Saturday 2 May 2020

கண்ணனுக்கு அல்வா..!!

சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "பாபமோசனிகா'' என்று அழைக்கப்படுகிறது.

'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை’ என்பது பெரியோர் வாக்கு. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் ஏகாதசி விரதமிருந்து, விஷ்ணுவின் அருள் பெறும் பேறு பெற்றார்கள்.

நாம் தெரிந்தும் தெரியாமலும்; அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமையுடையது இந்த பாபமோசனிகா ஏகாதசி விரதம். எண்ணிய காரியங்களை நிறைவேற்றும் சக்தியும் உண்டு. அசுவமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெற முடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று கூறுகின்றன புராணங்கள்.
இன்று ஏகாதசி ஸ்பெஷல் நிவேதனம் கோதுமை அல்வா.

என் கணவருக்கு பிடித்த ஸ்வீட் செய்து தருவதாக சொன்னபடி இன்று அல்வா செய்து குட்டி கண்ணனுக்கு கொடுத்தாச்சு!

'எனக்குதான் அல்வா கொடுத்துண்டிருந்த..இப்போ கண்ணனுக்கும் அல்வா கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ளப் போறியா' என்றார் என் கணவர்!!

No comments:

Post a Comment