Friday 10 April 2020

பாவம் போக்கும் சிம்மாசலம்


சென்ற வாரம் விசாகப்பட்டினம் சென்றபோது சிறப்பான சிம்மாசலம் கோயிலை தரிசித்து வந்தோம். அருமையான ஆலயம்.

நரசிம்மர் பெரும்பாலும் மலைக்கோயில்களிலேயே வீற்றிருக்கிறார். வேலூர் அருகிலுள்ள சோளிங்கர், ஆந்திராவிலுள்ள அஹோபிலம்,  சிம்மாசலம், கர்நாடக மாநிலம் மேல்கோட்டை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள சிங்கப்பெருமாள் கோயில், நாமக்கல், மதுரை ஒத்தக் கடைநரசிம்மர் கோயில்கள் சிறப்பானவை.

திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் பரபரப்பான நொடியில்  தன் பக்தன் பிரஹலாதனைக் காக்க மனிதனும். மிருகமும் கலந்த உருவமெடுத்து தூணிலிருந்து வெளிப்பட்ட தனிப்பெரும் அவதாரம் அது.

பிரஹலாதன் கருவிலேயே நாரத முனியால் நாராயண மந்த்ரோபதேசம் பெற்றவன். அவனுடைய நாராயண பக்தியினால் தானே கடவுள் என்ற இரண்யனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத  பிள்ளை அவன்.

அவன் தந்தை ஹிரண்யனுக்கு தன் நாட்டிலுள்ள பிற எல்லோரையும் போல் அவனும் தன் னுடைய பக்தனாக வேண்டும் என்று வெறி. ஹிரண்யன் பிரஹலாதனை பல விதங்களில் துன்புறுத்தியும், நாராயண நாமத்தால் அவற்றையெல்லாம் தன் மீதான பக்தி சிலிர்ப்பாகவே அனுபவித்தான் ப்ரஹலாதன்.

அவற்றில் ஒரு தண்டனையாக கடலில் தள்ளிவிட்டான். அதுவே விசாகப் பட்டினம் அருகிலுள்ள கடல். அவன் பிழைத்துவிடக் கூடாது என்பதற்காக மேலே ஒரு மலையையும் தள்ளிவிட்டான்.
'ஹரியே சரி' என்ற ப்ரஹலாதன் நாராயணா என பகவானை சரண் அடையக் கூப்பிட்டான்.

கடலில் அமிழ்ந்து கொண்டிருக்கும் ப்ரஹலாதனை காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில், ஒரு கையில் பீதாம்பரத்தைப் பிடித்துக்
கொண்டு குதித்த வேகத்தில் பகவானின் பாதங்கள் பாதாளம் வரை சென்று விட்டனவாம்.எனவே இங்கு பாததரிசனம் கிடையாது.

ஹிரண்யகசிபுடன் 32 ரூபங்கள் எடுத்துப் போர் புரிந்தாராம் ஹரி. அதில் ஒன்று வராகநரசிம்மர் அவதாரம் ஆகும். பாதாளம் சென்று பிரகலாதனைக் காப்பாற்றியபோது அவன் மேல் கிடந்த மலையுடன் மேலே வந்தார் பெருமாள். அந்த மலையே சிம்மாசலம்.

இங்கு கோயில் கொண்டிருக்கும் நரசிம்மர்,  வராக முகத்துடன் மனித உடலோடு, சிங்கத்தின் வால்கொண்டு, வராக நரசிம்மனாக காட்சி அளிக்கிறார்.
பிரஹலாதனின் விருப்பத்திற்
கிணங்க, ஹிரண்யாக்ஷனை வதம் செய்த வராஹ ரூபம் மற்றும் ஹிரண்யகசிபுவினை அழிக்கப்
போகும் நரசிம்ஹ ரூபம் கலந்து வராக நரசிம்மராக காட்சி தருகிறார். இக்கோயில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு பிறை மாடத்தில் மூலவர் வராக நரசிம்மரின் முழு உருவமும் சிற்ப வடிவில் காணப்படுகிறது.

பகவானுக்கு ஆராதனம் இல்லாமல் போகவே, புற்று மூடி அந்த இடம் காடாக மாறிவிட்டது. பின்னொரு காலத்தில் புரூரவஸ் என்ற சக்கரவர்த்தி இந்த இடத்தைக் கடந்து செல்லும் போது, அவரது விமானம் தடைபட்டது.   நரசிம்மமூர்த்தி அவரதுகனவில் தோன்றி, தான் இங்குள்ள கங்கதாரா என்ற தீரத்தத்தின் அருகில் உள்ள புற்றில் இருப்பதாகச் சொல்ல, அவரை அக்ஷயதிருதியை அன்று எழுந்தருளச் செய்து, கங்கதாரா தீர்த்தத்தில் திருமஞ்சனம் செய்து பிரதிஷ்டை செய்தார் புரூவரஸ்.

எனவே அக்ஷயதிருதியை அன்று மட்டுமே  பெருமான் நிஜரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.மற்ற
நாட்களில் சந்தனக் காப்பிட்ட
தரிசனம் தான்.

சந்தனக்காப்பில் எப்படி ஒரு வருடம் எனத் தோன்றுகிறதா?வைகாச சுக்ல திருதியை, வைகாச பவுர்ணமி, ஜ்யேஷ்ட பவுர்ணமி, ஆஷாட பவுர்ணமி என்று வருஷத்தின் நான்கு தடவைகள், சுமார் 500 கிலோ சந்தனம் சாத்துகிறார்கள். அதனால் எல்லா நாட்களும் சந்தனகாப்பு பளபளக்க  காட்சியளிக்கிறார் இந்த வராஹ நரசிம்மர்! அக்ஷயதிருதியை அன்று லட்சக்கணக்கான மக்கள் நிஜரூப தரிசனம் செய்ய வரிசையில் காத்திருப்பராம்!

சந்தனக் காப்பு ஏன்? இத்தலத்
திலும் சைவ வைணவ
சண்டை வந்ததாக கதை உண்டு. முதலில் இந்த மூர்த்தி இங்கு லிங்க ரூபத்தில் வழிபடப்பட்ட
தாகவும், ராமானுஜர் ஸ்ரீகூர்மத்தி
லிருந்து இந்த மலைக்கு வந்து நாராயணனின் தலம் இது என்றும் இங்கு வராகநரசிம்மனின் அர்ச்சா ரூபம் நிறுவப்படவேண்டும் என்றும் வாதம் செய்தாராம். முடிவில், உள்ளே இருப்பவர் நாராயணனா இல்லை நமசிவாயமா என்பதைக் கண்டுகொள்ள லிங்கத்தின் கீழே துளசியும் விபூதியும் இரவில் வைக்கப்பட்டு, காலையில் எது ஏற்றுக் கொள்ளப்பட்டதோ, அவரே அங்கே இறைவன் என்று முடிவு செய்யப்பட, அனைவரும் அப்படியே செய்கின்றனர்.

மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது துளசி மட்டுமே அங்கே கிடந்ததைக் கண்டு உடையவரின் கருத்தில் உடன்பாடு கொண்டு அனைவரும் லிங்கத்தை அகற்றிவிட்டு அங்கே ராமானுஜரின் கட்டளைப்படி வராகநரசிம்மனின் அர்ச்சா
ரூபத்தை செதுக்கினர். அப்படி வழிபடும்போது, அவர் உடலில் ரத்தம் வழிந்ததாகவும், ரத்தத்தை மறைக்க சந்தனத்தை உருவம் முழுவதும் சார்த்தி மூடிவிட்ட
தாகவும் சொல்லப்படுகிறது.

ஹரியும், சிவனும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் வராக லட்சுமி நரசிம்மமூர்த்தியை தரிசித்தால் சிவலிங்க உருவத்தில் நாராயணனின் நாமம் சாத்தப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. தூணிலிருந்து தோன்றிய மூலவர் தூண் போன்றே தரிசனமளிக்கிறார். வராகரும் இவருடன் அரூபமாக உள்ளார்.

நிஜரூபத்தில் பார்க்கும்போது சுவாமியின் கால்களுக்குக் கீழே பாதம் இல்லை. கைகள் நீண்டு இருந்தாலும் உள்ளங்கைகளும் விரல்களும் தெரியாது. முகத்தில் வராக ரூபமும் பின்னால் வால் ரூபமும் கூட இப்போதெல்லாம் சரியாகத் தெரிவதில்லையாம்.

சிறிய மலையின் மீது கோயில் உள்ளது. எக்காலத்திலும் பக்தர்களின் கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காது போலுள்ளது. தங்குவதற்கு தேவஸ்தானம் நிறைய அறைகள் கட்டி உள்ளார்கள்.

பெருமாளை அருகிலேயே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள். வெளியே வந்து கங்கதாரா அருவி நீர் ஐந்து இடங்களில் சிறிய முகத்துவாரம் வழியாக வருவதை தலையில் தெளித்துக் கொள்ள
லாம்.

11ம்  நூற்றாண்டில் கலிங்க நாட்டை வென்ற குலோத்துங்க சோழனால்  மலையை முழுக்க குடைந்தெடுத்து  பாறையால் செய்யப்பட்ட ஒரு தேர், சக்கரங்களுடன் குதிரைகள் இழுத்துச் செல்லும் முறையில் உள்ளது.  இங்கு 525 அதியற்புதமான சிற்பங்கள்  காட்சியளிக்கின்றன.

வாழ்வில் உண்டாகும் துன்பங்களைப் போக்கி பக்தர்களைக் காப்பதில் சிம்மாசலம் நரசிம்மருக்கு இணை வேறு யாருமில்லை.சனக, சனந்தன, சனாத, சனத்குமாரர்
களுக்கும், தேவர்கள், நாரதர், ரிஷிகளுக்கும், இவர்  தரிசனம
ளித்ததாக தலபுராணம் கூறுகிறது.

இவ்வாலயத்தில் கப்பஸ்தம்ப வேண்டுதல் மிகப் பிரசித்தம்.
அந்நாட்களில் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறினால் கோவிலுக்கு வந்து கப்பம் செலுத்துவதாக வேண்டிக் கொள்வதும், நோய் நொடியி
லிருந்து பாதுகாக்கவும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பிறக்க வேண்டிக் கொண்டு இங்குள்ள கப்பஸ்தம்பத்தில் கப்பம்
செலுத்துவதும் வாடிக்
கையாக இருந்ததாம்.

இன்றும் அந்த ஸ்தம்பம் இங்கே இருக்கும் மண்டபத்தில் வெள்ளிக் கவசத்துடன் உள்ளது. அந்தத் தூணின் கீழ் சந்தான கோபாலரின் திருவுருவம் உள்ளது. அந்த கம்பத்தை இரு கைகளாலும் அணைத்தவாறு நம் வேண்டுதல்
களைக் கூற வேண்டும்.

பின் அங்குள்ள ஊழியர் ஒரு பட்டுத் துணியினால் நம்மைத் தூணுடன் கட்டி இறைவனிடம் நம்மை வேண்டிக் கொள்ள சொல்கிறார். திருமணம் பிள்ளைப்பேறு வியாபார விருத்தி போன்ற வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதாகக் கூறப்படுகிறது.  தம்பதியர் இந்த வேண்டுதலை இணைந்து செய்ய வேண்டும்.இதற்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இங்குள்ள நரசிம்ம தீர்த்தம், கங்காதாரா தீர்த்தம் எனும் இரு அருவிகளிலும் நீராடி வராஹ
நரசிம்மரை வணங்கி, மலைப் பாதையில் கிரிவலம் வந்து வணங்குவதால் தீரா நோய்கள் தீர்ந்து பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். உடல் வளமும் உள்ள வளமும் பெற இந்த வராஹ லட்சுமிநரசிம்மர் பேரருள்  புரிகிறார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி
னத்திலிருந்து 5 கி.மீ தொலைவி
லுள்ளது இத்திருத்தலம்.

No comments:

Post a Comment