Sunday 4 May 2014

முத்தான கதை விமரிசனத்திற்கு முதல் பரிசு....

நீ முன்னாலே போனா ....நா பின்னாலே வாரேன் ...

திரு வை.கோபு சார் அவர்களின் மேலே குறிப்பிட்ட கதைக்கு நான் எழுதிய விமரிசனத்திற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.கதையைப் படிக்க கீழே கொடுத்துள்ள அவரது தளத்திற்கு செல்லவும்.

 http://gopu1949.blogspot.in/2014/04/vgk-14.html

அதற்கான என் விமரிசனம்...


மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.....இது அந்நாளைய பெரியோர் வாக்கு.
அந்த பெரிசு என்ன பேச்சு பேசுது பாரு...ரொம்ப திமிருதான்...இது இந்தக் கால இளசுகள் பேச்சு.
அப்படிப்பட்ட முதியோர்களையும், பல முதியோர்களின் வாழ்வில்  தம் கடைசி நாட்களைக் கழிக்க வலுக்கட்டாயமாக அனுப்பப்படும் முதியோர் இல்லங்களையும் மையமாகக் கொண்ட வாழ்வியல் தத்துவத்தை விளக்கும் அருமையான கதையை எழுதிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.
ஒரு தந்தையை, தன்னை பெற்று, வளர்த்து,ஆளாக்கி, நல்லவற்றை, தீயவற்றைச்  சொல்லிக் கொடுத்து, ஒரு நல்ல மனிதனாக உருவாக்கியவரை பாரமாக எண்ணி 'என் வீட்டில் இருக்காதே' என்று சொல்லாமல் சொல்லி முதியோர் இல்லத்தில் கொண்டு விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் செல்பவனையும், 'பார்த்து போப்பா' என்று சொல்லத்துடிக்கும் அந்தப் பித்தான தந்தையின் பாசத்தை கல்மனம் கொண்ட அந்தப் பிள்ளை எப்படி அறிவான்?
நாம் பஸ்ஸிலோ, ரயிலிலோ, மார்க்கெட்டிலோ பார்ப்பவர்களிடம் கூட அவர்கள் குடும்பம் பற்றிக் கேட்பதுண்டு!அந்த இல்லத்தில் நிரந்தரமாகத் தங்க வந்திருந்த அந்தப் புதிய முதியவரைப் பற்றி அறிய அத்தனை பேரும் ஆவலாய் இருந்ததில் வியப்பென்ன?அவர் கதையைக் கேட்ட அரட்டை  ராமசாமிக்கு மட்டுமல்ல, நமக்கும் அவர் சொன்ன வி ஷயங்கள் சற்று சுவாரசியத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன.
மூன்று குழந்தைகள், திருமணமான பேத்தி, எண்பதுக்குமேல் வயது, மனைவி இறந்து 15 நாட்களாவதற்கும் முதியோர் இல்லம்....அதுவும் மனைவியை அவரே கொன்று விட்டதாக குற்றச் சாட்டு.....இவை அந்த முதியவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆவலை நமக்கும் உண்டாக்கி விடுகின்றனவே! இந்த இடத்தில் ஆசிரியர் 'தொடரும்' போட்டு விட்டாரே?

"என்னங்க...தூங்கிட்டீங்களா? எப்படி இருக்கீங்க? இந்தப் பிள்ளைங்களை நெனைச்சாலே எனக்கு ரொம்ப கோபமா வருதுங்க. நான் போயி ஒரு  மாசம்கூட ஆகலியே? அதுக்குள்ளே உங்களை இங்க கொண்டுவந்து விட்டுட்டாங்களே? என்னை நீங்கதான் கொலை செய்துட்டதா வேற சொல்லிட்டாங்களே? என்னால தாங்க முடியலிங்க."



"அழாத கோமு! அவங்களுக்கு நம்ம அன்பும், பாசமும் புரியல. உன்னை எல்லா காரியமும் முறையா பண்ணி மேல அனுப்பினார்களே...இங்க எப்பிடி வந்த?"
"என்னங்க...இப்படி கேட்டிட்டீங்க? உங்களை விட்டு நான் எங்க போவேன்?"
"சரி...வருத்தப்படாம தூங்கு. நானும் இந்தப் புது இடத்துல தூங்க முயற்சி பண்றேன்."


விமரிசனத்தைத் தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்..

 http://gopu1949.blogspot.in/2014/05/vgk-14-01-03-first-prize-winners.html




No comments:

Post a Comment