Saturday 2 May 2020

இன்று அட்சய திருதியை


அட்சயதிருதியை என்றால் என்ன? அந்த தினத்தில் என்ன செய்ய வேண்டும்? ஏன் அட்சயதிருதியை கொண்டாடப்படுகின்றது என்பது பற்றி நிறைய செய்திகள் உள்ளன.

முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சயதிருதியை என்றும், பரசுராமரின் பிறந்த நாளாக அட்சயதிருதியை கொண்டாடப்
படுவதாகவும் கூறப்படுகின்றது.

இதிகாசங்களின்படி, அட்சய
திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது. மேலும் பகீரதன் தவம் செய்து புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்த நாளாகவும் கூறப்படுகிறது. மகாலட்சுமியின் அருளால்  குபேரன் செல்வந்தனானதும் அட்சய திருதியை அன்று தான்.

கண்ணனின் அருளால் குசேலன் குபேரன் ஆனது, தனது தாயை மீட்க,  தேவலோகத்திலிருந்து அமுதத்தைக் கருடன் எடுத்து வந்தது, அன்னபூரணி தேவி தோன்றியது,  மகாபாரதத்தை வியாசர் கூற, விநாயகர்
எழுதத் தொடங்கியது, தர்மபுத்திரர் அட்சய பாத்திரத்தைப் பெற்றது. திரௌபதிக்குக் கண்ணன் புடவை சுரந்து காத்த நாளும் இந்த அட்சய திருதியை அன்று தான். இத்தகைய  பற்பல சிறப்புகள் நிறைந்த நாள் அட்சயதிருதியை ஆகும்.

அட்சயம் என்றால் குறையாத என்று பொருள். அட்சய திருதியை அன்று கற்கும் கல்வியும், செய்யப்படும் தானமும், நற்செயல்களும் குறைவின்றித்  தொடரவேண்டும் என்பதை உரைக்கவும் அட்சயதிருதியை என்ற பெயர் ஏற்பட்டது. அட்சயதிருதியை அன்று சூரியன், சந்திரன் இருவருமே உச்சத்தில், சம  அளவு ஒளியுடன் திகழ்வதாக ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

தானியங்களைச் சமர்ப்பித்துத் திருமாலை வழிபட வேண்டிய நாளாக அட்சயதிருதியை கருதப்படுகிறது. யஜுர் வேதத்தில் அட்சய திருதியை நாளில் வெள்ளை நிறப் பொருட்கள்,
மஞ்சள் நிறப் பொருட்கள் வாங்குவது நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
தானியங்களில் தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள். அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்கி அதைப் பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது.

மஞ்சளில் எல்லா மகிமையும் உள்ளது. மஞ்சள்தான் எல்லா வகையிலும் நலன் தரக்கூடியது. மஞ்சள் பொடியாகவும் கிழங்காகவும் வாங்குவதால் வாழ்க்கை நலமாக வளமாக சிறப்பாக இருக்கும் எனப்படுகிறது.

இந்நாளில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது மிக நன்மை தரும். அவர்களுடைய தேவைக்கேற்ப பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
தங்கம், வெள்ளி இவை  லட்சுமியின்  அம்சமாகக் கூறப்
படுவதால் தற்காலத்தில் தங்க நகைகள் வாங்குவது சிறப்பாகக் கூறப்படுகிறது.

சித்தர்கள் ஜீவசமாதி உள்ள  திருவண்ணாமலை போன்ற ஆலயங்களுக்குச் செல்வது புண்ணியத்தை தரும்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு அருகிலுள்ள சிம்மாசலம் நரசிம்மர் கோயிலில், எப்போதும் சந்தனக்காப்பால் மூடப்பட்டிருக்கும் நரசிம்மரை  அட்சயதிருதியை அன்று மட்டும்  சந்தனக் காப்பு இல்லாமல் முழுமையாகத் தரிசிக்கலாம்.

தம்உலகப் புகழ்ப்பெற்ற பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரைக்கான  ரதங்களை ஒவ்வொரு வருடமும் அட்சயதிருதியை அன்று தான் வடிவமைக்கத் தொடங்குவார்கள்.

பத்ரிநாத், கேதார்நாத்தில் குளிர்காலம் முடிந்து கோயில் நடைதிறக்கப்படும் நாள் அட்சயதிருதியை ஆகும்.

தமிழ்நாட்டில் அட்சய திருதியை தினத்தில், கும்பகோணம் பெரிய கடைவீதியில் நடைபெறும் பன்னிரண்டு கருட சேவை,  வடுவூர்  ராமர் கோயிலில் காலை ஒரு முறை, மாலை ஒரு முறை என இரண்டு முறை நடைபெறும் கருட சேவை,  மன்னார்குடி ராஜகோபாலனின் கருட  சேவை போன்ற கருட சேவை உற்சவங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை.

ஏன் பன்னிரு கருட சேவை?  திருமாலைத் தியானிக்கும் முறையைக் கூறும் ஆகம சாஸ்திரங்கள், நம் உடலில் பன்னிரு  இடங்களில் பன்னிரு திருப்பெயர்களுடன் திருமால் வீற்றிருப்பதாகத் தியானிக்கச் சொல்கின்றன. கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன்,  விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகியவையே அந்தப் பன்னிரண்டு திருப்பெயர்கள்.

அந்தப் பன்னிரு வடிவங்களையும் தியானிக்க இயலாதவர்களுக்காக சாரங்கபாணிப் பெருமாள், தானே பன்னிரு  வடிவங்கள் எடுத்துக் கொண்டு அட்சயதிருதியை அன்று குடந்தை கடைவீதியில் காட்சி தருகிறார். இந்தப் பன்னிரண்டு பெருமாள்களையும்  தரிசிப்பவ
ர்கள், ஆகமங்கள் கூறும் பன்னிரண்டு மூர்த்திகளைத் தியானித்த பலனைப் பெறுவார்கள்.

"அந்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி
புண்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் வாராணஸ்யாம் விநச்யதி
வாராணஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி
கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி’’
என்பது கும்பகோணத்தின் சிறப்பைக் கூறுகிறது.

நாமும் அவனருள் நாடி, அவன் திருப்பாதம் பற்றி இன்றைய நிலை மாற வேண்டுவோம்🙏🏼

No comments:

Post a Comment