Saturday 2 May 2020

மாத்தி_யோசி


ஆயி_மாஜி_ஆயி😀

நான் தஞ்சாவூரைச் சேர்ந்தவள். என் கணவரும் தஞ்சை. என் அப்பாவின் வேலை நிமித்தம் நாங்கள் இருந்ததும், நான் படித்ததும் சிங்காரச் சென்னை!🚋🏘️ எனக்கு தஞ்சைத் தமிழும் சென்னைத் தமிழும் மட்டுமே தெரியும்.

மணமான ஆறு மாதத்திலேயே என் கணவருக்கு வடக்கே உத்திரப் பிரதேசத்தில் மதுரா (மாயக் கண்ணனின் பிறப்பிடமான வடமதுரை)வுக்கு மாற்றல்! ‘இந்தி’ என்று தமிழில் மட்டுமே எழுதத் தெரிந்த நான், சற்று பயத்தோடும்😞, ஏகப்பட்ட பிரமிப்போடும்🤨, சில இந்திப் புத்தகங்களோடும்📚 பயணமானேன். நான் படித்தபோது இந்தி தேவையில்லை என்று போராட்டம் நடந்ததால் இந்தியில் 'ஆனா..ஆவன்னா' கூடத் தெரியாது😙

என் கணவர் அத்தனை இந்திக் கலவரத்திலும், ஒளிந்து ஒளிந்து🤫 ‘ராஷ்ட்ரபாஷா’ வரை படித்தவர்! எனவே அவருக்குக் கவலையில்லை!🕺

ஒரு நாள் ஒரு நண்பர் வீட்டு ‘பார்ட்டி’க்கு🍱 என் கணவர் அழைத்துப் போக, அங்கு வந்த அத்தனை பெண்களும்👭 ஒரு மதராஸிப் பெண்ணான என்னை அதிசயமாகப் பார்த்து ஆயிரம் கேள்விகள் கேட்க ‘அச்சா’😁, 'மாலும் நஹி’🥺 என்ற இரண்டு வார்த்தைகளோடு அசடு வழிந்தேன்🥴!

என் கண்கள்👀 என்னவரைத் தேட அவரோ அனைவருடனும் அமர்க்களமாகப் பேசிக்🗣️ கொண்டிருந்தார்.சே.. என்ன மொழி அது? ‘க’வில் நான்கு வகை, ‘ச’வில் இரண்டு, ‘ட’ வில் நாலு என்று ‘போதுமடா சாமி’ என்றாகி விட்டது!😞

நம் தமிழ் தவிர மற்ற மொழிகளில் இந்த உச்சரிப்பு பிரச்னை #‘படா_பேஜார்’தான்! இந்தியில் மனிதர்களுக்கு மட்டுமன்றி, விலங்குகள்,பறவைகள் 🐀🐆🐎🦜🐦🐓 மற்றும் பொருட்களுக்கும்🥛🍯 கூட ‘பால்’ உண்டு. பானி (தண்ணீர்), மிட்டி (மண்), தஹி (தயிர்) இவை பெண்பால்! தூத்🍼 (பால்), பத்தர் (கல்) இவை ஆண்பால். குத்தா என்றால் ஆண் நாய்!🐕 குத்தி என்றால் பெண் நாய்🐩. இப்படித் திண்டாடி, தட்டுத் தடுமாறிப் பேசி இந்தி கற்றுக் கொள்வதற்குள் என் கணவருக்கு மீண்டும் தமிழ்நாட்டுக்கு மாற்றல்!🚚 முதல் வேலையாக குழந்தைகளுக்கு இந்தியைக் கற்றுக் கொடுத்து எல்லாரும் பிரவீண் முடித்தார்கள்.

மீண்டும் கோலாப்பூருக்கு மாற்றல். நமக்குதான் இந்தி தெரியுமே என்று #'கெத்'தாக இருந்தேன்!💃 அங்கு சென்றதும்தான் புரிந்தது #மகாராஷ்டிர_மொழி #மகாகஷ்டமான மொழி என்று! அங்கு அருகில் இருந்தவர் வீட்டுக்கு கூப்பிட என் பெண்ணையும் உடன் அழைத்து சென்றேன். அவர்கள் வீட்டில் மாமியாரும் மருமகள்👵🙎🙍🤷🙆
களுமாக நாலைந்து பேர். எங்களை அதிசயமாகப் பார்த்தார்கள்!

இந்தியில் பேசுவார்கள் என நினைத்தால் அவர்களோ மராத்தியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். எங்களை 'பஸா'🙋 என்று சொல்ல...(பஸ்ஸில் வந்தீர்களா? ) என்று கேட்கிறாளோ? இருவரும் இந்தியில் டீக் ஹை என்று சொல்ல சோபாவைக்🛋️ காட்டி மீண்டும் பஸா என்றதும்தான் புரிந்தது உட்காரச் சொல்கிறாள் என்று! அசட்டு சிரிப்புடன்🥴 அமர்ந்தோம்🙂! அவர்கள் எங்களுக்கு புரியுமா என்று கூட யோசிக்காமல்😖 சரவெடி போல் விடாது பேச 'அச்சா..அச்சா' என்று சொல்லி சமாளித்தோம்! அவர்க
ளுக்கு இந்தி புரியவில்லை. அவர்கள் பேசியதில் 'சாய்' ☕என்பது மட்டும் புரிய அதைக் குடித்துவிட்டு விட்டால் சரி என்று ஓடி வந்து விட்டோம்.😮

என் பிள்ளை ஒருநாள் என்னிடம் 'ஆயி மாஜி ஆயி..மல ஜேவன் பாய்ஜே ஆயி' என்றான். அவன் மராட்டி கற்றுக் கொண்டு விட்டானாம்! நான் எதுவும் புரியாமல்🤔 'என்னடா..ஆயி மலம்னு! என்ன பேசற நீ' என்றதும் 'மராட்டி பேசறேன்.ஆயின்னா அம்மா' என்றான்.👩 'அடப்பாவி..என்னை மாஜி அம்மா ஆக்கிட்டயா? எப்பவும் நான்தாண்டா உன் அம்மா' என்று நான் டென்ஷனாக..😟

'ஐயோ அம்மா.மாஜி ஆயினா என் அம்மானு அர்த்தம்'.
'அப்பறம் ஏதோ மலம் ஜீவனம்னியே.🙎 'மல ஜேவன் பாய்ஜேன்னா எனக்கு சாப்பாடு🍛 வேணுனு அர்த்தம்' என்றான்.
இக்கட, அக்கட, புடே ,காலி என்று  எப்படியோ மராட்டியும் கற்றுக் கொண்டேன்!😅

அப்புறம் ஒரு வருடம் பெங்களூர் வாசம்!🌃 ‘அப்பாடி! பெங்களூரில் நிறைய தமிழர்கள் உண்டு. கல்கண்டு தமிழில் கலகலக்கலாம்' என்ற என் ஆசையில் மண்! எங்கள் வீட்டுக்காரம்மாவோ ‘பச்சைக் கன்னடத்தி!’🤦 அவள் வீடு சென்ற என்னை ‘பன்ரி, குத்துக் கொட்றி’ (‘என்ன மரியாதையில்லாமல் குட்றி என்கிறாளே, என்ன கேட்கிறாள்’) என்று நான் ‘திருதிரு’க்க,🙄 நாற்காலியைக் காட்டியதும்தான், சட்டென்று நம் 'சென்னைத் தமிழ்’ ‘குந்திக்க’ ஞாபகம் வர அமர்ந்தேன்!😊

‘நிம்ம எஜமானரு ஏனு மாடுதாரு?’ (மாடுக்கு எஜமானரா?!) 🐐‘நிம்ம ஹேஸரு ஏனு?’ (ஏசுவைப் பற்றிக் கேட்கிறாளா!) 'நீரு சாக்கா பேக்கா?' (கடைசியா என்னை பேக்குன்னுட்டாளே!) 😰என்று ‘சரவெடி’ 💥மாதிரி கேள்விகளைத் தொடுக்க, ஒரு அட்சரம் கூட புரியாமல் ‘புஸ்வாணமாகி’ ⛲நான் வீடு திரும்பினேன்!

வெளி மாநிலம் சரி, நம் மாவட்டத்துக்குள்ளும் பேச்சு வழக்கு வித்தியாசமாகத்தானே இருக்கிறது? நாகர்கோவிலில் என் பிறந்த வீட்டுக்குப் போனபோது, என் அம்மாவுக்குத் தெரிந்த மாமி வந்து, ‘ஏண்டி, வீச்சாரிக்காயோ?🙁 உடம்பு வண்ணமே வைக்கவில்லையே?’😟 என்று கேட்க,😇 நான் அர்த்தம் தெரியாமல் முழிக்க, அம்மாதான் பிறகு விளக்கினார். ‘வீச்சாரிக்காயோ’ என்றால் ‘நன்னா இருக்கியா’ என்று அர்த்தமாம்.🙂 ‘உடம்பு வண்ணமே வைக்கவில்லையே’ என்றால் ‘உடம்பு பெருக்கவே இல்லையே’ என்று பொருளாம்😆! அங்கு கணவரை மாப்பிள்ளை என்பார்களாம்🤩! என் அப்பா கடையில் சர்க்கரை கேட்க வெல்லம் கொடுத்தாராம் கடைக்கார்!. பஞ்சாரை என்றால் சர்க்கரையாம்!😆😅

ஈரோடில் பெண்களை 👸பிள்ளை என்பார்கள். நான் அங்கு சென்ற புதிதில் என் முதல் பிள்ளை, இரண்டாம் பிள்ளை என்றபோது 'உங்க வீட்டில ஒரு பிள்ளைதான இருக்கா' என்றதும் தான் இந்த பிள்ளைக்கு அர்த்தமே புரிந்தது!😅😉

விளக்கமாற்றுக்குக்கூட,🧹 ‘வார்கோல், சீமாறு, பெருக்குமாறு, துடப்பம்’ என்று ஊருக்கு ஒரு பெயர் இருக்கும்போது மற்ற பேச்சுகளிலும் வித்தியாசம் இருப்பதில் வியப்பில்லயே?😆

இப்படி மாநிலம்தோறும் சென்றதன் பலன் பல மொழிகளைத் தெரிந்து கொள்ளும் சந்தோஷம் கிடைத்தது உண்மை!😃
#ராதாபாலு

மாத்தி யோசிக்கு என்ன எழுதலாம் என்று மாத்தி மாத்தி யோசித்தும் ஒன்றும் சரிவரவில்லை. எப்பொழுதும் ஒரே மாதிரி எழுதாமல் இந்த முறை ஸ்மைலிகளை சேர்த்து எழுதிப் பார்த்தேன்! வித்யாசமாக இருந்தது! நீங்களும் படித்துப் பார்த்து கமெண்டுங்கள்!

No comments:

Post a Comment