Saturday 16 November 2019

ஓம் கணபதயே நம:

அன்பின் வடிவமே !
ஆனை முகத்தோனே !
இன்பம் தருபவனே!
இடர்களைக் களைபவனே?

முக்கண்ணன் புதல்வனே!
முருகனுக்கு மூத்தவனே!
தாயும் தந்தையுமே
உலகமென உணர்த்தினாய்!

எளிய வடிவானவனே!
ஏற்றம் தருபவனே!
நன்மை புரிந்திடுவாய்!
செல்வம் அளித்திடுவாய்!

அறம் பொருள் இன்பம்
தந்தெமைக் காப்பாய்!
தயை புரிந்திடுவாய்!
தயாளனே! சரணடைந்தேன்!

No comments:

Post a Comment