Tuesday 28 January 2020

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

மார்கழியின் சிறப்பு🙏
விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால், மார்கழியில் அதிகாலைப் பொழுதில்,வளி மண்டலத்தில்தூய்மையான ஓஸோன் படலம் பூமிக்கு மிகத் தாழ்வாய் இறங்கி வருவதாகவும், அதை சுவாசித்தால், நோய் எதிர்ப்பு சக்தியும், ஆரோக்கியமும் கிடைப்பதாக கூறுகிறது விஞ்ஞானம்.

நம் முன்னோர்கள் அதை இறைவழிபாடு என்ற பெயரில் நாம் கேள்விகள் கேட்காமல் பின்பற்றும் சடங்குகளாக்கி விட்டது மெய்ஞானம்.

மார்கழி பஜனையில் ஆண்கள் சத்தமாகப் பாடல்கள் பாடி, நன்றாக மூச்சு விட்டு சத்தமாகப் பாடல்கள் பாடி, ஊர் முழுவதும் சுற்றி வரும்போது ஓஸோன் உள்ளிழுக்கப்பட்டு ஆரோக்யம் கிடைக்கிறது.

அதே போன்று பெண்கள் குனிந்து நிமிர்ந்து பயிற்சி செய்யும் வண்ணம் பெரிய பெரிய கோலங்களை விடியற்காலையில் போடும் போதும் அதே நல்ல விளைவுகள்.

மார்கழியில் விரதம் இருப்பது உடல் நலத்திற்கு மட்டுமல்லாது மன வலிமையை வளர்க்கவும் உதவும். இந்த ஒரு மாதத்தை இறை உணர்வுடன் சிரத்தையாய்க் கழித்தால் அதனால் வரும் சிறப்பான குணங்களும், உடல் மற்றும் மன நலன்களும்  வாழ்நாள் முழுவதும் நம்முடனிருக்கும்.

சிவன், விஷ்ணு, விநாயகர்,ராமன் போன்ற தெய்வங்களை போற்றும் மார்கழியின் சிறப்பு மிகுந்த மகிமை கொண்டது. மல்லிகையும், செண்பகமும் மணம் கமழும் மாதமிது. இம்மாதத்தில் வரும் மார்கழி திருவாதிரையும், ஆருத்ரா தரிசனமும் விஷ்ணு வழிபாடும்,வைகுண்ட ஏகாதசியும் யாவருக்கும் பெரும் பாக்கியத்தை கொடுக்க வல்லன.

மார்கழி திருவாதிரை என்றால் அதில் சிவனைக் காண முடியும் என்ற நம்பிக்கை சைவர்களிடம் நிறைந்து இருப்பதைக் காணலாம்.

மாதங்களில் மார்கழியாக விளங்கும் பெருமாளின் சிறப்பான வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசலில் நுழைந்தால் விஷ்ணு லோகம் பெறலாம் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment