Tuesday 28 January 2020

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

'
சிவன், விஷ்ணு, விநாயகர்,ராமன் போன்ற தெய்வங்களை போற்றும் மார்கழியின் சிறப்பு மிகுந்த மகிமை கொண்டது. மல்லிகையும், செண்பகமும் மணம் கமழும் மாதமிது. இம்மாதத்தில் வரும் மார்கழி திருவாதிரையும், ஆருத்ரா தரிசனமும் விஷ்ணு வழிபாடும்,வைகுண்ட ஏகாதசியும் யாவருக்கும் பெரும் பாக்கியத்தை கொடுக்க வல்லன.

மார்கழி திருவாதிரை என்றால் அதில் சிவனைக் காண முடியும் என்ற நம்பிக்கை சைவர்களிடம் நிறைந்து இருப்பதைக் காணலாம்.

மாதங்களில் மார்கழியாக விளங்கும் பெருமாளின் சிறப்பான வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசலில் நுழைந்தால் விஷ்ணு லோகம் பெறலாம் என்பது நம்பிக்கை.

'தரிசனம் மாமாங்க தரிசனம்’ என்பர். மார்கழியில் இறைவனைச் சேவித்தால், பன்னிரண்டு ஆண்டுகள் சேவித்த பலன் கிட்டும்.

மார்கழி சிவபெருமானுக்குத் திருவாதிரை, முருகனுக்குப் படி பூஜைகள், பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி, விநாயகருக்கு சஷ்டி விரதம், அம்பாளுக்கு நீராட்டு, சூரியனுக்கு விசேஷ வழிபாடுகள் என அமர்க்களப்படும் மாதம் இது.

அனுமன், மார்க்கண்டேயன் ஆகிய சிரஞ்ஜீவிகள் அவதரித்த மாதம் இது. `மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி’ என்று சிறப்பிக்கிறது, மார்க்கண்டேய புராணம்
சகல பயங்களையும் போக்கும்  `மிருத்யுஞ்ஜய ஹோமம்’ நடத்த சிறந்த மாதம் மார்கழி.


No comments:

Post a Comment