Thursday 30 January 2020

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

அன்று இரவில் போதேந்திரர் கனவில் தோன்றி ' அயோத்திக்கு செல்ல வேண்டாம். உன் ஊருக்குச் சென்று நாமசங்கீர்த்தனத்தை பரப்ப ஏற்பாடு செய்' என்றார். சுவாமிகளும் மருதாநல்லூர் திரும்பி ஜெயதேவரின் கீதகோவிந்தம், போதேந்திர சுவாமிகள், ஸ்ரீதரஐயர்வாள், பத்ராசலம் ராமதாசர் போன்ற மகான்களின் பாடல்களை ஒன்றிணைத்து ஒரு அழகான நாமசங்கீர்த்தன முறையை உருவாக்கி, அதை அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் கற்றுத் தந்தார். மருதாநல்லூரில் ஒரு மடத்தை ஸ்தாபித்தார். இதன்பிறகு, சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

போதேந்திர சுவாமிகளின் சமாதியை பார்க்க, இவர் கோவிந்தபுரம் சென்றபோது, சமாதி எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை. அவரது சமாதியைக் கண்டு பிடிக்க
வேண்டும் என்ற தீர்மானத்துடன் 9 நாட்கள் உண்ணாமல், உறங்காமல், அசையாமல் ராமநாம ஜபம் செய்தார். 10வது நாள் உத்வேகம் ஏற்பட்டு, காவிரியாற்று மணலில் பல இடங்களில் காது வைத்து கேட்க, ஓரிடத்தில் சிம்மகர்ஜனையாக 'ராம் ராம்' என்ற நாமம் காதில் கேட்டது.

அந்த இடமே மகானின் ஜீவசமாதி என்பதை அறிந்த சுவாமிகள் தஞ்சை மன்னர் சரபோஜியின் உதவியுடன் சமாதி அமைக்க ஏற்பாடு செய்தார். சுவாமிகள் சரபோஜி மன்னரைத் தேடிச் செல்வதற்கு முன்னதாக ஒருநாள், மன்னரின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி,அவரைத் தேடி ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி வந்துள்ளதாகச் சொன்னார். இதனால் சரபோஜி மன்னர், சுவாமிகளின் பாதங்களில் விழுந்து ஆசிபெற்றார்.

மருதாநல்லூர் சுவாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தினார். ஒருமுறை அவர் உஞ்சவிருத்தி எடுத்துவரும்போது, பாலகலோசன் என்பவர் அவரை அவமரியாதை செய்ததால் அவருக்கு வயிற்றுவலி வந்து அவஸ்தைப் பட்டார். அவரது மனைவி சுவாமிகளிடம் மன்னிப்பு கேட்டு தீர்த்தம் பெற்று அதை கணவருக்கு அளித்தாள். வயிற்றுவலி நீங்கிய பாலகலோசன் அவரது சீடரானார். அந்த சீடர் எழுதிய 'அதடே பரபிரும்மம்' என்ற பாடல் இன்றுவரை குருவணக்கமாக பாடப்படுகிறது.

சத்குரு சுவாமிகளால் உருவாக்கப்பட்ட தெலுங்கு, மராட்டி, கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற  பல மொழிகளில், பல  பாகவதர்களால் பாடப்பெற்ற சிறந்த பாடல்களை இணைத்துப் பாடும் நாமபஜனை முறையே இன்றும் பாகவதர்
களால் பாடப்படுகிறது. 1817ல், ராமநவமிக்கு முதல்நாள், ஆடுதுறை பெருமாள் கோயிலில் ஜெகத்ரட்சக சுவாமி சந்நிதியில் இறைவனுடன் ஐக்கியமானார்.

போதேந்திராள், திருவிசநல்லூர் ஐயாவாள்,மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் என்ற முப்பெரும் ரத்தினங்களால் உருவான திவ்யநாம பஜன் இன்று நம்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுதும் பிரபலமானதே நம் தமிழகத்தின் சிறப்பு.

No comments:

Post a Comment