Monday 18 November 2019

வாழ்த்துக்கள்


உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!
வாழ்த்துக்கள் சொல்ல
வார்த்தைகள் தேடி
வாசல்வரை வந்துநின்றேன்!
நீங்கள்
காதல் பேசி
கவிகள் பேசி
வார்த்தைகள் யாவற்றையும்
வசமாக்கி விட்டீரோ?
வார்த்தைப்
பஞ்சத்திலே நான்!
நீவீரோ மஞ்சத்திலே!
வாழ்த்துக்கள் உங்களுக்கு!
வாழ்க பல்லாண்டு!
நிலாவின் கைப்பற்றி
நிறைவிழா காணும்மணமகனிற்கு வாழ்த்துக்கள்!
தமிழன்னை மடியில்
தவழ்ந்த மைந்தனை
தன்மடி தாங்கும்மணமகளுக்கும் வாழ்த்துக்கள்!
வாழ்க்கை என்பது
வளைவுகள் நிரம்பிய
வசந்தப்பாதை!
இன்பமும் இனிதே நிறைந்தது!
இன்பத்தில் இணைந்தே வாழ்க!
தென்றலின் சாமரவீச்சில்
திங்களின் ஒளி ஒத்தடத்தில்
மங்கள நாளில்
மணமக்கள் மகிழ்வுடன் வாழ்க!
உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!
இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!
வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
‌குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!,
எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
சாத்திரங்கள் பழையன
சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே
சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது
பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே
அஞ்சாதோர் புதுவழி
குறையொன்றுமில்லை
மணமகன் உன்னிடம்
வரையாத ஓவியம்
இருக்குது பார் உன் இடம்
சிந்தாத முத்துக்கள் சேர்ந்திருக்கும்
உன்மன
அன்பே என்று அழைத்திடுங்கள்!
ஆசைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்!
இதயங்களை ஈந்திடுங்கள்!
ஈரவிழிகளை துடைத்திடுங்கள்!
உறவுகளை நினைத்ததிடுங்கள்!
ஊடல்களை மறந்திடுங்கள்!
எளிமைக்கு வழிவிடுங்கள்!
ஏழ்மைக்கு உதவிடுங்கள்!
ஐயங்களை அழித்திங்கள்!
ஒரு யுகம் கடந்திடுங்கள்!
ஓசையின்றி உயர்ந்திடுங்கள்!
ஒளஷதம் நிறைந்து வாழ்ந்திடுங்கள்!
வாழும் குறளாய்  வள்ளுவமாய்
தூயஅன்புத்துணையுடன் நிகரில்லா வாழ்வில்
அன்புடனே அறம்பொருள் இன்பம் கூட்டி
குன்றாத இல்வாழ்வினில் விரும்பியதை விரும்பியவாறே  பெற்று
என்றும்  விருப்பமுடனே வாழ்ந்திடவே
விண்ணவரும் மண்ணவரும் ஒன்றாய் கூடி
விருப்பமுடன் வாழ்கவென வாழ்த்துகின்றோம்

இருமனமும் ஒருமனமாய்   மலரும் மணமுமாய்
நாதமும் கீதமுமாய்; பாட்டும் பரதமுமாய்
இணையில்லா ஜோடியாய்;ஜோடி நெம்பர் ஒன்றாய்
இல்லறத்தின் இலக்கணமாய்;இல்லறம் மணக்க நல்லறம் போற்ற
பார்ப்போர்  புருவம் உயர்த்த; அன்புடனும் அறனுடனும்
பண்போடும் பாசத்தொடும்;  ஆன்றோரும் சான்றோரும் போற்ற
 கிட்டா புகழும்; எட்டா சிறப்பும் பெற்று இறையருள்  வழித்துணை நிற்க
அருமறையாம் திருக்குறள் வழிநின்று வையகம் போற்ற
ஆரிவர்தாம் ரதி மன்மதனோ என வியக்க
வாழ்க  பல்லாண்டு வளமெலாம் பெற்று   வாழ வாழ்த்துகிறேன் 
குறள் போல அளவாய்
குறள் போல ஆழமாய்
குறள் போல எழிலாய்
குறள் போல அழியாமல் உன்புகழ் நிலைத்திருக்க மகிழ்ச்சி..
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

No comments:

Post a Comment