Tuesday 28 January 2020

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

நாம சங்கீர்த்தனத்தின் பெருமை அளவிடற்கரியது. பஜனை பாடத் தெரிய வேண்டியது அவசிய
மில்லை. உடன் அமர்ந்து கேட்டு நாமாக்களை திருப்பிச் சொன்
னாலே போதும்.பலரும் பாடும்போது ஏற்படும் நாம ஒலியின் வேகமே நம்மை மறந்து இறை உணர்வில் ஒன்றச் செய்யும்.

'கோணக் கோணச் சொல்லி கோவிந்தா
என்றாலும் கூட அருள் தானே பொங்கும்'என்பது போல் எப்படி சொன்னாலும் பலன் நிச்சயம்.

இந்த பஜனை முறை எப்பொழுது ஆரம்பித்தது? 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சத்குரு போதேந்திர ஸ்வாமிகள் 'ராமநாம சங்கீர்த்தன்' என்ற பெரில் முக்தியைப் பெற 'ராமநாமம் தவிர வேறு நாமம் தேவையில்லை.அதையே தொடர்ந்து சொன்னால் போதும்'என்றார்.

இதுவே விஷ்ணு ஸகஸ்ர நாமத்தில் வரும் ஸ்ரீராமராம ராமேதி என்ற ஸ்லோகத்தின் பொருள். ராம என்ற ஒரு நாமமே நாராயணனின் ஆயிரம் நாமாக்களுக்கு சமம் என்று ஈஸ்வரனே சொல்கிறார்.

இவரை அடுத்து வந்த சத்குரு ஸ்ரீதர ஐயாவாள் இந்த பஜனை முறையை மேலும் விரிவு
படுத்தினார். ஜாதிவேறுபா
டில்லாத நிலையை எடுத்துச் சொன்னவர் அவரே

No comments:

Post a Comment