Thursday 30 January 2020

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

மார்கழியின் சிறப்புகளில் மற்றொன்று ஸ்ரீதியாகராஜ ஆராதனை. புஷ்ய பஞ்சமி எனப்படும் தை மாதத்தில் (தெலுங்கு கன்னடம் மராட்டியர்களுக்கு தை மாதம்..நமக்கு மார்கழி) வரும் தியாகராஜ ஆராதனை அவர் பிறந்த திருவையாறில் ஒவ்வொரு வருடமும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சங்கீத மும்மூர்த்திகளே இன்று நம்முடைய இசைக்கு ஆதாரமான சங்கீதத்தின் தந்தைகள் எனலாம். அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகள்..

தியாகராஜ சுவாமிகள், சாமா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் பதினான்கு ஆண்டு கால இடைவெளியில் திருவாரூரில் அவதரித்தார்கள்.

1762ல் திருவாரூரில் பிறந்த சாமா சாஸ்திரிகளின் ஆத்மார்த்த தெய்வம் தஞ்சாவூர் காமாட்சி அம்மன்.  இவரது பல கீர்த்தனைகள்  நாகை  நீலாயதாட்சி, திருவையாறு தர்மசம்வர்த்தனி, மதுரை மீனாட்சி அம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் மீது பல இனிமையான கீர்த்தனைகளை இயற்றியவர்.

1767ல் திருவாரூரில் பிறந்த  தியாகய்யர்  ஸ்ரீராமர் மேல்  அளப்பறிய பக்தி கொண்டு தெலுங்கு மொழியில்  பல கீர்த்தனைகளை சுவைபட இயற்றியவர். ஸ்ரீராமரின் தரிசனம் பெற்றவர்.

திருவாரூரில் பிறந்த  முத்துசுவாமி தீட்சிதர் திருவாரூர் தியாகேசர்,  கமலாம்பாள், மற்றும் கணபதி ஆகியோர் மீது அதிக கீர்த்தனைகளை இயற்றியவர். இவர் இயற்றிய நவாவரண கீர்த்தனைகள் சங்கீத உலகுக்கு மாபெரும் வரப்பிரசாதமாகும்.

No comments:

Post a Comment