செய்யுங்கள்.👌

😃செய்வதை நம்பிக்கையோடு செய்யுங்கள்.👍

இந்த நாள் இனிய நாள்...2.5.2017

யானையை எய்யச் சென்றவன் யானையைப் பிடித்து வெற்றியோடு திரும்புவதும் உண்டு.🐘

சிறுபறவையை வேட்டையாட எண்ணியவன், வெறுங்கையுடன் திரும்புவதும் உண்டு.🦅

அதனால் நமது இலக்குகள் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும்.💪

இலக்கில்லாத வாழ்க்கை முள்ளில்லாத கடிகாரத்தைப் போல அது யாருக்கும் பயன் தருவதில்லை.⏰

இந்த நாள் இனிய நாள்...1.5.2017



நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.🤘

கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.👤

என்னை சந்திப்பவர்கள் வெற்றியடையாமல் போவதில்லை 
இப்படிக்கு.....தோல்வி.👍