Thursday 30 January 2020

அவருடன் பேசிய முதல் வார்த்தை


என்னை என் கணவர் குடும்பத்தார் பெண் பார்த்தது பிப்ரவரியில்.அச்சமயம் என் மாமா 'பெண்ணுடன் தனியா பேசுகிறீர்களா?' என்றபோது என் கணவர் மறுத்து விட்டார். ஏப்ரலில்தான் திருமணம். இடையில் இந்தக் காலம் போல் நாங்கள் சந்தித்ததோ பேசியதோ கிடையாது. மாப்பிள்ளை அழைப்பன்று காரில் அவருடன் என்னை உட்கார வைத்து புகைப்படம் எடுக்க அவரது நண்பர்கள் கேட்டபோது 85 வயதான எங்கள் இருவரின் தாத்தாக்களும் 'நல்லநேரத்திற்கு முன்பு அதல்லாம் கூடாது' என மறுத்து விட்டார்கள். மறுநாள் திருமணத்தன்றும் பேச வாய்ப்பில்லை. மதியம் நலங்கிற்கு தயாரானேன். 'நலங்கிற்கு மாப்பிள்ளையை அழைத்து வா' என்றார்கள். 'நான் மட்டுமா?'என்றேன். 'நாங்களும் வருவோம். நீதான் கூப்பிடணும்'என்றார்கள். நான் அவரிடம் தயங்கியபடி மெதுவான குரலில் 'நலங்கிடணும்..வாங்கோ' என்றேன். அதுதான் நான் அவரிடம் பேசிய முதல் வார்த்தை!

No comments:

Post a Comment