Tuesday 28 January 2020

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

மார்கழியின் சிறப்புக்கு மேலும் பெருமை சேர்ப்பது ஹனுமத் ஜெயந்தி.

ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஹனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

மார்கழி மாதத்தின் மூல நட்சத்திர நாளை, ஸ்ரீஅனுமன் ஜெயந்தி நாள் என்று போற்றுவார்கள். இந்த நாளில்தான் ஸ்ரீஆஞ்சநேயர் என்று அழைக்கப்படும் வாயு மைந்தன் அவதரித்த நன்னாள் என்கின்றன புராணங்கள்.

ஸ்ரீஅனுமனுக்கு வடைமாலை சார்த்துங்கள். வெண்ணெய்க் காப்பு செய்து தரிசியுங்கள். வெற்றியைத் தரவல்ல வெற்றிலை மாலை அணிவித்து வேண்டிக் கொள்ளுங்கள். வேண்டியது அனைத்தையும் தந்து காத்தருள்வார் ஸ்ரீஅனுமன்!

அறிவு, ஆற்றல், இசை ஞானம், உடல் வலிமை, துணிவு, புகழ், அடக்கம், ஆரோக்கியம், சொல்லாற்றல்' என்று அனைத்துக்குமே எடுத்துக்காட்டாக விளங்குபவர் அனுமன் என்று கம்பர் கூறுகிறார்.

ஸ்ரீஅனுமனுக்கு வடைமாலை சார்த்துங்கள். வெண்ணெய்க் காப்பு செய்து தரிசியுங்கள். வெற்றியைத் தரவல்ல வெற்றிலை மாலை அணிவித்து வேண்டிக் கொள்ளுங்கள். வேண்டியது அனைத்தையும் தந்து காத்தருள்வார் ஸ்ரீஅனுமன்!

வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது

இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறும் ஹனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் உண்டு. அவரது தாய் அஞ்சனாதேவி, தந்தை கேசரி என்ற  வானரத் தலைவர். இவர்களின் குல தெய்வம் வாயு பகவான். இவரே ஹனுமனுக்கு தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் ஹனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இராமாயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் ஹனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. ஹனுமனின் ராமபக்தி அளவிடற்கரியது. வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்தவர்.ஹனுமன் சிவனின் அவதாரமாகவும் கூறப்படுவார்.

பெருமாள்  கோயில்களில் ஹனுமாருக்கு தனி சன்னதி உண்டு.  வைணவர்கள் அவரை திருமாலின் சிறிய திருவடி என்று போற்றுகின்றனர்.

குழந்தைப் பருவத்தில் ஒரு நாள் அனுமனுக்குப் மிகுந்த பசி ஏற்பட்டது. வானில் சூரியனைக் கண்டு அது ஒரு பழம் என்று அதை தவறாகப் புரிந்துகொண்டு, அதைச் சாப்பிட வானில் தாவினார். இந்திரன் அனுமனைத் தடுத்து தனது வஜ்ராயுதத்தால் அவரது முகத்தில் தாக்கினார். அது அனுமனை அவரது தாடையில் தாக்கியது, உடைந்த தாடையுடன் அவர் இறந்து பூமியில் விழுந்து விடுகிறார். இதனால் அவரது தந்தை, வாயுபகவான் காற்றை நிறுத்தி விடுகிறார். காற்று இல்லாமல் உலக உயிர்கள்
கஷ்டப்பட  ஈசன்  தலையிட்டு ஹனுமனை உயிர்ப்பிக்க, வாயு மீண்டும் அனைத்து உயிர்களுக்கும் காற்றினை அளித்தார்.

இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டதனால் ஹனுமானின் உடலும் அதைப் போலவே மிகவும் வலிமையாக இருக்கும் என கடவுள் வரம் அளித்தார். மீண்டும் அவருக்கு வஜ்ராயுதத்தால் தீங்கு ஏற்படாது என வாயு வரம் அளித்தார். அக்னிதேவனும்
ஹனுமனுக்கு நெருப்பினால் எவ்வித்  தீங்கும் ஏற்படாது எனவும்,
வருணன்  நீரினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், வாயு காற்றினால் எவ்வித தீங்கும் ஏற்படாது எனவும், வரமளித்தனர்.

பிரம்மா ஹனுமன் தன்னால் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லலாம் என வரமளி
த்தார். மகாவிஷ்ணு கதாயுதத்தை  வழங்கினார். எனவே இந்த வரங்களினால் ஹனுமன் ஒரு சிரஞ்சீவியாகவும், தனித்துவமான சக்திகளையும் பலத்தையும் கொண்டவராகவும் மாறுகிறார்.

ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் ஹனுமனின் பெருமை சிறப்பாகக் கூறப்படுகிறது.இந்து சமயக் கோயில்களில் அனுமருக்கு தனிச்சன்னதிகளும், சிற்பங்களும் அமைந்துள்ளன. வைணவக் கோயில்களில் இராமர் சன்னதி முன்பு வணங்கியபடி இவரது உருவச்சிலைகள் காட்சி
தருகின்றன.

தமிழ்நாட்டில் நாமக்கல்லில் இருக்கும் 18 அடி உயர ஹனுமன் சிலை மிகவும் புகழ் பெற்றது.
காசியில் ஹனுமனுக்குத் தனியான கோயில் உண்டு.

உலகிலேயே மிக உயரமான 135 அடி உயர ஹனுமன் சிலை, ஹைதராபாத்தில் உள்ளது .
சென்னை நங்கநல்லூர், மும்பை நெருல், திருச்சி கல்லுப்பட்டி ஆலயங்கள் மிகப் பிரபலமான ஹனுமன் ஆலயங்களாகும். நாமும் இந்நன்னாளில் ஹனுமனை வணங்கி அவனருள் பெறுவோம்.

No comments:

Post a Comment