Wednesday 28 May 2014

முதல் பரிசைப் பெற்றுக் கொடுத்த 'சூழ்நிலை'....

திரு வை.கோபு சார் அவர்களின் சிறுகதை 'சூழ்நிலை'கதைக்கு நான் எழுதிய விமரிசனத்திற்கு முதல் பரிசு கிடைத்ததை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கதையைப் படிக்க ....
 http://gopu1949.blogspot.in/2014/05/vgk-17.html

பரிசு பெற்ற விபரம்...

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-17-01-03-first-prize-winners_27.html

கதைக்கான என் விமரிசனம்...
மன வருத்தத்தில் ஆழ்ந்து இருந்த ஜெயாவை மொபைல் ஒலி கலைத்தது.

ஹாய் ஜெயா.. நான் மீரா பேசறேன்..
எப்படி இருக்க?
இருக்கேன்பா..நீ எப்போ வந்த? ஊர்ல உன் ஹஸ்பெண்ட், இன்லாஸ் எல்லாரும் சவுக்கியமா?


ஹ்ம்ம்...நான் நேத்திக்கு வந்தேன்.உனக்கு கல்யாணத்துக்கு உங்கம்மா, அப்பா பாக்கராளாமே? என் அம்மா இப்போதான் சொன்னா. எப்படிப்பட்ட மாப்பிள்ளைடி எதிர்பார்க்கற?



ப்ச்..எனக்கு கல்யாணமே பிடிக்க்கல மீரா. எங்கப்பா பண்ணின ஒரு காரியம் இன்னிக்கு எனக்கு கல்யாணமே வேண்டாம்னு தோண வெச்சுடுத்து.


அப்படி என்ன பண்ணினார்? உன் பேரன்ட்ஸ் ரொம்ப 'ஐடியல் கப்பிளா'ச்சே?


அப்பிடிதான் நானும் நெனைச்சேன். நேத்து எங்க தாத்தா ஒரு சாலை விபத்தில இறந்து போயிட்டதா ஃ போன் வந்தது. எப்பவும் போல அப்பா பிசினஸ் வேலையா சென்னை போயிருக்கார். அம்மாவா அழுது புலம்பறா . நான் அப்பாக்கு விஷ யத்தை சொன்னா, அப்பா கொஞ்சமும் வருத்தமோ, அதிர்ச்சியோ இல்லாம சிரிச்சுண்டே 'சரி, நான் போய் பார்த்துட்டு சொல்றே'ங்கறார்.இப்படி ஒரு மனுஷரான்னு எனக்கு வெறுத்துப் போச்சு.நாளைக்கு நான் கல்யாணம் பண்ணிக்கப் போறவனும் இப்படி இருந்தா  என்ன பண்ணறது? என் அம்மாவுக்காவது கூடப் பிறந்தவா இருக்கா. என் அம்மா, அப்பாக்கு என்னைத் தவிர யார் இருக்கா?



உங்கம்மா சென்னை போயாச்சா? உன் அப்பா அம்மா வீட்டுக்கு போனாரா? 


அம்மா 'தன்வீட்டு மனிதர்களை அப்பா எப்பவுமே மதிப்பதில்லை' என்று கோபப் பட்டுண்டே போனா.அப்பாவின் பணத்திமிர்தான் யாரையும் மதிப்பதில்லை என்று அம்மாவுக்கு கோபம். அப்பாவும் அன்னிக்கே என் தாத்தாவைப் போய் பார்த்தாராம். காரியம் எல்லாம் முடிந்ததும் வந்து விட்டார். அப்பாவிடம் என் அம்மா எதுவும் பேசவே இல்லையாம். பின்னே இருக்காதா? நானாக இருந்தால் டைவர்சே பண்ணிருப்பேன்.



உன் அப்பா என்ன சொன்னார்?அவரிடம் நீ கேட்க வேண்டியதுதான ?


எனக்கு என் அப்பாவிடம் பேசவே பிடிக்கல.நான் எதுவும் அவர்ட்ட கேக்கல.



வருத்தப் படாத ஜெயா. உன் அப்பா ஏன் அப்படி பேசினாரோ? நேர்ல பேசினா எல்லாம் சரியாயிடும். அம்மாவுக்கு என்னோட கண்டலன்சையும் சொல்லிடு.நான் இன்னும் இரண்டு நாள்ல பாம்பே கிளம்பறேன்.அடுத்த தடவை வரப்போ நாம மீட் பண்ணலாம்.பை ஜெயா!



தன்  அப்பா இறந்த விஷ யத்தைக் கேட்டு வருத்தப் படாத கணவனிடம் எந்த  மனைவிக்கும் கட்டுக்கடங்காமல் கோபம் வருவதை மிக நியாயமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.



அகால மரணம் நடந்த வீட்டில் தன மனைவியிடம் எதையும் விபரமாகச் சொல்ல முடியாத மகாலிங்கம், தன்  மனைவியை அவளது தாய்க்கு ஆதரவாக ஒரு மாதம் விட்டுச் சென்றது அவருக்கு தன்  மனைவி மற்றும் அவளது குடும்பத்தாரிடம் இருந்த அன்பைக் காட்டுவதாக ஆசிரியர் அருமையாக எடுத்துச் சொல்கிறார். 

அதன் பொருட்டே ஈஸ்வரியின் தாயார்  அவரைப் பற்றி மிக உயர்வாகப் பேசுவதையும், இறந்த வீட்டில் போகும்போது சொல்லிக் கொள்ளக் கூடாது என்பதையும் இயல்பாகக் காட்டியுள்ளார் ஆசிரியர்!


ஹலோ..ஜெயா....சௌக்கியமா? அம்மா வந்தாச்சா?


எப்போ வந்த மீரா? என்ன திடீர் விசிட்?


எனக்கு இப்போ அஞ்சாம் மாசம் ஜெயா. அதான் அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன்.



கங்க்ராட்ஸ் மீரா. நான் கண்டிப்பா இந்த முறை உன்னை வந்து பாக்கறேன்.


அப்பறம்....உன் குரல்ல ரொம்ப சந்தோஷம் தெரியறதே? என்ன விஷயம்? கல்யாணமா? அம்மா, அப்பா சண்டை சரியாச்சா?



சரியாச்சு. அப்பா அன்னிக்கு சந்தோஷமா பேசினதா சொன்னேனில்லையா?அன்னிக்கு எனக்காக சம்பந்தம் பேச ஒரு இடத்துக்கு போயிருக்கார் அப்பா. அவங்க எதிர்ல இந்த விஷயத்தைப் பத்திப் பேசினா அபசகுனம் ஆகிடும்னுதான் அப்படி பேசினாராம். அதிலிருந்த நியாயத்தை நானும், அம்மாவும் புரிஞ்சுகிட்டோம்.
அதோட எங்க தாத்தாவோட பாடியை பணத்தை செலவழித்ததாலதான்  சீக்கிரம் வீட்டுக்கு கொண்டுவர முடிஞ்சுதாம். மேலும் தாத்தாவுக்கு இறுதிச் சடங்கு  செலவு முழுக்க அப்பாதான் செஞ்சாராம். இந்த விஷயத்தை அம்மாவிடம் கூட சொல்ல வேண்டாம்னு அப்பா பாட்டிகிட்ட சொன்னதாலதான் அம்மாவுக்கு எதுவும் புரியாம அப்பா மேல கோபமாக இருந்தாங்க. அம்மாவும் சமாதானமாகிட்டாங்க. அப்பாவோட உயர்ந்த குணம் இப்போதான் எங்களுக்கு புரிஞ்சது. 
தாத்தாவின் திடீர் மரணம் என் அம்மா,அப்பா ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக் காரணமாக அமைந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இப்ப என்னோட ஆசை அப்பா மாதிரி ஒரு நல்ல, மனைவியைப் புரிஞ்சிகிட்ட ஒரு ஆண்தான் எனக்கு கணவரா வரணுங்கிறதுதான்.




நான் அப்பவே சொன்னேனில்லையா? ஏதோ ஒரு காரணத்தால்தான் உன் அப்பா அப்படி நடந்துகிட்டிருக்கார். உங்கப்பா உண்மையிலேயே ஒரு ஜெம்தான்.இது போ
ல ஒரு அப்பா கிடைக்க நீ ரொம்பவே கொடுத்து வெச்சிருக்க. உன் ஆசைப்படி கணவர் கிடைக்க வாழ்த்துக்கள்.


'நீங்கள் பணக்காரர் என்பதால்தானே என் அப்பா இறந்தபோது வருத்தப்படவில்லை.பணத்தால் என் அப்பாவை வாங்க முடியுமா?'என்று ஈஸ்வரி கேட்டது அவள் கோபம்.


பிள்ளை வீட்டாரிடம் திருமண விஷயம் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது இந்த துக்க செய்தியைச் சொன்னால் அது அபசகுனமாகிவிடும் என்று சமாளித்தது அவருடைய சமயோசித புத்தி.



ஆனால் அந்தப் பணத்தால் மனிதஉயிரை வாங்க முடியாது:ஆனால்  உயிரற்ற அவர் உடலை பணம் இருந்ததால்தான் விரைவில் வாங்க முடிந்ததுடன், மற்ற செலவுகளையும் தன்னால் செய்ய முடிந்தது என்று மகாலிங்கம் சொன்னது அவரது உயர்ந்த குணம்.



அந்தப் பணத்தைக் கொடுத்து தான் உதவியது யாருக்கும் ஏன் தன்  சொந்த மனைவிக்குக் கூடத் தெரியக்கூடாது என எண்ணியது அவரின் பெருந்தன்மை. 



மாமனார் ஆசியால் தன் மகளின் திருமணம் சுபமாக முடியும் என்று சொன்னது அவரது நம்பிக்கை.
முதலில் கதையைப் படித்தபோது 'இப்படியும் ஒரு மனிதரா' என்று மகாலிங்கம் மேல் ஏற்பட்ட வெறுப்பு பின்பு அவரது நற்குணத்தால் சிறப்பாக மாறியது கதாசிரியரின் அழகிய கதை நடையினால்!


இந்த நல்ல குணங்களைக் கொண்ட ஒரு உத்தமமான மகாலிங்கம் என்ற மாமனிதரை தம் அழகிய சிறுகதை மூலம் நமக்கு காட்டிய ஆசிரியருக்கு பாராட்டுகள் பல. 



பல நேரங்களில் நமக்கு எதிராளி மேல் பட்டென்று கோபம் வருவது, நாம் அவர்களின் சூழ்நிலைகளைப் பற்றி அறிந்து கொள்ளாததால்தான்.இருவரும் மனம் விட்டுப் பேசி நிலைமையைத் தெரிந்து கொண்டால் பல பிரச்னைகள் மிக எளிதாகத் தீர்வடையும்.



வீடோ, அலுவலகமோ,மனைவியிடமோ, நண்பர்களிடமோ, எந்த சூழ்நிலையிலும் நாம் செய்தது சரியோ, தவறோ அதைப் பற்றி எடுத்துச் சொல்லி விளக்கம் கொடுக்கும்போது இருவருக்கும் இடையிலுள்ள விரோதம் மறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வழி ஏற்படும்என்பதையே இந்தக் கடுகளவு கதை
மூலம் மிக சிறப்பாக, எளிதாக, சொல்லியிருக்கும் ஆசிரியரை எவ்வளவு  பாராட்டினாலும் தகும். 



ஜெயாவின் திருமணம் அவள் அப்பா பார்த்த பையனுடன் அமோகமாக நடக்கப் போவதைக் குறிப்பாக அவளை 'மணம களா'கக் குறிப்பிட்டு சொல்லிவிட்டார் ஆசிரியர்! ஜெயாவுக்கு அவள் தந்தையைப் போன்றே அருமையான கணவர் கிடைக்க நாமும் வாழ்த்துவோம்!










No comments:

Post a Comment