Wednesday 29 July 2020

நவகுஞ்சரம்


மகாபாரதத்தில் வரும் வித்தியாசமான உடலமைப்பைக் கொண்ட பறவை நவகுஞ்சரம்.
ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது.
சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால்,
யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கையுடன் கூடிய விலங்கு எப்படி இருக்கும்?
அதுதான் நவகுஞ்சரம்.
‘நவ’ என்றால் ஒன்பதைக் குறிக்கிறது. ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர்.
ஒரிய மொழிக் கவிஞரான சரளதாசர் எழுதிய மகாபாரதக் கதையில் நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுனன் மலை மீது தவம் செய்துகொண்டிருந் தார்.
அப்போது நவகுஞ்சர உருவெடுத்து கிருஷ்ணர், அர்ஜுனன் முன் தோன்றியதாக வருகிறது.
தவத்திலிருந்து கண் விழித்த அர்ஜூனன், முதலில் நவகுஞ்சரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து திகைத்தார்.
பின்னர் அதன் கையில் தாமரைப் பூவைப் பார்த்தார்.
வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகள் சேர்ந்த அதன் உடலமைப்பைப் பார்த்து, ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டார்.
அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன.
'மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை. உலகமோ எல்லையற்றது' என்பதை உணர்ந்தார் அர்ஜுனன்.
இதுவரை பார்த்திராத ஓர் உயிர் இந்த உலகில் இருக்கலாம் என்றும் நினைத்தார்.
தன்னைச் சோதிப்பதற்காக இந்த உருவத்தில் வந்திருப்பது கிருஷ்ணன்தான் என்று தெரிந்துகொண்டு, எடுத்த வில்லை கீழே போட்டுவிட்டு வணங்கினார்.
ஒடிஷாவில் விளையாடப்படும் கஞ்சிபா சீட்டுக்கட்டு விளையாட்டில் நவகுஞ்சரம் ராஜாவாகவும், அர்ஜுனன் மந்திரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிஷாவில் வரையப்படும் ஓவியங்களில் நவகுஞ்சரம் பல வகைகளில் வரையப்படுகிறது.
நவகுஞ்சரத்தின் உருவம் பூரி கோவிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
அதன் கையில் இருக்கும் நீலச் சக்கிரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.







Tuesday 30 June 2020

. மனித வாழ்காலத்தை பிரம்மசர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்று நான்கு நிலைகளாகப் பகுப்பது இந்த மரபு. இந்த நான்கு நிலையோரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

2. சாதி வித்தியாசமின்றி அனைத்து குலத்தவரும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

3. ஆதியில், உற்பத்தி ஏகாதசி (மார்கழி மாதத்தில்) முதலில் வந்ததால், எல்லா வருடமும், எல்லா மாதமும் தேய்பிறை ஏகாதசியே முதலில் வருவதில்லை. வளர்பிறை ஏகாதசியும் முன்பாக வரலாம்.

4. வளர்பிறை/தேய்பிறை ஏகாதசி விரதத்திற்கு இடையே ஏற்றத் தாழ்வு இருப்பதாக கருதக்கூடாது.

5. நெருங்கிய உறவினரின் பிறப்பு - இறப்பின் போதும், பெண்களின் மாதவிடாய்க் காலத்தும் பல்லோருடன், பழகிடாமல் ஒதுங்கி இருக்கும் காலங்களிலும் கூட ஏகாதசி விரதம் போன்ற நித்ய விரதங்களை மேற்கொள்ள வேண்டும்.

6. திங்கள்/ சனிப் பிரதோஷங்கள் சிறப்பு கொண்டிருப்பது போல, பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்களில் வரும் ஏகாதசிகள் அதி சிறப்பு கொண்டது.

7. வெவ்வேறு மாதங்களில், தினங்களில் வரும் ஏகாதசிகளுக்கும் தனித்தன்மைகள் உள்ளன.

8. ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன் கொண்டது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்கள் அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.

9. ஏகாதசி போன்ற விரதங்களின் போது, விரத உண்ணாமையின் முழுப் பயனை அடையவும், விரத நாளில் முழுவதும் உண்ணாதிருப்பது சிரமமாகத் தோன்றாமல் இருக்கவும், முதல் நாளான தசமியன்று ஒரு வேளை மட்டுமே உண்கிறோம். மேலும், வெகு நேரம் உணவின்றியிருந்ததற்குப் பின்பு, படிப்படியாகவே உணவு அளவைக் கூட்ட வேண்டும் என்பதற்காக துவாதசியிலும் ஒரு வேளை உணவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

10. ஏகாதசி தினத்தன்று உணவு அளவு குறைவாயிருந்தாலும் அது எளிதாக ஜீரணிக்கப்பட்டு, அதிக ஊட்டச்சத்தும் அளிக்க வேண்டும் என்பதற்காக, நெல்லிக்காய், அகத்திக்கீரை போன்றவற்றை உபயோகிக்கிறோம்.

11. ஒவ்வொரு ஏகாதசி விரதமும் குறிப்பிட்ட, தவறான செயல்பாடுகளால் விளைந்த அல்லல்களைத் தீர்ப்பதாகக் கூறப்படுகிறது.

12. ஒவ்வொரு ஏகாதசியின் பெருமையையும், வழிபாட்டு முறையையும், வெவ்வேறு தெய்வங்களோ, முனிவர்களோ வெவ்வேறு அன்பர்க்கு தெரிவித்ததாக கூறியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, கூறியவர் அல்லது கேட்டவரின் காலத்திலிருந்து தான் குறிப்பிட்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாக கருதக்கூடாது.

13. ஏகாதசி விரதத்தன்று, விரிவாக பூஜை செய்வது நல்லது என்றாலும், பலருக்கும் பசி சோர்வினால் பூஜை செய்வது இயல்வதில்லை.

14. வீட்டுச் சூழ்நிலைகளால் இறைச் சிந்தனை தடைப்படுமாயின் அன்று முழுவதும் ஆலயத்திலேயே தங்கி வழிபாடுகளை தரிசித்தல் மேலும் சிறப்பு. அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி அரங்கனையே நினைக்கச் செய்திட விஷ்ணு புராணம், பாகவதம், ராமாயணம் போன்ற இறைத் திருவிளையாடல் நூல்களையோ விஷ்ணு சகஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற துதிகளையோ தொடர்ந்து பாராயணம் செய்யலாம்.

15. ஏகாதசி உண்ணாமை விரதத்திற்குப் பிறகு துவாதசியில் உணவு ஏற்பதை பாரணை என்று கூறுவர். பல சமயங்களில், துவாதசி திதி நாள் முழுவதும் இருப்பதில்லை. இதனால், துவாதசியில் ஏற்கப்பட வேண்டிய ஒரே வேளை உணவையும் வெவ்வேறு துவாதசி தினங்களிலும், அத்திதி இருக்கும் போதே முன்பின்னாக ஏற்க நேரிடும்.

16. துவாதசி திதி காலையில் மிகக் குறுகிய நேரமே இருப்பின் மதியம் வரை செய்ய வேண்டிய சந்தியாவந்தனம், முக்கிய பூஜை போன்றவற்றை சீக்கிரமாகவே முடிப்பதில் தவறில்லை.

17. துவாதசி திதி மிக, மிக குறைவான நேரமே இருப்பின், முதலில், பெருமாளை நினைத்து துளசி கலந்த நீரைப்பருகி பாரணை முடித்துவிட்டு, பின்னர் உணவை ஏற்கலாம்.

18. ஏகாதசி விரதம் இருந்த அம்பரீச சக்கரவர்த்தி துருவாச முனிவரின் கோபத்தில் இருந்து கூட பாதுகாக்கப்பட்டதை பல புராணங்கள் தெரிவிக்கின்றன.
19. வளர்பிறை தேய்பிறை துவாதசியன்று திருவோண நட்சத்திரம் வந்தால் அன்றும் உண்ணா நோன்பு இருந்து திரயோதசி திதியிலேயே பாரணை செய்ய வேண்டும்.

20. ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களிலும் முழுவதுமாக உண்ணாமை இயலாவிட்டால், ஏகாதசியன்று முன் இரவில் சிறிதளவு பலகாரம் ஏற்கலாம். சிரவண துவாதசி அன்று கண்டிப்பாக உண்ணாதிருக்க வேண்டும்.

21. ஆடி மாத வளர்பிறை சயனி ஏகாதசி முதல், கார்த்திகை மாதம் வளர்பிறை ப்ரபோதினி ஏகாதசி முடிய, 9 ஏகாதசிகளிலும் அனைவரும் விரதம் இருக்க வேண்டியது கட்டாயமாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

22. பிற மாதங்களில் வரும் தேய்பிறை ஏகாதசிகளில் மட்டும் பகலில் உண்ணாதிருந்து, இரவில் குறைந்த பட்சமாக, அதுவும், திட உணவையும், பக்குவப்படுத்திய உணவையும் ஒதுக்கி, பால், பழம் போன்றவற்றை ஏற்பதில் தவறில்லை.

23. நீர், கிழங்கு, பால், நெய், மருந்து போன்ற சிலவற்றை ஏற்பது விரதநியதிகளை மீறுவது ஆகாது என்பதற்காக, விரத நாட்களில் நினைத்த போதெல்லாம், பசித்த போதெல்லாம் இவற்றை உண்ணுவதை வழக்கமாகக் கொள்ளக்கூடாது.

24. ஆடிமாதம் வளர்பிறை ஏகாதசியில் அனுஷ்டிக்கப்படுவது கோபத்மவிரதம். பல்வகையிலும் நமக்கு நன்மை பயக்கும் பசுக்களைக் கட்டும் இடத்தில், தாமரை வடிவ கோலம் இட்டு, அதனுள், திருமாலை வழிபட்டு கோதானம் அளிப்பது மிகச் சிறப்பு.

25. கார்த்திகை வளர்பிறை ஏகாதசியன்று பீஷ்மர் அம்புப்படுக்கையிலிருந்தே மகாபாரதப் போர் நிகழ்ச்சிகளைக் கண்ட நாள் என்பதால் அன்று பீஷ்ம பஞ்சக விரதம் அனுஷ்டிப்பது வழக்கம்.

26. முக்கோடி தேவர்களின் துன்பத்தை பகவான் போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது.

27. ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்னுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.

28. ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு நீடித்த புகழ்,நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுமையில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

29. சீதையை பிரிந்த ராமர், பக்தாப்யர் என்ற முனிவரின் ஆலோசனைப்படி பங்குனி மாதத்தில் வரும் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தார். அதன் பலனாக வானர சேனைகளின் துணைக்கொண்டு கடலை கடந்து இலங்கேஸ்வரனை அழித்து இலங்கையை வென்றார். விஜயா என்னும் இந்த ஏகாதசி விரதம் நாம் கேட்ட பலன்களை கொடுக்கக்கூடியது.

30. வைகுண்ட ஏகாதசி அன்று தான், குருக்ஷேத்ரப் போரில் அர்ஜுனனுக்குக் கீதையை கிருஷ்ண பரமாத்மா உபதேசம் செய்ததால், இந்தநாள் ‘கீதா ஜயந்தி’ எனவும் கொண்டாடப்படுகிறது.

Friday 8 May 2020

கனவு நனவானது!


என்னுடைய  டீன்ஏஜில் பிரபல எழுத்தாளர் திரு மணியனின் பயணக் கட்டுரைகளை படித்து பாரிஸ், சுவிட்சர்லாந்து,ரோம் போன்ற இடங்களுக்கு போக ஆசைப்பட்டு கனவு கண்டவள் நான்! நடுத்தர குடும்பவாசியான  எனக்கு அவ்வாய்ப்பு கிடைக்கும் என்று கொஞ்சமும் நினைத்துக்  பார்த்ததில்லை !பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என் மகன் ஜெர்மனிக்கு  வேலைக்கு சென்றபோது அங்கு சென்ற  நான் அவனிடம் 'எனக்கு  சுவிட்சர்லாந்தை பார்க்க வேண்டும்.ஆல்ப்ஸ் மலையில் நடக்க வேண்டும்' என்று கேட்டேன். என் மகனும்  காரிலேயே எங்களை அழைத்துச் சென்றான். அங்கு ஜூரிச்சில் அவன் நண்பன் இருந்ததால் அங்கு  தங்கினோம். மறுநாள் ஐரோப்பாவின் மிக உயரமான ஜுங்க்ப்ராஜோக் (Jungfrajoch) சிகரத்திற்கு சென்றோம்.ஆஹா...என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!

 ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்
அழகிய ரைன் நதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில்

மயங்கித் திரிவோம் பறவைகள் போல்

என்று பாடியபடியே என் கணவரைப் பார்த்தேன். அவரோ இயற்கை அழகில் சொக்கிப் போயிருந்தார்.அங்கிருந்து வரும் வழியில் மிகப் பெரிய அழகிய ட்ரம்மல்பேக் ( Trummelbech ) நீர்வீழ்ச்சியைப் பார்த்து ரசித்தோம். அந்த நீர்வீழ்ச்சியை பல இடங்களில்  அதன் ஒவ்வொரு அழகையும் ரசிக்கும்படி அமைத்துள்ளார்கள்.அங்கிருந்து ஜூரிச்சிற்கு ஸஸ்டேன் பாஸ் (Susten Pass) வழியாக வந்தோம்.மலைப்பாதை ஒற்றையடிப் பாதை போல இருந்தது. பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. சுற்றிலும் பளபளவென்று ஒரு வெள்ளிமலையில் செல்வது போல இருந்தது. அதன் அழகை ரசித்துக் கொண்டே வந்த நாங்கள்  வழியில் இறங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கீழே இறங்கி புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குள் குளிர் நடுக்கி விட்டது. பாதிவழி வந்தபின்  பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பாதை மூடப்பட்டு விட்டது. மாலை ஐந்து மணிக்கு மேல் அந்தப் பாதையில் வரக் கூடாதாம். திரும்பிப்  போகும்படி சொன்னார்கள்.சுற்றிலும் காடு மாதிரி  மரங்கள். அத்தனையிலும் பனி உறைந்து இருந்தது.தெருவில் ஈ காக்கையைக்  காணோம்! சற்று தொலைவில் ஒரு ஹோட்டல் தென்பட,  அங்கு நின்றிருந்த கார்கள் பாதிக்குமேல் பனி மூடியிருந்தது. ஹோட்டலில் தங்க இடம் இல்லை என்று சொல்லிவிட எங்களுக்கு என்ன  செய்வதென்றே தெரியவில்லை.நேரம்  ஆக ஆக இருள் கவிந்து ,ஸ்னோவினால் எங்கள் காரின் சக்கரம் மறைய ஆரம்பித்து விட்டது. என் கணவரும், நானும் 'இனி என்ன செய்வது? திரும்ப வந்த   வழியிலேயே சென்று விடுவோம்' என்றோம்.  மலைப்பாதை. வேறு போக்குவரத்து இல்லாததால் வழி பூராவும் ஒரே பனி படர்ந்து வழியே தெரியவில்லை.என் மகனோ அந்த நேரத்திலும்  கூலாக 'கவலைப் படாதம்மா.வழி மறைந்து விட்டால் காரில் ஹீட்டரை போட்டு விட்டு தூங்கலாம்.காலை  கிளம்பி செல்லலாம்'என்றான்! ஆள் அரவமில்லாத அந்தகாரத்தில் அதுவரை ரசித்த பனி அச்சுறுத்தும் அரக்கன் போல தெரிந்தது. நானோ எனக்கு தெரிந்த ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டே வந்தேன். ஒருவழியாக கீழே வந்து வேறு வழியில் ஜூரிச் சென்றோம். கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதம். ஆனாலும் நல்லபடியாக வந்து சேர்ந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொன்னேன். அதன்பின் பலமுறை நான் ஜெர்மனி சென்றாலும் இந்த புகைப்படத்தைக் காணும்போது அந்த மகிழ்ச்சியும்,திகிலும் கலந்த அனுபவம் இன்றும் இனிக்கும் நினைவுதான்!

Monday 4 May 2020

இன்று காமதா ஏகாதசி🙏🏼3.4.2020


M...சித்திரை மாத வளர்பிறை ஏகாதசிக்கு காமதா ஏகாதசி என்று பெயர். தம்பதிகளின் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் ஏகாதசி இது. நினைத்ததை நிறைவேற்றித் தருவதுடன் ஏழு ஜன்ம பாவங்களும் நீக்கிவிடும்.

நாகராஜனின் சாபத்தால் அரக்கனாக மாறிய ஒரு கந்தர்வன் சாப விமோசனம் பெற அவன் மனைவி இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து அதன் பயனால் கந்தர்வன் நலமடைந்தான்.முன்னொரு காலத்தில் போகீபூர் என்னும் நகரத்தை ஆண்ட புண்டரீகன் அவையில் தேவர்களும் முனிவர்களும் கூடியிருந்தபோது அவைப் பாடகனான லலித் என்பவன் அரசவையில் பாடும்போது சிற்றின்ப சிந்தனையோடு பாடினான். இதைக் கேட்ட மன்னன் வெகுண்டு அவனை அரக்கனாகப் போகும்படி சபித்தான். லலித் அரக்கனாகிக் காடுகளில் திரிந்தான். அவன் மனைவியான லலிதா அரக்கனான தன் கணவனைப் பின் தொடர்ந்தாள். அச்சமயம் அவர்களுக்கு சிருங்கி முனிவரின் தரிசனம் கிடைத்தது. அவர், இவர்களின் துயரை அறிந்து, காமதா ஏகாதசி விரதத்தை எடுத்துரைத்தார்.

இதைக் கேட்ட  இருவரும் மகிழ்ந்து அடுத்துவரும் காமதா ஏகாதசி விரதத்தைப்  விரதமிருந்து பகவான் விஷ்ணுவை வழி
பட்டனர். இதன் பலனாக அவன் தன் அரக்க ரூபம் நீங்கி, மீண்டும் தன் சுய உருவைப் பெற்றான். இருவரும் நீண்ட காலம் மகிழ்வோடு வாழ்ந்தனர்

உடலின் இயக்கத்தை உறுதி செய்யும் உணவில்லாதபோது நம் வயிறு  ஓய்வுகொண்டு தம்மைத் தாமே புதுப்பித்துக்கொள்ளும். இதற்காகவே ஏகாதசி அன்று உபவாசம் இருக்க நம் முன்னோர்
கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். உடல் பேசாமல் இருந்து மனம் கண்டபடி நினைவுகளால் அலைக்கழிக்கப் படக்கூடாது என்பதற்காக அன்றைய நாளை இறைவழிபாட்டில் ஈடுபடுத்த அறிவுறுத்தினார்கள். எனவேதான் ஏகாதசி அன்று நாம் புண்ணிய நாளாகக் கடைப்பிடிக்கிறோம்.

ஓர் ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும். சில ஆண்டுகளில் 25- ம் வருவதுண்டு. ஒவ்வோர் ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயரும் தனிச் சிறப்பும் பலன்களும் வாய்ந்தவை.

ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றையும் பகவானிடம் ஈடுபடுத்தி அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.

ஸ்ரீ கிருஷ்ணர் தன் வாயாலேயே ..
'சுத்தம் பாகீரதி ஜலம்
சுத்தம் விஷ்ணு பதத்தியானம்
சுத்தம் ஏகாதசி விரதம்'
என்று கூறியுள்ளார். பகவானின் திருவடியில் பட்ட ஒரு துளி தீர்த்தம்,கங்கைக்குச் சமமான புனிதம் வாய்ந்தது. பெருமாளின் திருவடியைத் தரிசிப்பது, வைகுண்ட தரிசனத்தைவிட பவித்திரமானது. இத்தனை நற்செயல்களுக்கும் ஈடானது ஏகாதசி விரதம்...என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

மனித முயற்சிகள் எல்லாம் தோற்றுப்போகும்போது நாம் தேடி செல்வது இறைவனின் சந்நிதானமே. துன்பம் நீங்க அவனருள் தேவை.

இப்போது உலகமே கொரோனா சுழலில் சிக்கித் தவிக்கிறது. நாம்,  வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் மோசமான நிலை. வீட்டில் மகிழ்வாக இருக்கிறோம் என்பதை விட நமக்கு கொரோனா வந்து விடுமோ என்ற பயமும் உள்ளூர இருப்பதை மறுக்க முடியாது.

இதுபோன்ற அச்சங்களை விடுத்து நேர்மறையான அதிர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டியது அவசியம். அதுவே, எதிர்காலம் குறித்த நம்பிக்கையை நமக்குள் உருவாக்கும். அப்படி நாம் பயனுனடையவே நம் முன்னோர்கள் இது போன்ற விரத நாட்களை வகுத்திருக்கிறார்கள்.

அத்தினங்களில் இறைவழிபாடு செய்யும்போது நம் மனம் புத்துணர்ச்சி அடைந்து அனைத்தையும் வெல்லும் ஆற்றலைப் பெறுகிறது. அப்படி சகல பாவங்களையும் நீக்கி நம்பிக்கை ஒளியை ஏற்ற வல்ல அற்புத தினமே ஏகாதசி விரதம்.

இத்தகைய சிறப்புகளை உடைய காமதா ஏகாதசியைக் கடைப்பிடிக்க கிடைக்கும் நன்மைகளைப் புராணம் பட்டியலிடுகிறது.

ஏழு ஜன்மப் பாவம் தீரும்..
ஆன்மா சுத்தமாகும்..
சாபங்கள் தீரும்..
மூவுலகிலும் இதைப் போன்ற சுப முகூர்த்த நாள் இல்லை..
எதிர்மறை உணர்வுகளை நீக்கி நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும்..
தீமைகள் இல்லாத வாழ்வை அருளும்..
தீர்க்க ஆயுளையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும்..

ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நாராயணனை வணங்க வேண்டும். தற்போது ஆலயங்கள் எல்லாம் மூடியிருக்கிற காரணத்தால் வீட்டிலேயே இருக்கும் சுவாமிக்கு நமஸ்காரம் செய்து வழிபடலாம்.

சுவாமிக்கு துளசி சாத்தி பழங்கள் முதலியன நிவேதனம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். சாஸ்திரப்படி அன்று பகல் இரவு இருவேளையும் தூங்கக் கூடாது. கண்டிப்பாகப் பகலில் தூங்கவே கூடாது. அப்படி விரதமிருந்து மறுநாள் துவாதசி திதி அன்று பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இன்றைய நிவேதனம்..
பயத்தம் கஞ்சி
கேரட் அல்வா



ஸ்வீட்_கொரோனா_காபி


சமையல் செய்ய மையல் இருந்தாலே சிறப்பாக ருசியாக அமையும். ஏதோ சமைத்தோம் சாப்பிட்டோம் என்றில்லாமல் மனமொன்றி சமைக்க வேண்டும். கொரோனா வந்தாலும் வந்தது.. இந்த இளைய தலைமுறையை மாற்றி விட்டது.
எல்லா ஆண்களும் பெண்களும் சாப்பிட ஹோட்டல்கள் இல்லாமல் போக, சமையல் வேலைக்கு வருபவர்களும் நின்றுவிட  வேறு வழியின்றி  கரண்டியைக் கையில் பிடிகத்து சுயம்பாகம் செய்ய ஆரம்பித்து விட்டார்களே! Swiggy Zomato என்று என்ஜாய் செய்து கொண்டு சமையலறைக்கு பூட்டு போட்டிருந்த பலரையும் சமையல்
காரர்களாக மாற்றிவிட்டது இந்த lock down!!
என் உறவுப் பெண்மணி ஒருவர் தான் காஃபி போட்ட கதையை சிரித்துக் கொண்டே கூறுவார். மிக நன்றாக சமையல் செய்யும் அவர் திருமணமானவுடன் அவர் மாமியார் 'ஃபில்டர்ல காபிப்பொடி போட்டு மேல தண்ணீர் விட்டா டிகாக்ஷன் கீழ இறங்கும்' என்றாராம். இவரும் மாமியார் சொன்னதை சிரமேற்கொண்டு காஃபி போட்டாராம். எப்படி? ஃபில்டரில் வெந்நீர் விடணும் என்று மாமியார் சொல்லாததால் பச்சைத் தண்ணீரை விட்டு விட்டாராம்! அதன்பின் மாமியாரிடம் டோஸ் வாங்கினதை கதையாகச் சொல்வார்!
இன்னொரு பெண் அவர் பாயசம் செய்த கதையை பரவசமாக சொல்வார். அவருக்கு நெடுநாள் குழந்தையில்லாததால் பெரியவர் ஒருவர் ரவை பாயசம் வைத்து பத்து சின்னக் குழந்தைகளுக்கு கொடுக்கச் சொன்னாராம். அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு ரவா வேண்டும் என்று தெரியாமல் 1 கிலோ ரவை வாங்கிப் பாயசம் வைத்தால்  அதற்கு பால் விட விடப் போதவில்லையாம்! வீட்டிலிருந்த சர்க்கரை முழுவதும் காலியாம்! 50 பேர் சாப்பிடும் அளவு பாயசம் இருந்ததாம்!
நான் திருமணமான புதிதில் ஒருமுறை பிட்டு செய்தபோது அது உதிர்ந்த பிட்டாக இல்லாமல் மொத்தையாகி விட்டது. மறுபடி அரிசி வறுத்து வேகவிட்டு கலந்தபோது திதிப்பு குறைந்து விட்டது. என்ன செய்வது? அதில் காராமணி வறுத்து வேகவிட்டு சேர்த்து காரடை தட்டி வேகவிட்டு மாலை டிஃபனாக்கி விட்டேன். ..என்ன இன்னிக்கு நோன்படை பண்ணிருக்க..என்ற என்னவரிடம்..ஆசையா இருந்தது. பண்ணினேன்..என்று சொல்லிவிட்டேன்!
திருமணமான புதிதில் சாம்பார் கெட்டியாக இல்லாவிட்டால் ..இன்னிக்கு குழம்பில் அலைமகள் கடாட்சம் நிறைய..என்றும் அரிசியில் ஒரு கல் வாயில் கிடைத்தால் (அந்நாட்களில் அரிசி வாங்கி அதிலுள்ள கற்களை பொறுக்கிதான் சமைப்போம்) ..மலைமகள் நம்மாத்திலயே குடியிருக்கா..என்பார்! பிறகுதான் எனக்கு இதன் அர்த்தம் புரிந்தது! சாப்பாட்டில் உப்பு இல்லை என்றால் சொல்ல மாட்டார். அவர் இலையில் உப்பு போட்டுக் கொள்ளும் பழக்கம் உடையவர் என்பதால் அதை சேர்த்து சாப்பிட்டு விட்டு ஆஃபீஸ் போய்விடுவார். மாலை வந்ததும் கேட்டால்..நான் பெற்ற இன்பம் நீயும் பெற வேண்டாமா?..என்று சிரிப்பார்! என்ன ஒரு வில்லத்தனம்!
என் அம்மா மிக அருமையாக ஸ்வீட் எல்லாம் செய்வார். பாதுஷா ஸ்வீட் கடைகளில் இருப்பது போல் டேஸ்ட் சூப்பராக இருக்கும். நான் பலமுறை செய்து பார்த்தும் சரியாக வராத இனிப்பு பாதுஷா மட்டுமே. இது என் வீட்டில் அதிகம் விரும்பாததால் செய்யும் வாய்ப்பு குறைவு. என் அப்பாவுக்கு மோர்க்கூழ் மிக விருப்பம். அப்பா என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் செய்து கொடுப்பேன்.ருசித்து சாப்பிடுவார்.

வீட்டில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சமையல் பிடிக்கும். என் கணவருக்கு தினமும் ஸ்வீட் சாப்பிடும் பழக்கம்! பெரியவனுக்கு அசோகா, சின்னவனுக்கு அடை அவியல், கடைக்குட்டிக்கு சாட் வகைகள், பெண்ணுக்கு பர்ஃபி, பேரன் பேத்திகளுக்கு மைசூர்பாகு, காஜுகத்லி என்று பண்ணி நிறைய அயிட்டங்கள் கற்றுக் கொண்டு சமைக்க முடிகிறது.
கொரோனா வந்தபின் மூன்று மாதங்களுக்கு மளிகை சாமான் வாங்கிவிட்டதால் விதவிதமான சமையல், டிஃபன், ஸ்நாக்ஸ்! என் பிள்ளைகள் விதவிதமாய் ப்ரெட் கேக் எல்லாம் செய்து ஃபோட்டோ போட்டால் நான் இவற்றை செய்து வாட்ஸப்பில் அனுப்புவேன்! கடந்த ஒரு மாதமாக நான் செய்த சமையல் வகைகளின் தொகுப்பை இணைத்துள்ளேன்.

Saturday 2 May 2020

கண்ணனுக்கு அல்வா..!!

சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "பாபமோசனிகா'' என்று அழைக்கப்படுகிறது.

'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை’ என்பது பெரியோர் வாக்கு. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் ஏகாதசி விரதமிருந்து, விஷ்ணுவின் அருள் பெறும் பேறு பெற்றார்கள்.

நாம் தெரிந்தும் தெரியாமலும்; அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமையுடையது இந்த பாபமோசனிகா ஏகாதசி விரதம். எண்ணிய காரியங்களை நிறைவேற்றும் சக்தியும் உண்டு. அசுவமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெற முடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று கூறுகின்றன புராணங்கள்.
இன்று ஏகாதசி ஸ்பெஷல் நிவேதனம் கோதுமை அல்வா.

என் கணவருக்கு பிடித்த ஸ்வீட் செய்து தருவதாக சொன்னபடி இன்று அல்வா செய்து குட்டி கண்ணனுக்கு கொடுத்தாச்சு!

'எனக்குதான் அல்வா கொடுத்துண்டிருந்த..இப்போ கண்ணனுக்கும் அல்வா கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ளப் போறியா' என்றார் என் கணவர்!!

ஸ்வீட்_கொரோனா_காஃபி


ஆய கலைகள் அறுபத்து நாலில் சமையலும் ஒன்று. பீம பாகம்,
நளபாகம் என்று ஆண்களே அக்காலத்தில் சமையல் வல்லுனர்களாக இருந்திருக்
கிறார்கள். திரௌபதி ரொம்பவே சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்டிருப்பாளோ! ஐந்து கணவரும் வகை வகையாக சமைத்து...திரௌபதி சாப்பிட வாம்மா...என்று அன்பொழுகக் கூப்பிட்டு ஆசையுடன் பரிமாறி இருப்பார்களோ!! தமயந்தியும் கொடுத்து வைத்தவள். நளன் ராஜ்ய பரிபாலனத்துடன் சமையலும் செய்திருப்பானோ!!

இன்றும் திருமணம் போன்ற பெரிய விழாக்களில் ஆண்கள்தானே சமைக்கி
றார்கள்.அன்று ஆண்கள் வசம் இருந்த சமையல் பெண்கள் மேல் திணிக்கப்பட்டதோ..அல்லது பெண்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்களோ..‌யாருக்கு தெரியும்!!

என் கணவர் ஓரளவு அடிப்படை சமையல்கள் செய்வார். என் பிள்ளைகளும் நன்றாகவே சமைப்பார்கள். பெரிய பிள்ளை பொங்கல் செய்தால் அதில் ஏகப்பட்ட ட்ரைஃப்ரூட்ஸ் போட்டு நெய்யைக் கொட்டி பண்ணுவான்! டீயை பாலிலேயே கொதிக்க விட்டுப் போடுவான்! ப்ரெட், கேக் எல்லாம் சூப்பராக செய்வான்.

என் மாட்டுப் பெண்ணும் பிஸ்ஸா, கேக் எல்லாம் நிறைய வெரைட்டி  செய்வாள். நாங்கள் ஜெர்மனி சென்றால் எங்களுக்காக Eggless cake செய்வாள்.

சென்னையில் இருக்கும் அடுத்த பிள்ளை Bread making classக்கு சென்று கற்றுக் கொண்டும்,  YouTube பார்த்தும்  விதவிதமாய் செய்கிறான். ஆர்கானிக் ப்ரெட் தயாரித்து கடைகளுக்கு supply செய்து கொண்டிருந்தான்.

இப்பொழுது கொரோனா lock downல் மாலை நேர snacks ப்ரெட்தான்!! இட்லி, தோசை போரடித்துப் போன பேரன் பேத்திகள் இந்த வித்யாசமான snackஸை நன்கு enjoy செய்கிறார்கள்!

என் மகளுக்கும் ஆர்வம் அதிகரிக்க அவள் வடா பாவ், பானிபூரி, கப் கேக் என்று ஜமாய்க்கிறாள்! தினமும் எனக்கு வாட்ஸப்பில் அனுப்பும் அவர்கள் செய்த Lock down special ரெசிபிகளை நீங்களும் பார்த்து ரசியுங்கள்!!

இன்று நான் செய்தது simple & easy நட்ஸ் பக்கோடா.
ஜில்ஜில் பலாப்பழ பாயசம்

மசாலா தட்டை

தேவை
புழுங்கல் அரிசி -- 1 கப்
பொட்டுக்கடலை பொடி -- 1/2 கப்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு -- 2 டீஸ்பூன்
மிளகுப்பொடி --1/2 டீஸ்பூன்
காரப்பொடி -- 1/2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி -- சிறிது
உப்புபொடி -- தேவையான அளவு
விழுது நெய் --2 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை -- 1 கொத்து
எண்ணை  -- பொறிக்க

மசாலாவிற்கு
பச்சை மிளகாய் -- 3
இஞ்சி -- சிறு துண்டு
இரண்டையும் நைசாக அரைக்கவும்.

செய்முறை
அரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.

அத்துடன் பொட்டுக்கடலை மாவு, அரைத்த மசாலா, ஊறவைத்த கடலைப் பருப்பு, கருவேப்பிலை, மிளகுப்பொடி, காரப்பொடி, சீரகம், பெருங்காயம், நெய்  சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.

சிறு உருண்டை எடுத்து வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் சிறு தட்டைகளாகத் தட்டி முள் கரண்டியால் சிறு ஓட்டைகள் போடவும். எண்ணையைக் காயவைத்து பொன்னிறமாகப் பொறித்து, எண்ணை
வடிந்ததும் எடுத்து வைக்கவும்.
சூப்பரான கரகர தட்டை வாயில் போட்டால் கரையும்!

பலாப்பழ பாயசம்..
ஒரு பலாசுளையை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
10-12 பலாசுளைகளை கொட்டை நீக்கி நறுக்கி 10 நிமிடம் நீரில் வேகவிட்டு ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் சிறிது நீர் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் அத்துடன் வெல்லம் தேவையான அளவை நீரில் சுடவைத்து வடிகட்டி சேர்க்கவும்.
அரை கப் தேங்காய்ப் பால் சேர்த்து
5 -10 நிமிடம் கொதித்ததும் அரை கப் பால் சேர்க்கவும்.
ஏலப்பொடி, மிந்திரி திராட்சை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
பலாப்பழ பாயசம் ஃப்ரிட்ஜில் வைத்து கப்பில் விட்டு கூலாக சாப்பிட தேவாமிர்தம்தான்!!

ஸ்வீட்_கொரோனா_காபி

சமையல் செய்ய மையல் இருந்தாலே சிறப்பாக ருசியாக அமையும். ஏதோ சமைத்தோம் சாப்பிட்டோம் என்றில்லாமல் மனமொன்றி சமைக்க வேண்டும். கொரோனா வந்தாலும் வந்தது.. இந்த இளைய தலைமுறையை மாற்றி விட்டது.

எல்லா ஆண்களும் பெண்களும் சாப்பிட ஹோட்டல்கள் இல்லாமல் போக, சமையல் வேலைக்கு வருபவர்களும் நின்றுவிட  வேறு வழியின்றி  கரண்டியைக் கையில் பிடிகத்து சுயம்பாகம் செய்ய ஆரம்பித்து விட்டார்களே! Swiggy Zomato என்று என்ஜாய் செய்து கொண்டு சமையலறைக்கு பூட்டு போட்டிருந்த பலரையும் சமையல்
காரர்களாக மாற்றிவிட்டது இந்த lock down!!

என் உறவுப் பெண்மணி ஒருவர் தான் காஃபி போட்ட கதையை சிரித்துக் கொண்டே கூறுவார். மிக நன்றாக சமையல் செய்யும் அவர் திருமணமானவுடன் அவர் மாமியார் 'ஃபில்டர்ல காபிப்பொடி போட்டு மேல தண்ணீர் விட்டா டிகாக்ஷன் கீழ இறங்கும்' என்றாராம். இவரும் மாமியார் சொன்னதை சிரமேற்கொண்டு காஃபி போட்டாராம். எப்படி? ஃபில்டரில் வெந்நீர் விடணும் என்று மாமியார் சொல்லாததால் பச்சைத் தண்ணீரை விட்டு விட்டாராம்! அதன்பின் மாமியாரிடம் டோஸ் வாங்கினதை கதையாகச் சொல்வார்!

இன்னொரு பெண் அவர் பாயசம் செய்த கதையை பரவசமாக சொல்வார். அவருக்கு நெடுநாள் குழந்தையில்லாததால் பெரியவர் ஒருவர் ரவை பாயசம் வைத்து பத்து சின்னக் குழந்தைகளுக்கு கொடுக்கச் சொன்னாராம். அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு ரவா வேண்டும் என்று தெரியாமல் 1 கிலோ ரவை வாங்கிப் பாயசம் வைத்தால்  அதற்கு பால் விட விடப் போதவில்லையாம்! வீட்டிலிருந்த சர்க்கரை முழுவதும் காலியாம்! 50 பேர் சாப்பிடும் அளவு பாயசம் இருந்ததாம்!

நான் திருமணமான புதிதில் ஒருமுறை பிட்டு செய்தபோது அது உதிர்ந்த பிட்டாக இல்லாமல் மொத்தையாகி விட்டது. மறுபடி அரிசி வறுத்து வேகவிட்டு கலந்தபோது திதிப்பு குறைந்து விட்டது. என்ன செய்வது? அதில் காராமணி வறுத்து வேகவிட்டு சேர்த்து காரடை தட்டி வேகவிட்டு மாலை டிஃபனாக்கி விட்டேன். ..என்ன இன்னிக்கு நோன்படை பண்ணிருக்க..என்ற என்னவரிடம்..ஆசையா இருந்தது. பண்ணினேன்..என்று சொல்லிவிட்டேன்!

திருமணமான புதிதில் சாம்பார் கெட்டியாக இல்லாவிட்டால் ..இன்னிக்கு குழம்பில் அலைமகள் கடாட்சம் நிறைய..என்றும் அரிசியில் ஒரு கல் வாயில் கிடைத்தால் (அந்நாட்களில் அரிசி வாங்கி அதிலுள்ள கற்களை பொறுக்கிதான் சமைப்போம்) ..மலைமகள் நம்மாத்திலயே குடியிருக்கா..என்பார்! பிறகுதான் எனக்கு இதன் அர்த்தம் புரிந்தது! சாப்பாட்டில் உப்பு இல்லை என்றால் சொல்ல மாட்டார். அவர் இலையில் உப்பு போட்டுக் கொள்ளும் பழக்கம் உடையவர் என்பதால் அதை சேர்த்து சாப்பிட்டு விட்டு ஆஃபீஸ் போய்விடுவார். மாலை வந்ததும் கேட்டால்..நான் பெற்ற இன்பம் நீயும் பெற வேண்டாமா?..என்று சிரிப்பார்! என்ன ஒரு வில்லத்தனம்!

என் அம்மா மிக அருமையாக ஸ்வீட் எல்லாம் செய்வார். பாதுஷா ஸ்வீட் கடைகளில் இருப்பது போல் டேஸ்ட் சூப்பராக இருக்கும். நான் பலமுறை செய்து பார்த்தும் சரியாக வராத இனிப்பு பாதுஷா மட்டுமே. இது என் வீட்டில் அதிகம் விரும்பாததால் செய்யும் வாய்ப்பு குறைவு. என் அப்பாவுக்கு மோர்க்கூழ் மிக விருப்பம். அப்பா என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் செய்து கொடுப்பேன்.ருசித்து சாப்பிடுவார்.

வீட்டில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சமையல் பிடிக்கும். என் கணவருக்கு தினமும் ஸ்வீட் சாப்பிடும் பழக்கம்! பெரியவனுக்கு அசோகா, சின்னவனுக்கு அடை அவியல், கடைக்குட்டிக்கு சாட் வகைகள், பெண்ணுக்கு பர்ஃபி, பேரன் பேத்திகளுக்கு மைசூர்பாகு, காஜுகத்லி என்று பண்ணி நிறைய அயிட்டங்கள் கற்றுக் கொண்டு சமைக்க முடிகிறது.

கொரோனா வந்தபின் மூன்று மாதங்களுக்கு மளிகை சாமான் வாங்கிவிட்டதால் விதவிதமான சமையல், டிஃபன், ஸ்நாக்ஸ்! என் பிள்ளைகள் விதவிதமாய் ப்ரெட் கேக் எல்லாம் செய்து ஃபோட்டோ போட்டால் நான் இவற்றை செய்து வாட்ஸப்பில் அனுப்புவேன்! கடந்த ஒரு மாதமாக நான் செய்த சமையல் வகைகளின் தொகுப்பை இணைத்துள்ளேன்.






இன்று அட்சய திருதியை


அட்சயதிருதியை என்றால் என்ன? அந்த தினத்தில் என்ன செய்ய வேண்டும்? ஏன் அட்சயதிருதியை கொண்டாடப்படுகின்றது என்பது பற்றி நிறைய செய்திகள் உள்ளன.

முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சயதிருதியை என்றும், பரசுராமரின் பிறந்த நாளாக அட்சயதிருதியை கொண்டாடப்
படுவதாகவும் கூறப்படுகின்றது.

இதிகாசங்களின்படி, அட்சய
திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது. மேலும் பகீரதன் தவம் செய்து புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்த நாளாகவும் கூறப்படுகிறது. மகாலட்சுமியின் அருளால்  குபேரன் செல்வந்தனானதும் அட்சய திருதியை அன்று தான்.

கண்ணனின் அருளால் குசேலன் குபேரன் ஆனது, தனது தாயை மீட்க,  தேவலோகத்திலிருந்து அமுதத்தைக் கருடன் எடுத்து வந்தது, அன்னபூரணி தேவி தோன்றியது,  மகாபாரதத்தை வியாசர் கூற, விநாயகர்
எழுதத் தொடங்கியது, தர்மபுத்திரர் அட்சய பாத்திரத்தைப் பெற்றது. திரௌபதிக்குக் கண்ணன் புடவை சுரந்து காத்த நாளும் இந்த அட்சய திருதியை அன்று தான். இத்தகைய  பற்பல சிறப்புகள் நிறைந்த நாள் அட்சயதிருதியை ஆகும்.

அட்சயம் என்றால் குறையாத என்று பொருள். அட்சய திருதியை அன்று கற்கும் கல்வியும், செய்யப்படும் தானமும், நற்செயல்களும் குறைவின்றித்  தொடரவேண்டும் என்பதை உரைக்கவும் அட்சயதிருதியை என்ற பெயர் ஏற்பட்டது. அட்சயதிருதியை அன்று சூரியன், சந்திரன் இருவருமே உச்சத்தில், சம  அளவு ஒளியுடன் திகழ்வதாக ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

தானியங்களைச் சமர்ப்பித்துத் திருமாலை வழிபட வேண்டிய நாளாக அட்சயதிருதியை கருதப்படுகிறது. யஜுர் வேதத்தில் அட்சய திருதியை நாளில் வெள்ளை நிறப் பொருட்கள்,
மஞ்சள் நிறப் பொருட்கள் வாங்குவது நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
தானியங்களில் தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள். அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்கி அதைப் பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது.

மஞ்சளில் எல்லா மகிமையும் உள்ளது. மஞ்சள்தான் எல்லா வகையிலும் நலன் தரக்கூடியது. மஞ்சள் பொடியாகவும் கிழங்காகவும் வாங்குவதால் வாழ்க்கை நலமாக வளமாக சிறப்பாக இருக்கும் எனப்படுகிறது.

இந்நாளில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது மிக நன்மை தரும். அவர்களுடைய தேவைக்கேற்ப பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
தங்கம், வெள்ளி இவை  லட்சுமியின்  அம்சமாகக் கூறப்
படுவதால் தற்காலத்தில் தங்க நகைகள் வாங்குவது சிறப்பாகக் கூறப்படுகிறது.

சித்தர்கள் ஜீவசமாதி உள்ள  திருவண்ணாமலை போன்ற ஆலயங்களுக்குச் செல்வது புண்ணியத்தை தரும்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு அருகிலுள்ள சிம்மாசலம் நரசிம்மர் கோயிலில், எப்போதும் சந்தனக்காப்பால் மூடப்பட்டிருக்கும் நரசிம்மரை  அட்சயதிருதியை அன்று மட்டும்  சந்தனக் காப்பு இல்லாமல் முழுமையாகத் தரிசிக்கலாம்.

தம்உலகப் புகழ்ப்பெற்ற பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரைக்கான  ரதங்களை ஒவ்வொரு வருடமும் அட்சயதிருதியை அன்று தான் வடிவமைக்கத் தொடங்குவார்கள்.

பத்ரிநாத், கேதார்நாத்தில் குளிர்காலம் முடிந்து கோயில் நடைதிறக்கப்படும் நாள் அட்சயதிருதியை ஆகும்.

தமிழ்நாட்டில் அட்சய திருதியை தினத்தில், கும்பகோணம் பெரிய கடைவீதியில் நடைபெறும் பன்னிரண்டு கருட சேவை,  வடுவூர்  ராமர் கோயிலில் காலை ஒரு முறை, மாலை ஒரு முறை என இரண்டு முறை நடைபெறும் கருட சேவை,  மன்னார்குடி ராஜகோபாலனின் கருட  சேவை போன்ற கருட சேவை உற்சவங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை.

ஏன் பன்னிரு கருட சேவை?  திருமாலைத் தியானிக்கும் முறையைக் கூறும் ஆகம சாஸ்திரங்கள், நம் உடலில் பன்னிரு  இடங்களில் பன்னிரு திருப்பெயர்களுடன் திருமால் வீற்றிருப்பதாகத் தியானிக்கச் சொல்கின்றன. கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன்,  விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகியவையே அந்தப் பன்னிரண்டு திருப்பெயர்கள்.

அந்தப் பன்னிரு வடிவங்களையும் தியானிக்க இயலாதவர்களுக்காக சாரங்கபாணிப் பெருமாள், தானே பன்னிரு  வடிவங்கள் எடுத்துக் கொண்டு அட்சயதிருதியை அன்று குடந்தை கடைவீதியில் காட்சி தருகிறார். இந்தப் பன்னிரண்டு பெருமாள்களையும்  தரிசிப்பவ
ர்கள், ஆகமங்கள் கூறும் பன்னிரண்டு மூர்த்திகளைத் தியானித்த பலனைப் பெறுவார்கள்.

"அந்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி
புண்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் வாராணஸ்யாம் விநச்யதி
வாராணஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி
கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி’’
என்பது கும்பகோணத்தின் சிறப்பைக் கூறுகிறது.

நாமும் அவனருள் நாடி, அவன் திருப்பாதம் பற்றி இன்றைய நிலை மாற வேண்டுவோம்🙏🏼

நன்றி..!நன்றி


நன்றி..!நன்றி
சமையல் ஸ்பெஷலுக்கு என் பெயரையும் குறிப்பிட்ட மத்யமர்களுக்கு நன்றி🙏🏼.
நேற்று என் நட்சத்திர பிறந்த நாளுக்கு நான் செய்த ஸெவன் கப் கேக்!

ஸெவன் கப் கேக்

கடலை மாவு..1கப்
தேங்காய் துருவல்..1கப்
நெய்..1கப்
பால்..1கப்
சர்க்கரை..3கப்
ஏலப்பொடி..1டீஸ்பூன்

செய்முறை
கடலைமாவை 4 ஸ்பூன் நெய்யில் வாணலியில் லேசாக வறுக்கவும்.சிவக்கக் கூடாது.

அத்துடன் பால், நெய், தேங்காய், சர்க்கரை இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

கேஸை சிம்மில் வைத்து நன்கு கலந்து கைவிடாமல் கிளறவும்.

நன்கு பூத்து வந்து ஒட்டாமல் சுருண்டு வரும்போது ஏலப்பொடி சேர்க்கவும்.

மிந்திரி  பருப்பை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.
சுலபமான சுவையான கேக் நாவில் கரையும்!

மாத்தி_யோசி


ஆயி_மாஜி_ஆயி😀

நான் தஞ்சாவூரைச் சேர்ந்தவள். என் கணவரும் தஞ்சை. என் அப்பாவின் வேலை நிமித்தம் நாங்கள் இருந்ததும், நான் படித்ததும் சிங்காரச் சென்னை!🚋🏘️ எனக்கு தஞ்சைத் தமிழும் சென்னைத் தமிழும் மட்டுமே தெரியும்.

மணமான ஆறு மாதத்திலேயே என் கணவருக்கு வடக்கே உத்திரப் பிரதேசத்தில் மதுரா (மாயக் கண்ணனின் பிறப்பிடமான வடமதுரை)வுக்கு மாற்றல்! ‘இந்தி’ என்று தமிழில் மட்டுமே எழுதத் தெரிந்த நான், சற்று பயத்தோடும்😞, ஏகப்பட்ட பிரமிப்போடும்🤨, சில இந்திப் புத்தகங்களோடும்📚 பயணமானேன். நான் படித்தபோது இந்தி தேவையில்லை என்று போராட்டம் நடந்ததால் இந்தியில் 'ஆனா..ஆவன்னா' கூடத் தெரியாது😙

என் கணவர் அத்தனை இந்திக் கலவரத்திலும், ஒளிந்து ஒளிந்து🤫 ‘ராஷ்ட்ரபாஷா’ வரை படித்தவர்! எனவே அவருக்குக் கவலையில்லை!🕺

ஒரு நாள் ஒரு நண்பர் வீட்டு ‘பார்ட்டி’க்கு🍱 என் கணவர் அழைத்துப் போக, அங்கு வந்த அத்தனை பெண்களும்👭 ஒரு மதராஸிப் பெண்ணான என்னை அதிசயமாகப் பார்த்து ஆயிரம் கேள்விகள் கேட்க ‘அச்சா’😁, 'மாலும் நஹி’🥺 என்ற இரண்டு வார்த்தைகளோடு அசடு வழிந்தேன்🥴!

என் கண்கள்👀 என்னவரைத் தேட அவரோ அனைவருடனும் அமர்க்களமாகப் பேசிக்🗣️ கொண்டிருந்தார்.சே.. என்ன மொழி அது? ‘க’வில் நான்கு வகை, ‘ச’வில் இரண்டு, ‘ட’ வில் நாலு என்று ‘போதுமடா சாமி’ என்றாகி விட்டது!😞

நம் தமிழ் தவிர மற்ற மொழிகளில் இந்த உச்சரிப்பு பிரச்னை #‘படா_பேஜார்’தான்! இந்தியில் மனிதர்களுக்கு மட்டுமன்றி, விலங்குகள்,பறவைகள் 🐀🐆🐎🦜🐦🐓 மற்றும் பொருட்களுக்கும்🥛🍯 கூட ‘பால்’ உண்டு. பானி (தண்ணீர்), மிட்டி (மண்), தஹி (தயிர்) இவை பெண்பால்! தூத்🍼 (பால்), பத்தர் (கல்) இவை ஆண்பால். குத்தா என்றால் ஆண் நாய்!🐕 குத்தி என்றால் பெண் நாய்🐩. இப்படித் திண்டாடி, தட்டுத் தடுமாறிப் பேசி இந்தி கற்றுக் கொள்வதற்குள் என் கணவருக்கு மீண்டும் தமிழ்நாட்டுக்கு மாற்றல்!🚚 முதல் வேலையாக குழந்தைகளுக்கு இந்தியைக் கற்றுக் கொடுத்து எல்லாரும் பிரவீண் முடித்தார்கள்.

மீண்டும் கோலாப்பூருக்கு மாற்றல். நமக்குதான் இந்தி தெரியுமே என்று #'கெத்'தாக இருந்தேன்!💃 அங்கு சென்றதும்தான் புரிந்தது #மகாராஷ்டிர_மொழி #மகாகஷ்டமான மொழி என்று! அங்கு அருகில் இருந்தவர் வீட்டுக்கு கூப்பிட என் பெண்ணையும் உடன் அழைத்து சென்றேன். அவர்கள் வீட்டில் மாமியாரும் மருமகள்👵🙎🙍🤷🙆
களுமாக நாலைந்து பேர். எங்களை அதிசயமாகப் பார்த்தார்கள்!

இந்தியில் பேசுவார்கள் என நினைத்தால் அவர்களோ மராத்தியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். எங்களை 'பஸா'🙋 என்று சொல்ல...(பஸ்ஸில் வந்தீர்களா? ) என்று கேட்கிறாளோ? இருவரும் இந்தியில் டீக் ஹை என்று சொல்ல சோபாவைக்🛋️ காட்டி மீண்டும் பஸா என்றதும்தான் புரிந்தது உட்காரச் சொல்கிறாள் என்று! அசட்டு சிரிப்புடன்🥴 அமர்ந்தோம்🙂! அவர்கள் எங்களுக்கு புரியுமா என்று கூட யோசிக்காமல்😖 சரவெடி போல் விடாது பேச 'அச்சா..அச்சா' என்று சொல்லி சமாளித்தோம்! அவர்க
ளுக்கு இந்தி புரியவில்லை. அவர்கள் பேசியதில் 'சாய்' ☕என்பது மட்டும் புரிய அதைக் குடித்துவிட்டு விட்டால் சரி என்று ஓடி வந்து விட்டோம்.😮

என் பிள்ளை ஒருநாள் என்னிடம் 'ஆயி மாஜி ஆயி..மல ஜேவன் பாய்ஜே ஆயி' என்றான். அவன் மராட்டி கற்றுக் கொண்டு விட்டானாம்! நான் எதுவும் புரியாமல்🤔 'என்னடா..ஆயி மலம்னு! என்ன பேசற நீ' என்றதும் 'மராட்டி பேசறேன்.ஆயின்னா அம்மா' என்றான்.👩 'அடப்பாவி..என்னை மாஜி அம்மா ஆக்கிட்டயா? எப்பவும் நான்தாண்டா உன் அம்மா' என்று நான் டென்ஷனாக..😟

'ஐயோ அம்மா.மாஜி ஆயினா என் அம்மானு அர்த்தம்'.
'அப்பறம் ஏதோ மலம் ஜீவனம்னியே.🙎 'மல ஜேவன் பாய்ஜேன்னா எனக்கு சாப்பாடு🍛 வேணுனு அர்த்தம்' என்றான்.
இக்கட, அக்கட, புடே ,காலி என்று  எப்படியோ மராட்டியும் கற்றுக் கொண்டேன்!😅

அப்புறம் ஒரு வருடம் பெங்களூர் வாசம்!🌃 ‘அப்பாடி! பெங்களூரில் நிறைய தமிழர்கள் உண்டு. கல்கண்டு தமிழில் கலகலக்கலாம்' என்ற என் ஆசையில் மண்! எங்கள் வீட்டுக்காரம்மாவோ ‘பச்சைக் கன்னடத்தி!’🤦 அவள் வீடு சென்ற என்னை ‘பன்ரி, குத்துக் கொட்றி’ (‘என்ன மரியாதையில்லாமல் குட்றி என்கிறாளே, என்ன கேட்கிறாள்’) என்று நான் ‘திருதிரு’க்க,🙄 நாற்காலியைக் காட்டியதும்தான், சட்டென்று நம் 'சென்னைத் தமிழ்’ ‘குந்திக்க’ ஞாபகம் வர அமர்ந்தேன்!😊

‘நிம்ம எஜமானரு ஏனு மாடுதாரு?’ (மாடுக்கு எஜமானரா?!) 🐐‘நிம்ம ஹேஸரு ஏனு?’ (ஏசுவைப் பற்றிக் கேட்கிறாளா!) 'நீரு சாக்கா பேக்கா?' (கடைசியா என்னை பேக்குன்னுட்டாளே!) 😰என்று ‘சரவெடி’ 💥மாதிரி கேள்விகளைத் தொடுக்க, ஒரு அட்சரம் கூட புரியாமல் ‘புஸ்வாணமாகி’ ⛲நான் வீடு திரும்பினேன்!

வெளி மாநிலம் சரி, நம் மாவட்டத்துக்குள்ளும் பேச்சு வழக்கு வித்தியாசமாகத்தானே இருக்கிறது? நாகர்கோவிலில் என் பிறந்த வீட்டுக்குப் போனபோது, என் அம்மாவுக்குத் தெரிந்த மாமி வந்து, ‘ஏண்டி, வீச்சாரிக்காயோ?🙁 உடம்பு வண்ணமே வைக்கவில்லையே?’😟 என்று கேட்க,😇 நான் அர்த்தம் தெரியாமல் முழிக்க, அம்மாதான் பிறகு விளக்கினார். ‘வீச்சாரிக்காயோ’ என்றால் ‘நன்னா இருக்கியா’ என்று அர்த்தமாம்.🙂 ‘உடம்பு வண்ணமே வைக்கவில்லையே’ என்றால் ‘உடம்பு பெருக்கவே இல்லையே’ என்று பொருளாம்😆! அங்கு கணவரை மாப்பிள்ளை என்பார்களாம்🤩! என் அப்பா கடையில் சர்க்கரை கேட்க வெல்லம் கொடுத்தாராம் கடைக்கார்!. பஞ்சாரை என்றால் சர்க்கரையாம்!😆😅

ஈரோடில் பெண்களை 👸பிள்ளை என்பார்கள். நான் அங்கு சென்ற புதிதில் என் முதல் பிள்ளை, இரண்டாம் பிள்ளை என்றபோது 'உங்க வீட்டில ஒரு பிள்ளைதான இருக்கா' என்றதும் தான் இந்த பிள்ளைக்கு அர்த்தமே புரிந்தது!😅😉

விளக்கமாற்றுக்குக்கூட,🧹 ‘வார்கோல், சீமாறு, பெருக்குமாறு, துடப்பம்’ என்று ஊருக்கு ஒரு பெயர் இருக்கும்போது மற்ற பேச்சுகளிலும் வித்தியாசம் இருப்பதில் வியப்பில்லயே?😆

இப்படி மாநிலம்தோறும் சென்றதன் பலன் பல மொழிகளைத் தெரிந்து கொள்ளும் சந்தோஷம் கிடைத்தது உண்மை!😃
#ராதாபாலு

மாத்தி யோசிக்கு என்ன எழுதலாம் என்று மாத்தி மாத்தி யோசித்தும் ஒன்றும் சரிவரவில்லை. எப்பொழுதும் ஒரே மாதிரி எழுதாமல் இந்த முறை ஸ்மைலிகளை சேர்த்து எழுதிப் பார்த்தேன்! வித்யாசமாக இருந்தது! நீங்களும் படித்துப் பார்த்து கமெண்டுங்கள்!

Friday 24 April 2020

வாழ்க புத்தாண்டு

தமிழுக்கும் அமுதென்று பேர் என்றுரைத்த பாரதி வழிநின்று வாழ்த்துகிறேன் சார்வரி எனும்
இப்புத்தாண்டில் நாம்
நிறைந்த நல்வாழ்வும்
சீரிய சிந்தனையும்
ஓங்கிய ஒற்றுமையும் பெற்று நோய் நொடியின்றி வாழ யாதுமாகி நின்ற காளி அருள் புரிய வேண்டி🙏🏼

Friday 17 April 2020

ஹேஸல்நட்(Hazel nut) கேக்


ஆஷாட ஏகாதசிக்கு பண்டரிக்கு பாயசத்துடன்  ஏதாவது ஸ்வீட் பண்ணலாமேனு யோசிச்சேன்! என் பிள்ளை போனமுறை வந்தபோது வாங்கி வந்த ஹேஸல்நட் பவுடர் இருந்தது. இதை வைத்து ஒரு கேக் பண்ணலாமென்று முடிவு செய்தேன்.

ஹேஸல்நட் என்பது  கொண்டைக்கடலை மாதிரி பெரியதாக இருக்கும். மிக சத்தானது என்பான் என் பிள்ளை.  வெளிநாடுகளில்  மட்டுமே இதை நான் பார்த்ததுண்டு. பாதாம், மிந்திரி, பிஸ்தா, வால்நட் போல் இதில் சாக்லேட், பிஸ்கட் எல்லாம் செய்வார்கள்.

ஆனால் இதில் நம்ம மெதட்ல கேக் பண்ணினா எப்படி இருக்குமோ என்று உள்ளூர பயம்! கசக்குமோ..துவர்க்குமோ?  கண்ணனை வேண்டிக் கொண்டு கேக் பண்ணி நைவேத்யமும் பண்ணிவிட்டு சாப்பிட்டோம். அருமையாக இருந்தது!

Hazelnutற்கு தமிழ்ப் பெயர் தெரியவில்லை. Googleலும் சரியான பெயர் கண்டுபிடிக்க முடியவில்லை! எப்படியோ பாண்டுரங்கனுக்கு ஒரு புதிய இனிப்பு பண்ணி கொடுத்தாச்சு!

Friday 10 April 2020

பாவம் போக்கும் சிம்மாசலம்


சென்ற வாரம் விசாகப்பட்டினம் சென்றபோது சிறப்பான சிம்மாசலம் கோயிலை தரிசித்து வந்தோம். அருமையான ஆலயம்.

நரசிம்மர் பெரும்பாலும் மலைக்கோயில்களிலேயே வீற்றிருக்கிறார். வேலூர் அருகிலுள்ள சோளிங்கர், ஆந்திராவிலுள்ள அஹோபிலம்,  சிம்மாசலம், கர்நாடக மாநிலம் மேல்கோட்டை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள சிங்கப்பெருமாள் கோயில், நாமக்கல், மதுரை ஒத்தக் கடைநரசிம்மர் கோயில்கள் சிறப்பானவை.

திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் பரபரப்பான நொடியில்  தன் பக்தன் பிரஹலாதனைக் காக்க மனிதனும். மிருகமும் கலந்த உருவமெடுத்து தூணிலிருந்து வெளிப்பட்ட தனிப்பெரும் அவதாரம் அது.

பிரஹலாதன் கருவிலேயே நாரத முனியால் நாராயண மந்த்ரோபதேசம் பெற்றவன். அவனுடைய நாராயண பக்தியினால் தானே கடவுள் என்ற இரண்யனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத  பிள்ளை அவன்.

அவன் தந்தை ஹிரண்யனுக்கு தன் நாட்டிலுள்ள பிற எல்லோரையும் போல் அவனும் தன் னுடைய பக்தனாக வேண்டும் என்று வெறி. ஹிரண்யன் பிரஹலாதனை பல விதங்களில் துன்புறுத்தியும், நாராயண நாமத்தால் அவற்றையெல்லாம் தன் மீதான பக்தி சிலிர்ப்பாகவே அனுபவித்தான் ப்ரஹலாதன்.

அவற்றில் ஒரு தண்டனையாக கடலில் தள்ளிவிட்டான். அதுவே விசாகப் பட்டினம் அருகிலுள்ள கடல். அவன் பிழைத்துவிடக் கூடாது என்பதற்காக மேலே ஒரு மலையையும் தள்ளிவிட்டான்.
'ஹரியே சரி' என்ற ப்ரஹலாதன் நாராயணா என பகவானை சரண் அடையக் கூப்பிட்டான்.

கடலில் அமிழ்ந்து கொண்டிருக்கும் ப்ரஹலாதனை காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில், ஒரு கையில் பீதாம்பரத்தைப் பிடித்துக்
கொண்டு குதித்த வேகத்தில் பகவானின் பாதங்கள் பாதாளம் வரை சென்று விட்டனவாம்.எனவே இங்கு பாததரிசனம் கிடையாது.

ஹிரண்யகசிபுடன் 32 ரூபங்கள் எடுத்துப் போர் புரிந்தாராம் ஹரி. அதில் ஒன்று வராகநரசிம்மர் அவதாரம் ஆகும். பாதாளம் சென்று பிரகலாதனைக் காப்பாற்றியபோது அவன் மேல் கிடந்த மலையுடன் மேலே வந்தார் பெருமாள். அந்த மலையே சிம்மாசலம்.

இங்கு கோயில் கொண்டிருக்கும் நரசிம்மர்,  வராக முகத்துடன் மனித உடலோடு, சிங்கத்தின் வால்கொண்டு, வராக நரசிம்மனாக காட்சி அளிக்கிறார்.
பிரஹலாதனின் விருப்பத்திற்
கிணங்க, ஹிரண்யாக்ஷனை வதம் செய்த வராஹ ரூபம் மற்றும் ஹிரண்யகசிபுவினை அழிக்கப்
போகும் நரசிம்ஹ ரூபம் கலந்து வராக நரசிம்மராக காட்சி தருகிறார். இக்கோயில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு பிறை மாடத்தில் மூலவர் வராக நரசிம்மரின் முழு உருவமும் சிற்ப வடிவில் காணப்படுகிறது.

பகவானுக்கு ஆராதனம் இல்லாமல் போகவே, புற்று மூடி அந்த இடம் காடாக மாறிவிட்டது. பின்னொரு காலத்தில் புரூரவஸ் என்ற சக்கரவர்த்தி இந்த இடத்தைக் கடந்து செல்லும் போது, அவரது விமானம் தடைபட்டது.   நரசிம்மமூர்த்தி அவரதுகனவில் தோன்றி, தான் இங்குள்ள கங்கதாரா என்ற தீரத்தத்தின் அருகில் உள்ள புற்றில் இருப்பதாகச் சொல்ல, அவரை அக்ஷயதிருதியை அன்று எழுந்தருளச் செய்து, கங்கதாரா தீர்த்தத்தில் திருமஞ்சனம் செய்து பிரதிஷ்டை செய்தார் புரூவரஸ்.

எனவே அக்ஷயதிருதியை அன்று மட்டுமே  பெருமான் நிஜரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.மற்ற
நாட்களில் சந்தனக் காப்பிட்ட
தரிசனம் தான்.

சந்தனக்காப்பில் எப்படி ஒரு வருடம் எனத் தோன்றுகிறதா?வைகாச சுக்ல திருதியை, வைகாச பவுர்ணமி, ஜ்யேஷ்ட பவுர்ணமி, ஆஷாட பவுர்ணமி என்று வருஷத்தின் நான்கு தடவைகள், சுமார் 500 கிலோ சந்தனம் சாத்துகிறார்கள். அதனால் எல்லா நாட்களும் சந்தனகாப்பு பளபளக்க  காட்சியளிக்கிறார் இந்த வராஹ நரசிம்மர்! அக்ஷயதிருதியை அன்று லட்சக்கணக்கான மக்கள் நிஜரூப தரிசனம் செய்ய வரிசையில் காத்திருப்பராம்!

சந்தனக் காப்பு ஏன்? இத்தலத்
திலும் சைவ வைணவ
சண்டை வந்ததாக கதை உண்டு. முதலில் இந்த மூர்த்தி இங்கு லிங்க ரூபத்தில் வழிபடப்பட்ட
தாகவும், ராமானுஜர் ஸ்ரீகூர்மத்தி
லிருந்து இந்த மலைக்கு வந்து நாராயணனின் தலம் இது என்றும் இங்கு வராகநரசிம்மனின் அர்ச்சா ரூபம் நிறுவப்படவேண்டும் என்றும் வாதம் செய்தாராம். முடிவில், உள்ளே இருப்பவர் நாராயணனா இல்லை நமசிவாயமா என்பதைக் கண்டுகொள்ள லிங்கத்தின் கீழே துளசியும் விபூதியும் இரவில் வைக்கப்பட்டு, காலையில் எது ஏற்றுக் கொள்ளப்பட்டதோ, அவரே அங்கே இறைவன் என்று முடிவு செய்யப்பட, அனைவரும் அப்படியே செய்கின்றனர்.

மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது துளசி மட்டுமே அங்கே கிடந்ததைக் கண்டு உடையவரின் கருத்தில் உடன்பாடு கொண்டு அனைவரும் லிங்கத்தை அகற்றிவிட்டு அங்கே ராமானுஜரின் கட்டளைப்படி வராகநரசிம்மனின் அர்ச்சா
ரூபத்தை செதுக்கினர். அப்படி வழிபடும்போது, அவர் உடலில் ரத்தம் வழிந்ததாகவும், ரத்தத்தை மறைக்க சந்தனத்தை உருவம் முழுவதும் சார்த்தி மூடிவிட்ட
தாகவும் சொல்லப்படுகிறது.

ஹரியும், சிவனும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் வராக லட்சுமி நரசிம்மமூர்த்தியை தரிசித்தால் சிவலிங்க உருவத்தில் நாராயணனின் நாமம் சாத்தப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. தூணிலிருந்து தோன்றிய மூலவர் தூண் போன்றே தரிசனமளிக்கிறார். வராகரும் இவருடன் அரூபமாக உள்ளார்.

நிஜரூபத்தில் பார்க்கும்போது சுவாமியின் கால்களுக்குக் கீழே பாதம் இல்லை. கைகள் நீண்டு இருந்தாலும் உள்ளங்கைகளும் விரல்களும் தெரியாது. முகத்தில் வராக ரூபமும் பின்னால் வால் ரூபமும் கூட இப்போதெல்லாம் சரியாகத் தெரிவதில்லையாம்.

சிறிய மலையின் மீது கோயில் உள்ளது. எக்காலத்திலும் பக்தர்களின் கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காது போலுள்ளது. தங்குவதற்கு தேவஸ்தானம் நிறைய அறைகள் கட்டி உள்ளார்கள்.

பெருமாளை அருகிலேயே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள். வெளியே வந்து கங்கதாரா அருவி நீர் ஐந்து இடங்களில் சிறிய முகத்துவாரம் வழியாக வருவதை தலையில் தெளித்துக் கொள்ள
லாம்.

11ம்  நூற்றாண்டில் கலிங்க நாட்டை வென்ற குலோத்துங்க சோழனால்  மலையை முழுக்க குடைந்தெடுத்து  பாறையால் செய்யப்பட்ட ஒரு தேர், சக்கரங்களுடன் குதிரைகள் இழுத்துச் செல்லும் முறையில் உள்ளது.  இங்கு 525 அதியற்புதமான சிற்பங்கள்  காட்சியளிக்கின்றன.

வாழ்வில் உண்டாகும் துன்பங்களைப் போக்கி பக்தர்களைக் காப்பதில் சிம்மாசலம் நரசிம்மருக்கு இணை வேறு யாருமில்லை.சனக, சனந்தன, சனாத, சனத்குமாரர்
களுக்கும், தேவர்கள், நாரதர், ரிஷிகளுக்கும், இவர்  தரிசனம
ளித்ததாக தலபுராணம் கூறுகிறது.

இவ்வாலயத்தில் கப்பஸ்தம்ப வேண்டுதல் மிகப் பிரசித்தம்.
அந்நாட்களில் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறினால் கோவிலுக்கு வந்து கப்பம் செலுத்துவதாக வேண்டிக் கொள்வதும், நோய் நொடியி
லிருந்து பாதுகாக்கவும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பிறக்க வேண்டிக் கொண்டு இங்குள்ள கப்பஸ்தம்பத்தில் கப்பம்
செலுத்துவதும் வாடிக்
கையாக இருந்ததாம்.

இன்றும் அந்த ஸ்தம்பம் இங்கே இருக்கும் மண்டபத்தில் வெள்ளிக் கவசத்துடன் உள்ளது. அந்தத் தூணின் கீழ் சந்தான கோபாலரின் திருவுருவம் உள்ளது. அந்த கம்பத்தை இரு கைகளாலும் அணைத்தவாறு நம் வேண்டுதல்
களைக் கூற வேண்டும்.

பின் அங்குள்ள ஊழியர் ஒரு பட்டுத் துணியினால் நம்மைத் தூணுடன் கட்டி இறைவனிடம் நம்மை வேண்டிக் கொள்ள சொல்கிறார். திருமணம் பிள்ளைப்பேறு வியாபார விருத்தி போன்ற வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதாகக் கூறப்படுகிறது.  தம்பதியர் இந்த வேண்டுதலை இணைந்து செய்ய வேண்டும்.இதற்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இங்குள்ள நரசிம்ம தீர்த்தம், கங்காதாரா தீர்த்தம் எனும் இரு அருவிகளிலும் நீராடி வராஹ
நரசிம்மரை வணங்கி, மலைப் பாதையில் கிரிவலம் வந்து வணங்குவதால் தீரா நோய்கள் தீர்ந்து பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். உடல் வளமும் உள்ள வளமும் பெற இந்த வராஹ லட்சுமிநரசிம்மர் பேரருள்  புரிகிறார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி
னத்திலிருந்து 5 கி.மீ தொலைவி
லுள்ளது இத்திருத்தலம்.

Wednesday 8 April 2020

#நாளாம்_நாளாம்_திருநாளாம்...!_💏👩‍❤️‍👨


... நம்ம கல்யாணம் ஆன புதிசில உங்களுக்கு என்கிட்ட ரொம்ப பிடிச்சது என்ன?...😍

... நான் சொன்னா நீ கோச்சுக்க கூடாது. சரியா?...🌝

...நிச்சயம் இன்னிக்கு கோச்சுக்க மாட்டேன்...😉

...கல்யாணம் முடிஞ்ச ஒரு வாரம் கழித்து முதன் முதலா  நீ ஒரு ரவா உப்மா...🤭

...நிறுத்துங்கோ! நான் பண்ணின உப்மா சரியில்லனு சொல்லப் போறேளா😡 நான் கேட்டது வேற😠...

...நான் சொல்லி முடிக்கவே இல்ல. கோச்சுக்காத. அந்த கொழகொழ உப்மாவை பண்ணிட்டு உன் மாமியார்கிட்ட கமெண்ட் வாங்கிண்டு பாவமா நின்னியே..அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சதுனு சொல்ல வந்தேன்...😄

...உடனே நீங்க என் ஜாதகத்தை ஒரு ஜோஸ்யர்ட்ட காமிச்சு 'இந்தப் பொண்ணுக்கு சமையல் வருமா'னு கேட்டவர்தான...🤨

...அது அப்போ. இப்போ நான் உன் அடிமை. நீ எது சொன்னாலும் தட்டாம பண்ற புருஷன்...🤗

...ஆமாம். இதுக்கொண்ணும் குறைச்சலில்ல...😏

...நல்ல நாள்ள கோபப்படாத!இன்னிக்கு எல்லா வேலையும் நான்தான் பண்ணப் போறேன். சமையலும் பண்ணுவேன்..ஆனா பூஜை பண்ணணும். அதனால
அதை மட்டும் நீ பண்ணிடு...😊

அட..எலி 🐀தானா வந்து வலையில் மாட்டிடுத்தே! பருத்தி புடவையா காச்ச மாதிரிதான். Enjoy என என் மனசு குதூகலிக்க..💃

...ஒரு கண்டிஷன். நீங்க பண்ற வேலையெல்லாம் நான் ஃபோட்டோ, வீடியோ எடுப்பேன். எதுவும் சொல்லக் கூடாது.ஓகேயா?...☺️

...ஓ..வீடியோ எடுத்து குழந்தைகளுக்கு அனுப்பப் போறயா? தாராளமா அனுப்பு...🤩

என் மனசுக்குள் மத்தாப்பு💥 இன்றைய மத்யமர் பதிவுக்கு வீடியோ ரெடி பண்ணியாச்சு😀

நம் வாழ்வின் மறக்க முடியாத நாட்கள் நம் பிறந்தநாளும் மணநாளும். இன்று எங்கள் 45வது  திருமணநாள். Sapphire anniversary. இன்று காலை எங்களுக்குள் நடந்த உரையாடல்தான் மேலே இருப்பது!

திருமணத்தின் போது என் வயது 18. ஏதோ ஓரளவு சமையல் தெரியும். பள்ளிப் படிப்பு முடித்து வீட்டில் இருந்த இரண்டு வருடங்களில் என் அம்மாவின் மூன்று நாட்கள் மட்டுமே..அதுவும் என் அப்பா துணையுடன் சமைத்த அனுபவங்கள் மட்டுமே!🍲🍛

திருமணமாகி வந்தவுடன் 'நீதான் இனிமேல் சமையல்' என்று என்னை சமைக்க சொல்லிவிட்டு தான் ஹாயாக ஹாலில் போய் உட்கார்ந்து விட்டார் என் மாமியார்! 'அம்மா..இந்த உப்பு போறுமா' என்றால் 'எனக்கு அப்படிலாம் சொல்லத் தெரியாது. நிதானமா போடு' என்பார். நிதான
மான்னா...மெதுவாவா?!🤔

திருமணமானால் ஜாலியா இருக்கலாம்😍 என்று கனவு கண்ட என் நினைப்பு அன்றே புஸ்வாணமாயிற்று🙁 ஏதோ தட்டுத் தடுமாறி சமைக்க ஆரம்பித்தேன். அந்த உப்மா..என்னாலயே சாப்பிட முடியவில்லை! என் கணவருக்கு உப்மாவே பிடிக்காதாம். 'உன் உப்மா சாப்பிட்ட பிறகு உப்மாவை சுத்தமா மறந்தே விட்டேன்' என்றார்.

(உப்மா சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என்று சமீபத்தில் படித்தேன். உப்மா வயிற்றில் ஊறி உப்பிக் கொண்டு மூச்சுவிட முடியாமல் போய் விடுமாம். அதனால் மனைவியர்களை உப்மா செய்து கணவருக்கு சாப்பிட கொடுக்காதீர்கள் என்ற எச்சரிக்கை வேறு!! இந்த விஷயம் நம் மத்யமர் சகோதரர்களுக்கு சர்க்கரையாக இனிக்குமே!😆)

 என் மாமியாரோ 'உன்னை பெண்பார்க்க வந்தப்போ உங்கம்மா மைசூர்பாகு நன்னா பண்ணிருந்தாளே. உனக்கு தெரியுமா?' என்ற கேள்வி வேறு.🥺

என் வீட்டுக்கு போகும்போது அம்மாவிடம் ஸ்வீட்லாம் செய்ய கத்துண்டு வருவேன்.எந்த
சமையல் புத்தகம் பார்த்தாலும் வாங்கி விடுவேன். என்னைப் பொறுத்தவரை மீனாட்சி அம்மாளின் சமைத்துப்பார் is the best! அளவுகள் அப்பழுக்கின்றி இருக்கும்.🥣

அதன் பின்பு எல்லா சமையலும் செய்து பார்த்து கற்றுக் கொண்டேன். ரவா உப்மாவை என் கணவரே 'இன்னிக்கு ரவா உப்மா பண்றயா?சாப்ட்டு நாளாச்சு' என்கிற நிலை! பல ரெசிபிகள் நன்றாக வரும்..சில காலை வாரும்..(சரியா வராத ரெசிபிகளை மத்தவா கண்லயே காமிக்க மாட்டேன்!!) இன்று நானே புதிதாக செய்யும் அளவு தேறியாச்சு. அப்பப்ப தமிழ் magazinesல போட்டிக்கல்லாம் போட்டு ப்ரைஸ்லாம் வாங்கியாச்சு. இப்போ 25 பேருக்கு ஈஸியாக சமைக்க முடியும்.🍨🥤

என் கணவர் வீட்டு வேலை செய்வதில் கில்லாடி! எல்லா வேலைகளிலும் அவர் உதவி உண்டு! என் மாமியாரும் அவருமாக இருந்தபோதே அம்மாவுக்கு கிச்சனில் ஹெல்ப் பண்ணியிருப்பதால் பல வேலைகள் தெரியும்.

குழந்தைகள் ஸ்கூல் போகும் நாட்களில் நான் சமையலில் பிஸி. அப்பல்லாம் குழந்தைகளை குளிப்பாட்டி யூனிஃபார்ம் போட்டு தலைவாரி நெற்றியில் விபூதி இட்டு, (என் பெண்ணுக்கு மட்டும்தான் நான் பண்ணுவேன்)புத்தகங்கள் எடுத்து வைத்து... இப்பவும் 'அப்பா மாதிரி நீ perfect இல்லமா' என்பார்கள்  குழந்தைகள்!🤷

சமையலும் நன்றாக செய்வார். கால்கிலோ உருளை, சேம்பு கறி பண்ண...என்ன ஒரு கால் கிலோ நெய் போறும்!!! மொறுமொறுனு ரோஸ்ட் ஆகிருக்கும். இப்பவும் என்னிடம் 'கறிக்கு இன்னும் நெய் விட்டு ரோஸ்ட் பண்ணணும்'பார்😀

எனக்கு காலில் ஆபரேஷன் ஆனபோது ஒன்றரை மாதம் அவர்தான் அத்தனை வேலை
களும் செய்தார். இப்பொழுது நாங்கள் மட்டும் தனியாக இருப்பதால் அதிக வேலை கிடையாது. ஆனாலும் 'நானும் ஹெல்ப் பண்ணுவேன்' என்று காய்கறி நறுக்குவது, துணி உலர்த்துவது, பாத்திரம் தேய்ப்பது எல்லா வேலையும் செய்வார். கேட்டால் 'பெட்டர் ஹாஃப் னா இப்படிதான் இருக்கணும்' என்று விளக்கம் வேற தருவார்!👩‍❤️‍👨

எப்படியோ மத்யமர்க்குனு சொல்லாம இன்னிக்கு அவர் வேலையை வீடியோ எடுத்தாச்சு! இன்னிக்கு wedding day க்கு வெளில போகவும் வழியில்ல. ஆனா கிஃப்ட் வாங்காம விடுவேனா! போன மாசமே பவுன்ல ஜிமிக்கியும், second channel க்கு குட்டி வைரத் தோடும் வாங்கியாச்சு.

இந்த வருஷ wedding day கொரோனாவோட கப்சிப்னு ஆயிடுத்து...இதுவரை இல்லாத விதமா மறக்க முடியாததாவும் ஆயிடுத்தே!

Saturday 4 April 2020

இந்த நாள் என்று மாறும்?



நாமெல்லாம் Curfew எப்பொழுது முடியுமென்று காத்திருக்கிறோம். விரைவில் சரியாக கடவுளை வேண்டுவோம்.

ஒருவேளை  இந்த நிலை மீண்டும் வந்தால்...வீட்டில் எப்படி பொழுதைக் கழிப்பது என நினைக்கிறீர்களா? கீழே நான்
எழுதியுள்ள சில விஷயங்களை செய்து நம் நாட்களை சிறப்பானதாக்குவோமே!

⏱️அலாரத்தை அணைத்து விடுவது..!
🛌 காலையில்அவசரமில்லாமல் எழுவது
🙏🏼🛐 பிரார்த்தனை
🧘 தியானம், யோகா
📿 நாமஜபம்
🛁 நிம்மதியான குளியல்
🍽️ புதுவகை சமையல் செய்வது
🍛🍲🥣 சுவையாக சாப்பிடுவது
🍵 டீ காஃபி நேரத்துக்கு..
🏋️ உடற்பயிற்சி
👨‍👩‍👧‍👧குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது
♟️🎲🧩 Indoor games விளையாடுவது
📈 🖥️ Work from home
📺 தொலைக் காட்சி
🎼 பாட்டு
💻 கம்ப்யூட்டர்
🖋️எழுதுவது
📖 பிடித்ததை படிப்பது
🎮 CD games
🧵தையல் வேலைகள்
🧶ஸ்வெட்டர் பின்னுவது
🎨🖌️பெயிண்டிங், ஓவியம்
📲 உறவினர் நண்பர்களுடன் ஃபோன் செய்து பேசுவது
🧹🚮 வீட்டை சுத்தம் செய்வது
👗👕துணிகளை அடுக்கி வைப்பது
👖துணி தோய்த்து இஸ்திரி செய்வது
🧳✈️ (கொரோனா முடிந்தபின்!) வெளியூர் செல்ல plan செய்வது
📚 பிடித்த புத்தகங்களை படிப்பது
👨‍👩‍👧‍👦குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது
🤳 Selfie எடுத்துக் கொள்வது..
💃 மறந்த கலைகளை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வது
📸 புகைப்படம் எடுப்பது
🛋️  ஆற அமர உட்கார்ந்து Rest எடுப்பது
🎻 🎺🎷வாத்யங்கள் வாசிப்பது
😌 Relax..Relax..Relax
🔐வீட்டை பூட்டுவதை கண்டிப்பாக மறந்து விடுங்கள்😀😆

இவை தவிர இன்னும் உங்களுக்கு பிடித்த பல விஷயங்கள் இருக்குமே? அவற்றையும் கிடைத்த இந்த நேரத்தில் புதுப்பிக்கலாம்.

மறக்கக் கூடாத விஷயங்கள்...
🧴🚰 அடிக்கடி கை அலம்ப மறக்காதீர்கள்..
💊 மருந்துகளை எடுத்துக் கொள்ள மறக்காதீர்கள்..
😷 கண்டிப்பாக முகமூடியுடன் வெளியே செல்ல மறக்காதீர்கள்..

🏘️ Stay Healthy
🤗 Stay safe
🏡Happy home
💃🕺Enjoy your days

#செல்லமே-#புதுயுகசிறுவர்இலக்கியம்


நானும் என் பேத்தியும்  நிறைய பேசுவோம். என்னிடம் நிறைய கேள்விகள் கேட்பாள். கதைகள் சொல்வேன். ஒருமுறை அவளுக்கு பாரி கதையை சொன்னேன்.

'அந்த காலத்தில் பாரி என்ற அரசன் ஒருவர் பரம்பு என்ற நாட்டை ஆண்டு வந்தார். அவருக்கு இயற்கையை ரசிக்கப் பிடிக்கும்'

'இரு பாட்டி.. இயற்கைன்னா?'

ஆங்கில மீடிய குழந்தைகளுக்கு தமிழ் புரிவதில்லையே!

'இயற்கைன்னா nature.புரிஞ்சுதா?'

'ஓ..புரிஞ்சுது. அதாவது beautiful flowers, cute animals, big trees அதல்லாம்தானே?'

'ஆமாம். அவர் அடிக்கடி காட்டுக்கு போய் மரம் செடி கொடியல்லாம் ரசிச்சுட்டு வருவார்'

'அப்டீன்னா?'

'Enjoy பண்றதுனு அர்த்தம். அப்படி ஒரு முறை தன் தேர்ல ஏறி காட்டில் பாரி போய்க் கொண்டிருந்தபோது ஒரு முல்லைப்பூ கொடி ஒண்ணு கீழ விழுந்து கிடந்தது.'

'கொடின்னா..national flagதான?'

'இல்ல climber. நீ படிச்சிருப்பயே climberனா என்ன?'

'ஓ..அதுவா? ..cucumber, bitter guard, jasmine அதெல்லாம்தான..கரெக்டா?'

'கரெக்ட். முல்லைப் பூங்கற்து jasmine மாதிரி பூ. அது climb பண்ண முடியாம கீழ விழுந்து கிடந்தது. காட்டில யார் அதுக்கு கொம்பு நட்டு படர விடுவா? அதைப் பார்த்த பாரிக்கு மனசு ரொம்ப கஷ்டமாயிடுத்து.'

'நீ சொல்ற மாதிரி பாவம்னாரா?'

எனக்கு சிரிப்பு வந்தது.என்னை எவ்வளவு தூரம் இவள் கவனித்திருக்கிறாள் என்று பெருமையாகவும் இருந்தது.

'அதை நிமிர்த்தி நிறுத்த அங்க மரம் எதுவும் இல்ல. உடனே பாரி என்ன பண்ணினார் தெரியுமா? தன்னுடைய தேரை அது பக்கத்துல நிறுத்தி அந்த செடியை அதில் ஏத்தி விட்டார்.'

'அவர் great பாட்டி! ஒரு குட்டி செடிக்காக தன்னோட costly தேரையே விட்டுட்டு வந்துட்டாரா?'

'ஆமாம். அதனால் அவரை எல்லாரும் புகழ்ந்து 'பாரி வள்ளல்'னு பாராட்டினா'

'wait..wait..வள்ளல்னா?'

'யாராவது கஷ்டப்பட்டா அது மனுஷாளோ அனிமலோ பறவையோ..அதுக்கு தன்னைப் பற்றி நினைக்காம ஹெல்ப் பண்றவாளுக்கு தமிழ்ல வள்ளல்னு பேர்'

'ஓ..அப்படியா?'

'அதுபோல நாமளும் யார் கஷ்டப்பட்டாலும் நம்மால முடிஞ்ச  help பண்ணணும்..கதை பிடிச்சுதா?'

'சூப்பர் பாட்டி' என்றவள் ஏதோ யோசித்து,
'பாட்டி என்னோட கீழ வாயேன்' என்றாள்.
அங்கு அழகிய நாய்க்குட்டி ஒன்று படுத்துக் கொண்டிருந்தது. இவளைப் பார்த்ததும் வாலை ஆட்டிக் கொண்டு சற்று நொண்டியபடி ஓடி வந்தது.

'இந்த பப்பி ஒருநாள் நொண்டிண்டே நம்ம பில்டிங் வாசல்ல நின்னுண்டிருந்தது. வாட்ச்மேன் விரட்டினார். நான் பிஸ்கட் போட்டு உள்ளே அழைச்சுண்டு வந்தேன். பாவம்தான பாட்டி இது?'

'அழகா இருக்கே' நான் அதன் முதுகைத் தடவ வேகமாக வாலை ஆட்டியது.

'உனக்கு நாய் வளர்க்க ரொம்ப பிடிக்கும்னு அப்பா சொன்னாளே'

'ஆமாம். சின்ன வயசுல வளர்த்திருக்கேன்.மேல சொல்லு'

'அன்னிலருந்து இங்கயே இருக்கு. நான் தினமும் பிஸ்கட் போடுவேன். இப்பல்லாம் என் ஃப்ரண்ட்ஸும் போட்றா. அது கால் சீக்கிரம் சரியாகணும்னு godகிட்ட வேண்டிக்கோ பாட்டி'

'நிச்சயம் சரியாயிடும். நாயைத் தொட்டா மறக்காம கை அலம்பு.'

'பாட்டி..நானும் பாரி மாதிரி நல்லவதான? அவர் ராஜா..தேர் கொடுத்தார். எனக்கும் இந்த பப்பியை வீட்டுல வளர்க்க ஆசைதான். ஆனா அம்மா கோச்சுப்பா. அதனால தினமும் அதுகூட விளையாடிட்டு பிஸ்கட் ப்ரெட்லாம் போட்றேன்.'

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்த வயதில் அவளின் அன்பு என்னை ஆச்சரியப் படுத்தியது. அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டேன். 'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்'என்ற பாரதி பாடல் நினைவு வந்தது.

Tail piece..
இது இரண்டு வருடம் முன்பு..இப்பொழுது அவள் Blue Crossல் சேர்ந்து ஒவ்வொரு ஞாயிறன்றும் சென்று நாய்களுடன் நேரம் செலவழித்து சந்தோஷப் படுகிறாள்.

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை


ஆலயங்கள் மூடியதும் இறைவனை தரிசிக்க முடியாததும் என் மனதுக்கு மிக வருத்தமாக இருந்தது. அதைப் பற்றி யோசித்தபோது எனக்கு தோன்றியதை எழுதினேன்.

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை🙏🏼

நாரதர் வைகுண்டம் வருகிறார். நாராயணனைப் பணிந்து வணங்குகிறார்.

..நாராயண..நாராயண..

..வா நாரதா. நலமா?

..தங்கள் அருளால் நலம் தேவா.

..உன் முகம் வாடியிருப்பதன் காரணம் என்னவோ?

..என்ன சொல்வது ப்ரபோ. உங்களுக்கு தெரியாததா?பூலோகம் இன்றிருக்கும் நிலைமை அறியாதவரா தாங்கள்?
ஏன் இந்தக் கஷ்டம் ஐயனே?

..பூவுலகில் அதர்மம் அதிகமாகும்போது நான் அவர்களைத் தடுத்தாட் கொண்டு அருள் செய்வது நீ அறிந்ததுதானே?அதைத்தான் இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறேன்.

..அப்படியென்றால் கலியுகம் முடியப் போகிறதா பரந்தாமா?

பகவான் சற்று பெரிதாக சிரித்தார்!

..என்ன கேள்வி கேட்கிறாய் நாரதா.அதற்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் உள்ளன.

..முன்பெல்லாம் அரக்கர்களை உருவாக்கி நல்லவர்களைக் காப்பாற்றினீர்கள். இப்பொழுது ஏதோ கிருமியாமே? அப்படியென்றால்..?

..இப்பொழுது பிரம்மன் படைத்த மனிதர்களே அரக்க குணத்துடன் கடவுள் பக்தியின்றி ஆன்மிகத்தில் நம்பிக்கையின்றி மனம் போனவாறு வாழ்கிறார்
களே..அவர்களை நல்வழிப்
படுத்தவே இந்தக் கிருமிகளை உருவாக்கினேன்.

..அது சரி. ஆனால் ஆலயங்கள் மூடப்பட்டு நீங்களும் தனிமைப் படுத்தப்பட்டு விட்டீர்களே? மானுடர்கள்  தம் கஷ்டங்களைப் போக்கிக் கொள்ள தங்களை நாடி ஆலயங்களுக்குதானே வருவார்கள்?

..உண்மை. ஆனால் உலக நலனை வேண்டி வருபவர்களை விட  தானும் தம் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டி மிகப் பெரிய அளவில் அபிஷேக ஆராதனைகள் செய்ய வருபவர்களே அதிகமாக இருப்பர். என் சிலைகளையே கடத்தி விற்று சம்பாதிப்பவர்கள் இதில் எத்தனை ஊழல் செய்வார்களோ? உண்மையான பக்தியுடன் என்னை நாடி வருபவர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். அதனால்தான் நான் ஒதுங்கி விட்டேன். நிஜமான பக்தி உள்ளோர் வேறு வழியின்றி வீட்டிலேயே என்னை வழிபடுவார்களே?

..எனக்கு இது சரியாகப் படவில்லையே சுவாமி.உங்கள் அருகாமை தேவையானபோது நீங்கள் ஒதுங்கிவிட்டதாக பேசுவார்களே?

..தவறு நாரதா. நான் இவ்வுலகம் முழுதும் ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருக்கிறேன். நான் உங்களையெல்லாம் காப்பாற்றும் பொறுப்பில் உள்ளேன். என் குழந்தைகளை நான் கஷ்டப்பட விடுவேனா? என்னை முழுமையாக நம்புபவர்கள் என்றும் பக்தி வழியிலிருந்து விலக மாட்டார்கள். உலகில் நாத்திகம் அதிகமாகும்போது என்னை நிலைநாட்டிக் கொண்டு 'என்னை பக்தியுடன் பணிபவர்களை நான் கைவிட மாட்டேன்' என்பதை இவ்வுலகுக்கு உணர்த்தவே இந்த லீலை.

..இது இன்னும் எத்தனை நாளைக்கு  இறைவா?

..கவலைப்படாதே. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் அதனை வெல்லும்.
"யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்-பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்" என்று நான் கீதையில் உரைத்ததை மறந்து விட்டாயா நாரதா? உலகம் என்னை அறியவே  இந்த திருவிளையாடல். கவலைப் படாதே.விரைவில் உலகம் பூராவும் என் நாமம் ஒலிக்கும். மக்களின் இடர் நீங்கி நன்மை உண்டாகும்.

..உமக்கு எல்லாமே விளையாட்டுதான். நான் சென்று வருகிறேன் ப்ரபோ.
நாராயண..நாராயண..

என்வாழ்வின்பொன்னானதருணங்கள்


கடவுளால் அளிக்கப்பட்ட இவ்வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும்  பொன்னானவைதான் என்பது என் எண்ணம்.

அன்பான பெற்றோர், அருமையான கணவர், அழகான குழந்தைகளை அடைந்த நேரம் பொன்னானதுதானே!

தமிழகத்தைத் தாண்டாத எனக்கு திருமணமாதும் வடக்கே வாழும் வாய்ப்பு. கணவருடன் கைகோர்த்து கண்மலர்ந்து தாஜ்மகாலை ரசித்து அதன் அழகில் சொக்கிய நேரம் மறக்க முடியாத சொக்கத் தங்கமான தருணம்!

பின் அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட அவர்களின் படிப்பு  மற்றும் இதர திறமைகளில் ஊக்குவித்து அவர்களைப் பத்தரை மாற்றுத் தங்கங்களாக  உயர்த்த நேரம் போனதே தெரியாமல் உழைத்த தருணங்கள் பொன்னானதே!

மூத்த மகன் +2வில் தமிழகத்தில் மாநில மூன்றாமிடமும், அடுத்த பிள்ளை +2வில் மாநில முதலிடமும் பெற்று என்னை ஈன்ற பொழுதின் பெரிதுவக்க வைத்த பொன்னான தருணங்கள் நினைக்கும்போதே மனம் நிறைப்பவை!

இரண்டாம் மகன் +2வில் Commerce பிரிவு எடுத்து மாநில முதலாக வந்து திரு சேஷன், அன்றைய முதல்வர் திரு கருணாநிதி ஆகியோரிடம் பரிசுகள் பெற்றதோடு KKR பாமாயில் கம்பெனியாரின் மாருதி கார் பரிசு பெற்றதும் என் வாழ்வின் ஜொலிக்கும் தங்கத் தருணங்கள்!

என் மகள் மருத்துவரானதும், கடைக்குட்டி மகன் IITயில் M.Tech படித்து சிங்கப்பூரில் வேலைக்கு சென்றதும் 'என் தங்கமே' என்று அவர்களைப் பாராட்டிப் பரவசமடைந்த  ஹால்மார்க் தங்கத் தருணங்கள்!

மாற்றுக் குறையாத தங்கம் போன்ற மருமகள்களும், இன்னொரு பிள்ளையாக மாப்பிள்ளையும், நவரத்தினங்களாக பேரன் பேத்திகளும் கிடைத்த நேரங்கள் ஒரு நல்ல சிறப்பான வாழ்க்கை கிடைத்ததை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறிய  தங்கத் தருணங்கள்!

புத்தகங்களில் மட்டுமே படித்தறிந்து அவற்றின் அழகில் சொக்கிப்போன பாரிஸையும், ஸ்விஸ்ஸையும் பார்க்க முடியுமா என்று ஆசைப்பட்ட எனக்கு அவை மட்டுமல்லாமல் கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம், பாலியின் இந்து ஆலயங்கள், பாங்காக்கின் டைகர் டெம்பிள்,ரோமின் கொலோசியம், வாடிகனின் புகழ் பெற்ற சர்ச், லண்டன்  பக்கிங்காம் அரண்மனை என்று பல நாடுகளையும் கண்டு மகிழக் கிடைத்த  வாய்ப்புகள் தகதகக்கும் தங்க நினைவுகள்!

பாரத நாட்டின் பல ஆலயங்களை தரிசித்திருந்தாலும் சமீபத்தில் சென்று தரிசித்த  சார்தாம் யாத்திரையில் கேதார்நாத் ஈசனை தொட்டு வணங்கியபோது 'பொன்னார் மேனியனை தரிசித்து பிறந்த பயனை அடைந்து விட்டோம்' என்று மெய்சிலிர்த்த பொன்னான தருணம்!

முப்பது வருடங்களாக தமிழ் இதழ்களில் கதை, கட்டுரை, போட்டிகளில் எழுதி அவை பிரசுரமாகி அவற்றை இதழ்களில் கண்டு சந்தோஷிக்கும் நேரம் பொன்னே கிடைத்ததாய் மகிழ்ந்த நேரங்கள்!

கடந்த இரண்டரை ஆண்டுகளாக மத்யமரில் பல தலைப்புகளில் எழுதுவதும், அவற்றிற்கு பல மத்யமர்களின் பாராட்டுகளும், எழுத்துத் திறமையை ஊக்கப்படுத்தும் பூஸ்ட்டாக அட்மின்களால் கொடுக்கப்பட்ட  ஏழு POTW மற்றும் 2 GEMம் பெற்ற நேரங்கள் 'இங்கு நம் எழுத்துக்கும் மதிப்பு இருக்கிறது' என்று மனம் களிப்படைந்த நிமிடங்கள் தரம் குறையாத பொன்னான தருணங்கள் மட்டுமா என்னை வானில் சிறகடித்து பறக்க வைத்த தருணங்களும் கூட!

நான் போடும் பலவகைக் கோலங்கள், இசையுடன் இயைந்து பாடும் கீர்த்தனைகள், விதவிதமாய் செய்யும் பாரம்பரிய மற்றும் புதுவித சமையல்கள், என் blouseகளில் நானே உருவாக்கி தைக்கும் டிசைன்கள், அழகிய கைவேலைகள்..இவற்றை மனம் ஒன்றி செய்து அவை சிறப்பாக அமையும்போது அந்த நேரங்கள் நானே மகிழும் தங்கத் தருணங்கள்! இன்னும் இதுபோல் நிறைய்...ய!

ஒரு இல்லத்தரசியாக இருந்து எல்லா கடமைகளையும் முடித்து என் கணவருடன்  இனி இறை சிந்தனையுடன் வாழும்  வானப்ரஸ்த வாழ்க்கைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இப் பொன்னான நேரத்தில் 'இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கையில் நாம் என்ன சாதித்தோம்' என யோசிக்க வைத்து அந்தப் பொன்னான நேரங்களை மீண்டும் நினைத்துப் பார்க்க வைத்த மத்யமருக்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏🏼🙏🏼

உலகம் முழுக்க விடுமுறை..!

ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபட்ட நாட்களில்தான் விடுமுறை விடுவார்கள். ஒட்டு மொத்தமாக எல்லா நாடுகளுக்கும் விடுமுறை கொடுத்து நாம் கேள்விப் படுவது இதுவே முதன்முறை!

இன்றைய நம் நிலையை நினைத்துப் பார்க்கிறேன். நான்கைந்து மாதங்களுக்கு முன்பு இது போன்ற நிலைமையை நாம் யோசிக்கக் கூட இல்லையே? கோடை விடுமுறைக்கு எங்கே எவ்வளவு நாள் போகலாம் எப்படியெல்லாம் enjoy பண்ணலாம் என்று எவ்வளவு முடிவு செய்து வைத்திருந்தோம்? இன்றோ வாசல்படியைக் கூட தாண்ட  முடியாத நிலை. வெளியூர்களில் வெளிநாடுகளில் இருக்கும் குழந்தைகள் பற்றிய கவலை.

70, 80 ஆண்டுகளுக்கு முன்பு நம் பெரியோர்கள் நமக்கு காட்டித் தந்த வாழ்க்கை நெறிமுறைகளை நாம் இன்று கடைப் பிடிக்கிறோமா?

அன்றைக்கு மடி ஆசாரம் என்று பெரியவர்கள் சொன்னதை இந்நாளில் கேலி செய்து புறம் தள்ளினோம். சாதத்தை தொட்டால் கை அலம்ப வேண்டும், கீழே அமர்ந்து சாப்பிட வேண்டும், சாப்பிட்ட இடத்தை துடைக்க வேண்டும் என்பதெல்லாம் மறந்தோம்.

வாசலில் சாணி கரைத்த தண்ணீரை தெளித்தால் கிருமிகள் வீட்டுக்குள் வராது, வெளியில் போய் விட்டு வந்தால் கை கால்களை அலம்ப வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை என்றானது. தலைமுடியைத் தொட்டாலும், நகம் வெட்டினாலும் கை அலம்ப வேண்டும் என்றதெல்லாம் கிருமிகள் நம்மிடமிருந்து விலக என்பதை அறியவில்லை.

வாசலில் கோலம் போடுவது தீய சக்திகளை உள்நுழையாமல் தடுக்கும் என்ற நம்பிக்கை
யெல்லாம் பத்தாம்பசலித்தனம் என்றாகி ஸ்டிக்கர் கோலம் இடம் பிடித்தது. வாசலில் மட்டுமா..பெண்களின் நெற்றியிலும் குங்குமம் வைப்பது அநாகரிகமாகி ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது.

ஒரு குழந்தை போதும் என்ற மனோபாவம் வளர்ந்தது.  ஒருவருக்கு ஒரு வீடு என்பது போக இரண்டு மூன்று வீடுகள்.  எல்லோரிடமும் எக்கச்சக்க   பணவசதி. பணத்தால் எதையும் செய்ய முடியும் என்பதால் குடும்ப உறுப்பினர்களே ஒருவருக்
கொருவர் தேவையில்லாமல் போய்விட்டது.

சாப்பாடு கூட ரெடியாகக் கிடைக்கும் போது தாய் தாரம் எதுவுமே அவசியமில்லா
ததாயிற்று. பணம் அதிகமாக கடவுளிடம் பயம் விலகி பக்தியும் காணாமல் போனது. ஆசார அனுஷ்டானங்கள்,  இரு பாலாருக்குமான அத்யாவசிய நியமங்கள் அநாவசியமாகிப் போனது.

ஆலயங்களில் இறைவன் எதிரிலேயே ஊழல், ஏமாற்றுதல், கடவுளை தரிசிக்க பணம் வாங்குதல் என்று 'கடவுளாவது ஒண்ணாவது..அவர் வெறும் கல்' என்று அவரை பணம் சம்பாதிக்க மட்டுமே கருவியாகக் கொண்டு வாழும் மக்கள் அதிகமாகிப் போனது. பாவம் செய்பவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்பது போய் பாவம் செய்தாவது சொத்து சேர்க்கும் குணம் அதிகமாயிற்று.

அதர்மம் ஓங்கும்போதுதான் இறைவனின் அருள் வெளிப்படும். நமக்கு துன்பமும், துயரமும் வரும்போது நாம் தட்டுவது  இறைவன் வாழும் ஆலயக் கதவுகளையே.அந்த இறைவனே இன்று கோபித்துக் கொண்டு நம்மை அண்டவிடாது ஆலயக் கதவுகளை அடைத்துக் கொண்டு விட்டாரோ?

நாட்டில் எத்தனை திறமை வாய்ந்த  ஜோசியர்கள்.அவர்களாலும் இப்படி ஒரு நிலைமை வரும் என்பதைச் சொல்ல முடியவில்
லையே. இங்குதான் நாம் இறைவன் இருக்கிறான் என்று உணர முடிகிறது.  அன்றைய வழக்கங்கள் எவ்வளவு ஆரோக்கியமானவை என்று அறிய முடிகிறது. மறந்துபோன கை அலம்பும் பழக்கம் இன்று மறுக்க முடியாத அவசியம் ஆகிப் போனது. என்னே இறைவனின் திருவிளையாடல்.

ஒரு சின்ன கண்ணுக்கு தெரியாத கிருமி எப்படி இவ்வுலகையே ஆட்டி வைத்து கண்ணாமூச்சி ஆடுகிறது! பந்த், வேலை நிறுத்தங்கள் உலகுக்கு புதியல்லை. ஆனால் இன்று போல் உலகின் அத்தனை  தெருக்களும் அமைதியாக இருந்ததுண்டா? பூமியின் பாரம் தாங்காத பூமாதேவி ஓய்வு எடுக்கிறாளோ?! அவளுடன் இணைந்து  சகலமும் சாந்தியில் திளைக்கின்றன. இயற்கை தவிர அத்தனையும் மக்கள் உட்பட ஓய்வு எடுக்கிறோம்!

உலகை நல்வழிப்படுத்தவும் நாடுகளுக்குள் பகைமையைத் தவிர்க்கவும் அமைதியை நிலைநாட்ட போராடிய பெரியோர் எத்தனை பேர்? இன்று கொரோனா என்ற பெயரில் உருவான கிருமி கோடீஸ்வரனிலிருந்து ஒன்றுமே இல்லாத ஓட்டாண்டி வரை அத்தனை பேரையும் பேரமைதியில் ஒடுக்கி விட்டது.

நேரத்துக்கு ஒரு நாடாகப் பறக்கும் ஒரு தொழிலதிபருக்கும் சின்ன சந்தில் வாழும் ஏழைக்கும் வாழ்க்கை ஒரே மாதிரிதான்..வாழ்வதும் ஒருமுறையே என்று ஆணித்தரமாக அறிய வைத்து விட்டது கொரோனா.

இதிலிருந்து மீள நமக்கு ஒரே வழி அந்த இறைவனிடம் கதறி அழுது நம்மைக் காப்பாற்ற வேண்டுவது ஒன்றே.அவன்தாள் வணங்கி அவனருளை வேண்டுவோம். நாம் எவ்வளவு சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், அதைத் தீர்மானம் செய்து, நடத்திவைப்பது பகவான் தான். அதனால் எல்லாப் பொறுப்புகளையும்,பகவானிடம் ஒப்புவித்துவிட்டு, “பகவானே.! உன் சித்தம்.!" என்று சொல்லி,அவனைச் சரணடைவோம். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை.

இனி வரும் தமிழ்ப் புத்தாண்டு சார்வரியில் நமக்கு புதிதான சுத்தமான பூமியைத் தந்து நம்மை ஆரோக்யமாக வாழவைக்க இறைவனை பிரார்த்திப்போம்.

Saturday 14 March 2020

நன்றி சொல்லும் நேரமிது😊




மத்யமர் கோலப் போட்டியில் என் கோலத்திற்கு  பரிசாக சான்றிதழ்! மிக மகிழ்ச்சியான விஷயம்💃 கோலம் போடுவது எனக்கு மிகப் பிடித்தமானது. புள்ளி வைத்தோ, ரங்கோலியோ, உருவக் கோலங்களோ எல்லாம் என் கைவண்ணத்தில் வண்ணக் கோலமாக்குவேன். மார்கழி வருமுன்பே கோலத் தேர்வை ஆரம்பித்து விடுவேன்.

இம்முறை போட்டிக்கான மூன்று கோலங்களுமே ஸ்பெஷலாக தேர்வு செய்து போட்டேன். இதில் எனக்குப் பிடித்தது Kerala Mural Art முறையில் போட்ட
ஸ்ரீ குருவாயூரப்பன்
கோலம். இதைப் போட்டு முடிக்க 4 மணி நேரம் ஆயிற்று. இந்த வருடக் கோலங்களில் எனக்குப் பிடித்த கோலம் இது.






சூரிய கிரகணத்தன்று போட்ட போட்டிக் கோலம் 3D கோலம். பதிவு போட்ட ஐந்து நிமிடத்தில் அப்ரூவ் செய்த மாடரேட்டர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்!

நான் போட்டிக்கென போட்ட முதல் கோலம் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டது. இது Sanskar Barathi rangoli முறையில் போட்டேன். அதில் 'மத்யமர்'என்ற வார்த்தையை கோலத்துக்குள் ளேயே எழுதியிருந்தேன். அதை தனி ஃபோட்டோவாகவும் போட்டிருந்தேன். அதைக் கண்டு பிடிக்க முடியாத Selvi Shankar 'மத்யமர் பெயரில்லாத கோலத்தைப் போட்டிக்கு எடுத்துக்க முடியாது' என்று சொல்ல நான் எடுத்துக் கூறியதும் ஒப்புக் கொண்டார்.

நம் தலைவரோ Shankar Rajarathnam கோலத்துடன் தனி பதிவு போட்டு அதில் 'மத்யமர்' எழுதியிருப்பதைக் கண்டு பிடிக்கச் சொன்னது என் கோலத்துக்கு மேலும் மெருகேற்றியது. 'வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்' வாங்கிய மகிழ்ச்சி எனக்கு! மிக்க நன்றி அட்மின் சார்🙏
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1263529550501523/

என் கோலத்தைப் பரிசுக்கு தேர்ந்தெடுத்த நடுவர்கள் Vijayshree Krishnan, Mallika Ponnusamy , Thailambal ஆகியோருக்கு என் நன்றிகள்🙏

மத்யமர் magazineலும் மத்யமர் பற்றிய என் கருத்தும், இந்தக் கோலமும் பிரசுரித்தமைக்கு மிக்க நன்றி..நன்றி🙏



Thursday 12 March 2020

அப்பா..அன்றும்..இன்றும்!👨‍🦳

அப்பா என்றாலே ஒரு சுதந்திரமும் சந்தோஷமும் மனதில் வந்து உட்காருகிறது. ஒவ்வொரு தலைமுறை அப்பாக்களில் வித்யாசம் இருந்தாலும் அவர்களின் பாசத்தில் அப்பழுக்கிருக்காது. குடிசையோ கோபுரமோ அப்பாவின் அன்பு வெளிக் காட்டாவிட்டாலும்  அளவில்லாதது.👨‍👧‍👦

1940-'50 களில்...
என் தாத்தா..அம்மாவின் அப்பா மிகவும் ஸ்டிரிக்ட் என்பார் என் அம்மா. அவருக்கு 4 பெண்களும் 3 பிள்ளைகளும். மனைவி இளவயதில் இறந்து விட தன் நான்கு பெண்களையும் தாயில்லாமல் வளர்ந்த பெண்கள் என்பதனால் யாரும் குறை சொல்லக் கூடாது என்று மிக கட்டுப்பாடாக வளர்த்து திருமணம் செய்து கொடுத்தார். என் தாத்தா முன்னால் அவர்கள் குரல் உயர்த்தியும் பேச மாட்டார்கள்.

1960-'70 களில்...
என் அப்பா நான் ஒரே பெண் என்பதால் என் தம்பிகளிடம் காட்டிய கண்டிப்பு என்னிடம் கிடையாது. அந்தக் கால typical அப்பா. பிள்ளைகள் நன்கு படித்து நல்ல வேலைக்குப் போகவும் பெண்ணை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்! ஆனால் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்ததில்லை..
தேவையானவற்றுக்கு
மறுப்பு சொன்ன
தில்லை.👨

மாதம் ஒருமுறை பீச், எக்ஸிபிஷன், பாட்டுக் கச்சேரி, நல்ல சினிமாக்கள், ஏப்ரல் மாத விடுமுறையில் சுற்றுப் பயணம் என்று எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்.தன் குழந்தைகள் எல்லாம் அறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம்.👨‍👧

எங்கள் ஆசைகளை நைஸாக அம்மா மூலம் அப்பாவுக்குத் தெரிவித்து நிறைவேற்றிக் கொள்வோம்! நாங்கள் settle ஆனபின் அப்பாவின்...தான் சாதித்து விட்டோம். குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள்...என்ற சந்தோஷத்தைப் புரிந்து கொண்டேன்.👴

1980- '90 களில்..
என் கணவருக்கு அவரது நான்கு மாதத்திலேயே அப்பா மறைந்துவிட்டார். அப்பாவின் முகமே தெரியாது. அதிலும் துரதிர்ஷ்டம் என் மாமனாரின் புகைப்படமே கிடையாது. அப்பா இல்லாதது அவருக்கு மிகவும் குறை என்று வருந்துவார். அப்பாவின் அன்பை அனுபவிக்காததால் தன் குழந்தைகளிடம் மிக அன்பாக நடந்து கொள்வார்.

எல்லா வீடுகளிலும் குழந்தைகள் அம்மா வழியாகத்தான் தம் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். என் வீட்டில் நேரெதிர்! சிறு வயதிலிருந்து அவர்கள் நியாயமாகக் கேட்டதை என்ன விலையானாலும் வாங்கித்தரத் தவறியதில்லை. நான் கோபித்தால்..எனக்குதான் அந்தக் கொடுப்பினை இல்லை. என் குழந்தைகளுக்கு நான் செய்யாமல் யார் செய்வார்கள்?..என்பார்.

என் இரண்டாம் மகன் பத்தாம் வகுப்பில் science பாடங்களில் நிறைய மதிப்பெண் பெற்றிருந்தான். +1ல் அவன் பள்ளி ஆசிரியர்கள் அவனை Science க்ரூப் எடுத்துக் கொள்ள சொல்லியும் தனக்கு விருப்பமான காமர்ஸ் பிரிவை தேர்ந்தெடுத்
தான். இதைப் பற்றி ப்ரின்சிபால் என் கணவரிடம் சொல்லி அவனை science பிரிவில் சேருங்கள் என்றபோது என் கணவர்..அவனுக்கு எது இஷ்டமோ அதிலேயே சேர்ந்து கொள்ளட்டும். நான் எதுவும் சொல்ல மாட்டேன்..என்று கூறி விட்டார். காமர்ஸ் எடுத்தும்  +2வில் மாநில முதலாகத் தேறி அன்றைய முதல்வர் திரு. கருணாநிதியிடம் பரிசு வாங்கி பள்ளிக்கும் பெருமை சேர்த்து, ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றான்.🧑

'குழந்தைகளை எப்போதும் சந்தேகப் படாமல் அவர்கள் எடுக்கும் முடிவுகளிலுள்ள தவறுகளை சுட்டிக் காட்டி ஆலோசனை சொல்லலாம். அவர்கள் விருப்பங்களில் நாம் தலையிடக் கூடாது. தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன். தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டும்'  என்று சொல்வார் என் கணவர். இன்றும் 'அப்பாவுக்கு எல்லாம் தெரியும்' என்ற எண்ணத்தில் அவர்கள் எந்த ஆலோசனை தேவையென்றாலும் அப்பாவைக் கேட்டே செய்வார்கள். 🤵

என் பெண்ணும் பிள்ளைகளும் காதலித்தபோது அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பச்சைக்கொடி காட்டியவர் என் கணவர். நான் மறுத்துப் பேசியபோது..என் குழந்தைகளுக்கு நல்ல படிப்பைக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் சரியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு..என்று திடமாக நம்பியவர். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை.  மிகச் சிறப்பாக வாழ்கிறார்கள்.👫

இக்கால அப்பாக்கள்..
இந்தக்கால அப்பாக்களான என் பிள்ளைகள், மற்றும் மாப்பிள்ளை குழந்தைகளுக்கு நிறையவே சலுகைகள் தருகிறார்கள்.
அவர்கள் கேட்பதெல்லாம் தட்டாமல் வாங்கித் தருகிறார்கள். ஒரு விஷயம் குழந்தைகளிடம் சொல்லிவிட்டால் அதை உடன் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகள் மனம் நொந்து விடுவார்களாம்.👨‍👧‍👧

ஜெர்மனியில் இருக்கும என் பிள்ளை ஒருமுறை என் பேத்தியை வெளியில் அழைத்து செல்வதாகக் கூறியிருந்தான். அதுவும் ரெடியாகிக் காத்துக் கொண்டிருந்தது. அவனுக்கு அன்று வேலை அதிகம் என்பதால் முடியவில்லை. வேலையை முடித்தவன் ..கிளம்பும்மா வெளில போகலாம்..என்று சொல்ல, நானோ..நீ டயர்டா இருக்கயே. நாளைக்கு போய்க்கலாமே..
என்றேன்.
..நான் உன் பேத்திட்ட சொல்லிட்டேன். அழைச்சுண்டு போகாட்டா'அப்பா நம்மை அழைச்சுண்டு போகல. அப்பா சொல்வதை நம்ப முடியாது'னு அவ மனசுல எண்ணம் வந்துடும்..என்றான்.
அடேயப்பா! இந்தக் கால அப்பாக்களின் எண்ணம் வித்யாசமாதான் இருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

சினிமாவில் காட்டும் அப்பாக்கள் மட்டுமே தன் பெண் காதலித்தால் அறையில் அடைத்து தன் சுயநலத்துக்காக பணக்காரனைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதும் காதலித்தவனை கொலை செய்ய ஆட்களை ஏவுவதுமான கொடுமைக்கார அப்பாக்கள் என்று நினைத்திருந்தேன்.

எனக்கு தெரிந்த பெண் ஒருத்தி வேற்றுமதக் காரரை காதலித்து மணந்ததற்காக அவளிடம் 'எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்கள் சொத்தில் பங்கு கேட்க மாட்டேன்' என்று எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டாராம் அவள் அப்பா! இப்படியும் அப்பாக்கள்!!

சிநேகிதி - பொன்மணி குக்கரி குயின் சமையல் போட்டி - 6 குழந்தைகள் விரும்பும் பிக்னிக் ரெசிபிகள்


சிநேகிதி - பொன்மணி
குக்கரி குயின் சமையல் போட்டி - 6
குழந்தைகள் விரும்பும் பிக்னிக் ரெசிபிகள்

ரெசிபி..1
ஹெல்தி டிட்பிட்ஸ்
தேவை
கடலை மாவு - 50 கிராம்
அரிசி மாவு - 50கிராம்
பொட்டுக் கடலை மாவு - 50கிராம்
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை
சமையல் சோடா - 1சிட்டிகை
இஞ்சி -  1 சிறுதுண்டு
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
காரப்பொடி -1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
பாதாம் பருப்பு - 20 கிராம்
பிஸ்தா பருப்பு - 25கிராம்
முந்திரி பருப்பு - 25கிராம்
நெய் - 4 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு தேவையான அளவு

செய்முறை
பொட்டுக்கடலையை லேசாக சூடுவர வறுத்து பொடி செய்யவும்.
முந்திரிப்  பருப்பை சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
பாதாம் பிஸ்தாவை வெந்நீரில் ஊறவைத்து சிறு துண்டுகளாக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, சமையல் சோடா, காரப்பொடி, கரம் மசாலா, உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தாபருப்பு, வெங்காயம்,  இவற்றுடன் மிக்ஸியில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
நெய்யை சூடாக்கி கலவையில் கொட்டவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை சூடாக்கவும்.
மாவு கலவை சிறிது எடுத்துக் கொண்டு பிசிறினாற் போல் காய்ந்த எண்ணெயில் போட்டு பொறிக்கவும். சிவந்தவுடன் எடுத்து வடிய விடவும்.
இனிமையான  ஹெல்தி டிட்பிட்ஸ் பிக்னிக் சமயங்களுக்கு ஏற்ற ரெசிபி!  குழந்தைகளுக்கு சத்தானது.  

ரெசிபி..2
மிக்ஸட் நட்ஸ் ரௌண்ட்ஸ்
தேவை
துண்டுகளாக்கிய மிந்திரி..50 கிராம்
துண்டுகளாக்கிய பாதாம்..25 கிராம்
துண்டாக்கிய பிஸ்தா..15 கிராம்
விதை நீக்கிய பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம்..50 கிராம்
வறுத்து தோல் உரித்து இரண்டாக்கிய வேர்க்கடலை..1/2 கப்
பொட்டுக்கடலை..1/2 கப்
கொப்பரைத் தேங்காய்த் துருவல்..1/4 கப்
லிக்விட் குளுகோஸ்..50 கிராம்
வெல்லம்..250 கிராம்
ஏலப்பொடி..1டீஸ்பூன்
சுக்குப் பொடி..1 டீஸ்பூன்
நெய்..7-8 டீஸ்பூன்

செய்முறை
மிந்திரி, பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, பொட்டுக்கடலையை நெய்யில் தனித்தனியே வறுக்கவும்.
வெல்லத்தை கம்பிப் பதத்திற்கு முன்பான பாகு காய்ச்சி இறக்கவும்.அதில் வறுத்த நட்ஸ், கடலை, பொட்டுக்கடலை சேர்க்கவும். துண்டாக்கிய பேரீச்சை, கொப்பரைத் துருவல், லிக்விட் குளுகோஸ், ஏலப்பொடி  சேர்த்து நன்கு கிளறவும். சிறுசிறு உருண்டைகளாக்கவும். வித்யாசமான ருசியில் சத்தான இந்த உருண்டைகள் குழந்தைகளுக்கு பிடித்த பிக்னிக் ரௌண்ட்ஸ்!

ரெசிபி..3
க்ரிஸ்பி சிலிண்டர்
வரகரிசி..1கப்
சாமை அரிசி..1கப்
பெரிய வெங்காயம்..1
புள்க்காத கெட்டித் தயிர்..1/2 கப்
காரட் துருவல்..1/2 கப்
பொடி ரவை..3ஸ்பூன்
சிறு துண்டுகளாக்கிய மிந்திரி..2டீஸ்பூன்
பெருங்காயப் பொடி..சிறிது
காரப்பொடி..1 டீஸ்பூன்
கரம் மசாலா..1ஸ்பூன்
விழுது நெய்..2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்..2
இஞ்சி..சிறுதுண்டு
உப்பு, எண்ணெய்..தேவையான அளவு

செய்முறை
வரகரிசி,சாமையை நன்கு களைந்து தயிரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும். ஊறிய அரிசியுடன் ரவை, மிந்திரி, காரப்பொடி, கரம் மசாலா, நெய்,உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து நீள் வடிவ சிலிண்டர் போல் உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சாஸுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான சிறுதானிய ரெசிபி.

Radha Balu
M/o B.Ganesh
SD, Block no.6
Jains Abishek Apartments
173, Velachery Main Road
Selaiyur
Chennai
600073