Thursday 30 January 2020

சகலமும் தரும் தைவெள்ளி🙏


ஆடி மற்றும் தை வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்கு மிகவும் விசேஷமானவை என்பது நாம் அறிந்ததே. தட்சிணாயனத்தில் ஆடியும், உத்தராயணத்தில் தை மாதமும் மிக முக்யமானவை. அதனாலேயே ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகள், அம்பாளுக்கு மிகவும் விசேஷமாகக் கூறப்படுகின்றன.

தை முதல் வெள்ளிக்கிழமையான இன்று அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்தால் நன்மை யாவும் கிடைக்கும்.  செவ்வரளி மற்றும் சிவப்பு நிறப் பூக்கள் போட்டு  வணங்குவது சிறப்பு. வீட்டிலும் விளக்கு பூஜை செய்வதால் செல்வம் சேரும்.

தை வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோயில் அல்லது  சிவாலயம் சென்று அங்குள்ள துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும் கண்
திருஷ்டி முதலானவற்றையும் நீக்கும். துர்க்கை சந்நிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபட வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். மங்கல காரியங்களை விரைவில் நடத்தித் தருவாள் அன்னை பராசக்தி!

அன்னைக்கு மாவிளக்கு ஏற்றி வைப்பது மிகவும் விசேஷம். இதனால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். தை முதல் வெள்ளியில் கணபதிக்கு கொழுக்கட்டை செய்து நிவேதனம் செய்யும் வழக்கம் பல வீடுகளில் உண்டு.

அன்றைய தினத்தில் லலிதா நகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி, ஸ்ரீசுக்தம், கனகதாரா ஸ்தோத்திரம் உள்ளிட்ட அம்மன் சுலோகங்களை பாராயணம் செய்து வழிபட்டால் வாழ்வில் எதை அடைய விரும்புகிறோமோ அது தானாக நம்மை வந்தடையும் என்பது உறுதி.

இன்றைய படிக் கோலம் நான் போட்டது. என் ஆறு வயது குட்டிப் பேத்தி பிரியங்கா தான் கோலத்துக்கு கலர் செய்வதாகக் கூறி நான் சொல்லிக் கொடுத்தபடி அழகாக கலர்ப்பொடி போட்டு வெண்மைக் கோலத்தை வண்ணக் கோலமாக்கினாள்! அவளது ஆர்வத்தையும் கோலத்தில் டிசைன் போட்ட அவள்  வேகத்தையும் நீங்களும் பார்த்து ரசித்து வாழ்த்துங்களேன்!

மார்கழி முழுவதும் நான் போட்ட கோலங்களைப் பார்த்து ரசித்து லைக் மற்றும் கமெண்ட் போட்ட அனைத்து மத்யம நண்பர்
களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏






No comments:

Post a Comment