Tuesday 28 January 2020

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

1777 முதல் 1817வரை 40 ஆண்டுகள் வாழ்ந்த வெங்கட்ராமன் என்ற பெயர் பெற்ற சத்குரு ஸ்வாமிகள், தெலுங்கு பிராமணர் வம்சத்தில் பிறந்தவர். இவரது தந்தை காவியங்களில் பற்றுடையவர். பக்திமான் என்பதால், சுவாமிகளுக்கு வேதத்துடன் கூட, ராமகாவியத்தை திரும்பத் திரும்ப சொல்லி மனதில் பதிய வைத்தார். இதனால் சுவாமிகள் ராமஜபம் மட்டுமில்லாமல், உள்ளும்புறமும் தன்னை ஸ்ரீராமனாவே பார்த்துக் கொண்டார்.

திருவிசைநல்லூரில் வசித்த இவர் தம் தந்தையுடன் வைதிக காரியங்களை செய்து வந்தார். ஒருவர் வீட்டு சிரார்த்தத்துக்கு சென்றவர் ராமநாம ஜபத்தில் தன்னையே மறந்து விட்டார். மாலை பயத்துடன் அவர்கள் வீட்டுக்கு சென்றபோது 'இன்று நீங்கள் மிக அருமையாக சிரார்த்தம் செய்து வைத்தீர்கள்'என்றபோது பகவான் அருளை நினைத்து வியப்பு ஏற்பட்டது.

தந்தையார் இறந்த பிறகு, குடும்பத்தை நடத்த, பக்கத்து ஊர்  குழந்தைகளுக்கு வேதம் சொல்லித் தந்தார். இவரிடம் கற்றுக் கொண்ட மாணவர்களுக்கு படிப்பு நன்றாக வந்ததால், இவரது புகழ் எங்கும் பரவியது. கூட்டம் பெருகியது. இது இவரது ஜப வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்ததால் தன் மனைவி ஜானகியுடன் ராமஜபம் செய்யும் ஆசையில் அயோத்தி சென்றார்.

உஞ்சவிருத்தி எடுத்து நாமசங்கீர்த்தனம் செய்து கொண்டே ஆந்திரா வந்து விட்டார். திருப்பதி செல்லும் பக்தர்கள் ஒரு குழுவாக அமர்ந்து ராமநாமம்  சொல்லி ஆடிப்பாடிக் கொண்டிருப்பதை கண்டார். தமிழகத்தில் கடவுள் பெயரைச் சொல்வதற்கே வெட்கப்படு
கிறார்களே! ஆனால், இங்குள்ள மக்கள் இவ்வளவு பக்தியாக இருக்கிறார்களே, என எண்ணியவராய், வடக்கே இருந்த சம்பிரதாயங்களையும், தெற்கே இருந்த கீர்த்தனைகளையும் ஒன்றாக இணைத்து ஒரு நாம சங்கீர்த்தன முறையை உருவாக்க எண்ணினார். 

No comments:

Post a Comment