Thursday 30 January 2020

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

மங்கையர்கள் தினமும் தங்களை அழகுப்படுத்திக் கொள்வது போல் மார்கழியில் தங்கள் வீட்டு கோலத்தை அழகுப்படுத்து
கிறார்கள்! காலையில்
குனிந்து, நிமிர்ந்து கோலம் போடும்போது உடல் இயக்கங்கள் சீராகி சிந்தனை ஒருநிலைப்படும். புள்ளிகளை இணைப்பதற்கு ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு சீராக கோடுகள் போடும்போது கவனச்சிதறல்கள் ஏற்படாது. அது கோலத்திற்கு மட்டுமல்ல, எல்லா செயல்க
ளுக்கும் கைகொடுக்கும்.

புள்ளிக்கோலம் போடுவது மனதை ஒருமுகப்படுத்தும் சிறந்த பயிற்சி. கவனமெல்லாம் புள்ளிகள் மீதே கூர்மையாக பதியும்போது கண் பார்வை திறன் மேம்படும். அக்காலப் பெண்கள் வயதான போதும் அவர்களுடைய கண்கள் ஆரோக்கியமாக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

புள்ளிகள்தான் கோலத்திற்கு ஜீவனாகவும் அமைந்தி
ருக்கின்றன. அவை  கோடுகளை முறைப்படுத்தி முழுமையான வடிவமாக்கி கோலமாக மாற்றுகின்றன. புள்ளிகள் ஒழுக்க வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு. புள்ளி பிசகாத  நெறியான வாழ்க்கை வாழ்ந்தால், கோலம் போன்று வாழ்க்கை அழகாக அமையும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

இன்றைய மார்கழிக் கோலங்கள் புதிய அவதாரமெடுத்தி
ருக்கின்றன. அவைகள் ரங்கோலி கோலம், சிக்கு கோலம், பூக்கோலம், தண்ணீர் கோலம், 3 டி கோலம், மயில் கோலம், தேர் கோலம், சங்கு கோலம், ரோஜா கோலம் என பல விதங்களில் இருந்தாலும் பச்சரிசி மாவை கொண்டு மாக்கோலம் போடுவதுதான் சிறந்தது. அது வெண்மை நிறத்தில் பளிச்சென்றும், பார்க்க அழகாகவும் இருக்கும். அவை எறும்பு, வண்டு, பறவை இனங்களுக்கு உணவாகவும் மாறும்.

வெறுமனே கோலம் மட்டும் போடாமல் அதன் மத்தியில் சாணத்தை உருண்டையாக பிடித்து அதன் நடுவில் பூசணிப்பூக்கள் வைப்பது கோலத்திற்கு கூடுதல் அழகு தருவதுடன் மங்களத்தின் அடையாளமாகவும் உள்ளது.

No comments:

Post a Comment