Saturday 16 November 2019

மத்யமர்_என்_பார்வையில்



என் மனம் கவர்ந்த முகநூல் தளம் மத்யமர் என்பதில் சந்தேகமில்லை. நான் சில முகநூல் தளங்களில் உறுப்பினர் என்றாலும் தவறாமல் பதிவு போடுவது மத்யமரில் மட்டுமே.

இதில் எனக்கு மிக பிடித்தது வார டாபிக். சிலவற்றிற்கு எழுத வேண்டாம் என்ற எண்ணம் ஏற்பட்டாலும் எழுத வைத்து விடுவதுதான் இத்தளத்தின் மற்றும் தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் அட்மின்களின் வெற்றி.

நான் பல தமிழ் மாத இதழ்களில் 25 வருடங்களுக்கு மேலாக கதை, கட்டுரைகள் சமையல் குறிப்புகள் ஆலய தரிசனக் கட்டுரைகள் நிறைய எழுதிக்
கொண்டிருக்கிறேன். கோலப் போட்டி கொலுப்போட்டி சமையல் போட்டிகளில் நிறைய பரிசுகளும் பெற்றதுண்டு.

சென்ற ஆண்டு என் தோழி ரஞ்சனி நாராயணன் மூலம் அறிந்து மத்யமரில் இணைந்தேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதில் நிறைய எழுதிக் கொண்டி
ருக்கிறேன். ஞாயிறு ஸ்பெஷல் தலைப்புகளை பெரும்பாலும் எழுதத் தவறுவதில்லை.

விதவிதமான தலைப்புகளில் எழுதும்போது சுவாரசியம் கூடுகிறது. நம் மனதில் இருக்கும் சம்பவங்களை எழுத்து வடிவில் பதிய வைக்க ஒரு நல்ல சந்தர்ப்பம். இவற்றை நான் என் blog லும் உடனே save செய்து விடுவேன்.

மத்யமருடனான என் ஒன்றரை வருட பயணத்தில் நான் படித்து அறிந்த விஷயங்கள் பல. என் மனம் கவர்ந்த பதிவுகள் பல முன்பெல்லாம் பதிவுகள் அதிகம் இல்லை. அதனால் எதையும் தவற விடாமல் படித்து கமெண்ட்ட முடிந்தது.

இப்போது நிறைய்ய உறுப்பினர்கள். ஏகப்பட்ட பதிவுகள். அவரவர் சொந்தக் கதைகளே அதிகம். எல்லாவற்றையும் படிக்க முடிவதில்லை. நேரமும் இல்லை. தினமும் வெளியாகும் மாத இதழ் போன்ற தோற்றம்.எதுவும் அளவுக்கு மீறினால் ரசிக்காதே!

முன்பு போல் சமையல் குறிப்புகள் ஆன்மிகச் செய்திகள் அதிகம் வருவதில்லை. அப்போது அதிகம் எழுதிய உறுப்பினர்களையும் காண முடிவதில்லை. 'கடை விரித்தோம்..கொள்வாரில்லை..கட்டிவிட்டோம்' என்ற நிலமையோ!🤔

நான் ஆன்மிகம் பற்றி நிறைய எழுதுவேன். அவற்றை சிலர் கூட படிப்பதில்லை என்பதால் எழுதுவதைக் குறைத்து
விட்டேன்.
மத்யமரின் போட்டிகள் மிக சுவாரசியம். நம் குடும்ப உறுப்பினர்களையும் அதில் பங்குபெற அனுமதித்தது மிக அருமை. பரிசும் உண்டு என்பதால் உறுப்பினர்களுக்கு அவை ஒரு ஈர்ப்பையும் பங்கு பெறும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. இப்பவும் என் பேத்திகள்..உங்க க்ரூப்ல போட்டியல்லாம் எப்போ பாட்டி ஆரம்பிக்கும்..என்கிறார்கள்!

அட்மின்கள் மாடரேட்டர்கள் லைக் கமெண்ட் போடுவதில்லை என்ற ஆதங்கம் நிறைய பேருக்கு இருப்பது தெரிகிறது. நான் இதில் முதன்முதலாக மங்கையர் மலரில் வெளியான என் கதையைப் போட்டபோது ரேவதி பாலாஜி...என் மனம் கவர்ந்த கதையாச்சே இது.நீங்கள் எழுதியதா?..
எனறபோது...அட!நம்மைக் கூட நாலு பேருக்கு தெரிஞ்சிருக்கே...என்று மனம் ஆனந்தமடைந்தது. 

என் பல பதிவுகளுக்கு ரேவதி பாலாஜி லைக் கமெண்ட் போட்டதுண்டு.
Senior Admin Shankar Rajarathnam அவர்களின் லைக்கும் கமெண்டும் அவ்வப்போது கிடைக்கும்! Junior Admin  Keerthivasan Rajamani இ(இந்தியா)ங்கு ஒரு காலும், அ(அமெரிக்கா)ங்கு ஒரு காலுமாக படு busy! அவர் கமெண்ட் கிடைப்பது குதிரைக்கொம்புதான்!

பசி நோக்கார்..கண் துஞ்சார்..கருமமே கண்ணாயினார்..என்றபடி அயராது செயல்பட்டு இந்த மத்யமர் தளத்தை சிறப்பாக்கும் மாடரேட்டர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது🙏🙏🙏🙏

முன்பெல்லாம் சிலரை tag செய்வேன். இப்பொழுது செய்ய கஷ்டமாக இருக்கிறது. அவர்களாக ஆர்வத்துடன் படித்தால் சரி..வரும் லைக் கமெண்ட்கள் போதும் என விட்டுவிட்டேன். இதுவரை 6 POTW, 2 GEM வாங்கி விட்டேன்.என் எழுத்துக்களும் மத்யமரில் வெளியாவதையே சந்தோஷமாக எண்ணுகிறேன்.

மத்யமர் சேரிட்டி மூலம் சமூக சேவைகள் செய்வது பாராட்டப்பட வேண்டிய விஷயம். 'இயலாதவர்க்கு செய்யும் சேவையே  இறைவனுக்கு செய்யும் சேவை' யாகும்.  இத்தனை சிறப்பான தொண்டுகளைச்  செய்யும் முகநூல் குழுவில் உறுப்பினராயிருப்பதே பெருமையாக உள்ளது.

மத்யமர் அட்மினுக்கு என் சிறிய யோசனை..இதில் 20000க்கு மேல் உறுப்பினர்கள் இருக்கிறோம். Active ஆக இருப்பவர்கள் 1000 பேர் இருக்குமா? எல்லோருக்கும் Membership fee என்று வைக்கலாமே. வருடம் 1000ரூ. (இது பெரிய தொகை இல்லையே) இரண்டு தவணைகளில் கட்டலாம். இதனால் உறுப்பினர் அனைவரும் சமூக சேவைகளில் பங்கு பெற்ற சந்தோஷம் கிடைக்குமே? 

எனக்கு தோன்றியதை எழுதியுள்ளேன்.
மத்யமரின் இரண்டாவது பிறந்தநாள் விழா சீரோடும் சிறப்போடும் கோலாகலமாக நடைபெற வாழ்த்துகிறேன்.

No comments:

Post a Comment