Thursday 30 January 2020

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

மார்கழியில் மட்டுமே விடிகாலை எழுந்து ஆலயம் செல்வதும், திருப்பாவை திருவெம்பாவை மற்றும் பாசுரங்களைப் படிப்பதும் ஏன்?

பாவை நோன்பு 2000  ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில்  ஆற்றிற்குச் சென்று நீராடி மண்ணால் செய்த காத்யாயினி தேவியை வழிபட்டு  தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர்.   பெண்கள் கடைப்பிடித்த விரதமாயின் இவ்விரதம் பாவை நோன்பு என்று வழங்கலா
யிற்று. அதே முறையில் ஆண்டாள் பாவை நோன்பினை மேற்கொண்டே அரங்கனை கணவனாக அடைந்தாள்.

பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை  உண்ணாமலும், கண்ணுக்கு மையிடாமல், தலையில் மலர் சூடாமல் புறஅழகில் நாட்டம்  செலுத்தாமல் இறைவனிடம் மட்டுமே மனதினைச் செலுத்தி நோன்பினை  மேற்கொள்ள
வேண்டும் என்பதைத் திருப்பாவையில் கூறுகிறாள் ஆண்டாள்.

கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்கவும், திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்கவும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரதம் மேற்கொள்ள வேண்டும்.

26 நாட்கள் இவ்விரதம் கடைப்பிடித்து 27ம் நாள்  முடித்து வேண்டியதைப் பெற  கூடாரவல்லி அன்று அந்த கோவிந்தனைச் சரணடைகிறாள் கோதைபிராட்டி!

No comments:

Post a Comment