Thursday 30 January 2020

மார்கழி சிறப்பபூ..17.12.2019- 13.1.1920 வரை..

மார்கழியின் பெருமைகளில் நம் இசைவிழாவுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த இசைவிழா ஆரம்பித்தது எப்பொழுது..ஏன் என்று பார்ப்போம்.

ஒவ்வொரு விழாக்களும்
ஒரு வகையில் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.  குறிப்பிட்ட சிறப்பு கொண்டவை,ஊர் முழுக்க பேசப்படும். சில விழாக்கள் உலகம் முழுக்க கவனிக்கப்படும்.

பிரேசிலில் ரியோடி ஜெனிரோவில் கொண்டாடப்படும் 5 நாள் விழா மிகவும் பிரபலமானது. அமெரிக்
காவில் லூசியானா மாகாணத்
தில் நியூ ஆர்லியன்ஸில்
நடைபெறும் நியூ ஆர்லியன்ஸ் & ஹெரிடேஜ் விழா பழமையான  புகழ்மிக்க விழா. இதேபோல் இந்தியாவில் நம் சென்னையில் நடைபெறும் மார்கழி இசைவிழா நீண்ட நாட்கள் கொண்டாடப்பட்டு உலகம் முழுக்க இருக்கும் மக்களை ஈர்க்கும் பெரு விழாவாக உள்ளது.

நம் தருமமிகு சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழியில் டிசம்பர் மற்றும் ஜனவரியில் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன.
இந்த இசை விழாவே டிசம்பர் இசை விழா அல்லது மார்கழி இசைவிழா என்றழைக்கப்
படுகிறது. மெட்ராஸ் மியூசிக் சீசன் என்றும் அக்காலம் முதற்கொண்டு சொல்லப்பட்டு வரும் இந்த இசைவிழாவில் நம் நாடு மட்டுமன்றி வெளிநாட்டு கலைஞர்கள் மற்றும் நேயர்கள் பெருமளவில் கலந்து கொள்வதும் நாம் அறிந்ததே.

முதன் முதலில் 1927 ஆம் ஆண்டு Music Academy
தொடங்கப்பட்டதைக் குறிக்கும் முகமாக இசை விழா கொண்டாடப்பட்டது. ஒரு மாத காலம் நீடிக்கும் இந்த விழாவில் கச்சேரிகள், ஹரி கதைகள், செயல் விளக்கத்துடன் கூடிய இசை விரிவுரைகள், விருது மற்றும் பட்டம் வழங்குதல் போன்றவை பாரம்பரியமாக நிகழ்த்தப்
பட்டன. காலப்போக்கில் நடனம் மற்றும் நாடகங்களும் இவ்விழாவில் இடம்பெற்றன.

No comments:

Post a Comment