Saturday 21 September 2019

#சபாஷ்_மத்யமர்_கவிதைப்போட்டி
கவிதை..2
எடுத்துக் கொண்ட வரிகள்..
#பொய்யாய்பழங்கதையாய்கனவாய்மெல்லப் போனதுவே!

அன்புள்ள அம்மா🙏
தொப்புள் கொடியோடு நம்
உறவுக் கொடியையும்
உருவாக்கிய என் தாயே!👩‍👧

உன் கருவறையில் நான்
கனமாய் இருந்தும்
சுமையாய் எண்ணாமல்
சுகமாய் அனுபவித்தவளே!🤰

நான் வெளியுலகை
தரிசித்த போது
நீ ஆனந்தத்தின்
உச்சம் அடைந்தாய்!!😊

என் அழுகை சத்தம் உன்
காதுகளில் கேட்குமுன்னே
அயராது எழுந்தோடி வந்து
அணைத்து என்னை உச்சி முகர்ந்து
அமுதான பாலூட்டிய உன்
அன்பை இனி எப்போது உணர்வேன்!🤱

சின்ன நோய் வந்தாலும்
சில நொடி கூட கண் மூடாது
என்னைக் கைகளில் ஏந்தித்
தாலாட்டி சீராட்டி பாராட்டிய
உனக்கு நிகர் வேறு யார்?💐

உன் நகலாய் என்னை மாற்றி
என் நிழலாய் என்னுள் இருப்பவள்!👥

என் நல்ல தோழி நீ;
உயர்ந்த உறவு நீ!👭
ஊக்கம் ஊட்டி யாவும்
கற்பித்த ஆசிரியை நீ!👩‍🏫

அன்பு, அக்கறை,அரவணைப்பு,
பாசம், நேசம், தியாகம்
அனைத்தும் கொண்ட
என் தெய்வமே!🙎

என்றும் என்னுடன் நிரந்தரமாய்
இருப்பாய் என்று இறுமாந்திருந்தேனே!👣

அத்தனையும் 'பொய்யாய்
பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே!'👤

நீ எங்கிருந்தாலும் எனைக்
கண்போல் பாதுகாப்பாய்
என்ற நம்பிக்கையே
என்றும் என் பலம்!❤️🙏

No comments:

Post a Comment