Saturday 6 July 2019

மருத்துவர்_தினம்



எனக்கு இரண்டு மகன்களுக்குப் பின் பெண் பிறந்ததும் மகிழ்ச்சி தாங்கவில்லை! அப்பவே முடிவு செய்தேன் அவளை ஒரு மருத்துவராக்க வேண்டுமென்று.
இரண்டு வயது முதலே அவள் தன் அண்ணாக்களுடன் பள்ளி செல்வேன் என்று அடம் பிடிப்பாள் ஒரு பையில் சிலேட்டு, அவளுக்கு வாங்கிக் கொடுத்த புத்தகம் போட்டுக் கொண்டு அவர்களுடன் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்து விடுவாள்.அவளை இறக்குவதற்குள் போதும் என்றாகிவிடும்!
படிப்புடன் டான்ஸ், டிராமா, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசை தட்டிக் கொண்டு வருவாள். சிறு வயது முதலே அவளுக்கு டாக்டராக வேண்டும் என்பதை எடுத்துச் சொல்வேன்.    
நாங்கள் கோலாப்பூரில் இருந்தபோது +2 படித்தாள். நல்ல மார்க்குகள் எடுத்து மும்பை கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் (Grant Medical college)ல்  இடம் கிடைத்தது.
மும்பையில் 150வருடங்களுக்கு மேல் பழமையான, நாட்டின் மிகச் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று. அங்குதான் முன்னாபாய் M.B.B.S. படப்பிடிப்பு நடந்தது.
அவளைக் கல்லூரியில் சேர்த்துவிட்டு நான்தான் தினமும் கவலைப்பட்டேன். Dead body பார்த்து பயந்து விடுவாளோ
...ragging எப்படி இருக்குமோ...
உடன் படிப்பவர்கள் எப்படியோ..
என்று ஒரே டென்ஷன்!
அப்பொழுதெல்லாம் மொபைல் கிடையாது. அடிக்கடி ஃபோன் செய்யவும் முடியாது.  ஒரு மாதத்துக்குப் பிறகு call செய்தவள் படிப்பு மிக interestingகாக இருப்பதாகச் சொன்னாள்.
...Dead body பார்த்து பயந்தியா...
..சே..எனக்கென்ன பயம்? நம்ம உடம்புக்கு உள்ளே இருக்கற பார்ட்ஸ் எல்லாம் பார்த்தேன்...
...யாராவது பயப்பட்டாளா?...
...ஆமாம்மா. ஒரு பையனும், 2 பெண்களும் பயந்து வீட்டுக்கு போய்ட்டா.பாவம்...
...தமிழ்ப் பெண்கள் இருக்காளா?..
...இல்ல. நான் மட்டும்தான். எல்லாரும் என் நீள தலைமுடியைப் பார்த்து ஆச்சரியப் பட்றா! தொட்டு தொட்டு பாக்கறா!...
...அப்றம் கேளேன். அனாடமி ஆசிரியர் எல்லா மாணவிகளிடமும் ஜொள் விட்டதோடு, என்னிடம் ‘ஆத்தி க்யாகண்டாலா?’
(கண்டாலாவுக்கு வருகிறாயா?) என்று கேட்டதும், அங்கு ‘டிசக்ஷன்’ செய்யவிருந்த பிணத்தைக் கண்டதைவிட நடுங்கி விட்டேன்!... 
...நீ என்ன சொன்ன?...
...நான் என்ன சொல்லற்து? சீனியர்ஸ் சொன்னா 'அவர் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டியாம். Girlsகிட்ட அப்டித்தான் அசடு வழிவாராம்!...
...அப்பறம் ragging பண்ணினாளா?...
...இரவு 8 மணிக்கு ஹாஸ்டலிலிருந்த எங்களை சீனியர்கள் கூப்பிட்டு அனுப்பினா. 7, 8 பேராக கிளம்ப, வார்டன் கேட்க, நான் முந்திரிக் கொட்டை மாதிரி சீனியர் ரூமுக்குப் போறதா சொல்லிட்டேன்.
‘நோ ராகிங்; அறைக்குத் திரும்புங்கள்’ என்று வார்டன் சொல்லிவிட, வந்து ஜாலியா தூங்கிட்டோம்...
...சீனியர்கள்  நடந்ததை அறிந்து இரவு 2 மணிக்கு வந்து, என்னை மட்டும்  கூப்பிட்டுன் போனா. ஆட்டம், பாட்டம் வேறு! ‘தோட்டத்திலுள்ள செடி, மரங்களை எண்ணிட்டு வா’ ன்னு  துரத்த, நானும் கர்ம சிரத்தையாக எண்ணிண்டு வந்து சொன்னேன்!
...‘சே! உனக்கு அறிவில்லை? மரம், செடியெல்லாம் எண்ணினா 
எப்படி டாக்டராகற்து?’ என்று கேலி செய்ய, போறும்னு ஆயிடுத்து போ...
அதன்பின் அந்த சீனியர்களே இவளுக்கு நண்பர்களானது வேறு விஷயம்.
முதல்முறையாக பிரசவத்தை நேரில் பார்த்த பலரும்...முக்யமாகப் பையன்கள்..மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார்கள் என்பாள். அம்மாவைக் கோபிக்கவே மாட்டோம்னு சொல்கிறார்கள்..என்றாள்.
அதன்பின் என் கணவர் வங்கிப்பணியில் VRS  வாங்கிக்கொள்ள நாங்கள் மும்பை சென்று விட்டோம். ஒவ்வொரு வீக்என்டும் 10 ஃப்ரெண்ட்ஸை வீட்டுக்கு அழைத்து வருவாள். இட்லி,தோசை, வடை என்று விதவிதமாக சமைத்துப் போடுவேன்.
அவள் படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்றபோது அவளைவிட நான்தான் அதிக சந்தோஷ
மடைந்தேன். எங்கள் குடும்பத்தில் முதல் டாக்டர். அன்று நான் அவளை ஈன்ற பொழுதின் பெரிதுவந்தேன்.
ஒருமுறை அவள் மருத்துவராக ICUவில் பணிபுரிந்தபோது  இரவு ஒருவர்  இறந்துவிட,  தூக்கத்தை அடக்கமுடியாமல்  அவரை அகற்றியதும் அதே bedலேயே தூங்கினேன் என்பாள்! டாக்டர்களின் நேரம் காலமில்லாத தொண்டு ஈடில்லாதது!
நான் histerectomy
செய்துகொண்டபோதும், காலில் varicose vains அறுவை சிகிச்சையின் போதும்  என் பெண் உடனிருந்தது எனக்கு தைரியம் கொடுத்தது.
காதலொருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து, ஆணும் பெண்ணுமாக இரு அழகுக் குழந்தைகளுடன் சிறப்பான இல்லறத்தை இனிமையாக நடத்தும் என் செல்ல மகள் Dr.கிரிஜாவுக்கும், அன்பான மாப்பிள்ளை Dr.விஜய்க்கும் இனிய மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள்!!

No comments:

Post a Comment