Tuesday 28 January 2020

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

போதேந்திரர் காலத்திலிருந்த ஸ்ரீதர ஐயாவாள் சிவனிடம் அதீத பக்தி கொண்டவர். திருவிசநல்லூரிலிருந்து தினம் இரவு திருவிடைமருதூர் சென்று மகாலிங்கரை தரிசனம் செய்து வருவார்.

ஒருநாள் அவர் வீட்டில் தந்தையின் சிரார்த்தத்திற்கு செய்து வைத்திருந்த உணவை பசி என்று கேட்ட ஒரு கீழ்சாதி மனிதருக்கு அளித்து விட்டார். இது பற்றி அறிந்த அந்தணர்கள் இது சாஸ்திர விரோதமென்றும், இதற்கு பரிகாரமாக ஸ்ரீதர ஐயாவாள் காசி சென்று கங்கையில் நீராட வேண்டுமென்றும், இல்லாவிட்டால் ஊர் விலக்கு செய்து அவரை குடும்பத்துடன் நீக்கி வைப்பதாகவும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

'நான் எப்படி காசிக்கு செல்வேன்' என வருத்தப்பட்டார் ஐயாவாள். அந்த நிமிடமே அவர் வீட்டுக் கிணற்றில் நீர் பொங்கிப் பெருகி ஊரெங்கும் ஓட ஆரம்பித்தது. கங்கை கிணற்றிலிருந்து பெருகி வர ஆரம்பித்து சாதி வெறியை அடித்துச் செல்லலானாள். அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து ஐயாவாளிடம் மன்னிப்பு கேட்க ஐயாவாள் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்தித்தார். இன்றும் அந்த நிகழ்வு நடந்த நாளான கார்த்திகை மாத அமாவாசை அன்று அவர் இருந்த வீட்டுக் கிணற்றில் கங்கை பெருகி வருவதைக் காணலாம்.

'எந்த சாதி மனிதரும் அவர்களுக்கு பிடித்த எந்தக் கடவுளையும் பாடலாம்.அதற்குத் தடையில்லை. ஆனால் அப்படிப் பாடுவதை நிறுத்தாதீர்கள்'  என்று கூறி பஜனை சம்பிரதாயத்தில்  மாற்றங்களை உண்டாக்கினார்.

மருதாநல்லூர் சத்குரு சுவாமிகளே பஜனை பத்ததி என்ற முறையை உருவாக்கினார். அந்த முறையே இன்றளவும் பின்பற்றப் படுகிறது.சத்குரு சுவாமிகள் பற்றி 

No comments:

Post a Comment